காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: 90 பேர் பலி

காசா, இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இந்த போர் சுமார் 5 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே போரை நிறுத்துவதற்கு கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் சமரச முயற்சி செய்தன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்தநிலையில் காசாவை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகினர். மேலும் 177 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதன்மூலம் இந்த போரில் பலியான பாலஸ்தீனியர்களின் … Read more

நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் சாத்தியம் – ஹமாஸ் அறிவிப்பு

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலியாக சிலர் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீனர்களில் மொத்தம் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது. மேலும் 69 ஆயிரத்திற்கும் … Read more

அபுதாபி இந்து கோயில்… ஒரே நாளில் 65,000 பேர் தரிசனம்..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் கோவிலுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமியின் ஆபத்தான ஆசை… பல கோடிக்கு பிளாஸ்டிக் சர்ஜரிகள் – ஆனாலும் சந்தோஷம் இல்லை!

World Bizarre News: சீனாவில் ஒரு சிறுமி தனது 13 வயதில் இருந்து முகத்தோற்றத்தை மாற்ற வேண்டிய பல கோடிகள் செலவு செய்து பல பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்து வந்துள்ளார்.

பசியால் வாடும் காசா மக்கள்… ஊட்டச்சத்து குறைபாட்டால் மடியும் குழந்தைகள்… – பின்னணி என்ன?

காசா: காசாவில் நிலவும் பஞ்சத்துக்கு மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல்- காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், காசா நகரில் உதவி கோரி வந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், மற்றொரு பயங்கரமான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய மருத்துவ … Read more

Abu Dhabi Hindu mandir: More than 65,000 worshippers visit on first public Sunday | அபுதாபி ஹிந்து கோயிலில் ஒரே நாளில் 65 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அபுதாபி: அபுதாபியில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஹிந்து கோயிலில் ஒரே நாளில் 65 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் ஹிந்து கோயிலை சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. 1,200க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS ) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி உள்ளது. ஏராளமான … Read more

MH370 மாயமான மர்மம்: தேட தயாராக இருப்பதாக மலேசியா மீண்டும் அறிவிப்பு

10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன MH370 மாயமான விமானத்தை இப்போது மீண்டும் தேட தயாராக இருப்பதாக அறிவித்திருக்கும் மலேசிய அரசு, அதற்கு ஒரு நிபந்தனை வைத்துள்ளது.   

பாகிஸ்தானின் 24-வது பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் பதவியேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் (72) இன்று பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்ற நிலையில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து புதிய பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் ஆரிப் … Read more

Shebash Sharif was sworn in as the Prime Minister of Pakistan for the second time | 2வது முறையாக பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் ஷெபாஷ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக 2வது முறையாக ஷெபாஷ் ஷெரீப் பதவியேற்றார். அவருக்கு பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் டாக்டர் ஆரிப் அல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு பிப்.,8 ல் பொதுத்தேர்தல் நடந்தது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றினர். நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் – என் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. … Read more

CPPCC NPC: பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் பெய்ஜிங்கில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டம்!

Latest China Economy Update : சீனாவில் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் கூடும் முக்கியமான கூட்டங்களை நோக்கி சர்வதேச உலகம் கூர்மையாக கவனிக்கும் நிலையில், செய்தியாளர் சந்திப்பு தவிர்க்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது