மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் முறைகேடு… அகில இந்திய சாய் சமாஜ் கமிட்டியை கலைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு…

மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக தங்கராஜ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக கண்காணிக்க நீதிபதி பி.என். பிரகாஷை நியமித்து நீதிபதிகள் எம். செந்தில்குமார் மற்றும் திருமதி அனிதா சுமந்த் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். நீதிபதி பி.என். பிரகாஷ் நடத்திய விசாரணையில், கோயிலுக்கு அடுத்துள்ள ஒரு பழைய பள்ளி வலுக்கட்டாயமாக வாங்கப்பட்டு, தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவது தெரிந்தது. கோயிலை நிர்வகித்து வரும் அகில இந்திய சாய் சமாஜில் பல ஆண்டுகளுக்கு … Read more

1 கோடி ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்த சுசுகி

இந்தியா உட்பட சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக சுசுகி ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை எண்ணிக்கை 1 கோடி இலக்கை கடந்துள்ள நிலையில், 170 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டாலும் குறிப்பாக மாருதி சுசுகி மூலம் இந்தியாவில் மட்டும் 6 கோடி விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் தலைமுறை ஸ்விஃப்ட் ஜப்பானில் உற்பத்தி துவங்கப்பட்ட நிலையில், 2005 ஆம் ஆண்டில் ஹங்கேரி, இந்திய சந்தையில் உற்பத்தி துவங்கிய இந்த மாடல் தொடர்ந்து சீனா, பாகிஸ்தான், கானா போன்ற … Read more

Stalin: "இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார்" – இபிஎஸ் தாக்கு

“டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் வருடத்துக்கு ரூ. 5400 கோடி என்று, இந்த நான்காண்டுகளில் ரூ. 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி பாலியல் வன்கொடுமைகள் மதுரை மாவட்டத்தில் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, பழங்காநத்தத்தில் பேசும்போது, ‘’மேற்கு தொகுதி அதிமுகவின் கோட்டை. இந்தத் தொகுதியில் வந்திருக்கும் உங்களின் எழுச்சியே அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெல்லும் என்பதற்கான சாட்சி. … Read more

வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோசிப் பொருத்தி கண்காணிப்பு’! சென்னை மாநகராட்சி முடிவு…

சென்னை: சென்னை பகுதிகளில் உலாவரும் தெரு நாய்களுக்கு சுமார் 10ஆயிரம் நாய்களக்கு   ஏற்கனவே சோதனை  முறையில மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கும் மைக்ரோசிப் பொருத்தும்  திட்டத்தை சென்னை மாநகராட்சி  அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. தெருநாய் மற்றும் வளர்ப்பு நாய்கள் பலர் நாயக்கடிக்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் நாய் வளர்ப்பு குறித்து கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், நாய்களுக்கு தெருவில் உணவு அளிக்ககூடாது என்றும், அதற்கு … Read more

5 டன் பிரிவில் டாடா LPT 812 இலகுரக டிரக் விற்பனைக்கு வெளியானது

டாடா மோட்டார்சின் LPT 812 இலகுரக டிரக்கில் 5 டன் எடை பிரிவில் 4 டயர்களுடன் 4SP CR 125 PS எஞ்சின் கொடுக்கப்பட்டு மிக சிறப்பான வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகள், மார்கெட் லோடு, FMCG, பால்ப் பொருட்கள், கொள்கலன்கள் மற்றும் ரீஃபர்கள், பார்சல் கூரியர் & மின் வணிகம், தொழில்துறை பொருட்கள், உணவு தானியங்கள், எல்பிஜி சிலிண்டர்கள், பானங்கள் என பலவற்று பயன்பாடுகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்பிடி 812ல் உள்ள எஞ்சின் 360 Nm … Read more

பூட்டு, லாக்கரை உடைக்காமல்… பிரபல வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் திருட்டு; 5 பேர் கும்பல் கைவரிசை

உஜ்ஜைன், மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் மகாநந்த நகர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வங்கி கிளையின் லாக்கரில் இருந்த நகை, பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. அவற்றில் ரூ.5 கோடி நகை, ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சி.சி.டி.வி. பதிவின் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 2 திருடர்கள் சுவர் ஏறி குதித்து, மேல் தளத்திற்கு ஏறி சென்று, பூட்டை திறந்து வங்கிக்குள் சென்றனர். அவர்கள் … Read more

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு 40 % ஜிஎஸ்டி வரி விதிப்பு..!

350cc-க்கு மேற்பட்ட என்ஜின் பெற்ற இரு சக்கர வாகனங்களுக்கு 40 % வரியை உறுதிப்படுத்தியுள்ள இந்திய அரசின் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பால் பெரும்பாலான மக்கள் வாங்கும் இருசக்கர வாகனங்களுக்கு 18% ஆக குறைக்கப்பட்டாலும், இந்தியாவின் பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு, கேடிஎம், டிரையம்ப், ஹார்லி-டேவிட்சன் என பல பிரீமியம் நிறுவனங்கள் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 350ccக்கு மேற்பட்ட என்ஜின் பெற்ற இரு சக்கர வாகனங்களுக்கு 28 % + 3% செஸ் என … Read more

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்… 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2014-ம் ஆண்டு 5 மாணவிகள் மூணாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் மீது போலீஸார் 4 வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் தேவிகுளம் கோர்ட்டில் நடந்துவந்தன. அதில், 2 வழக்குகளில்  பேராசிரியரை கோர்ட் விடுவித்திருந்தது. … Read more

தேர்தல் வாக்குறுதிகளில் தோல்வி – மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது,  இதற்காக  மக்களிடம் தமிழக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்”  பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலின்  திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  … Read more