"போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு" – ஜெர்மனி சென்ற ஸ்டாலின் ட்வீட்டும், அண்ணாமலையின் விமர்சனமும்!

ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டதாக இன்று மாலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், “பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன். ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான Köln தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது திராவிட மாடல் அரசு. பழந்தமிழ் இலக்கியச் … Read more

நீர்வீழ்ச்சியில் குதித்து வாழ்வை முடித்துக்கொள்ள வந்த தொழிலதிபர்… ஆறுதல் கூறி தேற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்த நல்ல உள்ளங்கள்…

நீர்வீழ்ச்சியில் விழுந்து வாழ்வை முடித்துக் கொள்ளும் எண்ணத்துடன் வந்த நபரை ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகில் உள்ளது ஜோக் பால்ஸ். இந்தியாவின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியான இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். சமீபத்தில் ஜோக் பால்ஸ் வந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஆட்டோவில் ஏறி அந்த பகுதியில் சுற்றியுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனரிடம் அங்குள்ள அபாயகரமான மற்றும் உயரமான இடங்கள் … Read more

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய வாகனம்: 2 பேர் பலி; 6 பேர் காயம்

டேராடூன், உத்தரகாண்டில் தினமும் மழைப்பொழிவால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்படுகிறது. இதில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரகாண்டில் கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இதுபற்றி வெளியான தகவலில், சோன்பிரயாக் மற்றும் கவுரிகுண்ட் பகுதிகளுக்கு இடையே முன்கட்டியா மலைப்பகுதியருகே வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, இன்று காலை 7.34 மணியளவில் பெரிய கற்கள் மற்றும் பாறைகள் உருண்டு இந்த வாகனத்தின் மீது விழுந்தன. … Read more

பூனைக்காக மினியேச்சர் நகரத்தை கட்டினாரா சீன யூடியூபர்? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கு அதன் உரிமையாளர்கள் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கின்றனர். இன்னும் சொல்லபோனால் குழந்தைகளைப் போன்று அதனை பராமரித்து வருகின்றனர். அந்த வகையில் சீன யூடிபர் ஒருவர் பூனைக்கு என்றே ஒரே முழு நகரத்தையும் மினியேச்சர் வடிவில் கட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியமடைந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்த வீடியோவை ஏஐயால் உருவாக்கப்பட்டது என்று கூறி வருகின்றனர். வைரலாகும் வீடியோவின், அந்த நகரத்தில் … Read more

மதுரை ஆதீனம் பதவி விலக வேண்டும்! மதுரை ஆட்சியரிடம் ஆதீன இளைய தம்பிரான் புகார்..

மதுரை: மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும் என வலியுறுத்தி  மதுரை ஆதீன விஸ்வலிங்க தம்பிரான், ஆதீனம்மீது புகார் கூறி   மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரிநாதரின் மறைவுக்குப் பிறகு ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மதுரை ஆதினத்தின் 293ஆவது  மடாதிபதியாவார். அதாவது,   மதுரை குருமகா சந்நிதானத்தின் 293ஆவது சன்நிதானமாக,  ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஸ்ரீ … Read more

வாக்காளர்களை ராகுல் காந்தி அவமதிக்கிறார்; பாஜக

டெல்லி, பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள், வாக்கு திருட்டு தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராகுல் காந்தி பீகாரில் வாக்காளர் உரிமை … Read more

பேத்தியின் 23 வயது வகுப்பு தோழனை விரும்பும் 83 வயது மூதாட்டி – இரு குடும்பமும் ஆதரவு என நெகிழ்ச்சி!

23 வயதான இளைஞரை 83 வயதான மூதாட்டி ஒருவர் விரும்புவதாக தெரிவித்துள்ள சம்பவம், பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக டேட்டிங் செய்து வரும் இவர்களின் காதல் கதை எங்கிருந்து தொடங்கியது என்பது குறித்து சமீபத்தில் ஒரு ஜப்பானிய ஊடகத்தின் நேர்காணலில் பேசியிருந்ததை அடுத்து இந்த விஷயம் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது. சவுத் மார்னிங் போஸ்ட் செய்தியின் படி, 23 வயதான கோஃபு என்பவர் தனது வகுப்பு தோழியின் 83 வயதான பாட்டி ஐகோ என்பவர் … Read more

‘டெட்’ கட்டாயம்: ஆசிரியர்கள் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘டெட் தேர்வு’ எழுதி தேர்ச்சி பெற வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: ஆசிரியர் பணிக்கு ‘டெட்’ தேர்வு கட்டாயம்   என்பதை உறுதிபடுத்தி உள்ள உச்சநீதிமன்றம்,  ஆசிரியர்கள்  பணியில் தொடர தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில்,  5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் தேர்வு எழுத வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதுடன்,  தேர்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று  ஏற்கனவே சென்னை … Read more

3 மனைவிகளை கைவிட்ட நபருடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்த இளம்பெண்; கடைசியில் நேர்ந்த கொடூரம்

பெங்களூரு, கர்நாடகாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் விட்டல். வாடகை கார் ஓட்டுநரான இவர் 3 பேரை திருமணம் செய்து பின்னர் அவர்களை விட்டு பிரிந்திருக்கிறார். இந்நிலையில், அவருடன் வனஜாக்சி (வயது 35) என்ற பெண்ணுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இவருக்கும் இதற்கு முன்பு 2 முறை திருமணம் நடந்துள்ளது. அவரும் 2 கணவர்களையும் விட்டு விட்டு தனியாக வாழ்ந்திருக்கிறார். இந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். சில ஆண்டுகளாக … Read more

Ramya: `ஆபாச மெசேஜ், பாலியல் வன்கொடுமை மிரட்டல்' – நடிகை ரம்யா புகாரில் 12 பேர் கைது!

கன்னட நடிகர் தர்ஷன் தன் ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற ஜாமீனை விமர்சித்தவர்களில் ஒருவர் கன்னட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா. தொடர்ந்து எழுந்த விமர்சனங்களாலும் சில சட்ட சிக்கல்களாலும் நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நடிகை ரம்யாவுக்கு நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் ஆபாசமான செய்திகளை அனுப்பியும், … Read more