‘ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் நியாயம் ஏதும் இல்லை’ – ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் நியாயம் ஏதும் இல்லை என்றும், ஈரான் மக்களுக்கு ரஷ்யா உதவ முயற்சிக்கிறது என்றும் தன்னை சந்தித்த ஈரான் வெளியுறவு அமைச்சரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாஸ்கோவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, இஸ்ரேல் உடனான போரின் நிலவரம் குறித்து … Read more

ஈரானின் ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்

தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்தின. அமெரிக்க போர் விமானங்கள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசி ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 அணுசக்தி தளங்களை அழித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, “இஸ்ரேல் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறது. அந்த நாட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை … Read more

வங்கதேச முன்னாள் தலைமை தேர்தல் ஆணையருக்கு செருப்பு மாலை – தேர்தல் முறைகேடு புகாரில் கைது

டாக்கா: வங்கதேசத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா தனது பதவிக் காலத்தில் வாக்கெடுப்புகளில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவரது வீட்டுக்குச் சென்ற வங்கதேச தேசிய கட்சியினர், அவருக்கு செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்து வெளியே இழுத்து வந்தனர். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா உள்பட 18 பேர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தொடர்ந்த வழக்கில் … Read more

உலகமே உற்று நோக்கும் 'ஹார்முஸ் ஜலசந்தி' – ஈரான் இதை மூடினால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

Strait Of Hormuz: இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்காவும் கைக்கோர்த்தை அடுத்து, ஈரான் அதன் ஹார்முஸ் ஜலசந்தியை மூட உள்ளது. இதனால் இந்தியாவுக்கு என்ன பாதகம் என்பதை இங்கு காணலாம். 

‘நோபலுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரை செய்ததை திரும்ப பெறுக’ – பாகிஸ்தானில் வலுக்கும் குரல்கள்

இஸ்லாமாபாத்: ஈரானின் 3 அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழித்ததைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெயரை பரிந்துரைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது மேற்கொண்ட அமைதிக்கான முயற்சிகள் காரணமாக, அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு வழங்க பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு … Read more

நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா?

தெஹ்ரான்: ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையே உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முன்மொழிந்தன. இதன் மீதான வாக்களிப்பு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நேற்று கூடியது. 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் கூட்டத்தில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற … Read more

இஸ்ரேல் நகரங்களில் இடைவிடாது ஒலிக்கும் சைரன்: விடாப்பிடியாக தாக்கும் ஈரான்

டெல் அவிவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ‘போரை முடிவுக்குக் கொண்டுவருவோம்’ என்ற எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் புதிதாக ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் ஓயாமல் சைரன் சத்தங்கள் ஒலிக்கின்றன. ஜெருசலேமில் பயங்கர குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன என ஊடகங்கள் தெரிவித்தன. ஈரான் – இஸ்ரேல் இடையே 11-வது நாளாக மோதல் நீடிக்கும் நிலையில், இன்றும் ஈரானிலிருந்து ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் ஏவுகணைகள் குறித்து எச்சரிக்கை … Read more

‘அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்’ – ஈரான் மீதான தாக்குதல்களுக்கு வட கொரியா கண்டனம்

பியாங்யாங்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பிராந்திய உரிமைகளை கடுமையாக மீறுவதாகும் என வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டதாக வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ பகிர்ந்துள்ள செய்திக்குறிப்பில், “மேற்கத்திய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரேலின் இடைவிடாத போர் நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்பு செயல்களால் தற்போது மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றங்களுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் குற்றவாளிகள். நாங்கள் ஈரான் மீதான … Read more

அமெரிக்காவில் சர்ச்சில் துப்பாக்கி சூடு: மர்ம நபர் சுட்டுக்கொலை; ஒருவர் காயம்

மிச்சிகன், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வெய்னி பகுதியில் கிராஸ் பாயிண்ட் என்ற பெயரிலான கிறிஸ்தவ ஆலயம் (சர்ச்) ஒன்று உள்ளது. விடுமுறை நாளான நேற்று சர்ச்சுக்கு சிறுவர்கள், பெரியவர்கள் என 150 பேர் வரை வருகை தந்திருந்தனர். அப்போது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதுபற்றி மூத்த பாதிரியார் பாபி கெல்லி ஜூனியர் கூறும்போது, கையில் ஆயுதத்துடன் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில், பாதுகாவலர் ஒருவருக்கு … Read more

மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்களுக்கு ஈரான் குறி

டெஹ்ரான்: மத்​திய கிழக்​கில் அதி​கரித்து வரும் பதட்​டங்​களுக்கு மத்​தி​யில், ஞாயிற்​றுக்​கிழமை அதி​காலை ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலை​யங்​களை அமெரிக்க விமானப் படை தாக்​கியது. ஈரானின் ஃபோர்​டோ, நடான்ஸ் மற்​றும் இஸ்​பஹான் அணுசக்தி நிலை​யங்​கள் மீதான அமெரிக்க வான்​வழித் தாக்​குதலை தொடர்ந்து மேற்கு ஆசி​யா​வில் உள்ள ஒவ்​வொரு அமெரிக்க குடிமக​னும் அல்​லது ராணுவ வீரர்​களும் இப்​போது ஈரானின் இலக்​காக மாறி​யுள்​ளது என ஈரான் அரசு தொலைக்​காட்சி தெரி​வித்​துள்​ளது. இது குறித்து ஈரான் மதகுரு கொமேனி​யின் நெருங்​கிய உதவி​யாளர் … Read more