முதுகில் குத்தும் செயல்; தண்டனைக்கு தயாராக இருங்கள் – வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக மிகக் கடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். வாக்னர் ஆயுதக் குழுவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர், “நாம் இப்போது ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் இத்தகைய வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்கலாமா? இருந்தும் … Read more

அமெரிக்காவில் இருந்து எகிப்து புறப்பட்டார் பிரதமர் மோடி

வாஷிங்டன், இந்தியா பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்கா நாடாளுமன்றத்திலும் சிறப்புரை ஆற்றினார். அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர், 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டு சென்றார். அங்கு அவர் எகிப்து நாட்டின் பிரதமர் அப்தெல் பதாவை சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பிரதமராக பதவி … Read more

Study: ஆண்குறிக்கும் மூக்கு மற்றும் பாதத்திற்கும் என்ன தொடர்பு? அளவு தான்

Ulsan University Hospital in South Korea Study: பெரிய பாதங்களைக் கொண்ட ஆண்களுக்கு ஆண்குறியின் சுற்றளவு அகலமாக இருக்கும், மூக்கின் அளவு ஆண்குறியின் அளவை பெரும்பாலும் முடிவு செய்கிறது

வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை எதிரொலி: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பலத்த பாதுகாப்பு

மாஸ்கோ: வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கையைத் தொடர்ந்து ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. \”ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் பாணியில் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ரஷ்யர்கள் இணைந்து கொள்ளுங்கள்” என்று வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கையைத் தொடர்ந்து … Read more

பிரதமர் மோடிக்கு சிறப்பு டி-சர்ட்டை பரிசளித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

வாஷிங்டன், இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின் போது கையெழுத்தாகியுள்ளது. இதனிடையே, அமெரிக்க பயணத்தின் போது வெள்ளைமாளிகையில் அமெரிக்க-இந்திய தொழிலதிபர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பங்கேற்றார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் … Read more

எங்கள் பாணியில் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம் – வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை; ரஷ்ய அதிபருக்கு புதிய நெருக்கடி

மாஸ்கோ: “ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் பாணியில் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ரஷ்யர்கள் இணைந்து கொள்ளுங்கள்” என்று வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில் ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் … Read more

Pakistan is being discredited internationally: Imran Khan says | சர்வதேச அளவில் பாகிஸ்தான் மதிப்பிழக்கிறது: சொல்கிறார் இம்ரான் கான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: சர்வதேச அளவில் மதிப்பிழக்கும் வகையில் பாகிஸ்தான் ஜனநாயகம் பெரும் சரிவுக்கு ஆளாகியிருப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. மக்கள் அன்றாட வாழ்வில் இரு வேளை உணவு கிடைக்கவே போராடி வருகின்றனர். சமீபத்தில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்காவில் உள்ள தங்கள் நாட்டுக்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஓட்டலை, நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் அரசு 3 ஆண்டுகளுக்கு … Read more

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் – பிரதமர் மோடி

வாஷிங்டன், இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின் போது கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில், அமெரிகாவின் வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் பிரதமர் மோடி பேசுகையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும், மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்றார். மேலும், இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட … Read more