சென்னை: துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை; பின்னணி என்ன?

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்குச் சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்கிறார் துல்கர் சல்மான். கடந்த மாதம் அவர் தயாரிப்பில் வெளியான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ திரைப்படம் மலையாள சினிமா வரலாற்றிலேயே அதிக தொகை வசூல் செய்த படமாகச் சாதனை படைத்தது. துல்கர் சல்மான் இதனிடையே கடந்த மாதம் கொச்சியில் உள்ள துல்கர் சல்மானின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். … Read more

இரண்டுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை வந்தார் இங்கிலாந்து பிரதமர்…

மும்பை:  பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்   இன்று (புதன்கிழமை) இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கினார், இது ஸ்டார்மரின் முதல் இந்திய அதிகாரப்பூர்வ வருகை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். மும்பையில் இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மரை மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்றார். சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் வணிகம், கலாச்சாரம் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்களுடன் … Read more

ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் நடக்கும்: வருகிறது சூப்பர் வசதி

புதுடெல்லி, டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கே இந்தியா முன்னோடியாக இருக்கிறது. இந்தியாவில் சாலையோரை கடை முதல் மிகப்பெரிய மால்கள் வரை அனைத்திலுமே யு.பி.ஐ. பரிமாற்றம்தான் முன்னிலை வகிக்கிறது. இந்த யு.பி.ஐ. என்ற வங்கி கணக்கில் இருந்து செய்யப்படும் பரிமாற்றத்திற்கு பின் நம்பர், ஓ.டி.பி. போன்ற முறைகள் வழியாக இதுவரை பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தன. ஆனால், இவற்றுக்கு அடுத்த கட்டமாக ஆதார் அடிப்படையிலான முகஅடையாள சரிபார்ப்பு நடைமுறைக்கு வர உள்ளது. தற்போதைய நிலையில் ஆதார் மூலம் முகஅடையாள சரிபார்ப்பு முறை … Read more

தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க e-marketplace…! தமிழ்நாடு அரசு

சென்னை: குறு, சிறு தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க “www.editn.in” வலைதளத்தின் கீழ் “e-marketplace”, என்ற இணையவழி சந்தையினை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டுவரும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் [EDII-TN], குறு, சிறு தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க “www.editn.in” வலைதளத்தின் கீழ் “e-marketplace”, என்ற இணையவழி சந்தையினை உருவாக்கியுள்ளது. இந்த இணையவழி சந்தையில், தொழில்முனைவோர் தங்கள் சொந்த முத்திரையுடன் தங்கள் தயாரிப்புகளை உலகளவில் விற்க … Read more

இந்திய பொருளாதாரம் உயரும்: உலக வங்கி கணிப்பு

புதுடெல்லி, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை மையமாக கொண்டு உலக வங்கி இயங்கி வருகிறது. இது உலகநாடுகளில் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சர்வதேச நிறுவனமாக உள்ளது. இந்தநிலையில் இந்த நிதியாண்டில் (2025-26) இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்திருந்தது. அமெரிக்க வர்த்தக வரிவிதிப்பு, உலகநாடுகள் இடையேயான போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்தநிலையில் உலக வங்கி தனது நிலைப்பாட்டை மாற்றி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் பொருளாதார … Read more

திண்டுக்கல்: சமூக விரோதிகளின் கூடாரமாகும் நிலக்கோட்டை நூலகம்; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள அரசு நூலகத்தில் தினமும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அரசு தேர்வுகளுக்கும், தனி தேர்வுகளுக்கும் படித்து வருகிறார்கள். தற்போது இந்த இடம் குடிகாரர்களின் அராஜகம் அதிகமாகி வருவதால் மாணவ மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து நூலகத்திற்கு வரும் இளைஞர்கள் நம்மிடையே பேசும் போது, “இங்குள்ள சாலை முழுவதும் பள்ளங்களாக உள்ளது. மழைக்காலங்களில் நூலகத்தின் வளாகங்கள் முழுவதும் மழைநீர் ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்தச் சமயங்களில் பள்ளங்களைக் … Read more

இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறை.. என்னென்ன தெரியுமா..?

புதுடெல்லி, பீகார் சட்டமன்றத்தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இரண்டு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள், நவம்பர் 14-ந் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 10-ந் தேதி தொடங்கி, 17-ந் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுவுக்கான பரிசீலனை அக்டோபர் 18-ந் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 20-ந் தேதிவரை மனுவை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நவம்பர் … Read more

காந்தாரா: "எங்கள் உணர்வைப் புண்படுத்தாதீர்கள்" – வேஷம்போடும் ரசிகர்களுக்கு ரிஷப் கோரிக்கை

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் தெய்வத்தைப் (Daiva) போல உடையணிந்து வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் அப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. உடலில் மஞ்சள் பூசிக்கொண்டு அலங்கார உடையணிந்து மக்கள் காந்தாரா படத்தைக் காணச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. Kantara Chapter 1 இதுபோன்ற செயல்கள் தன்னுடைய உணர்வையும் தெய்வத்தை வழிபடும் மக்களின் உணர்வையும் புண்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். Kantara: … Read more

இமாச்சல் நிலச்சரிவில் சிக்கிப் புதைந்த பேருந்து; 18 பேர் பரிதாப பலி; ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விபத்து தொடர்பாக வெளியான தகவலின்படி, தனியார் பேருந்து ஒன்று 30 முதல் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹரியானாவின் ரோஹ்தக்கிலிருந்து குமர்வின் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. பேருந்து நேற்று (அக்டோபர் 7) மாலை இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பலுகாட் அருகே சென்றுகொண்டிருந்தபோது கனமழை காரணமாக மலையிலிருந்து ஏற்பட்ட நிலச்சரிவு நேராகப் பேருந்தின்மீது மோதி … Read more