”ஓரவஞ்சனை செய்யாதே”: சபாநாயகரை முற்றுகையிட்டு, அவரது முன்பாக தரையில் அமர்ந்து ஈபிஎஸ் உள்பட அதிமுகவினர் தர்ணா…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கரூர் சம்பவம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் சபாநாயகர் இருக்கைக்கு எதிராக அமர்ந்து,  தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. செப்டம்பர் 27ந்தேதி அன்று தவெக தலைவர் விஜயின் கரூர்  பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சட்டப்பேரவையில்  விவாதங்கள் நடைபெற்றது. இந்த விபத்து குறித்து,  முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் … Read more

₹ 1.99 லட்சத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX அட்வென்ச்சர் வெளியானது | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் மாடலாக அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 மோட்டார்சைக்கிளின் அறிமுக சலுகை விலை ரூ.1.99 லட்சம் முதல் துவங்கி ரூ.2.34 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட தொலைவு நெடுஞ்சாலை டூரிங் மற்றும் அட்வென்ச்சர் சாகசங்களுக்கான ஆஃப் ரோடு பயணங்கள் என இரு விதமான பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைந்துள்ள நிலையில் இந்த பைக்கில் ரைட் பை வயருடன் கூடிய RTX-D4 299.1cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,000 rpmல் … Read more

கரூர் சம்பவத்துக்கு விஜய் லேட்டாக வந்ததே காரணம்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு…

சென்னை: கரூர் சம்பவத்துக்கு விஜய் லேட்டாக வந்ததே காரணம் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின்  குற்றம் சாட்டினார்.  தவெக தலைவர் நண்பகல் 12 மணிக்கு கரூருக்கு வருவதாக அறிவித்துவிட்டு இரவு 7 மணிக்குதான் வந்தார். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலே விபத்துக்கு காரணம் என கூறினார். அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம். மக்களின் உயிரே விலைமதிப்பற்றது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அதே நேரத்தில் இது போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது … Read more

கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

புதுடெல்லி, தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விளையாட்டு பல்கலைக்கழகக் குழுவில் நிதித்துறை செயலர் ஒருவரை நியமிக்க ஏதுவாக சட்ட திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு தமிழ்நாடு கவர்னர் அனுப்பி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னருக்கு … Read more

மதுரை: மேயர் இந்திராணி ராஜினாமா!

மதுரை மாநாகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசரணையை தொடங்கியது. இந்த வழக்கில் மாநகராட்சி பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் என 13 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மதுரை மேயர் இந்திராணி 5 மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என 7 பேர் ராஜினாமா செய்திருக்கின்றனர். இந்த விவகாரம் … Read more

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு! அதிமுக – தவெக கூட்டணி குறித்து முதலமைச்சர் விமர்சனம்…

சென்னை: கரூர் சம்பவம் குறித்து இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதுடன், சபாநாயகரின் நடத்தைக்கு எதிராக,  எடப்பாடி தலைமையில்  அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்,   அதிமுக – தவெக கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இன்றைய அமர்வில் கேள்வி நேரம் முடிந்ததும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான தீர்மானத்தின்மீது காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. … Read more

வழக்கு விசாரணையின்போது நீதிபதி மீது செருப்பு வீசிய நபர் – அதிர்ச்சி சம்பவம்

காந்தி நகர், 1997ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோமித்பூர் பகுதியை சேர்ந்த நபர் காய்கறி வாங்க தனது வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். கடை வீதியில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தபோது அங்கு இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, இளைஞர் அடித்த பந்து காய்கறி வாங்கிக்கொண்டிருந்த அவரை தாக்கியது. இதனால், அந்த நபருக்கும் இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த நபர் தன்னுடன் மோதலில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் … Read more

தலை தீபாவளியைக் கொண்டாடும் இளம் தம்பதிகளே… உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

கடந்த ஓராண்டு காலத்தில் திருமணம் ஆன இளம் தம்பதிகள் இந்த ஆண்டு தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டிருப்பார்கள். ஒன்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனவர்களும் இந்தத் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாட அனைத்து வகையிலும் பிளான் செய்திருப்பார்கள். அவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்… இந்த தீபாவளியானது இந்த இளம் தம்பதிகளுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருவதாக அமையட்டும். குழந்தை வளர்ப்பு தீபாவளி பிளான்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த இளம் தம்பதிகள் தங்கள் எதிர்கால இலக்குகளை எப்படி நிறைவேற்றிக் … Read more

அமெரிக்க ‘டெக்’ உலகை ‘ஜென்’ நிலைக்குத் தள்ளும் சீனா… மைக்ரோசாப்ட் Wordக்கு மாற்றாக WPS-க்கு மாறியது…

அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்திலும் சுயசார்பை நோக்கி சீனா முன்னேறிவருகிறது. கடந்த வாரம், சீனாவின் வணிக அமைச்சகம் அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த புதிய ஆவணங்களை வெளியிட்டது, ஆனால் இவற்றை மைக்ரோசாப்ட் வேர்டு அல்லது வேறு எந்த அமெரிக்க வேர்டு செயலியைப் பயன்படுத்தியும் திறக்க முடியவில்லை. மைக்ரோசாப்டின் தொகுப்பிற்கு சமமான பிரத்தியேகமாக செயல்படும் சீனாவின் உள்நாட்டு WPS ஆஃபீஸ் கோப்பு வடிவமைப்பை அமைச்சகம் பயன்படுத்தியிருந்தது பின்னர் … Read more