தெருநாய்கள் விவகாரம்: பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி,  பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள்  அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெருநாய்கள் பிரச்னை தொடா்பான வழக்கில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவ. 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததற்கான விளக்கத்தை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை … Read more

`மீண்டும் திமுகவுக்கே வாய்ப்பு; விஜய் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது!' – ஓபிஎஸ்

சிவகங்கை மாவட்டம் காளையர் கோவிலில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குரு பூஜையில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓ பன்னீர் செல்வம் மருது பாண்டியர் சிலைக்கு வெள்ளி கவசம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் பன்னீர்செல்வம். அதிமுகவுடனான போராட்டம் பற்றி பேசியவர், “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கின்ற குழுவாக நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் முக்கிய நோக்கமே, இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் … Read more

கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களுடன் தவெக தலைவர் ​விஜய் சந்திப்பு…

சென்னை; தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில்,   பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை வரழைத்து, அவர்களுடன் தனித்தனியாக விஜய் கண்ணீருடன்  கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், செலவினங்களை ஏற்பதாகவும், உரியவர்களுக்கு பணி கிடைக்க உதவுவது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 27ஆம் தேதி ‘ அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில்  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சியின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். … Read more

வெனியூ காரில் ADAS சார்ந்த பாதுகாப்பினை உறுதி செய்த ஹூண்டாய் | Automobile Tamilan

ஹூண்டாய் இந்தியாவின் இரண்டாம் தலைமுறை வெனியூ எஸ்யூவி பல்வேறு நவீன டெக் சார்ந்த அம்சங்கள் மட்டுமல்லாமல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குடன், 6 ஏர்பேக்குகள் என பல்வேறு அம்சங்களுடன் அதிநவீன ADAS Level 2 பெற்றதாக வரவுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகின்ற பெரும்பாலான கார்களில் அடிப்படை சார்ந்த பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கியதை கடந்து வாடிக்கையாளர்களும் இன்றைக்கு பட்ஜெட் விலை என்பதனை கடந்த பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க … Read more

அரசு ஊழியர்களே! ஹேப்பியான ரிட்டையர்மென்ட்டுக்கு எவ்வளவு பணம் வேண்டும், எப்படி சேர்க்கலாம்?

நம்முடைய எதிர்கால இலக்கு என்ன என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கினைச் சொல்வார்கள்…. குழந்தையின் கல்லூரிப் படிப்பு முக்கியம்… அதற்கான பணத்தை சேர்க்க வேண்டும் என்பார்கள் சிலர்… மகன்/மகளின் திருமணத்துக்கான பணத்தை சேர்ப்பதுதான் முக்கியம் என்று வேறு சிலர் சொல்வார்கள். இன்னும் சிலர், அரசு வேலை என்பதால், ஓய்வுக் காலத்துக்குக் கொஞ்சம் சேர்த்தாகிவிட்டது. ஆனால், அது போதாது. மேற்கொண்டு பணம் சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இலக்குகள் இருந்து … Read more

ஜெரோதா நிறுவனம் அடுத்த காலாண்டு முதல் கிஃப்ட் சிட்டி வழியாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்ய உள்ளது…

இந்தியாவின் முன்னணி பங்கு வர்த்தக தளமான ஜெரோதா (Zerodha), அடுத்த காலாண்டில் கிஃப்ட் சிட்டி (GIFT City) வழியாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத், யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏஞ்சல் ஒன் (Angel One), ஐ.என்.டி.மனி (INDmoney), எச்.டி.எஃப்சி செக்யூரிட்டீஸ் (HDFC Securities), குவேரா (Kuvera) போன்ற பல நிறுவனங்கள் அமெரிக்க முதலீட்டு சேவையை வழங்கிவரும் நிலையில், ஜெரோதா நிறுவனமும் … Read more

மலேசியாவில் மார்கோ ரூபியோவை சந்தித்த ஜெய்சங்கர்; வர்த்தக பேச்சுவார்த்தைக்கு பாசிட்டிவ் சிக்னல்?

தற்போது மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப், பிரேசில் அதிபர் லூலா உள்ளிட்ட பல நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டுள்ளனர்… கலந்து கொள்கிறார்கள். ஜெய்சங்கர் – மார்கோ ரூபியோ ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ளாத மோடி; ட்ரம்ப்பும், வர்த்தக பேச்சுவார்த்தையும் காரணமா? சந்திப்பு இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத் … Read more

தெருநாய் அச்சுறுத்தல்: தலைமைச் செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

உச்சநீதிமன்றம், தெருநாய் பிரச்சனையில் தனது உத்தரவுகளை பின்பற்றாத மாநிலங்களைக் கடுமையாக கண்டித்துள்ளது. நவம்பர் 3ஆம் தேதி, மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா தவிர்த்த பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. “இரண்டு மாதங்களுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இன்னும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. நாடு சர்வதேச அளவில் மோசமாக சித்தரிக்கப்படுகிறது!” என்று நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் … Read more

தேங்கும் மழை நீரை வெளியேற்ற 2000க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்! மேயர் பிரியா

சென்னை: ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில்  ஆய்வு மேற்கொண்ட மேயர்  பிரியா , சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற 2,000க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயாராக இருப்பதாக கூறினார். வடகிழக்குப் பருவமழையினை  முன்னிட்டு, இன்று அதிகாலை முதல் சென்னையில் விடாமல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று பிற்பகல் கனமழையாக மாறும் என வானிலை ஆய்வுமையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள … Read more