'இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை' சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம் பேட்டி

சிங்கப்பூர் நகர நாடான சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாகோப்பின் பதவிக்காலம் வருகிற 13-ந் தேதி முடிவடைகிறது.இந்த நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் (வயது 66) வெற்றி பெற்றார். அவருக்கு 70.4 சதவீத வாக்குகள் கிடைத்தன. வெற்றிக்கு பிறகு நிருபர்களிடம் மகிழ்ச்சியுடன் பேசிய தர்மன் சண்முகரத்னம், ‘நான் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்களும், இது அரசியல் தேர்தல் … Read more

பிளாஸ்டிக் சர்ஜரியால் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு; பிரபல அர்ஜெண்டினா நடிகை உயிரிழப்பு

புவனோஸ் அய்ரெஸ், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா(43). தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், மாடலாகவும் இருந்து வந்த சில்வினா லூனா, கடந்த 2011-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட நிலையில் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வாரத்திற்கு சுமார் மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனிடையே சில்வினாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று … Read more

'எக்ஸ்' தளத்தில் பயனரின் ஒப்புதலுடன் மட்டுமே 'பயோமெட்ரிக்' தகவல்கள்:எலான் மஸ்க் அறிவிப்பு

வாஷிங்டன், பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் சமூக வலைதளத்தை கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார். அதில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். ஜூலை பிற்பகுதியில், டுவிட்டரின் லோகோ மாற்றப்பட்டு ‘எக்ஸ்’ சமூக வலைதளமாக மாறியது. தற்போது எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் கைரேகைகள் உள்பட பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்து வருகிறது. ஆகஸ்டு மாதம் இறுதிவரை எக்ஸ் சமூக வலைதளம் பயோமெட்ரிக் தகவல்கள் எதையும் கேட்டது இல்லை. தற்போது பயனர்களின் ஒப்புதலின் அடிப்படையில் பாதுகாப்பு, … Read more

தலீபான்கள் ஆட்சிக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற காத்திருக்கும் 8 லட்சம் ஆப்கானியர்கள்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. அதுமுதல் அங்கு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதற்கிடையே போர் முயற்சிகளுக்கு உதவிய மக்கள் அமெரிக்காவில் குடியேறும் வகையில் சிறப்பு விசா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2009-ம் ஆண்டிலேயே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டாலும் தலீபான்கள் ஆட்சிக்கு பிறகு இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி சுமார் 8 லட்சத்து … Read more

தைவானில் புயல் காரணமாக 45 விமானங்கள் ரத்து

தீவு நாடான தைவானில் கேப் எலுவான்பி நகரின் கிழக்கு பகுதியில் புதிய புயல் உருவாகி உள்ளது. ஹைகுய் என பெயரிடப்பட்ட இந்த புயலானது தைவானின் மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தைவானில் கரையை கடக்கும்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று அடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 28 சர்வதேச விமானங்கள் மற்றும் 18 உள்நாட்டு விமான சேவைகள் … Read more

நோபல் பரிசு விழாவில் பங்கேற்க ரஷ்யா, ஈரான், பெலாரஸ் நாடுகளுக்கு தடை 

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் நடைபெற உள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதர்களை அழைக்கப் போவதில்லை என்று நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு, உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸ் தூதர்களை நோபல் அறக்கட்டளை புறக்கணித்திருந்தது. இந்த நிலையில், கடந்த வியாழன் (ஆக.31) அன்று வெளியிட்ட அறிவிப்பில் கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நாடுகளின் தூதர்கள் இந்த ஆண்டு அழைக்கப்படுவார்கள் … Read more

சிலியில் ரயில் விபத்து 7 பேர் பரிதாப பலி| Train accident in Chile kills 7 people

சிலியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மினி பஸ் மீது ரயில் மோதிய விபத்தில், ஏழு பேர் பலியாகினர்; எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். தென் அமெரிக்க நாடான சிலியில், சான் பெட்ரோ டே லா பாஸ் என்ற இடத்தில், நேற்று மினி பஸ் ஒன்று அங்குள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ரயில், மினி பஸ் மீது மோதி இழுத்துச் சென்றது. இந்த விபத்தில், மினி பஸ்சில் இருந்த ஏழு … Read more

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்த 5 வயது சிறுவன்! என்ன நடந்தது?

சிக்காகோ நகரில் 5 வயது சிறுவன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

ஜிம்பாப்வே அணி முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரோக் காலமானார்| Former Zimbabwe captain Heath Strock passed away

ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 49. ஹீத் ஸ்ட்ரீக் மரணத்தை அவரது மனைவி நாடினே ஸ்ட்ரீக் உறுதி செய்துள்ளார். 1990 முதல் 2000ம் ஆண்டு வரை அந்நாட்டு அணியின் முக்கிய பந்துவீச்சாளராக விளங்கிய ஹீத் ஸ்ட்ரீக், ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட், 189 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 4933 ரன்களை எடுத்ததுடன், 455 விக்கெட்களை வீழ்த்தினார். 2005ம் ஆண்டு ஓய்வு பெற்ற உடன், … Read more

குவைத் செல்ல குடும்ப விசா ரெடி… தடை நீங்கியது… முதலில் எந்த ஊழியர்களுக்கு தெரியுமா?

வளைகுடா நாடுகளில் உள்ள பணக்கார நாடு குவைத். சர்வதேச அளவில் அதிகப்படியான பண மதிப்பை கொண்டிருப்பதால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், இங்கு வந்து வேலை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் இந்தியர்களும் அதிகப்படியானோர் அடங்குவர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த மக்கள். நம்மளையே நாம நம்ப கூடாது.. மோசடியை தவிர்க்க மக்கள் கூறும் கருத்து.. குவைத் அரசு அறிவிப்பு லட்சக்கணக்கான கேரளா மக்கள் இங்கு வேலை செய்து வருகின்றனர். குவைத் நாட்டின் மக்கள்தொகையை எடுத்து கொண்டால் மூன்றில் … Read more