ஏ.ஐ. மூலம் சக மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்த கல்லூரி மாணவர் கைது

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் நயா ராய்ப்பூரில் உள்ள சர்வதேச ஐ.ஐ.டி.(IIIT) கல்லூரியில் பிலாஸ்பூரைச் சேர்ந்த ரஹீம் அத்னன்(வயது 20) என்ற மாணவர், பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது அவரது வகுப்பில் படிக்கும் சக மாணவிகள் பலர் கடந்த 6-ந்தேதி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரில், தங்கள் புகைப்படங்களை ரஹீம் அத்னன் ஆபாசமாக சித்தரித்து வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் உடனடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது … Read more

டிகிரி இருந்தால் போதும்! இந்தியன் போஸ்ட் வங்கியில் `நிர்வாகி' பணி – எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? நிர்வாகி (Executive) மொத்த காலிபணியிடங்கள்: 348; தமிழ்நாடு 17 வயது வரம்பு: 20 – 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) சம்பளம்: மாதம் ரூ.30,000 கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? மெரிட் லிஸ்ட், ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு. இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கி – வேலைவாய்ப்பு தமிழ்நாட்டில் எங்கெங்கே வேலை? கடலூர், கரூர், திருச்சி, திருவாரூர், … Read more

பிலிப்பைன்ஸில் மீண்டும் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

மணிலா: பிலிப்பைன்ஸில் மீண்டும் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அக்டோபர் 1ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 62 கிமீ (38.53 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக நில … Read more

Dashvanth நிரபராதியா? | உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன? | Advocate Ajeetha detailed interview

2017-ம் ஆண்டு, சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தில் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு அப்போது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த் என்ற இளைஞருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றமும் அந்தத் தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது தஷ்வந்த் தரப்பு. அந்த வழக்கில், தஷ்வந்த் இந்தக் குற்றத்தைச் செய்ததற்கான … Read more

திருச்சியில்… பங்குச் சந்தை பயிற்சி..!

நாணயம் விகடன் வழங்கும் ‘ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்’ நேரடிப் பயிற்சி வகுப்பு, 2025 அக்டோபர் 25-ம் தேதி, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சியில் நடக்கிறது. பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் இந்தப் பயிற்சியை அளிக்கிறார். இவர் ஆனந்த் ரதி, ஐ.டி.பி.ஐ கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்தவர். தற்போது ஆட்ஃபேக்டர்ஸ் பி.ஆர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில் 30 … Read more

54வது ஆண்டு தொடக்க விழா: வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுக பொதுக்கூட்டங்களை நடத்த எடப்பாடி உத்தரவு..!

சென்னை:   அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு,   வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுகவின் பொதுக்கூட்டங்களை நடத்த எடப்பாடி  பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளது. அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், கழக நிறுவனத் தலைவர் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் … Read more

Modi: "நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன்" – மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா?

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பேசியதாகவும், 2 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் இஸ்ரேல் – காசா போரை நிறுத்தும் வரலாற்று அமைதித்திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவின் வரி விதிப்பால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா – அமெரிக்க அரசுகள் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். Spoke to my friend, President Trump and congratulated him on the success of the … Read more

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அதிர்ச்சி: சைவ உணவுக்கு பதிலாக அசைவம் வழங்கப்பட்டதால் பயணி உயிரிழப்பு!

85 வயதான ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் அசோகா ஜெயவீர, தனது நீண்ட தூர பயணத்திற்கு சைவ உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்த போதிலும், கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டதால், நடுவானில் பரிதாபமாக உயிரிழந்தார். 2023 ஜூன் 30 அன்று விமானத்தில் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அசோகா ஜெயவீர அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் வசித்து வந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இலங்கையின் கொழும்புவுக்கு சென்றார். சைவ உணவு உண்பவரான … Read more

பிளாட்பாரம்! – குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்  நீண்ட நெடிய மூச்சுடன் அந்த சிறிய ஸ்டேஷனில் வந்து நின்ற அந்த ரயிலிலிருந்து உதிர்ந்த ஒரு சிலரோடு தானும் இறங்கினான் சண்முகம். ஒல்லியாக, ஒட்டிய வயிறுடன் பஞ்சத்தில் அடிபட்டவன் போலத் தோற்றம். ஒருவாரமாக மழிக்கப் படாதிருந்த தாடி. அவன் முதுகில் படர்ந்திருந்த  பேக் பேக்கும்..கண்களில் … Read more