11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025ஐ செயல்படுத்தும் விதமாக 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதல் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்றும் முந்தைய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் 2030-ம் ஆண்டு வரை அரியர் தேர்வு எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்தும் விதமாக நடப்பு கல்வியாண்டு முதல் (2025 – 26) 11ம் … Read more

ஆம்னி பேருந்து கட்டணங்கள் வரலாறு காணாத உயர்வு அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை….

சென்னை: தீபாவளியையொட்டி, ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.  வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டு இருப்பது  மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார். பத்து ஆம்னி பேருந்து நிறுவனங்கள் (Omni bus companies) பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தகவல் வந்துள்ளது. அந்தக் கட்டணத்தைக் குறைக்கத் தவறினால், அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை … Read more

திருமணத்தை நிறுத்திவிட்டு, கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த சீனப்பெண் – என்ன நடந்தது?

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையிடம் இருந்து ‘கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்’ கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண், தனது திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து 200,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 23 லட்சம்) வரதட்சணை பெற்றுள்ளார். chinese wedding ஆனால், திருமணம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு ’அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய விரும்பவில்லை’ என்று கூறி … Read more

ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் ஆலை இழுத்து மூடல்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படும், மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் ஆலை இழுத்து மூடப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே செயல்பட்டு வந்த ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் எனப்படும் மருந்து தயாரிப்பு ஆலையில், தயாரிக்கப்பட்ட கோல்டுரிப் இருமல் மருந்தை குடித்த 22 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, மத்தியஅரசு, ஸ்ரீசன் தயாரிப்பு மருந்துகள் விற்பனைக்க தடை விதித்தது. மேலும், உரிய … Read more

கரூர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது இடைக்கால தீர்ப்புதான்: வழக்கறிஞர் வில்சன்

புதுடெல்லி, கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தீர்ப்புக்கு பின் டெல்லியில் திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருப்பது இடைக்கால உத்தரவுதான். … Read more

காசா: ஹமாஸ் – உள்ளூர் ஆயுதக் குழு இடையே மோதல்; 27 பேர் பலி – என்ன நடந்தது?

காசாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைதி திட்டத்தின்படி பணயக் கைதிகள் ஒப்படைக்கப்படவிருந்த சூழலில் ஹமாஸ் மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுக்களிடையே கடும் மோதல் எழுந்துள்ளது. இதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் ஹமாஸ் வீரர்கள், 19 பேர் டக்முஷ் குழுவைச் சேர்ந்தவர்கள். காசாவின் சப்ரா பகுதியைச் சேர்ந்த டக்முஷ் குழுவினர். இவர்களை அல் டோக்முஷ் குடும்பப் போராளிக் குழு என்றும் அழைக்கின்றனர். காசா அமெரிக்க செய்திதளமான ஃபாக்ஸ் நியூஸ் கூறுவதன்படி நேற்று (அக்டோபர் 12) … Read more

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15ஆயிரம் கோடி முதலீடு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்..!!

சென்னை:  தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா  தெரிவித்துள்ளார். இது குறித்து டிஆர்பி ராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில்,  ரூ.15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் . தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஃபாக்ஸ்கானின் இந்திய பிரதிநிதி ராபர்ட் வூ முதலமைச்சரை சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்தார்.   மின்சாதனங்கள் உற்பத்தித் துறையில் … Read more

கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? – ஆதவ் அர்ஜுனா கேள்வி

புதுடெல்லி, கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- போலீசார் கூறிய இடத்தில்தான் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் காவல் துறையினர்தான் எங்களை வரவேற்றனர். … Read more

சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா – மீண்டும் வர்த்தகப் போர்? | Explained

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் வர்த்தகப் போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. ஏன்? கடந்த 9-ம் தேதி, ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய ஐந்து கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது சீனா. அந்தக் கட்டுப்பாடுகளின் படி, இனி ஏதேனும் ஒரு நாடோ அல்லது வெளிநாட்டு நிறுவனமோ, இந்தக் கனிமங்களை வாங்க வேண்டுமானால் ஸ்பெஷல் அனுமதி பெற வேண்டும். இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாதமும், சீனா ஏழு அரிய கனிம … Read more