ஒரே நாளில் விடுதலை… ஆனால் ஆக. 14இல் சுதந்திர தினம் கொண்டாடும் பாகிஸ்தான் – அது ஏன்?

Independence Day 2023: இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நாளில் சுதந்திரம் பெற்ற நிலையில், ஏன் பாகிஸ்தான் இந்தியாவை விட ஒருநாள் முன் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என்பது குறித்து இதில் காணலாம். 

“மார்க் ஒரு சிக்கன்” – சீண்டிய எலான் மஸ்க்… சூடுபிடிக்கும் சண்டை…

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க், அதிரடியான மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். ஒரே நாளில் ட்விட்டர் ஊழியர்கள் பெரும்பாலானோரை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பினார். எலான் மஸ்க் எடுக்கும் முடிவுகள் கோமாளித்தனமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களை கிளப்பின. ஒரு கட்டத்தில் ட்விட்டரின் பெயரையே மாற்றி ‘x’ என்று பெயரிட்டார் எலான் மஸ்க். இதனிடையே ட்விட்டருக்கு போட்டியாக அதே வசதிகளைக் கொண்ட த்ரெட்ஸ் என்ற சமூக வலைதளத்தை உருவாக்கினார் மெட்டா நிறுவனத்தின் … Read more

90 நாட்களுக்குள் காலி செய்யலைன்னா ரத்த ஆறு ஓடும்… சீனாவை எச்சரிக்கும் பலூச் கிளர்ச்சியாளர்கள்!

பலுசிஸ்தானின் குவாடாரில் சீன குடிமக்கள் மீது பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) நடத்திய தாக்குதல் பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது

விஜய் மல்லையா, நீரவ் மோடி விவகாரம்; தஞ்சமடைவதற்கான நாடாக பிரிட்டன் இருக்காது – பிரிட்டன் அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கிங் பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் 2016-ம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அதேபோல், வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் 2018-ம் ஆண்டு பிரிட்டன் தப்பிச் சென்றார். விஜய் மல்லையா, நீரவ் மோடி இருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், “தண்டனையிலி ருந்து … Read more

H1-B விசா: அமெரிக்கா மீது வழக்குத் தொடுத்த இந்தியர்கள்! IT பணியாளர்களுக்கு விசா மறுப்பு?

H1 B visa vs America: ஹெச்1-பி விசா நிராகரிப்பு தொடர்பாக 70 இந்தியர்கள் அமெரிக்காவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Death toll rises in Hawaii wildfires | ஹவாய் காட்டுத்தீயில் பலி எண்ணிக்கை உயர்வு

லஹைனா- அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 89ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில், எட்டு தீவு நகரங்கள் உள்ளன. இங்கு, இரண்டாவது பெரிய நகரமாக மவுய் உள்ளது. இங்கு, கடந்த 8ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீ, அருகில் உள்ள சிறு நகரங்களுக்கும் பரவியது. குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் தீ பரவியதை அடுத்து, மவுய் நகரில் இருந்த ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். அழகிய பூங்காக்கள், 2,000க்கும் அதிகமான … Read more

பாகிஸ்தான்: சீனர்களை குறிவைத்து பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் தற்கொலைப்படை தாக்குதல்

பலுசிஸ்தான், பாகிஸ்தானில் உள்ளூர் பிரிவினைவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை இராணுவம், சீன நாட்டினரை குறிவைத்து இன்று பலுசிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். பலுசிஸ்தானின் குவாதர் துறைமுக நகரத்தில் சீன பொறியாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 4 சீனர்கள் மற்றும் 9 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக … Read more

கனடா கோவிலில் மீண்டும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கி நாசம்…!

சுர்ரே, கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சுர்ரே நகரில் பழமையான கோவில்களுள் ஒன்றான லக்ஷ்மி நாராயண் மந்திர் ஆலயம் உள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு அந்த கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கி நாசமாக்கி உள்ளனர். அதன்பின்னர் கோவிலின் கதவில் காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்களை ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். அதில் கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கு பங்கு உள்ளது, உடனடியாக கனடா அரசு இதுகுறித்து விசாரணை … Read more

சீன பொறியாளர்களுக்கு குறி… பாகிஸ்தானில் பயங்கரத் தாக்குதல்.. 2 தீவிரவாதிகள் பலி..

பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் சீனாவின் நிதியுதவியுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை துறைமுக பணிகளுக்காக 7 கான்வாய் வாகனங்களில் 23 சீனப் பொறியாளர்கள் சென்றுகொண்டிருந்தனர். அதனை குறிவைத்து பிரிவினைவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் திடீரென தாக்குதல் நிகழ்த்தியது. காலை 9.30 மணியளவில் துவங்கிய இந்த தாக்குதல், சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்றது. ராணுவத்தினரும் எதிர்தாக்குதலை நடத்தினர். குவாதர் நகரம் முழுவதும் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தமும், துப்பாக்கி சுடும் … Read more

உறுதியான வலிமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – தைவான் துணை அதிபரின் அமெரிக்க பயணத்திற்கு சீனா கண்டனம்

பெய்ஜிங், சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949-ம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு காட்டுகிறது. அதன் ஒரு பகுதியாக தைவான் எல்லையில் அடிக்கடி போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்துள்ளது. ஆனால் அமெரிக்கா மட்டும் துவக்கம் முதலே தைவானுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது. இந்த … Read more