வீடு வாடகைக்கு… என்பது போல காதலர்கள் வாடகைக்கு என அறிவித்த நாடு…!

டோக்கியோ, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானில் தனியாக வாழும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், வாடகைக்குக் காதலர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஜப்பான் அரசு கொண்டுவந்துள்ளது. ஜப்பானில் ஏராளமான இளைஞர்கள், இணை கிடைக்காமல் மனதளவில் சோர்வடைந்துள்ளதாகவும் இதனால், காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் திட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒரு மணிநேரத்திற்கு 3,000 ரூபாய்க்குக் காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாமாம். ஆனால், குறைந்தபட்சம் 2 மணிநேரத்திற்கு அவர்களை வாடகைக்கு எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி … Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்தது இலங்கை

கொழும்பு, கடந்த 8ந்தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அன்று நள்ளிரவு மீன் பிடித்துவிட்டு அதிகாலையில் கரை திரும்பும்போது, எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர், படகையும், 15 மீனவர்களையும் சிறைபிடித்தனர். எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிபதி, தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கை கடற்பகுதிக்குள் நுழைவதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், இலங்கை அரசால் தடை … Read more

பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்கிய அமெரிக்க பாடகி மணிப்பூர் விவகாரம் குறித்து டுவீட்

வாஷிங்டன், பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த போது, வாஷிங்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மேரி மில்பென் என்ற அமெரிக்க பாடகி இந்திய தேசிய கீதத்தைப் பாடினார். பின்னர் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்கி அவரிடம் மேரி மில்பென் ஆசி பெற்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை … Read more

“எங்கள் ரொட்டியைப் பறிக்காதீர்” – ஆப்கனில் தலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டம்

காபூல்: ஆப்கனில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்தக் கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக பெண்கள் பலரும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தலிபான்கள் கடந்த மாதம் பெண்கள் அழகு நிலையங்களை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து காபூல் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்டு வந்த அழகு நிலையங்கள் மூடப்பட்டன. தலிபான்கள் உத்தரவால் ஏராளமான பெண்கள் வேலை இழந்தனர். இந்த நிலையில், தலிபான்களின் உத்தரவை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். காபூல் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட … Read more

ஊழியரை அடித்து துன்புறுத்திய வழக்கு அமெரிக்காவில் இந்திய தம்பதி மீது குற்றச்சாட்டு பதிவு

வாஷிங்டன், அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தம்பதி ஹர்மன்பிரீத் சிங் (வயது 30), குல்பீர் கவுர் (42). இவர்கள் அங்குள்ள வடக்கு செஸ்டர்பீல்ட் நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகின்றனர்.இந்த சூழலில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ஹர்மன்பிரீத் தனது உறவுக்காரர் இளைஞர் ஒருவரை தனது சூப்பார் மார்க்கெட்டில் வேலைக்கு அமர்த்தினார். ஆரம்பத்தில் கேசியர் என கூறி இளைஞரை பணியமர்த்திய ஹர்மன்பிரீத்-குல்பீர் தம்பதி சூப்பர் மார்க்கெட்டின் அனைத்து வேலைகளையும் அந்த … Read more

“எங்கள் ரொட்டியைப் பறிக்காதீர்” – ஆப்கனில் தலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டம்

காபூல்: ஆப்கனில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்தக் கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக பெண்கள் பலரும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தலிபான்கள் கடந்த மாதம் பெண்கள் அழகு நிலையங்களை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து காபூல் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்டு வந்த அழகு நிலையங்கள் மூடப்பட்டன. தலிபான்கள் உத்தரவால் ஏராளமான பெண்கள் வேலை இழந்தனர். இந்த நிலையில், தலிபான்களின் உத்தரவை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். காபூல் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட … Read more

இந்தியா-அமெரிக்கா உறவுமுன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது-வெள்ளை மாளிகை அறிக்கை

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப்பயணமாக கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதோடு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிலையில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜீன் … Read more

காதல் விவகாரத்தால் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் மாயம்?

பீஜிங்: சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங் மாயமான பிண்ணனியில் அவரது காதல் விவகாரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்பட்டவர் வெளியுறவு அமைச்சர் கின் கேங் (57). இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு கடந்த மூன்று வாரங்களாக அவர் பொதுவெளிக்கு வரவில்லை. அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவும் … Read more

புலம்பெயர்ந்து வருவோருக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை: மேயர் திட்டவட்டம்

நியூயார்க்: புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனியும் நியூயார்க்கில் இடமில்லை என்று அந்நகர மேயர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்களை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்க மாகாண அரசுகளிடம் கருத்து வேறுபாடு நிகழ்கிறது. நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “நியூயார்க் நகரம் நிரம்பிவிட்டது. எங்கள் கோப்பை நிரப்பப்பட்டுவிட்டது. புலம்பெயர்ந்த மக்களுக்கு இனி இங்கு இடமில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமார் 90,000 பேர் நியூயார்க்குக்கு … Read more