நீதிபதி கவாய் மீது தாக்குதல்: "இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது" – ஸ்டாலின் கண்டனம்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற அந்த நபர், “சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” எனக் கூச்சலிட்டிருக்கிறார். நீதிபதி கவாய் இருந்தும் அவரைக் காவலர்கள் வெளியேற்றிய பின்னர் “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது. அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான்” எனக் கூறிவிட்டு, எந்த பரபரப்பும் இல்லாமல் வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய். … Read more

“சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: “சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து மகிழ்ச்சியை வழங்குவதே அன்புக்கரங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் பயணடைந்த மாணவ, மாணவிகளின் வீடியோக்களை பகிர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து மகிழ்ச்சியை வழங்குவதே அன்புக்கரங்கள்! இத்தகைய … Read more

“இது தவறோ, அலட்சியமோ அல்ல; பெரும் அரசியல் குற்றச்செயல்" -காங்கிரஸ் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 22.7 லட்சம் மக்களின் பெயர்களைத் திட்டமிட்டு நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2020 தேர்தலின்போது காங்கிரஸ் நெருங்கிய போட்டி அளித்த 59 தொகுதிகளைக் குறிவைத்து SIR மூலம் இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கூறுகிறது. SIR-க்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட்டம் முன்னதாகக் கூறிவந்த வாக்குத் திருட்டு (Vote Chori) குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தும் காங்கிரஸ், தலித் மற்றும் இஸ்லாமியப் பெண்களின் வாக்குகள் மட்டுமே திட்டமிடப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. … Read more

அரபிக் கடலில் ‘சக்தி புயல்’: மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல தடை!

சென்னை: அரபிக்கடலில் உருவாகி உள்ள சக்தி புயலால்  மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. சக்தி புயல் காரணமாக கடலில் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், ராமநாதபுரம் மாவட்ட ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு அரபிக்கடலில் சக்தி என்ற பெயருடைய புயல் உருவாகியுள்ளது. இதனால் அரபிக்கடலில் அக்டோபர் 7-ம் தேதி வரை நிலைக்கொண்டு கரையினை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, … Read more

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.! | Automobile Tamilan

இந்தியாவில் ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வந்த நிலையில் செப்டம்பர் 2025 மாதந்திர பயணிகள் கார் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள கார்களில் டாடா நெக்ஸான் எஸ்யூவி 22,573 யூனிட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளது. டாப் 10 கார்களில் 5 மாடல்கள் எஸ்யூவி பிரிவில் உள்ள நெக்ஸான், க்ரெட்டா, பஞ்ச், பிரெஸ்ஸா மற்றும் ஸ்கார்ப்பியோ மாடலும் உள்ள நிலையில், மாருதியின் டிசையர், எர்டிகா, பிரெஸ்ஸா, வேகன் ஆர், பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் என 6 மாடல்கள் முதல் 10 … Read more

மும்பை தேர்தல்: 2 மாதத்தில் 5 முறை சந்தித்த தாக்கரே சகோதரர்கள் – கூட்டணிக் கட்சிகள் கலக்கம்

மும்பை மாநகராட்சி தேர்தல் மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் கடந்த மூன்று ஆண்டுகளாக தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. மும்பை மாநகராட்சியை கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனாதான் ஆட்சி செய்து வந்தது. ஆனால் இப்போது சிவசேனா இரண்டாக உடைந்து விட்டதால் மீண்டும் மும்பை மாநகராட்சியை சிவசேனா பிடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களில் 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376.01 கோடி 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்!, அதாவது, பொதுத்துறை நிறுவனங்களான  மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை … Read more

எந்த டிகிரி படித்திருந்தாலும் 'ஓகே'; இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு- எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? பிரிவு கட்டுப்பாட்டாளர் (Section Controller) மொத்த காலிப்பணியிடங்கள்: 368 வயது வரம்பு: 20 – 33 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) சம்பளம்: ரூ.35,400 கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி இந்தியன் ரயில்வே எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? கணினி அடிப்படையிலான தேர்வு, CBAT, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. விண்ணப்பிக்கும் இணையதளம்: rrbapply.gov.in விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 15, 2025 மேலும், விவரங்களைத் … Read more

ராமதாசுக்கு இதய குழாய்களில் அடைப்பு இல்லை! அன்புமணி தகவல்…

சென்னை:  அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது; இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இல்லை என்று  அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ்  நேற்று இரவு  திடீரென சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுவதாக கூறப்பட்ட து. இதுகுறித்து தகவல் அறிந்ததும்,  பாமக தலைவர் அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சென்று ராமதாஸின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவருக்கு … Read more

இருமல் மருந்து விவகாரம்; மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

சிந்த்வாரா, மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்து உட்கொண்டதில் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது சர்ச்சையானது. இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்து உள்ளது. இதுபற்றி சிந்த்வாராவின் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் திரேந்திரா சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, 14 குழந்தைகள் பலி என எங்களுக்கு அறிக்கை தரப்பட்டு உள்ளது. இழப்பீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுடைய கணக்கிற்கு பணம் சென்று விட்டது. 8 குழந்தைகளுக்கு சிந்த்வாராவின் நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. … Read more