திருச்சியில்… பங்குச் சந்தை பயிற்சி..!

நாணயம் விகடன் வழங்கும் ‘ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்’ நேரடிப் பயிற்சி வகுப்பு, 2025 அக்டோபர் 25-ம் தேதி, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சியில் நடக்கிறது. பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் இந்தப் பயிற்சியை அளிக்கிறார். இவர் ஆனந்த் ரதி, ஐ.டி.பி.ஐ கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்தவர். தற்போது ஆட்ஃபேக்டர்ஸ் பி.ஆர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில் 30 … Read more

54வது ஆண்டு தொடக்க விழா: வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுக பொதுக்கூட்டங்களை நடத்த எடப்பாடி உத்தரவு..!

சென்னை:   அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு,   வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுகவின் பொதுக்கூட்டங்களை நடத்த எடப்பாடி  பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளது. அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், கழக நிறுவனத் தலைவர் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் … Read more

Modi: "நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன்" – மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா?

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பேசியதாகவும், 2 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் இஸ்ரேல் – காசா போரை நிறுத்தும் வரலாற்று அமைதித்திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவின் வரி விதிப்பால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா – அமெரிக்க அரசுகள் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். Spoke to my friend, President Trump and congratulated him on the success of the … Read more

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அதிர்ச்சி: சைவ உணவுக்கு பதிலாக அசைவம் வழங்கப்பட்டதால் பயணி உயிரிழப்பு!

85 வயதான ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் அசோகா ஜெயவீர, தனது நீண்ட தூர பயணத்திற்கு சைவ உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்த போதிலும், கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டதால், நடுவானில் பரிதாபமாக உயிரிழந்தார். 2023 ஜூன் 30 அன்று விமானத்தில் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அசோகா ஜெயவீர அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் வசித்து வந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இலங்கையின் கொழும்புவுக்கு சென்றார். சைவ உணவு உண்பவரான … Read more

பிளாட்பாரம்! – குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்  நீண்ட நெடிய மூச்சுடன் அந்த சிறிய ஸ்டேஷனில் வந்து நின்ற அந்த ரயிலிலிருந்து உதிர்ந்த ஒரு சிலரோடு தானும் இறங்கினான் சண்முகம். ஒல்லியாக, ஒட்டிய வயிறுடன் பஞ்சத்தில் அடிபட்டவன் போலத் தோற்றம். ஒருவாரமாக மழிக்கப் படாதிருந்த தாடி. அவன் முதுகில் படர்ந்திருந்த  பேக் பேக்கும்..கண்களில் … Read more

திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அண்ணாமலை கண்டனம்!

சென்னை: ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில்  தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அண்ணாமலை கண்டனம்! ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் (கருணாநிதி) பெயரைத் திணிக்க முயற்சிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக,  முதலமைச்சர் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவதற்கான … Read more

மதுரை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர்; கால்வாயிலிருந்து சடலமாக மீட்பு!

மடப்புரம் அஜித்குமாரைப் போல மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் காவல்துறை சித்ரவதையால் கொலை செயப்பட்டுள்ளார் என்று உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் மதுரையில் போராட்டம் நடத்தி வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் மதுரை யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த வேல்முருகன்-முத்துலெட்சுமி தம்பதியரின் மகன் தினேஷ்குமார் (வயது 30 ) ஐடிஐ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒரு வழக்கில் விசாரிக்க வேண்டுமென்று இன்று அதிகாலை 5 மணியளவில் தினேஷ்குமாரின் வீட்டிற்கு வந்த மதுரை அண்ணாநகர் காவல் … Read more

‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான, கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அந்த நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு லைசென்சை அதிரடியாக ரத்து செய்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதைத்தொடர்ந்து, தமிழகம் உள்பட பல்வேறு … Read more

பீகார் தேர்தல்: வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள்; வேட்பாளர்களை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் முதல் முறையாக போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் ஜன் சூரஜ் என்ற கட்சியை தொடங்கி தேர்தலுக்கான வேலையில் ஈடுபட்டு வந்தார். ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும்போது பிரசாந்த் கிஷோர் திடீரென தனது கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறார். முதல் கட்டமாக 51 பேர் கொண்ட பட்டியலை அறிவித்திருக்கும் பிரசாந்த் கிஷோர் தனது பெயரை … Read more