"ஆதிக் அப்போது கதை எழுதவே ஸ்டார்ட் பண்ணல!" – `OG' படத்தை `GBU'-வுடன் ஒப்பிடுவது குறித்து இயக்குநர்!

பவன் கல்யாணின் `ஓ.ஜி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மாஸ், சென்டிமென்ட் என அனைத்து வகைகளிலும் பவர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் புல் மீல்ஸாக அமைந்திருக்கிறது. OG – பவன் கல்யாண் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் காட்சிகள் படத்தில் அதிகமாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் `குட் பேட் அக்லி’ திரைப்படத்துடன் `ஓ.ஜி’ திரைப்படத்தையும் ஒப்பிட்டுப் பேசினர். இது குறித்து `ஓ.ஜி’ படத்தின் இயக்குநர் சுஜித் சமீபத்திய பேட்டியொன்றில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “நான் OG-யின் டீசரை … Read more

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு!

மதுரை: கரூர்  சம்பவம் தொடர்பாக  தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய காவல்துறை தேடி வரும் நிலையில், அவரது தரப்பில்  முன் ஜாமின் கோரி உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 27ந்தேதி அன்று  தவெக தலைவர் விஜய்  கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார்.  அவருக்கு பிரசாரத்துக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அலைகடலென கூடிய கூட்டத்தில், விஜய் பேசியபோது திடீரென மின்சாரம் … Read more

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன? | Must know before buying the Hero Glamour X 125

கவர்ச்சியான தோற்றமும், அதே சமயம் பல வருட நம்பகத்தன்மையும் இரண்டையும் ஒருங்கே பெற்ற ஹீரோ நிறுவனத்தின் கிளாமரின் அடுத்த பரினாம வளர்ச்சியான நவீன நுட்பங்களுடன் கிளாமர் எக்ஸ் 125 பைக்கில் கொடுக்கப்பட்ட க்ரூஸ் கண்ட்ரோல் என்ற வசதியால் புத்துணர்வு பெற்றுளதால் இதனை வாங்குபவர்கள் அவசியம் அறிய வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம். 2005-2006ல் அறிமுகம் செய்யப்பட்ட கிளாமர் 125 ஆனது சூப்பர் ஸ்பெளெண்டரின் என்ஜினை பயன்படுத்திக் கொண்டு நவீனத்துவமான டிசைனை பெற்றதால் மிக அதிக விற்பனையை சாத்தியப்படுத்தி தற்பொழுது … Read more

கரூர் நெரிசல்: அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் பெலிக்ஸ் கைது! – என்ன நடந்தது?

கரூர் சம்பவம் தவெக தலைவர் விஜய் கரூரில் 27-ம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. அந்த ஆணையமும் விசாரணையைத் தொடங்கி உள்ளது. மற்றொருபுறம் காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையில், கரூர் நெரிசல் தொடர்பாகப் பல்வேறு வதந்திகளும், அவதூறுகளும் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன. இது தொடர்பாகப் பேசிய … Read more

சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சியில் அரையாண்டிற்கான சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள் என்றும் செலுத்த தவறும் பட்சத்தில் தனி வட்டி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டிற்குரிய சொத்து வரியை, சொத்து உரிமையாளர்கள் இன்று செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி, மாதந்தோறும் விதிக்கப்படும் தனிவட்டி விதிப்பினை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி , நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்றவற்றில் உள்ள … Read more

Citroen Aircross BNCAP 5 Star safety ratings – பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பினை உறுதி செய்த சிட்ரோயன் ஏர்கிராஸ்

சிட்ரோயன் இந்தியாவில் மிக தீவரமான வளர்ச்சியை முன்னேடுத்து வரும் நிலையில் பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை வயது வந்தோர் பாதுகாப்பில் பெற்றிருப்பதுடன் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரத்தை மட்டும் பெற்றுள்ளது. Citroen Aircross BNCAP – வயது வந்தோர் பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் பெற வேண்டிய மொத்த மதிப்பெண்: 32-க்கு 27.05 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முன்பாக இந்நிறுவனத்தின் 4 ஸ்டார் பாசால்ட் … Read more

பவுனுக்கு ரூ.86,800 தாண்டிய தங்கம் விலை; புதிய உச்சம்! – இன்றைய தங்கம் விலை நிலவரம்?

தங்கம் | ஆபரணம் இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.10,860 ஆக விற்பனையாகி வருகிறது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.86,880 ஆக விற்பனை ஆகி வருகிறது. இது புதிய உச்சம் ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.161 ஆக உள்ளது. … Read more

கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜியின் சதியே காரணம்! ஆதாரம் இருப்பதாக தவெக வழக்கறிஞர் நேரடி குற்றச்சாட்டு

மதுரை: கரூரில் 41 பேர்  உயிரிழப்புக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதியே காரணம் என செய்தியாளர்களிடம் தெரிவித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், அதற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவித்ததுடன்,   “தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம் என்றும் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வழக்கறிஞர் அறிவழகன், “கரூர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜியின் சதியே காரணம்.. எங்களிடம் வீடியோ ஆதாரம். தவெக தொண்டர்கள் மீது தடியடி … Read more

Upcoming Mahindra SUV’s : விரைவில்., மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட இரண்டு எஸ்யூவிகள் அறிமுகம் | updated mahindra bolero neo, thar facelift launch expected october first week

பண்டிகை காலத்தை முன்னிட்டு மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ மற்றும் தார் ஃபேஸ்லிஃப்ட் என இரண்டு எஸ்யூவிகளும் அக்டோபர் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், விரைவில் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்த இரு மாடல்களும் கடந்த பல மாதங்களாகவே சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதலாக எக்ஸ்யூவி 700 மாடலும் சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சமாகும். Mahindra பொலிரோ நியோ என்ன எதிர்பார்க்கலாம்., தற்பொழுது சந்தையில் உள்ள பொலிரோ நியோ … Read more

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பு?

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்கள். ஆரோக்கியமான நபர் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது? -ராஜா, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி இது சர்க்கரைநோய் குறித்த புரிந்துணர்வு இல்லாமல் கேட்கப்பட்ட கேள்வியாகத் தெரிகிறது. எந்தப் பிரச்னையும் இல்லாத, ஆரோக்கியமான ஒரு நபர், சராசரியாக ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பது இயல்பு. … Read more