இந்தியாவில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – புதிய மதிப்பீடு எச்சரிக்கை!

‘இந்தியாவில் யானைகளின் நிலை: டிஎன்ஏ அடிப்படையிலான ஒத்திசைவான அகில இந்திய யானை மதிப்பீடு’ (SAIEE 2021-25) என்ற அறிக்கையை இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) செவ்வாயன்று வெளியிட்டது. இதில் இந்தியாவின் காட்டு யானைகளின் எண்ணிக்கை 22,446 என்று கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டின் 27,312 மதிப்பீட்டை விட தோராயமாக 17% குறைவு. இருந்தபோதும், இதற்கு முன் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அல்லது அதன் சாணத்தை வைத்து மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் இம்முறை டிஎன்ஏ அடிப்படையிலான … Read more

கொல்கத்தா பலாத்கார வழக்கில் திருப்பம்; ஆண் நண்பரே சதி திட்டம் தீட்டியது அம்பலம்

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. கொல்கத்தா நகரில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஒடிசா மாநிலம் ஜலேஸ்வர் பகுதியை சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் 2-ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 10-ந்தேதி இரவு 8.30 மணியளவில் அந்த மாணவி ஆண் நண்பர் ஒருவருடன் மருத்துவமனை வளாகத்தில் இருந்து … Read more

சுகப்பிரசவம்; சிசேரியன் – எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? | காமத்துக்கு மரியாதை 262

குழந்தை பிறந்த பிறகு எத்தனை நாள் அல்லது எத்தனை வாரம் அல்லது எத்தனை மாதம் கழித்து உறவுக்கொள்ளலாம் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அதற்கான பதிலை சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.  நார்மல் டெலிவரி; சிசேரியன்; எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? ”இது முதலில் அவரவர் மனநிலையைப் பொறுத்தது. உறவுகொள்வது நல்லதுதான். செய்யாமல் இருந்தாலும் கெடுதல் இல்லை” என்றவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.  வெறி நாய் கடிக்கும் – ஆணுறுப்புக்கும் என்ன தொடர்பு? விளக்கும் மருத்துவர் – … Read more

ஆம்னி பேருந்து கட்டணங்கள் குறைப்பு! பயணிகளே உடனே இணையதளத்தில் செக் செய்துகொள்ளுங்கள்…

சென்னை; தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், அது தொடர்பாக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆம்னி பேருந்துகட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,  தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்த பயணிகள், புதிய கட்டணம் எவ்வளவு என்பதை இணையதளம் சென்று தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகை  நாடு முழுவதும் அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு  சிறப்பு பேருந்துகளை … Read more

கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்

திருவனந்தபுரம், கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (வயது 80). இவர் 2008 முதல் 2013ம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராக செயல்பட்டுள்ளார். இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரைலா ஒடிங்கா ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளாவுக்கு வந்துள்ளார். அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ரைலா ஒடிங்கா இன்று காலை ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை … Read more

மும்பையில் கடும் போக்குவரத்து நெருக்கடி; உணவு, தண்ணீர் இல்லாமல் 12 மணி நேரம் சிக்கிய 500 மாணவர்கள்

மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது பல மணி நேரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டதால் உயிரிழக்க நேரிட்டது. தற்போது மீண்டும் அது போன்ற ஒரு போக்குவரத்து நெருக்கடி மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்டது. இப்போக்குவரத்து நெருக்கடி 12 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் எங்கும் செல்ல முடியாமல் நடுவழியில் ஊர்ந்த படி சென்றது. … Read more

உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் ஏறினால் கடும் நடவடிக்கை! தெற்கு ரயில்வே எச்சரிக்கை…

சென்னை; உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில்  சாதாரண பயணிகள் ஏறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ரயில்வே காவல்துறைக்கும் அறிவுறுத்தி உள்ளது. ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறி, முன்பதிவு செய்தவர்களின் இருக்கைகளை ஆக்கிரமித்து அமர்வது  அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கேரள மாநில மக்கள் மற்றும்  வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் இது போன்ற சம்பவங்கள்  அரங்கேறி வருகிறது. இதனால் முன்பதிவு செய்து வரும் பயணிகள் … Read more

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது | Automobile Tamilan

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ள வெனியூ எஸ்யூவி மாடலின் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தலைமுறை மாடலின் உற்பத்தி நிலை படங்கள் தென்கொரியாவிலிருந்து கசிந்துள்ளது. ஏற்கனவே, சில வாரங்களுக்கு முன்பாக உற்பத்தி நிலையில் உள்ள வெனியூவின் முன்பக்க கிரில் அமைப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது முழுமையான விபரங்கள் கசிந்துள்ளது. மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், XUV 3XO மஹிந்திரா, ஸ்கோடா கைலாக், மற்றும் கியா சொனெட் உள்ளிட்ட பல்வேறு … Read more

டாப் 10 இடங்களில் இருந்து கீழிறங்கிய அமெரிக்க பாஸ்போர்ட்; இதுக்கு காரணமும் ட்ரம்ப் தான்!

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலின் டாப் 10 இடங்களில் இருந்து அமெரிக்காவின் பாஸ்போர்ட் கீழிறங்கியுள்ளது. சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எப்படி நிர்ணயிக்கப்படும்? குறிப்பிட்ட பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதை பொறுத்து, சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியிடப்படும். ட்ரம்ப் ட்ரம்பின் அதிரடிகள் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் பிற நாட்டு மக்கள் குடியேறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் விசா நடைமுறைகளிலும் கடும் கெடுபிடிகள் … Read more

கரூர் சம்பவம் குறித்து திமுக அரசு மீது மக்கள் சந்தேகம்! பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

சென்னை; கரூர் பலி சம்பவத்தில், திமுக அரசு மீது மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர் என குற்றம்சாட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கரூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்கள் குறித்து முதல்வர் முரண்பாடான தகவல்களை  கூறுவதாகவும் தெரிவித்தார். மேலும், கரூர் விவகாரத்தில் காட்டும் அக்கறை ஏன் கிட்னி முறைகேடு சம்பவத்தில் இல்லை என்றும் குற்றம் சாட்டினார். கரூர் சம்பவம் குறித்து இன்று பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெற்றது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் நீண்ட விளக்கம் அளித்தார். விவாதத்தின்போது, … Read more