சோமாலியாவுக்கு 14 லட்சம் காலரா தடுப்பூசி வழங்க ஐ.நா. முடிவு

மொகாதிசு, ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் 2016-ம் ஆண்டு முதல் காலரா தொற்று வேகமாக பரவுகிறது. அதன்படி கடந்த 3 மாதங்களில் மட்டும் இதுவரை சுமார் 4 ஆயிரத்து 500 பேருக்கு காலரா தொற்று பரவி உள்ளது. அவர்களில் 54 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அங்கு விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால் காலரா இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த சோமாலியாவுக்கு 14 லட்சம் வாய்வழி காலரா தடுப்பூசி வழங்க … Read more

காசாவின் ஷிபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா முனையில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் படைகள், காசாவின் வடக்கு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். வான் தாக்குதல், தரைவழி தாக்குதல், கடல் வழி தாக்குதல் என மும்முனை தாக்குதல்களில் 32,845 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் படையெடுப்பு காரணமாக இடம்பெயர்ந்த பல லட்சம் மக்கள், தெற்கு முனையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதலைத் தொடங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் தங்களின் … Read more

அமெரிக்காவின் 20 நகரத்தில் பாஜக.வினர் கார் பேரணி

புதுடெல்லி: இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவை தெரிவிக்க அமெரிக்காவின் 20 நகரங்களில் வெளிநாடு வாழ் பாஜக ஆதரவாளர்கள் கார் பேரணி நடத்தினர். மேரிலாண்டின் வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க வாழ் சீக்கியர்கள் ஞாயிற்றுக்கிழமை கார் பேரணி நடத்தினர். இவர்கள், பிறகு பாஜக கொடிகள் மற்றும் அமெரிக்க தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட கார்களில் ஊர்வலம் சென்றனர். பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அட்லாண்டாவில் நடைபெற்ற பேரணியில் சுமார் 150 கார்கள் இடம்பெற்றன. அனைத்தும் பாஜக கொடி, … Read more

சீண்டி பார்க்கும் சீனா… அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்டு அத்துமீறல்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அந்த வகையில், சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது. 

ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

வாஷிங்டன், விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு வருகின்றன. அதன்படி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்த போட்டியில் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இவை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதற்காக புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ராக்கெட் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் என … Read more

அமெரிக்காவில் வணிக வளாகம் அருகே துப்பாக்கி சூடு- 7 பேர் காயம்

இண்டியானாபோலிஸ்: அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் நேற்று நள்ளிரவில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள வணிக வளாகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு, ரோந்து போலீசார் அங்கு விரைந்தனர். அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலில் 7 இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களின் வயது 12 முதல் 17 … Read more

பாகிஸ்தானில் நிதி நெருக்கடி எதிரொலி: சிவப்பு கம்பள வரவேற்புக்கு தடை – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவு

இஸ்லாமாபாத்: அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடியை காரணம் காட்டிபிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்புஅளிக்கப்படுவது முக்கிய சம்பிரதாய நடவடிக்கையாக உள்ளது. இந்த நடவடிக்கை பிரதமருக்கு அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவற்றை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சரவை … Read more

இங்கிலாந்தில் மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள்: ஆளுங்கட்சிக்கு கடும் பின்னடைவு.. பிரதமரின் தொகுதியும் ரிஸ்க்

லண்டன்: இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? என்பது தொடர்பாக சிவில் சமூக பிரச்சார அமைப்பான ‘பெஸ்ட் ஃபார் பிரிட்டன்’ மெகா கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்று தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சியைவிட 19 புள்ளிகள் முன்னிலையுடன், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 45 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இப்போது … Read more

பருவநிலை மாற்றம் குறித்து கேள்வி; எங்களுக்கு பாடம் எடுக்க அதிகாரம் அளித்தது யார்? – பிபிசி செய்தியாளரை கண்டித்த கயானா அதிபர்

லண்டன்: தன்னை பேட்டி கண்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை கயானா நாட்டு அதிபர் இர்ஃபான் அலி கடுமையாக சாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட சூழலியல் பிரச்சினைகள் இன்று உலகம்எதிர்கொள்ளும் மிகப்பெரும் சிக்கலாக கருதப்படுகிறது. இதனால், நிலையான வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்த பல நாடுகள் முயற் சித்து வருகின்றன. இந்நிலையில், பிபிசி தொலைக்காட்சி செய்தியாளர் கயானா நாட்டுஅதிபர் இர்ஃபான் அலியை நேற்று பேட்டி கண்டார். அப்போது அந்த … Read more