கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள், நமது சாதனையை பார்த்து எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள்,  வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதலிடம்  நமது சாதனையை பார்த்து எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்! முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். “கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள். காலிற்கு கீழ் நிலமும் தலைக்கு மேல் கூரையும் பலருக்கு கனவு, ஏழை மக்களுக்கு இலவச பட்டா என்பது பேருதவி. 2021 முதல் தற்போது வரை சுமார் 17 லட்சம்  பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம்”  என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு … Read more

பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

பெங்களூருவில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதையிலும், சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதையிலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பசுமை நிறப்பாதையில் உள்ள ஆர்.வி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தது. இது டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் பாதை ஆகும். இந்த மஞ்சள் நிறப்பாதையில் … Read more

கோவை தனியார் நிறுவனம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த கை – காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம், சூலூர் அருகே கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வளாகம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. அதன் அருகிலேயே ரயில் தண்டவாளம் இருக்கிறது. கோவை ஏதாவது கொலை சம்பவமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து சூலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் அவர்களும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். காவல்துறை விசாரணையில், அது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகுபாண்டி என்பவரின் கை என்பது தெரியவந்தது. அழகுபாண்டிக்கு கடந்த … Read more

பாமக பொதுக்குழுவில் அன்புமணி மேலும் ஓராண்டு தலைவராக நீட்டிப்பு உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்! விவரம்

மாமல்லபுரம்: பாமக பொதுக்குழுவில் அன்புமணி மேலும் ஓராண்டு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி,  அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்கட்சி தேர்தல், திமுகவை வீழ்த்த வேண்டும், பழைய ஓய்வூதியம் உள்பட 19 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. பாமகவை கைப்பற்றுவதில் பாமக  நிறுவனா் ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி  இடையே கடந்தசில மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. இதன் உச்சபட்சமாக, இன்று பாமக தலைவர் அன்புமணி தலைமையில் … Read more

உத்தரகாண்ட்: மேகவெடிப்பு 3-வது நாளாக ஹெலிகாப்டர் வழியே தொடரும் மீட்பு பணி

உத்தரகாசி, உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் கடந்த 5-ந்தேதி திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், வீடுகள், கட்டிடங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து, உள்ளூர் காவல்துறை, எஸ்.டி.ஆர்.எப், ராணுவம் மற்றும் தீயணைப்பு படைகளின் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் … Read more

ட்ரம்ப் – புதின் சந்திப்பு: உக்ரைன் நிலங்களை விட்டுக்கொடுக்க வேண்டுமா? – எதிர்க்கும் ஜெலன்ஸ்கி!

விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அலாஸ்காவில் சந்திக்க உள்ளனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், உக்ரைனின் தலையீடு இல்லாமல் அமைதி ஒப்பந்தங்கள் ஏற்படாது எனவும், சந்திப்புகள் அனைத்தும் ‘செயலில்லாத தீர்வுகளையே (dead solution)’ தரும் என்றும் கூறியுள்ளார் அதிபர் ஜெலன்ஸ்கி. Donald Trump ட்ரம்ப்பின் முடிவை எதிர்த்த அவர், புதின் உடனான அமெரிக்க அதிபரின் சந்திப்பு “நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரிலிருந்து வெகு தொலைவில் உள்ளது” எனக் கூறியுள்ளார். கடந்த வெள்ளி … Read more

தமிழ்நாட்டில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்! நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் தகவல்

டெல்லி: பாரத் மாலா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய மத்திய  சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மக்களவையில்  தமிழ்நாட்டைச்சேர்ந்த எம்.பி, மத்தியஅரசால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் நிதின் கட்கரி, தமழ்நாட்டில்,  பாரத் மாலா திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள,  1,476 கிலோ மீட்டா் தொலைவு சாலைப் பணிகளில் … Read more

காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளை தேடும் தீவிர பணியில் ராணுவம் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த 9 நாட்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கைகள் தொடங்கின. சமீப ஆண்டுகளில் மிக நீண்டகால ராணுவ தேடுதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அகால் வன பகுதிகளில், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் நேற்றிரவு வீரமரணம் அடைந்தனர். 2 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் பிரீத்பால் சிங் மற்றும் ஹர்மிந்தர் … Read more

Citroën 2.0 plans – மேம்படுத்தப்பட்ட சிட்ரோயனின் 2.0 என்ன எதிர்பார்க்கலாம்..?

இந்தியாவில் ஸ்டெல்லாண்டிஸ் குழுமத்தின் Citroën 2.0 என்ற செயல் திட்டத்தை செயல்படுத்த உள்ளதால் விற்பனையில் உள்ள மாடல்களை மேம்படுத்தவும், டீலர்கள் எண்ணிக்கையை உயர்த்தவும் உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பொழுது 10 டீலர்களை கொண்டிருந்த சிட்ரோயன் தற்பொழுது 80 டீலர்களை பெற்றுள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 150 டீலர்களாக உயர்த்த உள்ளது, ஸ்டெல்லாண்டிஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ஷைலேஷ் ஹசேலா, புதிய திட்டம் … Read more

கும்பகோணம்: குப்பைக் கூளமாய் காட்சியளிக்கும் நதிநீர் கால்வாய்; அலட்சியம் காட்டாமல் சீரமைப்பார்களா?

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த புளியஞ்சேரி என்ற கிராமத்தை ஒட்டிய நதிநீர்கால்வாய்தான் நாம் இங்கு பார்த்து கொண்டு இருக்கிறோம். இந்த கால்வாயானது 1924-ம் வருடம் விவசாய பாசனத்திற்கு அமைக்கப்பட்ட ஒரு கால்வாய் ஆகும். இது காவேரி ஆற்றின் நதிநீர் கால்வாயாக பாபுராஜபுரத்தில் ஆரம்பித்து, புளியஞ்சேரி வழியே ஊருக்குள் வருகிறது‌. இங்கு வசிக்கும் மக்களிடையே இந்த நீரோடையை பற்றி கேட்கையில், அவர்களின் பதில், இந்த நீரோடையானது பாபுராஜபுரத்தில் ஆரம்பித்து புளியஞ்சேரி வழியில் இன்னம்பூர் வரை விவசாய … Read more