Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்?

’’‘இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பது பழமொழி. எலும்பு வலிமை தேவைப்படும் அனைவருக்குமே எள்ளைப் பரிந்துரைக்கலாம். மூட்டுத் தேய்மானத்தைத் தடுப்பதற்கும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் இருப்பதற்கும், நரம்புகளின் செயல்பாடுகளைச் சீராக்குவதற்கும் உடலில் எண்ணெய்ச்சத்து அவசியம். எண்ணெய் வித்தின் தாவர வகையைச் சேர்ந்த எள், இதற்கு உதவிபுரியும். இன்று வழக்கத்திலிருக்கும் நல்லெண்ணெய்யின் அடிப்படையே எள்தான். sesame seeds இது, ஒருகாலத்தில் அஞ்சறைப் பெட்டியில் தவறாமல் இடம்பிடித்திருந்தது. இன்றோ, பலரும் உடல் உஷ்ணத்தைக் காரணம் காட்டி, அன்றாட உணவில் அதைத் … Read more

ஜார்கண்ட்: என்ஜினீயரிங் கல்லூரியில் ராகிங் கொடுமை; 6 மாணவர்கள் கைது

ராம்கார், ஜார்கண்டின் ராம்கார் மாவட்டத்தில் முருபண்டா கிராமத்தில் ராம்கார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், பொகாரோ மாவட்டத்தின் புஸ்ரோ பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர், பி.டெக் கணினி பிரிவில் சேர்ந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அவரை மூத்த மாணவர்கள் சிலர் ராகிங் செய்தும், அடித்தும், கொடுமைப்படுத்தி உள்ளனர். இதுபற்றி அக்கல்லூரியின் துணை முதல்வர் நஜ்மல் இஸ்லாம் கூறும்போது, அந்த மாணவன் ஆன்லைன் வழியே தேசிய ராகிங் ஒழிப்பு பிரிவில் புகார் அளித்து இருக்கிறார். … Read more

சசிகாந்த் செந்தில்: "மருத்துவமனையில் உண்ணாவிரதம் தொடர்கிறது" – காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட வீடியோ!

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய எஸ்.எஸ்.ஏ கல்வி நிதியைக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. இரண்டாவது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில் இரத்த அழுத்தம் அதிகரிப்பால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்தும் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளார். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்த வியாசைத் தோழர் அமைப்பினர். மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 31) உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலிருந்து சென்னை … Read more

பீகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அட்டை – தேர்தல் ஆணையம் திட்டம்

புதுடெல்லி, பீகாரில் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை செய்தது. இதில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆட்சேபம் தெரிவிக்கவோ, திருத்தம் மேற்கொள்வோ செப்டம்பர் 1-ந் தேதி வரை (அதாவது நாளை வரை) கால அவகாசத்தையும் தேர்தல் கமிஷன் தெரிவித்து இருந்தது. இதனிடையே இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் … Read more

ஆனந்த விகடன் & கிங் மேக்கர் அகாடமி இணைந்து நடத்திய UPSC / TNPSC தேர்வுகளுக்கான பயிற்சி முகாம்!

IAS, IPS போன்ற அரசு வேலைகள் இங்கே பலரின் கனவு வேலையாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு அது வெறும் கனவாகவே இருக்கிறது. அந்தக் கனவை நினைவாக்குவதற்கு ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர் அகாடமி இணைந்து 31/08/2025 இன்று சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் அரசு குடிமையியல் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக “யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி-யில் வெல்வது எப்படி?” எனும் தலைப்பில் இலவச பயிற்சி முகாம் நடத்தியது. இந்த பயிற்சி தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு ஒரு … Read more

வேலை தருகிறோம் என கூறி… 5 பேர் கும்பலால் இளம்பெண் பலாத்காரம்; காரில் இருந்து தூக்கி வீச்சு

கட்டாக், ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பாங்கிர்போசி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணிடம், நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை இருக்கிறது. அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். அதற்காக ஓரிடத்திற்கு வர வேண்டும் என கூறி 2 பேர் நேற்று முன்தினம் மாலை அந்த பெண்ணை அழைத்தனர். அவர்களை நம்பி அந்த பெண்ணும் அவர்களுடன் காரில் சென்றுள்ளார். ஆனால், வேலை பற்றி எதுவும் பேசாமல் இருந்துள்ளனர். வீட்டில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் உடாலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட … Read more

ஜெர்மனியில் வெற்றி; அடுத்தது FIM MiniGP World Finals-தான்! அஜித் வாழ்த்திய இந்த இளம் ஹீரோ யார்?

சென்னையைச் சேர்ந்த ஜேடன் இம்மானுவேல் என்ற 13 வயது சிறுவன் FIM மினி ஜிபி மோட்டார் பைக் பந்தயத்தில் மூன்றாவது இடம் வென்றதைத் தொடர்ந்து, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், உலக அளவிலான பந்தயத்தில் கலந்துகொள்ளப்போகும் அவரை வாழ்த்தியிருக்கிறார். சென்னையில் பிறந்த ஜேடன் பெற்றோருடன் ஜெர்மனியில் வசித்து வருகிறார். சிறு வயதிலேயே சைக்கிள் ஓட்டுவது, சைக்கிள் ரேஸில் ஈடுபாட்டுடன் இருந்த இவருக்கு மோட்டார் பைக் ரேஸிங்கை அறிமுகப்படுத்தியுள்ளார் அவரது தந்தை. Jaden Immanuel Jaden … Read more

இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 125-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பருவமழையை குறிப்பிட்டு அவர் பேசும்போது, இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன. வீடுகளை சேதப்படுத்தி விட்டன. வயல்வெளிகள் நீரில் மூழ்கி போயுள்ளன. குடும்பங்கள் மொத்தமும் பாதிக்கப்பட்டு உள்ளன என கூறினார். கடந்த சில வாரங்களாக வெள்ளம், நிலச்சரிவு என பெரிய அளவில் … Read more

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை கூடுதலாக அமைந்திருந்தது, ஆனால் காலம் மாற துவங்கியதனால் சவாலான விலையில் அதிக ரேஞ்ச் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் தாண்டி பொதுவான 30கிமீ முதல் 60 கிமீ தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் சார்ஜிங் மேம்பாடு எனவும் சாத்தியமாகி உள்ளதால் ரூ.1,00,000 குறைந்த அல்லது சில ஆயிரங்கள் கூடுதலாக விலை கொடுத்தாலும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்ய மிக தீவரமாக பலதரப்பட்ட பயனாளர்கள், விற்பனை எண்ணிக்கை, ஆன்லைன் … Read more

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன?

தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியாகும். இந்தப் பதவியின் நாற்காலியில் அமருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 30 ஆண்டுகள் சர்வீஸ், சீனியர் டி.ஜி.பி, பணியில் எந்தவித சார்ஜிம் இருக்கக் கூடாது போன்ற அடிப்படை தகுதிகள் உள்ளன. அதோடு ஆளுங்கட்சியின் ஆசியும் பெற்றவராக இருக்க வேண்டும். தற்போது தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக சங்கர் ஜிவால் இருந்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 31-ம் தேதியோடு ஓய்வு பெறுவதையடுத்து அடுத்த … Read more