பிரிட்டனில் குழந்தைகளை கொன்ற நர்ஸ் கைது| Why Did Lucy Letby, A UK Nurse, Murder Babies?

லண்டன்: பிரிட்டனில் மகப்பேறு மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற நர்சை போலீசார் கைது செய்தனர். அவரை காட்டிக் கொடுக்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் உதவியது தெரியவந்தது. ரவி ஜெயராம் என்ற டாக்டர் கவுண்டஸ் செஸ்டர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். குழந்தைகள் நல டாக்டரான இவர், பச்சிளம் குழந்தைகள் மரணம் தொடர்பாக நர்ஸ் மீது சந்தேகம் தெரிவித்தார். இதனையடுத்து, விசாரணைக்கு பிறகு லூசி லெட்பி(33) என்ற நர்ஸ் கைது செய்யப்பட்டார். அவர் 7 பச்சிளம் குழந்தைகளை … Read more

நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் வழக்கு தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்| US court dismisses Dahawoors case against extradition

வாஷிங்டன் ;இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து, மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி தஹாவூர் ராணா, 62, தாக்கல் செய்த மனுவை, அமெரிக்க நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 2009 நவம்பரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் தொடர்புடைய, நம் அண்டை நாடான பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த, வட அமெரிக்க நாடான கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா, அமெரிக்காவில் 2009-ல் பிடிபட்டார். இவர், பாக்., பயங்கரவாதி … Read more

துபாய் கடற்கரையில் வேற லெவல்… 4 நாட்கள் விசிட்டிற்கு புறப்பட்டு ஏ.எம்.சி அதிகாரிகள்!

துபாய் என்றாலே வளைகுடா நாடுகளில் மிக முக்கியமான ஒன்று என்ற விஷயம் நினைவில் தோன்றும். அதுமட்டுமின்றி வேலை வேண்டுமா? துபாய்க்கு கிளம்பி போய்டுங்க என்று தமிழகத்தை சேர்ந்த பலர் கூறுவதை கேட்கலாம். அந்த அளவிற்கு இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் துபாய்க்கு முக்கிய பங்குண்டு. துபாய்க்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! துபாய் உள்கட்டமைப்பு வசதிகள் இங்கிருந்து சென்ற தொழிலாளர்களால் அந்நாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் வேற லெவலுக்கு மேம்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சமே இல்லை. வெளிநாட்டு … Read more

வியட்நாமில் விமான போக்குவரத்து துறையில் நிபுணர்களுக்கு பற்றாக்குறை

ஹனோய், வியட்நாமின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வருமானத்தை அதிகரிப்பதற்காக சுற்றுலா துறையை மேம்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது. வெளிநாடுகளில் இருந்து அங்கு வர 87.6 சதவீதம் பேர் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி உள்ளனர். எனவே அங்குள்ள டான் சன் நாட், லாங் தான் மற்றும் நொய் பாய் உள்ளிட்ட முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கேற்ற வகையில் அங்கு விமான துறையில் போக்குவரத்து, துறைமுகம் மற்றும் நிர்வாக … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள இந்திய வம்சாவளி விவேக் ராமசாமிக்கு எலான் மஸ்க் பாராட்டு

வாஷிங்டன்: அடுத்த ஆண்டு நடைபெற விருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள இந்திய வம்சாவளி விவேக் ராமசாமியை மிக நம்பிக்கைக்குரிய வேட்பாளர் என்று எலான் மஸ்க் பாராட்டியுள்ளார். விவேக் ராமசாமிக்கு 38 வயதாகிறது. ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் பட்டம்பெற்ற அவர், தற்போது தொழில்முனைவோராக உள்ளார். 2024-ம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட அவர் விண்ணப்பித்துள்ளார். அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் விவேக் ராமசாமி, கவனம் … Read more

இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தானில் மந்திரி பதவி

இஸ்லாமாபாத் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக். காஷ்மீர் பிரிவினைவாதியான இவர் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமையால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். யாசின் மாலிக் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான பல வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு உள்ளார். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில், தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டார். 2019 இல் கைது செய்யப்பட்டு பின்னர் மே … Read more

பர்கர் கிங் நிறுவனத்தில் 27 ஆண்டுகள் விடுப்பின்றி பணியாற்றிய ஊழியருக்கு பொதுமக்கள் ரூ.3.3 கோடி நன்கொடை

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மியாமி டேட் கவுன்டியை தலைமையிடமாகக் கொண்டு பர்கர் கிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 20,000 ஓட்டல்கள் உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 265 ஓட்டல்கள் செயல்படுகின்றன. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள பர்கர் கிங் ஓட்டலில் கெவின் போர்டு (54) என்பவர் பணியாற்றினார். இவர் கடந்த 27 ஆண்டுகளில் ஒருநாள்கூட விடுப்பு எடுக்கவில்லை. இதற்காக பர்கர் கிங் நிறுவனம் சார்பில் அவருக்கு ஒரு … Read more

மாஸ்கோவில் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் டிரோன் விமானம் – வர்த்தக மையம் மீது விழுந்ததால் பரபரப்பு

மாஸ்கோ, உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 541வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் இன்று அதிகாலை 4 மணியளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோனை மாஸ்கோவில் நிறுவப்பட்டுள்ள வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. ஆனாலும், டிரோன் மாஸ்கோவில் உள்ள வர்த்தக மையம் மீது மோதியது. இந்த சம்பவத்தில் கட்டிடம் பலத்த சேதமடைந்தது. அதேவேளை இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் … Read more

அன்பு மகனே..! விண்வெளியிலிருந்து பூமியில் உள்ள மகனுடன் பேசிய தந்தை: வீடியோ வைரல்.!

குவைத் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் சர்வதே விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுல்தான் அல் நெயாடி பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி பூமிக்கு திரும்பும் … Read more

பாகிஸ்தான்: மத வழிபாட்டு தலங்கள், மாற்று மதத்தினரின் வீடுகளை தீ வைத்து எரித்த கும்பல்

லாகூர், பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை, இந்து, கிறிஸ்தவம், சீக்கியம் உள்ளிட்ட மதத்தினர் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே, பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் மாவட்டம் ஜரன்வாலா நகரின் ஐசாநஹ்ரி பகுதியில் கிறிஸ்தவ மதத்தினர் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை இஸ்லாமிய மத புத்தகமான குரானின் கிழிக்கப்பட்ட பக்கங்கள் … Read more