கனமழை: இன்றும், நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்? -சென்னை வானிலை மையம் அப்டேட்

இன்று தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைப்படி, ஆரஞ்சு அலர்ட் இன்று திருநெல்வேலி, தேனி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு. மழை மஞ்சள் அலர்ட் சென்னை, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, … Read more

Hair Dye & Hair Colouring: பின்பற்ற வேண்டிய எச்சரிக்கை வழிமுறைகள்! – நிபுணர் கைடன்ஸ்

ஹேர் கலரிங், இதனை சிலர் அழகிற்காக பயன்படுத்துகிறார்கள். சிலர் ஆசைக்காக பயன்படுத்துகிறார்கள். இதில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் இருக்கின்றன என தெரிந்தும், பின்விளைவுகளைத் தெரியாமல் பலர் பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் வெள்ளை முடியின் நிறம் மாறுவதற்காக ஹேர் டை பயன்படுத்தினார்கள். தற்போது உடையின் நிறத்திற்கு ஏற்றவாறு ஹேர் கலரிங் செய்கிறார்கள். ஹேர் கலரிங் மற்றும் ஹேர் டை குறித்த நமது கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அசோக். Hair Dye & Hair … Read more

கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம்! பிரேத பரிசோதனை குறித்து அமைச்சர் மா.சு. பதில்…

சென்னை: கரூர் சம்பவம் குறித்து சட்டபேரவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கரூர் சம்பவம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். எடப்பாடியின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின்,  மற்றும் அமைச்சர்கள், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தனர். அப்போது உயிரிழந்தவர்களின் உடல் 3 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்பது  தவறான தகவல்  தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தவெக தலைவர் விஜய் கூட்ட நிகழ்வின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 … Read more

”ஓரவஞ்சனை செய்யாதே”: சபாநாயகரை முற்றுகையிட்டு, அவரது முன்பாக தரையில் அமர்ந்து ஈபிஎஸ் உள்பட அதிமுகவினர் தர்ணா…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கரூர் சம்பவம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் சபாநாயகர் இருக்கைக்கு எதிராக அமர்ந்து,  தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. செப்டம்பர் 27ந்தேதி அன்று தவெக தலைவர் விஜயின் கரூர்  பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சட்டப்பேரவையில்  விவாதங்கள் நடைபெற்றது. இந்த விபத்து குறித்து,  முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் … Read more

₹ 1.99 லட்சத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX அட்வென்ச்சர் வெளியானது | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் மாடலாக அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 மோட்டார்சைக்கிளின் அறிமுக சலுகை விலை ரூ.1.99 லட்சம் முதல் துவங்கி ரூ.2.34 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட தொலைவு நெடுஞ்சாலை டூரிங் மற்றும் அட்வென்ச்சர் சாகசங்களுக்கான ஆஃப் ரோடு பயணங்கள் என இரு விதமான பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைந்துள்ள நிலையில் இந்த பைக்கில் ரைட் பை வயருடன் கூடிய RTX-D4 299.1cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,000 rpmல் … Read more

கரூர் சம்பவத்துக்கு விஜய் லேட்டாக வந்ததே காரணம்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு…

சென்னை: கரூர் சம்பவத்துக்கு விஜய் லேட்டாக வந்ததே காரணம் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின்  குற்றம் சாட்டினார்.  தவெக தலைவர் நண்பகல் 12 மணிக்கு கரூருக்கு வருவதாக அறிவித்துவிட்டு இரவு 7 மணிக்குதான் வந்தார். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலே விபத்துக்கு காரணம் என கூறினார். அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம். மக்களின் உயிரே விலைமதிப்பற்றது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அதே நேரத்தில் இது போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது … Read more

கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

புதுடெல்லி, தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விளையாட்டு பல்கலைக்கழகக் குழுவில் நிதித்துறை செயலர் ஒருவரை நியமிக்க ஏதுவாக சட்ட திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு தமிழ்நாடு கவர்னர் அனுப்பி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னருக்கு … Read more

மதுரை: மேயர் இந்திராணி ராஜினாமா!

மதுரை மாநாகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசரணையை தொடங்கியது. இந்த வழக்கில் மாநகராட்சி பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் என 13 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மதுரை மேயர் இந்திராணி 5 மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என 7 பேர் ராஜினாமா செய்திருக்கின்றனர். இந்த விவகாரம் … Read more