கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாடு; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் மூத்த தளபதிகள் பங்கேற்கும் முப்படை தளபதிகள் மாநாடு மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. 3 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் சீனாவுடனான அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பாதுகாப்பு நிலவரம், காஷ்மீர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு சார்ந்த விவகாரங்கள் குறித்து முப்படைகளின் மூத்த தளபதிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். முக்கியமாக, பாகிஸ்தானுடன் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாகவும் விரிவாக … Read more

"அமித் ஷா உட்பட 3 பேரை டெல்லியில் சந்தித்தேன்" – தமிழகம் திரும்பிய செங்கோட்டையன் என்ன சொல்கிறார்?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனுக்கும் பல மாதங்களாக உட்கட்சி மோதல் நீடித்து வருகிறது. இவ்வாறிருக்க, அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு செப்டம்பர் 5-ம் தேதி செங்கோட்டையன் கெடு விதித்தார். அடுத்த நாளே, அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் கட்சிப் பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி இதற்கு எதிர்வினையாற்றிய செங்கோட்டையன், தன்னைக் கேட்காமல் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கான விளைவு போகப் போகத் … Read more

AI மூலம் தனது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தனது புகைப்படத்தை பல்வேறு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 09) வழக்கு தொடர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ராய் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேத்தி, நீதிபதி தேஜாஸ் காரியாவிடம், தனது வாடிக்கையாளர் தனது விளம்பரம் மற்றும் தனி உரிமைகளைப் பாதுகாக்கக் கோருவதாக மனு அளித்தார். காபி மக், டி-சர்ட், வால்பேப்பர் உள்ளிட்ட பல பொருட்களில் அவரின் புகைப்படத்தை பயன்படுத்துவதாகவும் அவற்றில் சில உண்மைக்குப் புறம்பாக … Read more

'பிரிசம்' என பெயரை மாற்றிய ஓயோ நிறுவனம்: காரணம் இதுதான்

இந்தியாவை தலைமையிடமாக கொண்டு உலகளாவிய விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா வசதி அளிப்புத்துறை நிறுவனமாக ஓயோ உள்ளது. கடந்த 2012ல் ரிதேஷ் அகர்வால் என்பவரால் துவங்கப்பட்ட ஓயோ நிறுவனம், 35க்கும் மேற்பட்ட நாடுகளில், ஆன்லைன் வாயிலாக ஹோட்டல் புக்கிங் சேவைகளை அளித்து வருகிறது. பிரபல நிறுவனமான ஓயோ தனது தாய் நிறுவமான ஓரேவல் ஸ்டேஸ் லிமிடெட் என்ற பெயரை மாற்ற முடிவு செய்தது. இதற்காக தனது வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து … Read more

கோத்தகிரி ஹெத்தையம்மன் கோயில்: 25 வருடங்களுக்குப் பிறகு நடந்த குடமுழுக்கு; பரவசத்தில் பக்தர்கள்

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் மூதாதையர்களான ஹெத்தையம்மனையும் ஹிரியோடையாவையும் குல தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். விதைப்பு, அறுவடை என ஒவ்வொரு நிகழ்விலும் குலதெய்வ வழிபாட்டிலிருந்தே தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஹெத்தையம்மன் கோயில் குடமுழுக்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஹெத்தையம்மன் திருவிழாவை ஒட்டுமொத்த படுகர் சமுதாய மக்களும் காணிக்கை செலுத்தி வழிபாட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள பழைமை வாய்ந்த ஒன்னதலை ஹெத்தையம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழா 25 ஆண்டுக்குப் … Read more

சிம்பொனி இசை: தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா!

சென்னை; தமிழ்நாடு அரசு சார்பில், இளைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  அவரது சிம்பொனி இசையை கவுரவிக்கும் வகையில், வரும் 13ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இசையமைப்பாளா் இசைஞானி  இளையராஜா மேற்கத்திய – கர்நாடக இசை கலந்த ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் 2025ம் ஆண்டு  மார்ச் 8-ஆம் தேதி அரங்கேற்றினார். அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் … Read more

ஜம்மு காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில் முதல்முறையாக எம்.எல்.ஏ ஒருவர் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மேராஜ் மலிக்(37) இன்று அந்த சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளார். இதற்கு ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரில் டோடா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் எம்எல்ஏ மேராஜ் மலிக்.. பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், பதவியிலிருக்கும் ஒரு … Read more

“உடல் எடையை குறைக்க சன்மானம்!'' – ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் கொடுத்த நிறுவனம்; என்ன காரணம்?

சீனாவின் ஷென்ழெனை (Shenzhen) தளமாகக் கொண்ட Insta360 என்ற நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையவாசிகள் இடையே பெரும் கவனம் பெற்று வருகிறது. உடல் எடை | மாதிரிப்படம் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி படி, Insta360 நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது உடல் எடையை குறைத்தால், அதற்கான சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதாவது, அவர்கள் இழக்கும் ஒவ்வொரு 0.5 கிலோக்கும் 500 யுவான் (இந்திய ரூபாயில் சுமார் ₹6,100) … Read more

அதிமுக ஐசியுக்கு போய் விடுமா? உதயநிதியின் விமர்சனத்துக்கு எடப்பாடி பதிலடி…

சென்னை: அதிமுக ஐசியுக்கு போய் விடுமா? உதயநிதியின் விமர்சனத்துக்கு எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார்.  ’’நான் கையை நீட்டி பேசுகிறேன்… என் விரல் ஆடுகிறதா..?’’ ஆனால், சில பேருடைய விரல்கள் ஆடுகின்றன என காட்டமாக விமர்சித்துள்ளார். அஇஅதிமுக விரைவில்,  க ஐசியூவில் போய்விடும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு  பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, … Read more

டெல்லியில் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

புதுடெல்லி, அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், செங்கோட்டையன் இன்று திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “நான் கோவிலுக்கு செல்கிறேன். மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன். கட்சி வளர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். பொதுச்செயலாளர் பல்வேறு முடிவுகளை எடுக்கிறார். முடிவுகள் குறித்து கருத்துகள் … Read more