நிசானின் புதிய எஸ்யூவிக்கு Tekton என பெயர் சூட்டப்பட்டுள்ளது. | Automobile Tamilan

டஸ்ட்டர் அடிப்படையிலான மாடலை நிசான் நிறுவனம் டெக்டன் என்ற பெயரில் விற்பனைக்கு ஜூன் 2026ல் வெளியிட உள்ள நிலையில் டிசைன் படங்கள் மற்றும் முக்கிய தோற்ற விபரங்கள் தொடர்பான பல முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ரெனால்ட் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள டெக்டானை உள்நாட்டில் மட்டுமல்லாமல் பல்வேறு சர்வதேச சந்தைகளில் ஏற்றுமதி செய்யப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Nissan Tekton SUV “Tekton” என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டுள்ள நிலையில், இதற்கான பொருள் கைவினைஞர் அல்லது … Read more

காந்தாரா: "படம் பார்த்த அமெரிக்கர்கள், 'இது எங்க கதை' என்று சொன்னார்கள்" – இயக்குநர் ரிஷப் ஷெட்டி

2022-ம் ஆண்டு ‘காந்தாரா’ படத்திற்குக் கிடைத்த நாடு தழுவிய வரவேற்பை அடுத்து, இப்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஈஸ்வர பூந்தோட்டமான காந்தாரா வனத்தையும், தனது மக்களையும் காக்க அரச வம்சத்தினரை எதிர்த்தும், அரக்க சக்தியை எதிர்த்தும் நாயகன் போராடுவதும், குலங்களுக்கும் அரசுக்குமான போரும், அவர்களின் தெய்வ வழிபாடும்தான் இதன் கதைக்களம். Kantara Chapter 1 Kantara: Chapter 1 Review: அசரடிக்கும் மேக்கிங் – … Read more

சென்னையில் கொடுமை: பள்ளி மாணவியை லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திமுக பிரமுகர், துணை நடிகர் உள்பட 6 பேர் கைது

சென்னை:  பள்ளி மாணவியை  கோயம்பேடு பகுதியில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக திமுக பிரமுகர், துணை நடிகர் உள்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோயம்பேடு விடுதியில்  பள்ளி மாணவியான சிறுமியை அடைத்து வைத்து , சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் , தலைமறைவாக இருந்த … Read more

சபரிமலை கவச முறைகேடு விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள ஐகோர்ட்டு உத்தரவு

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலின் வெளியே 12 துவாரபாலகர் சாமி சிலை உள்ளது. இந்த சிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. கடந்த 1999-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட சிலையின் கவசம் பொலிவு இழந்ததால், கவசத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்திடம் கவசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அந்த கவசத்தின் எடை 42.800 கிலோவாக இருந்தது. பணிகள் முடிந்து சபரிமலைக்கு திரும்ப கொண்டு வரப்பட்டபோது, … Read more

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு | Automobile Tamilan

தீபாவளிக்கு முன்னதாக ஸ்பீடு 400, ஸ்பீடு T4 என்ற இரண்டு முக்கிய மாடல்களை வாங்குபவர்களுக்காக விலையை தற்காலிகமாக டிரையம்ப் நிறுவனம் குறைத்து விற்பனை செய்ய துவங்கியுள்ளது. தற்பொழுது 350சிசிக்கு மேற்பட்ட பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஜாஜ் ஆட்டோ தனது டிரையம்ப் ஸ்பீடு 400 வரிசை, பஜாஜ் பல்சர் என்எஸ் 400 மற்றும் கேடிஎம் 390 வரை உள்ள பைக்குளுக்கு விலை உயர்த்தாமல் தொடர்ந்து முந்தைய விலையில் விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில், டிரையம்ப் வெளியிட்ட … Read more

“உங்க பணம், 1 ரூபாய் கூட குறையாது'' – விபத்தில் சிக்கியவர் குடும்பத்தை நெகிழ வைத்த டி.எஸ்.பி!

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (44). இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் சந்திராவுடன் வசித்து வருகிறார். ராஜாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தனக்குப் பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகக் கோயில்களில் பரிகார பூஜை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு, திருவாரூர் மாவட்டம் சீதக்கமங்கலம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றிற்குப் பரிகாரம் செய்வதற்காகத் தனது ஸ்கூட்டியில் சென்றுள்ளார். பின்னர் பரிகார பூஜையை முடித்துவிட்டு, … Read more

₹60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ராவிடம் 4 மணி நேரம் விசாரணை…

ரூ.60 கோடி மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) முன் ஆஜரானார்கள். கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் ஒரு தொழிலதிபரிடம் ₹60 கோடி மோசடி செய்ததாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஜூஹு காவல் நிலையத்தில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா உட்பட ஐந்து பேரிடம் … Read more

பண்ணை வீட்டில் போதை விருந்து – 22 சிறுமிகள் உள்பட 65 பேர் சிக்கினர்

ஐதராபாத், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 22 சிறுமிகள் உள்பட 65 பேர் போதையில் இசைக்கு ஏற்றவாறு ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 2 பேர் கஞ்சா புகைத்திருந்தது தெரியவந்தது. மற்றவர்கள் மது அருந்தியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே … Read more

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம் | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டாரின் புதிய RT-XD4 299cc என்ஜின் பொருத்தப்பட்ட முதல் மாடலாக அப்பாச்சி RTX 300 அட்வென்ச்சர் டூரிங் பைக்கினை அக்டோபர் 15 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே, இந்நிறுவனம் டிசைனை காப்புரிமை பெற்றுள்ள நிலையில், பாரத் எக்ஸ்போவில் படங்களும் கசிந்துள்ளது. TVS Apache RTX 300 அப்பாச்சி வரிசையில் ஏற்கனவே ஃபேரிங் மற்றும் ஸ்போர்ட்டிவ் பிரிவில் 160சிசி-310சிசி வரையில் கிடைக்கின்ற நிலையில் அட்வென்ச்சர் டூரிங் என்ற புதிய அவதாரத்தை எடுக்க … Read more

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக முடியுமா? – உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து என்ன?

தமிழ்நாட்டின் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதியப்பட்டது. 2022-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாதது குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தது. மேலும், அவர் அமைச்சர் பதவியில் இல்லை என்றால் ஜாமீன் வழங்கப்படும் என … Read more