`கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை தயங்குவது ஏன்?’ – உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மடங்கள், கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்கள், நிதி மற்றும் நிலங்கள் தொடர்பான விவரங்கள், அறநிலையத்துறையின் உத்தரவுகள், அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகளை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையத்தி்ல் வெளிப்படையாக வெளியிடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில், ‘‘கோவில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தால் அதன்மூலமாக முறைகேடுகள் … Read more

கேரள அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது! முதல்வா் பினராயி விஜயன் தகவல்…

திருவனந்தபுரம்: கேரள அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்ட நிலையில், கூட்டணி கட்சியான, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக, இந்த திட்டம் அமல்படுத்துவதை  நிறுத்தி வைத்துள்ளது. இதை மாநில  முதல்வா் பினராயி விஜயன் உறுதிப்படுத்தி உள்ளார். கேரளத்தில் மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை  மாநில முதல்வர்  பினராயி விஜய் தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டு, சமீபத்தில் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில், , அந்தத் திட்டம்அமல்படுத்துவது நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வா் பினராயி … Read more

பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மந்திரிசபையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 4 மந்திரிகளும் உள்ளனர்.இந்தநிலையில் சமீபத்தில் மந்திரி சபை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்காமல் தேசிய கல்விக் கொள்கையான பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு இணைந்தது. இதற்கு காங்கிரஸ் மட்டுமின்றி கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்படும் … Read more

பீகார்: “வாக்குகளுக்காக மோடி நடனம் கூட ஆடுவார்'' – ராகுல் காந்தி பேச்சு; பாஜக கடும் எதிர்ப்பு

பீகாரின் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, இந்தியா கூட்டணியும் தேசிய முற்போக்கு கூட்டணியும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பிரசாரத்தில் இரு கூட்டணிகளும் மாறி மாறி சாடி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. நேற்று முதல் பீகாரில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியைக் கடுமையாக சாடியுள்ளார். ராகுல் காந்தி ராகுல் காந்தி பேசியதாவது,  பீகாரில் ராகுல் காந்தி, “மோடிக்கு உங்களுடைய வாக்குகள் … Read more

இந்தியாவில் அறிமுகமாகிறது டிரைவர் இல்லாத கார்!

பெங்களூரு, தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பது போல், ஏ.டி.எம். இட்லி கடை, ஓட்டல்களில் உணவு பரிமாறும் ரோபோ, தோசை சுடும் ரோபோ, வீட்டு வேலைகளுக்கு ரோபோ பயன்பாடு என பெங்களூரு இன்றைய வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை கட்டமைத்து வருகிறது என்றால் மிகையல்ல. அந்த வரிசையில் தற்போது டிரைவர் இல்லாத கார் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம் பெங்களூருவில் உள்ள விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுடன் … Read more

“2 நாள் உனக்கு டைம்; என்னுடைய வீரியத்தை பார்ப்பாய்'' – பெண் அதிகாரியை தரக்குறைவாக பேசிய விசிக மா.செ

கன்னியாகுமரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார் பாரதி. சமீபத்தில், நாகர்கோவில் அருகே உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து, அனுமதியின்றி இயங்கி வருவதாக கூறி மின் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாரதியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு ஆதரவாக நேற்று நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு … Read more

ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

புதுடெல்லி, ஜப்பான் நாட்டின் முதலாவது பெண் பிரதமராக சனே தகைச்சி கடந்த வாரம் பதவியேற்றார்.இந்நிலையில், அவரை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிரதமராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியா-ஜப்பான் சிறப்பு உறவை மேம்படுத்துவது பற்றியும், பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் விவாதித்தனர். உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் வலிமையான இந்தியா-ஜப்பான் உறவு அவசியம் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இருதரப்பு உறவை அதிகரிக்க நெருங்கி பணியாற்றுவது என இருவரும் முடிவு செய்தனர். 1 … Read more

‘56 அங்குல மார்பு இன்னும் அமைதியாக இருக்கிறது’ பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்கு

புதுடெல்லி, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறார். ஜப்பான், தென்கொரியா நாடுகளில் சமீபத்தில் பேசும்போதும், ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்துக்கொண்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பதை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. ஜப்பான், தென்கொரியாவில் டிரம்ப் பேசியது குறித்த வீடியோ பதிவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கூறுகையில், ‘இது ஒரு சில நிமிடங்களுக்கு … Read more

டெல்லியில் மேக விதைப்பு சோதனை நிறுத்திவைப்பு

புதுடெல்லி, கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ஐ.ஐ.டி) இணைந்து டெல்லி அரசு நேற்று முன்தினம் 2 முறை மேக விதைப்பு சோதனைகளை நடத்தியது. ஆனால் டெல்லியில் மழைப்பொழிவு இல்லை. சோதனைகளுக்கு பிறகு நொய்டாவில் குறைந்தபட்ச மழைப்பொழிவே பதிவானது.இதுகுறித்து கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- டெல்லியில் திட்டமிடப்பட்ட மேக விதைப்பு சோதனை மேகங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை சரியான வளிமண்டல நிலைமைகளைப் பொறுத்து அமையும். தற்போது நடத்தப்பட்ட சோதனை … Read more