லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

லண்டன்: லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், லண்டனில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம்! தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும் – ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்தப் பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன்… என புகைப்படங்களை பகிர்ந்து கடிதம் எழுதி  உள்ளார். தமிழக முதல்வரும் திமுக … Read more

Maruti suzuki victoris – ADAS உடன் மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி அறிமுகமானது

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ADAS சார்ந்த பாதுகாப்புடன் 4X4 டிரைவ் பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி, பாரத் கிராஷ் டெஸ்ட் மையத்தால் சோதனை செய்யப்பட்டு 5 நட்சத்திர பாதுகாப்பினை பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது. அனைத்திலும் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் பெற்று பெட்ரோல், மைல்டு ஹைபிரிட் , ஸ்டராங் ஹைபிரிட், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் இ விட்டாரா என அனைத்து விதமான ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது. குறிப்பாக சிஎன்ஜி ஆப்ஷனில் பூட்வசதியை … Read more

இரக்கமும் பாதுகாப்பும் இணையும் பாதை! – சமநிலைத் தீர்வு கிடைக்குமா? | #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நமது சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக விவாதிக்கப்படும் ஒரு முக்கியமான பிரச்சினை – தெரு நாய்கள். ஒருபக்கம் “நாய்களும் உயிர்களே, அவற்றையும் காப்பாற்ற வேண்டும்” என்ற இரக்கமிக்க குரல்கள். மற்றொரு பக்கம் “நாய்கள் தாக்கி குழந்தைகள் உயிரிழக்கின்றன, மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது” … Read more

தமிழ்நாட்டில் பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல்! தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம்…

சென்னை; தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று பரவல் இல்லை என மறுத்துள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை, தற்போது  பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல்தான் என்று விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் காய்ச்சல் தொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வு நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால்  மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளதாக செய்திகள் பரவின. இநத் நிலையில்,   தமிழ்நாட்டில் பரவுவது … Read more

இ விட்டாரா எலக்ட்ரிக் ஏற்றுமதியை துவங்கிய மாருதி சுசுகி

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி இ விட்டாராவின் முதல் லாட்டில் சுமார் 2,900 கார்களை குஜராத்தில் உள்ள பிபாவாவ் துறைமுகம் மூலம் இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஹங்கேரி, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பெல்ஜியம் என 12 ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் இ விட்டாரா உற்பத்தி அதிகாரப்பூர்வமாக … Read more

“ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்'' – ஆடு, டிவி, அடுப்பு, பாத்திரங்களுடன் வந்த மக்கள்

மைக் செட் கட்டுவதில் பிரச்னை திண்டுக்கல், நத்தம் சட்டமன்றத் தொகுதி பூதகடி கிராமத்திலுள்ள கோயில் திருவிழா கடந்த ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது. இதில் மைக் செட் கட்டுவதில் இரு சமூகங்களிடையே பிரச்னை ஏற்பட்டது. பிரச்னையில் ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இந்நிலையில், நேற்று செல்வகுமாரின் மனைவி வர்ஷா பூதகுடியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த வருவாய் … Read more

ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது! திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது! எடப்பாடி குற்றச்சாட்டு

மதுரை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின்  முன்னிலையில்,  போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது மற்ற அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். ஸ்டாலின் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாடு அரசு  பொய்யான தகவல்களை தந்து மக்களை ஏமாற்றுகிறது என கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தின்போது,  9ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 23 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள … Read more

காதலை கைவிட… இளம்பெண்ணை கத்தி முனையில் 2 முறை பலாத்காரம் செய்த சகோதரன்

ராஜ்கோட், குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் தலஜா நகரருகே கிராமம் ஒன்றில் 22 வயது இளம்பெண் ஒருவர், பெற்றோர் மற்றும் 29 வயது மூத்த சகோதரருடன் ஒன்றாக வசித்து வருகிறார். அந்த சகோதரருக்கு திருமணம் நடந்து விட்டது. இந்நிலையில், அவருடைய மனைவி கடந்த ஜூலை 13-ந்தேதி வெளியூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தபோது, அந்த நபர் இளம்பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளார். இதன்பின்னர், கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி 2-வது முறையாகவும் சகோதரியை அந்நபர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். … Read more

வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – அடுத்த சில நாட்கள் மழைக்கு வாய்பு

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த சில நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் … Read more

வட மாநிலங்களில் கனமழை: யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு

புதுடெல்லி, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சமீப காலமாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இரவிலும் நீடித்த மழை விடிய விடிய பொழிந்தது. இதனால் டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. டெல்லி மற்றும் அதை ஒட்டியுள்ள அரியானா மாநிலம் குருகிராம் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. … Read more