IQAir: இந்தியாவில் அதிகரிக்கும் காற்று மாசு! கங்கை சமவெளியும் விலக்கல்ல

Top 10 Air polluted Cities Of India: இந்தியாவில் காற்றின் தர நிலை தொடர்ந்து குறைந்து வருவது கவலைகளை அதிகரிக்கிறது. அதிலும் காசி உட்பட கங்கை சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது

துடிப்பான ஜனநாயகத்தை கொண்ட நாடாக திகழ்கிறது இந்தியா: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை புகழாரம்

வாஷிங்டன்: துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை புகழாரம் சூட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் 22-ம் தேதி செல்லும் இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அவர் 2016-ம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தார். தற்போதைய பயணத்தின்போது பிரதமர் மோடி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் … Read more

Vibrant democracy in India: White House official proud | இந்தியாவில் துடிப்புமிக்க ஜனநாயகம்: வெள்ளை மாளிகை அதிகாரி பெருமிதம்

வாஷிங்டன்: ”பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்தியாவில் துடிப்புமிக்க ஜனநாயகம் செயல்படுகிறது. இதை அங்கு செல்பவர்கள் நேரில் உணர முடியும்,” என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில், இந்த பயணம் தொடர்பாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது: இந்தியாவில் … Read more

Hypersonic Missile Production Iran-US Tension | ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பு ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றம்

துபாய் :ஈரானின் அணுசக்தித் திட்டத்தால், அமெரிக்காவுக்கும் அந்நாட்டிற்கும் இடையே ஏற்கனவே மோதல் தொடரும் நிலையில், ஒலியை விட, 15 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஈரான் தயாரித்து உள்ளதாக அறிவித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, டெஹ்ரான் அணுசக்தித் திட்டம் தொடர்பாக நீண்ட காலமாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், வான் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஒலியை விட, 15 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி … Read more

Russia, Ukraine complain to each other about the collapse of the huge reservoir dam | பிரமாண்ட நீர்த்தேக்க அணை தகர்ப்பு ரஷ்யா, உக்ரைன் பரஸ்பரம் புகார்

கீவ், உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள காக்ஹோவ்கா அணையின் ஒரு பகுதி குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக, இரு நாடுகளும் பரஸ்பரம் புகார் கூறியுள்ளன. அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறுவதால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கிய இந்த போர், 16 மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் தெற்கே, டினிப்ரோ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரமாண்ட காக்ஹோவ்கா அணையின் … Read more

அமெரிக்காவில் 6 இளம்பெண்கள் அடுத்தடுத்து கொலை.. சீரியல் கொலையா? என்ற கோணத்தில் போலீஸ் தீவிர விசாரணை

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் 100 மைல் சுற்றுவட்டாரத்தில் ஆறு இளம்பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரியில் போர்ட்லாந்து பகுதியிலுள்ள பிலெசன்ட் பள்ளத்தாக்கில் கிரிஸ்டன் ஸ்மித் என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 8ந்தேதி அன்று கிளார்க் கவுன்டியிலுள்ள ஒரு பாழடைந்த பகுதியில் காயங்களுடன் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதே மாதத்தில், மேலும் இரு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இறுதியாக, ஏப்ரல் 30 ஆம் தேதியன்று நார்த்வெஸ்ட் போல்க் கவுன்டியில், … Read more

Russia Vs Ukraine | உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ… – அச்சமூட்டும் அணை மீதான தாக்குதலும் பின்புலமும்

கீவ்: கழுகு கோணத்தில் தெரியும் அந்த செயற்கைகோள் படங்களில் கடலென பரந்து விரிந்து கிடக்கும் ஓர் அணைக்கட்டின் கரையில் ஓர் இடத்தில் உடைப்பெடுத்து தண்ணீர் வெளியேறுகிறது. துள்ளிக் குதித்து வெளியேறும் தண்ணீர் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. தெற்கு உக்ரைனுக்குச் சொந்தமான, தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா அணையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உடைப்பு ராணுவத் தாக்குதல் மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் நேட்டோவும் … Read more

37 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய 8 மாத கர்ப்பிணி!

அமெரிக்காவில், 30க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய 8 மாத கர்ப்பிணி பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. சம்பவத்தன்று இம்யூனெக் வில்லியம்ஸ் என்ற பெண் ஓட்டுநர் 37 குழந்தைகளுடன் பள்ளிப் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, பேருந்துக்குள் புகை  வந்ததால் சுதாரித்துக் கொண்ட அவர், பேருந்தை நிறுத்திவிட்டு அதிலிருந்த குழந்தைகளை கீழே இறங்கச் செய்தார். அடுத்த சில வினாடிகளில், பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை … Read more

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது..!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுரினாம் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார்’ விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். 3 நாள் பயணமாக சுரினாம் சென்றுள்ள குடியரசு தலைவர் முர்மு, 1873-ம் ஆண்டு சுரினாமுக்கு கப்பல் மூலம் இந்தியர்கள் சென்றதன் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கலாச்சார விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, தமக்கு வழங்கப்பட்டுள்ள சுரினாமின் உயரிய விருதை இந்திய-சுரினாமியர் சமூகத்திற்கு அர்ப்பணிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். … Read more