ஒரு நாளைக்கு ரூ.2.38 லட்சம் வருமானம்… சிங்கப்பூரில் மாஸ் காட்டும் அந்த ஒரு மதுபான வகை!

உலகின் பல்வேறு நாடுகளில் தனித்துவம் வாய்ந்த பாரம்பரிய மதுபான வகைகள் இருக்கின்றன. அதில் 1915 எனப்படும் சிங்கப்பூர் ஸ்லிங் வகை மதுபானமும் ஒன்று. இது கியாம் டாங் பூன் (Ngiam Tong Boon) என்ற மதுபான விற்பனையாளரால் கடந்த 1915ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு காக்டெய்ல் வகையிலான மதுபானம். கன்னியாகுமரி to சிங்கப்பூர்; சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்!! சிங்கப்பூர் ஸ்லிங் முதலில் இந்த மதுபானம் உருவாக்கப்பட்டது பெண்களுக்காக தான் எனக் கூறுகின்றனர். அந்த காலகட்டத்தில் … Read more

“உக்ரைனின் எதிர்காலம் இனி எங்கள் வசம்” – உச்சி மாநாட்டில் நேட்டோ உறுதி

வில்னியஸ்: உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது என்று அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், “உக்ரைனின் எதிர்காலம் நேட்டோ அணிக்குள்தான் உள்ளது. அணியில் உள்ள நாடுகள் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு, அது நிறைவேற்றப்படும்போது உக்ரைனை அணியில் சேருவதற்கான அழைப்பு விடுக்கப்படும்” என்று … Read more

இரட்டை குட்டிகளை பெற்றெடுக்கும் பாண்டா கரடி… அந்த பாசத்த வீடியோவில் பாருங்க!

Panda Twins Video: தென் கொரியாவில் ஒரு பாண்டா கரடி அங்கு முதல்முறையாக இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. தற்போது, தாயும், குட்டிகளும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெருங்கும் நேட்டோ உச்சி மாநாடு – உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா

கீவ்: நேட்டோ உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீதான வான்வழி தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி இருக்கிறது. ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. வில்னியஸ் மாநாட்டில் உக்ரைனுக்கு நல்ல தகவல் கிடைக்கும் என்று நேட்டோ அமைப்பின் தலைவர் ஜின்ஸ் ஸ்டோலன்பெர்க் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷ்யா, கீவ்வில் தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் கீவ் … Read more

France National Day Parade: Indian Navy participates | பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பு: இந்திய கடற்படை பங்கேற்பு

பாரீஸ்: பிரான்சில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 ம் தேதி, பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று பிரதமர் மோடி பாரீஸ் செல்ல உள்ளார். பாரீசில், தேசிய தினத்தை முன்னிட்டு நடக்கும் அணிவகுப்பில், இந்திய கடற்படையும் கலந்து கொள்கிறது. இதற்காக கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவர்கள், ‛பாரத் மாதாகி ஜே, ஜெய் பவானி ஜெய் … Read more

Back Nepal PMs wife Sita Dahal succumbs to cardiac arrest | நேபாள பிரதமரின் மனைவி காலமானார்

காத்மண்டு: நேபாள நாட்டு பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால் (வயது 69). நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு காத்மண்டு நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். பார்கின்சன் வகையை சேர்ந்த ஒரு சிக்கலான வியாதியால் நீண்டகாலம் அவர் அவதிப்பட்டு வந்து உள்ளார். இந்நிலையில், இன்று காலை 8.33 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். மாரடைப்பால் அவர் காலமானார். அவரது மறைவுக்கு … Read more

India – France Relations: எல்லா நேரங்களிலும் இந்தியாவிற்கு கை கொடுக்கும் பிரான்ஸ்…!

PM Modi In France: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், ஜூலை 14-ம் தேதி பிரான்சில் நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகம் மலேசியாவில் திறப்பு

புதுடெல்லி: ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் திறந்து வைத்தார். இந்திய பாதுகாப்புத் தளவாட தொழில்துறையில் முக்கிய பங்கு வகிப்பது பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி. இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மலேசியா சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா – மலேசியா இடையே பாதுகாப்பு தளவாட தொழில்துறையில் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், … Read more

சீனாவில் நிலச்சரிவில் கட்டிடம் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி

பீஜிங், சீனாவின் ஹூபே மாகாணம் யுஷான் பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் இடிபாடுகளில் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது. 5 லட்சம் கன மீட்டருக்கும் அதிகமான பாறைகள் அங்கு மூடி இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் … Read more

கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டனர்

நியூயார்க்: ஐ.நா. மேம்பாட்டு திட்ட அமைப்பு உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீட்டை வெளியிட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் உலக அளவில் 25 நாடுகள் பல்பரிமாண வறுமையை பாதியாகக் குறைத்துள்ளன என்று அந்த அறிக்கையில் ஐநா தெரிவித்துள்ளது. சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்பரிமாண வறுமை கணக்கிடப்படுகிறது. 2000 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 81 நாடுகளில் நிகழ்ந்த மாற்றங்களை ஐ.நா. மேம்பாட்டு திட்ட அமைப்பும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டன. அந்த ஆய்வின்படி, கடந்த … Read more