அறுவடைக்கு தயாரான நெற்பயிர்: “இயற்கைக்கும் இரக்கமில்ல" – டிராக்டர் ஓட்டி அழித்த விவசாயி! –

தஞ்சாவூர் அருகே அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர் மழையில் நனைந்து முளைத்ததால், நஷ்டம் ஏற்படும் என்பதற்காக வயலிலேயே டிராக்டர் மூலம் அழித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மேலதிருப்பந்துருத்தி கிராமத்தை சேர்ந்தவர் விஜி. இவரது கணவர் ரவி. இருவரும் விவசாய கூலி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். இந்நிலையில், விஜி, சுமார் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து குறுவை சாகுபடி செய்துள்ளார். டிராக்டர் ஓட்டி அழிக்கப்பட்ட நெற்பயிர் 15 நாள்களுக்கு முன்பு … Read more

நாளை சூரசம்ஹாரம்: திருச்செந்தூர் பகுதியில் நாளை முதல் இரு தினங்கள் போக்குவரத்து மாற்றம்….

தூத்துக்குடி: திருச்செந்தூர்  முருகன் கோவிலில் நாளை  சூரசம்ஹாரம்  நடைபெறுவதை முன்னிட்டு  தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில்  நாளையும், நாளை மறுதினமும்  காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்து அறிவித்துள்ளார். நாளை அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர மற்ற அனைத்து   சரக்கு வாகனங்களுக்கும்  தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையட்டி, திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் … Read more

Rishab Shetty: “அன்புக்கும், சிரிப்புக்கும் நன்றி" – ரிஷப் ஷெட்டியின் தீபாவளி | Photo Album

Rishab shetty: ராஷ்மிகா அறிமுகம்; தேசிய விருது வென்ற கிட்ஸ் படம்! – ரிஷப் ஷெட்டி, சில சம்பவங்கள் Source link

இதுவரை 31 பேர் பலி: ‘மோன்தா புயல்’ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்…

சென்னை:  ‘மோன்தா புயல்’ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்  என தமிழக பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கூறி உள்ளார். பருவமழைக்கு இதுவரை  31 பேர் பலியாகியுள்ளனர், 485 கால்நடைகள் உயிரிழந்துள்ளன , 20,000க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. வடகிழக்கு பருவமழையால் இதுவரை 1,780 வீடுகள் சேதமடைந்து உள்ளது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும், தற்போது வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் காரணமாக,  வரும் … Read more

RoKo: 'மீண்டும் ஆட வருவோமா என தெரியாது!' – உருகும் ரோஹித் – கோலி

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ரோஹித் சர்மா சதத்தையும் கோலி அரைசதத்தையும் அடித்து போட்டியை வென்று கொடுத்திருந்தனர். இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு இருவரும் கூட்டாக பேட்டி அளித்திருந்தனர். ரோஹித் – கோலி அதில் ரோஹித் பேசுகையில், ‘ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் ஆட வருவது எப்போதுமே பிடிக்கும். குறிப்பாக இந்த சிட்னி மைதானம் பல பழைய நினைவுகளை கிளறிவிட்டது. 2008 லேயே இங்கே ஆடியிருக்கிறேன். நாங்கள் … Read more

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நவம்பரில் தொடங்குகிறது சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்! இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நவம்பரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்  தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக  2026ல்  தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில்  தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,  ‘இந்தியா முழுவதும் சிறப்புத் … Read more

`பிள்ளைய கட்டுவிரியன் கடிச்சதே தெரியல; கடவுள் போல அரசு மருத்துவர்கள் மீட்டாங்க!' – நெகிழும் பெற்றோர்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள குளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர், கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி பாப்பாத்தி. இந்த தம்பதியினரின் ஆறு வயது மகள் மதுஸ்ரீ. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த சிறுமியின் தாய் பாப்பாத்தி, தனது தாயார் வீட்டில் மது ஸ்ரீயையும், அவரது சகோதரியையும் விட்டுள்ளார். அப்போது, அங்கு தங்கியிருந்த சிறுமி மதுஸ்ரீக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பாப்பாத்திக்கு அவரது தாயார் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாப்பாத்தி பதறியடித்தபடி சென்று … Read more

அக்டோபர் 28ந்தேதி அதிதீவிரப் புயலாக வலுப்பெறுகிறது ‘மொந்தா’! சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு…

சென்னை; வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்  அதிதீவிர ‘மொந்தா’ புயலாக மாறும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,  வரும் 27ஆம் தேதி ‘மொந்தா’  புயலாக மாறி ஆந்திரத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கூறியிருந்தது. தற்போது இந்த புயல் அதிதீவிர புயலமாக … Read more

“மூக்குத்தி, காதணி, மாங்கல்யம் தவிர வேறு தங்க நகைகள் வேண்டாம்'' – கிராமத்தினர் அதிரடி முடிவு; ஏன்?

உத்தரகண்ட் மாநிலம் ஜான்சர்-பவார் பழங்குடிப் பகுதியில் உள்ள கந்தர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒரு புதிய கட்டுப்பாட்டை தங்களுக்குள் விதித்துள்ளனர். அதாவது திருமணங்கள், குடும்ப விழாக்களின்போது திருமணம் ஆன பெண்கள் அணியும் தங்க நகைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதியாக ஒரு விதியை அவர்கள் வகுத்துள்ளனர். அதிகரித்து வரும் செலவினங்களையும் ஆடம்பர கலாச்சாரத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இதனை முன்னெடுத்து இருக்கின்றனர். கிராமத்தின் சார்பாக சமூக கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. Gold கனமான ஆடம்பர நகைகளை அணிவதால் … Read more

மொந்தா புயல் எங்கு கரையை கடக்கும் – என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்…

சென்னை; வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மொத்த எனப்படும் அதிதீவிர புயலாக மாறும் என  வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், அது எங்கு கரையை கடக்கும் என்பது குறித்த நாளைதான் தெரியவரும் என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வுமையம் ஆந்திர கரையோரம் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக  தெரிவித்துள்ள நிலையில்,   அது எங்கிருந்து ஆந்திராவுக்குத் திரும்பும் என்பது குறித்த மாதிரி ஒருமித்த கருத்து இன்னும் இல்லை. நாளை … Read more