“எடப்பாடி முதல்வராக அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம்; பாஜகவினரை தூண்டினாலே போதும்'' – செல்லூர் ராஜூ

“எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கு அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம், பாஜகவினரை தூண்டினால் போதுமானது” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பிரசாரப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பிரசார வாகனத்தை முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தனர். அண்ணாமலை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ கூறியதாவது:“மதுரை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அதிமுக ஆட்சி காலத்தில் … Read more

அரசு ஊழியர்கள் ‘ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட்’ கிடையாது! தமிழ்நாடு அரசு

சென்னை:  ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என தமிழ்நாடு அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. அதன்படி ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது, அதற்கான விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே  சென்னை உயர்நீதிமன்றம்,  அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சரியல்ல, என கூறி, அதை பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு  அறிவுறுத்தி இருந்தது. மேலும்,  ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்வது, ஊழியர்களுக்கு … Read more

US tariffs: “வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் முரண்டு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலகின் பெரும்பாலான நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்துள்ளார். ஏன் இந்த வரி? பிற நாடுகள் அமெரிக்காவிற்கு அதிக வரி விதிக்கிறார்கள் என்றும், பிற நாடுகளுடன் அமெரிக்காவிற்கு வர்த்தகத்தில் பற்றாக்குறை இருப்பதால் தான் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரிகள் தேசிய அவசரநிலை மற்றும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 கீழ் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. நீதிமன்றம் நீதிமன்றத்தின் தீர்ப்பு உலக நாடுகளின் மீதான இந்த வரிகளை எதிர்த்த … Read more

50-ஐக்கூட எட்டாமல் எவ்வளவு சாதனைகள் !

50-ஐக்கூட எட்டாமல் எவ்வளவு சாதனைகள் ! மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் பெயர் என்னவோ கிருஷ்ணன்.. ஆனால் அவரிடம் தாண்டவமாடியதோ பகுத்தறிவு. இறை நம்பிக்கையை நேரடியாக இடிக்காமல் மூடநம்பிக்கைகளை சாடவேண்டும், அதே நேரத்தில் எதிராளியின் மனதை புண்படுத்தவும் கூடாது. இப்படியொரு நுட்பமான வழியில் தமிழக மக்களுக்கு பகுத்தறிவை பக்குவமாக ஊட்டியதில், கலைவாணரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.. சுயசிந்தனையின் அவசியத்தை திரைப்படங்கள் வாயிலாக அள்ளித் தெளித்தவர், நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். அதாவது, என்.எஸ் கிருஷ்ணன்.. நாடக கலைஞர்களுக்கு எடுபிடி … Read more

“முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?'' – ஆர்.பி. உதயகுமார் கேள்வி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயண ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, “உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி நிரைவேற்றியுள்ளார். மிக எழுச்சியாக, ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் உசிலம்பட்டி தொகுதியில் அவரது பேருரை நடைபெறும். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் எழுச்சிப் பயணம் வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் அமையும். அரசியல் தலைநகரான மதுரையில் அவரது பேச்சை கேட்க … Read more

செப்டம்பர் 3 மற்றும் 10 தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை: செப்டம்பர் 3 மற்றும் 10 தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் சூறாவளி காற்று விச வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. தென்கிழக்கு மத்திய பிரதேசம், அதனை ஒட்டிய வங்கங்கக்கடல்  பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில்,  அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு  இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல … Read more

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகையில் ஆற்றில் மிதந்த அவலம்… பொதுமக்கள் அதிர்ச்சி…

மதுரை:  முதலமைச்சர் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பல்வேறு அதிருப்தி நிலவி வரும் நிலையில்,  மதுரையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள், வைகை ஆற்றில் தூக்கி எறியப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வைகை ஆற்றில் மிதந்து வந்த மனுக்களை பார்த்த பொதுமக்கள், தங்களது  கோரிக்கைகள் தண்ணீரில் மிதக்கிறதே என்று ஆதங்கப்பட்டுள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப பல முகாம்களில் பெறப்படும் மனுக்கள் வெறும் கண்துடைப்பு நாடகம் … Read more

Mohammed Shami: "எனக்கு ஒரேயொரு நிறைவேறாத கனவு இருக்கு" – மனம் திறந்த முகமது ஷமி

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் வெறும் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த முகமது ஷமி, அந்தத் தொடருக்குப் பிறகு காயம் காரணமாக ஒன்றரை ஆண்டு கழித்துத்தான் சர்வதேச போட்டியில் ஆடினார். கடைசியாக சாம்ப்பின்ஸ் டிராபியில் ஆடிய ஷமி, இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வாகவில்லை, தொடங்கவிருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இப்போது தேர்வாகவில்லை. முகமது ஷமி இந்த நிலையில், தனக்கு நிறைவேறாத கனவு … Read more

‘அனைவருக்கும் ஐஐடி’: அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் ஐஐடியில் இணையவழி படிப்புகளில் சேர உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

சென்னை: ‘அனைவருக்கும் ஐஐடி’ திட்டத்தின்கீழ் நடப்பாண்டு,  அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் இணையவழி படிப்புகளில் சேர உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ்  தெரிவித்துள்ளார். தேர்வுபெற்றவர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். ‘அனைவருக்கும் ஐஐடி’ என்ற திட்டத்தின் கீழ்  சென்னை ஐஐடி பி.எஸ். தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளது. சென்னை ஐஐடி … Read more

பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி – 28 வயது இளைஞர் மீது வழக்குப்பதிவு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 27-ந்தேதி மதியம் 2 மணியளவில் பள்ளி கழிவறைக்குச் சென்ற மாணவிக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கழிவறையிலேயே மாணவி, ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சுமார் 9 மாதங்களுக்கு முன்பு மாணவி அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியிடம் … Read more