Hero 125 Million Edition launched – 125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வெற்றிகரமான விற்பனை எண்ணிக்கை 125 மில்லியன் இலக்கை கடந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு ஸ்பிளெண்டர்+, பேஷன் பிளஸ் மற்றும் விடா விஎக்ஸ்2 வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது ஹீரோ நிறுவனம் 48 நாடுகளில் கிடைத்து வருகின்ற நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் ஹீரோ நிறுவனம் இங்கிலாந்து உட்பட பல்வேறு ஐரோப்பியா சந்தையில் வெளியிடப்பட உள்ளது. 12.5 கோடி வாகனங்கள் விற்பனை இலக்கை கடந்துள்ள நிலையில் கிரே நிறத்துடன் புதிதாக … Read more

ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்டப்பட்டதால் சர்ச்சை

ராமநாதபுரத்தில் நீண்ட காலமாக ரயில் நிலையம் எதிரே நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்டபோது போதிய வசதிகளுடன் வாராந்திர சந்தை பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதையடுத்து பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் என்ற பெயர்களில் இவை பொது மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. திட்டங்களை துவக்கிய முதல்வர் ஸ்டாலின் இந்நிலையில் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் இட நெருக்கடியில் திணறிய புதிய பேருந்து நிலையம் ரூ. 20 … Read more

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து, ‘கோல்டுரிஃ’ இருமல் சிரப்புக்கு தமிழ்நாடு அரசும் தடை….

சென்னை:  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து, கோல்டுரிஃ இருமல் சிரப்புக்கு தமிழ்நாடு அரசும் தடை  விதித்துள்ளது. இந்த சிரஃபில் தடை செய்யப்பட்டுள்ள வேதி பொருட்கள் கலக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. சமீபத்தில்,  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் எட்டு குழந்தைகள்  உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான ஆய்வுகள் அந்த குழந்தைகள் இறப்புக்கு  கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பும் காரணமாக கூறப்பட்டது.  உடற்கூராய்வில் சிறுநீரக திசுவில் டிஎதிலேனே கிளைகோல் எனும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிப்பு. இது மை, பெயிண்ட் … Read more

'Drone-கள் விமானப்படையின் எதிர்காலமா?' – எலான் மஸ்கின் கருத்திற்கு இந்திய விமானப்படைத் தளபதி பதில்

சமீபத்தில் ஸ்டார்லிங்க், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க், வான்வெளி ராணுவத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசியிருந்தார். மேலும், ராணுவ பைலட்டுகள் ஓட்டும் போர் விமானத்தை விடவும், ட்ரோன்கள் சிறப்பாகச் செயல்படும், அதுதான் விமானப் படையின் எதிர்காலம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் 93வது விமானப் படை நாள் கொண்டாட்ட விழாவில் விமானப்படை, எதிர்கால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசியிருந்தார். அப்போது எலானின் கருத்து குறித்துப் பேசியிருந்த இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் … Read more

இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான சேவை! எப்போது தெரியுமா?

டெல்லி:  இந்தியா சீனா இடையே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு துளிர்த்துள்ள நிலையில், அக்டோபர் 26ந்தேதி முதல் இந்​தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை  தொடங்​கப்​படு​கிறது.  இதை இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, அக்டோபர் 26, 2025 முதல் கொல்கத்தாவிலிருந்து குவாங்சோவிற்கு தினசரி நேரடி விமானங்களைத் தொடங்கும் என்றும், டெல்லி வழித்தடத்தில் … Read more

மயிலாடுதுறை: "பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல" – பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952ல் தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டு அப்பகுதி மக்களின் தொடக்கக் கால கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டு வந்தது. மீண்டும் இப்பள்ளி 2008ல் மறுசீரமைக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக இன்றும் அப்பகுதி மாணவர்களுக்கான தொடக்கக்கால கல்வியை வழங்கி வருகிறது. தற்போது பூங்குடி மற்றும் தோப்புத்தெரு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் 20 பேரும், மாணவிகள் 14 பேருமான 34 மாணாக்கர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஆண் மற்றும் பெண் … Read more

அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி, நல்லதே நடக்கும்! செங்கோட்டையன் நம்பிக்கை…

கோபி: அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி  என்ற அதிமுக அதிருப்தியாளர் செங்கோட்டையன் எம்எல்ஏ,  ‘பொறுத்திருக்க வேண்டும், நல்லதே நடக்கும்’  என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என இபிஎஸ்ஸுக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்த நிலையில் செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார் இபிஎஸ். இதைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அரசியல் நகர்வுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அதிமுகவை ஒருங்கிணைக்கும் … Read more

Mahindra Thar Facelift – நவீன அம்சங்களுடன் 2025 மஹிந்திரா தார் விலை ₹ 9.99 லட்சம் முதல் துவக்கம்.!

இந்தியாவின் மிகப் பிரபலமான ஆஃப் ரோடு எஸ்யூவி ஆக விளங்கும் மஹிந்திரா தார் (Mahindra Thar), 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல் முறையாக ஒரு பெரிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.16.99 லட்சம் வரையில் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3 டோர் பெற்ற 2025 தார் மாடல், விலை, பாதுகாப்பு, தொழில்நுட்பம் எனப் பல துறைகளிலும் மேம்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக உள்ளது. குறிப்பாக இதன் பல்வேறு வசதிகளை 5 கதவுகளை பெற்ற … Read more

GRT: அன்னதானம், சத்திர கட்டுமானத்திற்காக ரூ. 50 லட்சத்தை நன்கொடையாக வழங்கிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டி அதன் பிறகு மதிப்பை உருவாக்குவதில் உள்ளது என்று நம்புகிறது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நிறுவனம் சமூகப் பொறுப்பைத் தனது முக்கிய நோக்கமாக ஏற்று மக்களின் வாழ்வை உயர்த்தவும், சமூகத்தைச் சக்திவாய்ந்ததாக மாற்றவும், அதன் செழிப்பை விரிவுபடுத்துகிறது. ஜிஆர்டி யின் இந்த வளர்ச்சி பயணத்தில் மீண்டும் திருப்பிக் கொடுப்பது என்ற இந்த ஆழ்ந்த உறுதியும் கருணையும், நேர்மையும் கொண்டு சமூக … Read more

கரூரில் 41பேர் பலியான விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி

மதுரை:  கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய  அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான 9 வழக்குகள் மீது உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை  நடைபெற்றது. இதில் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த ‘கரூர் வழக்கை சிபிஐ-க்கு வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைக்கு அரசுத்தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. பிற மனுக்கள் மீதான விசாரணையின்போது, ‘கூட்டம் நடந்தது மாநில சாலையா, தேசிய நெடுஞ்சாலையா? எப்படி … Read more