இந்தியர்களுக்கு 5 மாதங்களில் 60 ஆயிரம் விசாக்களை வழங்கிய சீனா

பீஜிங், சீனாவில் 3 ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், நடப்பு ஆண்டு மார்ச்சில் இந்தியா உள்பட வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் என சீனா அறிவித்தது. இதன்படி, சீனாவின் பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்படும். இதற்காக இந்தியாவில் உள்ள தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், 2020-ம் ஆண்டு மார்ச் 28-ந்தேதிக்கு முன்பு வழங்கப்பட்ட சீன விசாக்கள், மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள சீன … Read more

நைஜீரியா பிடித்து வைத்திருந்த இந்திய வீரர்கள் 9 மாதங்களுக்கு பின் விடுவிப்பு

அபுஜா, நைஜீரியா நாட்டில் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக கடந்த ஆண்டு ஹீரோயிக் ஐடுன் என்ற கப்பல் சென்று உள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த 16 கடற்படை வீரர்கள் உள்பட 26 வெளிநாட்டினர் பயணம் செய்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டில், அந்த கப்பல் எண்ணெய்க்காக நைஜீரிய கப்பலுக்கு காத்திருந்தது. எனினும், தெரியாத மற்றும் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று, நைஜீரிய கடற்படையில் இருந்து வருகிறோம் என கூறியபடி இந்த கப்பலை நெருங்கி உள்ளது. இதனால், கடற்கொள்ளையர்களாக … Read more

'குத்தகை பணம் செலுத்தவில்லை' – மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு…!

கொலாலம்பூர், பாகிஸ்தான் கடும் அரசியல், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் விமான நிறுவமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் குத்தகை முறையில் மலேசியாவிடமிருந்து போயிங் 777 வாங்கியுள்ளது. இதற்கு தவணை முறையில் பணம் மலேசியாவுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக தவணை தொகை செலுத்தப்படமால் இருந்து வந்தது. மொத்தம் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பாக்கி தொகை செலுத்தப்படாமல் இருந்தது. இது தொடர்பாக மலேசிய கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் விமானத்தை பறிமுதல் செய்ய … Read more

லிபியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு பிரசாரம்; 23 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி

திரிபோலி, லிபியா நாட்டில் 2011-ம் ஆண்டு அரசுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிக்கு பின்னர், அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை மற்றும் மோதல் போக்கும் காணப்பட்டது. இதனால், சண்டை, உள்நாட்டு குழப்பம் என்ற சூழலை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தி கொண்டது. ஈராக் மற்றும் சிரியாவில் அடித்தளம் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு லிபியாவிலும் வளர்ச்சி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, 2015-ம் ஆண்டு திரிபோலி நகரில் கொரிந்தியா ஓட்டலில் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, இந்த … Read more

China sets new record by sending civilians into space | விண்வெளிக்கு சாமானியரை அனுப்பி சீனா புதிய சாதனை

பீஜிங், விண்வெளியில் உள்ள தன் ஆராய்ச்சி மையத்துக்கு முதல் முறையாக, ‘சிவிலியன்’ எனப்படும் பொதுமக்களில் ஒருவரை அனுப்பி சீனா புதிய சாதனை படைத்துள்ளது. ரஷ்யா உட்பட ஏழு நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவியுள்ளன. இதன் ஆயுட்காலம் 2030ல் முடிகிறது. இந்நிலையில், விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதற்காக தனக்கென தனியாக ஆராய்ச்சி மையத்தை நம் அண்டை நாடான சீனா உருவாக்கி வருகிறது. இதன் கட்டுமானம் மற்றும் அதற்கு தேவையான பொருட்களை, சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது. இதன்படி, … Read more

Smoke is an enemy to the body: No more tobacco – Today is World No Tobacco Day | புகை உடலுக்கு பகை: வேண்டாம் புகையிலை – இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சிகரெட் தயாரிப்பதற்காக 60 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. புகை பிடிப்பதால் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகைப்பது ஒரு தவறான பழக்கம், புகைப்பது பணத்தை வீணடிக்கிறது, உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் … Read more

பிரதமர் அலுவலகத்தில் ‘விருந்து’ – மக்கள் அதிருப்தியால் ஜப்பான் பிரதமரின் மகன் ராஜினாமா

டோக்கியோ: ஜப்பான் பிரதமரின் மகன் அரசு இடத்தில் தனியார் விருந்து நிகழ்ச்சியை கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் மகன் ஷோடாரோ கிஷிடா, பிரதமரின் நிர்வாக கொள்கைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பிரதமரின் இருப்பிடத்தை ஷோடாரோ தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சிக்காக பயன்படுத்தி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் ஜப்பானின் முக்கிய ஊடகங்களில் வெளியாகின. அதில் அரசு கட்டிடத்தில் பலரும் விதிமுறை மீறி … Read more