மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி… காதலிக்கு 10 நிமிடம் விடாமல் கிஸ் கொடுத்தவருக்கு காது செவிடானது

Bizarre News: உணர்ச்சிவசப்பட்டு காதலியை இடைவிடாமல் 10 நிமிடங்கள் முத்தமிட்ட இளைஞருக்கு திடீரென காது கேட்காமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக தலைமை அதிகாரியாக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமனம்

புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக தலைமை அதிகாரியாக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் திலுள்ள இந்திய தூதரகத்தின் தலைமைப் பொறுப்பில் டாக்டர் எம். சுரேஷ் குமார் உள்ளார். இந்நிலையில் அந்த பொறுப்புக்கு கீதிகா நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து எம். சுரேஷ் குமார் விரைவில் டெல்லி திரும்பவுள்ளார். தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் (எம்இஏ) இணைச் செயலாளராக பணியாற்றி வரும், கீதிகா ஸ்ரீவஸ்தவா விரைவில் புதிய பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ம்ஆண்டு ஆகஸ்ட் … Read more

சீன புதிய வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம்: உண்மை நிலையை மாற்ற முடியாது என இந்தியா கண்டனம்

பெய்ஜிங்: சீனா வெளியிட்டுள்ள புதிய வரை படத்தில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அக்‌ஷய் சின் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம் தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தை ஜெஜியாங் மாகாணத்தின் டெகிங் பகுதியில் நேற்று கொண்டாடியது. இதை முன்னிட்டு இந்தாண்டுக்கான தேசிய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில் அருணாச்சல பிரதேசத்துக்கு தெற்கு திபெத் என பெயரிட்டும், கடந்த 1962-ம்ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை அக் ஷய் சின் என்றும் சீனா கூறியுள்ளது. இதேபோல் தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய … Read more

விடுவிக்கப்பட்டார் இம்ரான் கான்: மூன்றாண்டு சிறை தண்டனை ரத்து| Imran Khan freed, three-year prison sentence cancelled

இஸ்லாமாபாத்: டோஷாகானா ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கும்படி நேற்று உத்தரவிட்டது. பரிசுப் பொருட்கள் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான், அந்நாட்டின் பிரதமராக 2018 – 22 வரை பதவி வகித்தார். பாக்., பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு, வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசுகளை … Read more

குவைத் நாட்டில் வசிப்பவரா? அப்ப 'Sahel App' கட்டாயம் உங்க மொபைலில் இருக்கணும்… ஏன் தெரியுமா?

சர்வதேச அளவிலான பண மதிப்பில் மிகவும் வலிமையான நாடாக குவைத் திகழ்கிறது. இந்திய ரூபாயுடன் ஒப்பிட்டால் ஒரு குவைத் தினார் என்பது இன்றைய நிலவரப்படி 268 ரூபாய் 20 பைசா. இதனால் இந்நாட்டில் பணிபுரிய பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றனர். வெளிநாடு செல்வோருக்கு NRE & NRO Accounts எவ்வளவு அவசியம்? உரிய நேரத்தில் கட்டணம் குறிப்பாக இந்தியர்கள் பலரும் குவைத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர். குவைத் நாட்டில் மின் கட்டணம், குடிநீர் … Read more

இந்தோனேசியாவின் பாலி கடலில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

ஐகார்த்தா, இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிமீ (126 மைல்) தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 516 கிமீ (320.63 மைல்) மிக ஆழமாகவும் இருந்தது என்று EMSC தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலுக்கு அடியில் … Read more

செவ்வாய் கிரகத்திற்கு 10 லட்சம் பேரை அனுப்ப திட்டமிடும் எலோன் மஸ்க்!

Elon Musk Spacex Mars Mission: உலகின் பணக்கார தொழிலதிபர் எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு மில்லியன் மக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளார்.

நாட்டுக் கோழி, மட்டன்… வெளுத்துக்கட்டிய இம்ரான் கான்… சிறையில் இவ்ளோ சொகுசு வசதிகளா?

உணவில் விஷம் கலக்கப்படலாம் என்பதால் வீட்டில் சமைத்த உணவை தர வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இம்ரான் கானுக்கு பல்வேறு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ​ ஆட்சியை இழந்த இம்ரான் கான்பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் இம்ரான் கான். கடந்த ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஷ் … Read more

இங்கிலாந்தில் கலாசார திருவிழா: போதைப்பொருளுடன் 85 பேர் கைது

லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாட்டிங் ஹில் கலாசார திருவிழா ஆண்டுேதாறும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது கரீபிய மக்களின் கலாசாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிப்பதற்காக ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழா கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் இந்த திருவிழா கோலாகலமாக துவங்கியது. முதல் நாளான நேற்று கண்கவர் உடைகளை அணிந்து உற்சாகமாக நடனமாடினர். … Read more

பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை

இஸ்லாமாபாத்: அரசு கருவூலப் பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு கருவூலப் பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக இம்ரான் கான் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்தது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் … Read more