பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது | Automobile Tamilan

நவம்பர் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள வெனியூ மாடலுடன் கூடுதலாக வெனியூ  என்-லைனில்  N6, N10 என இரு வேரியண்டுகளுடன் ஹூண்டாயின் N-line மாடல்களை போல பல்வேறு டிசைன் வித்தியாசங்களுடன், சிறப்பான செயல்திறன் மற்றும் சஸ்பென்ஷன் சார்ந்த மேம்பாடுகளை கொண்டிருக்கும். Hyundai Venue N-line 120hp பவர் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பெற்று அடிப்படையில் வெனியூ மாடலில் இருந்து வேறுபடுத்தப்பட்ட முன்பக்க கிரில் அமைப்புடன் N-line பேட்ஜிங் பெற்றதாகவும், சிறிய ஸ்கிட் பிளேட் … Read more

“மொத்த விளக்கத்தையும் நாளை தருகிறேன்'' – அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டனர். செங்கோட்டையன் – டிடிவி தினகரன் – ஓபிஎஸ் அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிடிவி தினகரன், “புரட்சித் தலைவர், அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக ஓபிஎஸ் … Read more

தாத்தா கால அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வது முதல்வர் பதவிக்கே அவமானம்! மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

சென்னை; தாத்தா கால அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வது முதல்வர் பதவிக்கே அவமானம் என பிரதமர் மோடி குறித்து முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.  திமுக ஊழலை மறைக்க மடைமாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின் என விமரசித்துள்ளார். ‘பிரதமர், திமுகவினரைக் குறிப்பிட்டதை தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதல்வர் வகிக்கும் பதவிக்கே அவமானம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடி … Read more

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு | Automobile Tamilan

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஃபோர்டு ஆலையை மீண்டும் உற்பத்திக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் முதற்கட்டமாக அடுத்த தலைமுறை என்ஜின் உற்பத்திக்கு சுமார் ரூபாய் 3,250 கோடி முதலீடு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேரடியாக 600 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 2024ல் கையெழுத்திடப்பட்ட  விருப்பக் கடிதத்தின் அடிப்படையில், நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஃபோர்டு திட்டங்களுக்கு இந்தியாவின் “உற்பத்தித் திறனை” பயன்படுத்துவதற்கான முயற்சியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டனர். மூத்த நிறுவன நிர்வாகிகள் … Read more

திருப்பூர்: பட்டா மாறுதலுக்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது; சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளரான இவர் தனது தோட்டத்துக்கு வாரிசு அடிப்படையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய காட்டூர் கிராம நிர்வாக அலுவலரான ஜெயக்குமார் ரூ. 40 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில், முதல் தவணையாக ரூ. 10 ஆயிரமும், 2-ஆவது தவணையாக ரூ. 13 ஆயிரமும் ஜெயக்குமார் பெற்றுள்ளார். இதற்கிடையே, மீதி ரூ. 17 ஆயிரத்தைத் தந்தால்தான் … Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் அமைச்சரானார் – தெலுங்கானா அரசில் புதிய மாற்றம்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான முகமது அசாருதீன் இன்று (31 அக்டோபர் 2025) தெலுங்கானா அரசில் அமைச்சராக பதவியேற்றார். அசாருதீனின் பதவியேற்பு விழா, ஹைதராபாத்திலுள்ள ராஜ் பவன் மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஆளுநர் ஜிஷ்ணுதேவ் வர்மா அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்துவைத்தார். 2023ம் ஆண்டு ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அசாருதீன் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தெலுங்கானா மாநில மேலவை … Read more

“திமுக-வில் பாதி பேர் தமிழர்களே அல்ல; பிரதமர் விமர்சனம் தமிழர்கள் மீது அல்ல" – தமிழிசை செளந்தரராஜன்

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பீகாரை மையமிட்டு வலம் வருகின்றனர். பீகார் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியின் பிரசாரத்தில், “பீகார் மக்களின் உழைப்பால்தான் துபாயில் வானுயர கட்டடங்கள் எழுந்தது. ஆனால், இந்த மண்ணின் மக்களுக்கு இங்கேயே வேலைவாய்ப்பு இல்லை. அதனால்தான் பல மாநிலங்களுக்கு பீகார் மக்கள் வேலை தேடிச் செல்கிறார்கள்” என்றார். மு.க ஸ்டாலின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக … Read more

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சபரிமலையில் நடைபெறும் புகழ்பெற்ற மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க செல்வதால், பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு பேருநது  சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துஉள்ளது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள  அய்யப்பன் கோவில் நடைபெறும்   மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது ஐப்பசி மாதம் நடைபெற்று வருகிறது. இது … Read more

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் 3.5 கோடி இலக்கை கடந்தது.! | Automobile Tamilan

நாட்டின் முதன்மையான ஸ்கூட்டரான ஹோண்டாவின் ஆக்டிவா வெற்றிகரமான 24 ஆண்டுகளில் சுமார் 3.5 கோடி விற்பனை இலக்கை கடந்து இந்தியாவின் மிகவும் நம்பகமான, அதிகம் விரும்பும் ஸ்கூட்டர்களில் தொடர்ந்து முதன்மையாக விளங்கி வருகின்றது. 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆக்டிவா தொடர்ந்து பல்வேறு மாறுதல்களை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது எலக்ட்ரிக் வகையிலும் ஆக்டிவா e: விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2015 ஆம் ஆண்டில் முதல் முறையாக 1 கோடி ஆக்டிவா வாடிக்கையாளர்களை … Read more

'தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் மோடிக்கு விளக்குவார்கள்'- எம்.பி கனிமொழி கண்டனம்

பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எம்.பி கனிமொழியும் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி “வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு … Read more