சமூக வலைதளங்களுக்கு தடை! வெடித்த போராட்டம்..8 பேர் பலி-முழு விவரம்

Nepal Social Media Ban Protest : நேபாளத்தில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, GenZ தலைமுறையினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் வரி விதிப்பு – ஜெலன்ஸ்கி ஆதரவு

கீவ்: ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்கும் கடுமையான வரியை ஆதரிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சனிக்கிழமை கடும் தாக்குதல்களை நடத்தியது. சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை உக்ரைனுக்கு எதிராக 810 ட்ரோன்களையும், 13 ஏவுகணைகளையும் ரஷ்யா ஏவியதாக உக்ரைன் கூறியுள்ளது. இந்த தாக்குதலில், 4 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் கீவ்வில் உள்ள அரசு … Read more

ராணுவக் காவலில் உள்ள ஆங் சான் சூ கியின் உடல்நிலை கவலைக்கிடம்: மகன் தகவல்

லண்டன்: ராணுவக் காவலில் உள்ள மியான்மர் முன்னாள் ஆட்சியாளர் ஆங் சான் சூ கியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் கிம் அரிஸ் தெரிவித்துள்ளார். மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளரான ஆங் சான் சூ கி, கடந்த 2021 முதல் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்பட்டுள்ளார். ஊழல் மற்றும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதற்காக, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், தனது … Read more

இஸ்ரேலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்

ஜெருசலேம், இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, … Read more

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அடுத்தக்கட்ட வரி விதிக்க தயாராகும் ட்ரம்ப்!

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 2-ம் கட்ட வரிகளை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது ஏற்கெனவே ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் 25% கூடுதல் வரிக்கு ஆளாகியுள்ள இந்தியாவுக்கு இன்னுமொரு அடியாக அமையும். ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 800 ட்ரோன்களை ஏவி ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அரசு அலுவலக வளாகம் பாதிப்புக்கு உள்ளானது. … Read more

புற்றுநோய்க்கு தடுப்பூசி: சாதித்த ரஷியா- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது?

மாஸ்கோ: உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்து வரும் புற்றுநோய்க்கு எதிராக புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. அதாவது, ரஷியாவின் புற்றுநோய் தடுப்பூசி 100 சதவீத செயல் திறனை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா கண்டறிந்துள்ள இந்த தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ வகையைச் சேர்ந்ததாகும். ‘என்ட்ரோமிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அழித்ததாகவும், ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தடுப்பூசி … Read more

ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 475 தென்கொரிய தொழிலாளர்கள் அமெரிக்காவில் கைது

ஜார்ஜியா: அமெரிக்​கா​வின் தென்​கிழக்கு ஜார்​ஜியா மாகாணத்​தில் கட்​டப்​பட்டு வரும் ஹூண்​டாய் தொழிற்​சாலை​யில், தென்​கொரி​யாவை சேர்ந்த தொழிலா​ளர்​கள் பலர் சட்​ட​விரோத​மாக பணி​யாற்​று​வது தெரிய​வந்​தது. இவர்​கள் சவானா என்ற இடம் அருகே எலாபெல் என்ற பகுதியில் உள்ள பேட்​டரி தயாரிப்பு மையத்​தில் தங்​கி​யிருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து அங்கு அமெரிக்க குடி​யுரிமை அதி​காரி​கள் மற்​றும் போலீ​ஸார் திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர். அவர்​களை கண்​டதும், சட்​ட​விரோத​மாக பணி​யாற்​றிய தென்​கொரிய தொழிலா​ளர்​கள் ஓடி மறைந்​தனர். அவர்​களை மடக்​கிய அமெரிக்க போலீ​ஸார் சுவர் ஓரமாக வரிசை​யாக … Read more

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரபல தொழிலதிபருமானவர் எலான் மஸ்க். ‘டெஸ்லா’ என்ற நிறுவனத்தை தொடங்கி மின்சார கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுகிறார். டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி பதவியில் உள்ள எலான் மஸ்க்குக்கு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.88.32 லட்சம் கோடி) சம்பளமாக தர அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான சம்பளமாக வழங்கப்பட உள்ள இதனை பணமாக தராமல் ‘டெஸ்லா’ நிறுவனத்தின் பங்குகளாக தரப்பட உள்ளன. இதன்மூலம் … Read more

பாகிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, பலர் காயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பஜாவூர் மாவட்டத்தில் உள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சக்திவாய்ந்த குண்டு மைதானத்தில் வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் மூலம் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதை பஜாவூர் மாவட்ட காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார். தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இந்த தாக்குதல் பயங்கரவாதிகளின் செயல் தான் … Read more

உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா டிரோன்களை கொண்டு கடுமையான தாக்குதல்

கீவ், ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. போரானது 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எனினும், போர்நிறுத்தம் ஏற்படாமல் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை உக்ரைன் கோரியது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி … Read more