இந்திய பொருளாதாரம் உயரும்: உலக வங்கி கணிப்பு

புதுடெல்லி, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை மையமாக கொண்டு உலக வங்கி இயங்கி வருகிறது. இது உலகநாடுகளில் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சர்வதேச நிறுவனமாக உள்ளது. இந்தநிலையில் இந்த நிதியாண்டில் (2025-26) இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்திருந்தது. அமெரிக்க வர்த்தக வரிவிதிப்பு, உலகநாடுகள் இடையேயான போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்தநிலையில் உலக வங்கி தனது நிலைப்பாட்டை மாற்றி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் பொருளாதார … Read more

திண்டுக்கல்: சமூக விரோதிகளின் கூடாரமாகும் நிலக்கோட்டை நூலகம்; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள அரசு நூலகத்தில் தினமும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அரசு தேர்வுகளுக்கும், தனி தேர்வுகளுக்கும் படித்து வருகிறார்கள். தற்போது இந்த இடம் குடிகாரர்களின் அராஜகம் அதிகமாகி வருவதால் மாணவ மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து நூலகத்திற்கு வரும் இளைஞர்கள் நம்மிடையே பேசும் போது, “இங்குள்ள சாலை முழுவதும் பள்ளங்களாக உள்ளது. மழைக்காலங்களில் நூலகத்தின் வளாகங்கள் முழுவதும் மழைநீர் ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்தச் சமயங்களில் பள்ளங்களைக் … Read more

இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறை.. என்னென்ன தெரியுமா..?

புதுடெல்லி, பீகார் சட்டமன்றத்தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இரண்டு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள், நவம்பர் 14-ந் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 10-ந் தேதி தொடங்கி, 17-ந் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுவுக்கான பரிசீலனை அக்டோபர் 18-ந் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 20-ந் தேதிவரை மனுவை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நவம்பர் … Read more

காந்தாரா: "எங்கள் உணர்வைப் புண்படுத்தாதீர்கள்" – வேஷம்போடும் ரசிகர்களுக்கு ரிஷப் கோரிக்கை

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் தெய்வத்தைப் (Daiva) போல உடையணிந்து வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் அப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. உடலில் மஞ்சள் பூசிக்கொண்டு அலங்கார உடையணிந்து மக்கள் காந்தாரா படத்தைக் காணச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. Kantara Chapter 1 இதுபோன்ற செயல்கள் தன்னுடைய உணர்வையும் தெய்வத்தை வழிபடும் மக்களின் உணர்வையும் புண்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். Kantara: … Read more

இமாச்சல் நிலச்சரிவில் சிக்கிப் புதைந்த பேருந்து; 18 பேர் பரிதாப பலி; ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விபத்து தொடர்பாக வெளியான தகவலின்படி, தனியார் பேருந்து ஒன்று 30 முதல் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹரியானாவின் ரோஹ்தக்கிலிருந்து குமர்வின் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. பேருந்து நேற்று (அக்டோபர் 7) மாலை இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பலுகாட் அருகே சென்றுகொண்டிருந்தபோது கனமழை காரணமாக மலையிலிருந்து ஏற்பட்ட நிலச்சரிவு நேராகப் பேருந்தின்மீது மோதி … Read more

சேலம்: சாலையைக் கடக்க முயன்ற தலைமைக் காவலர்; லாரி மோதி பலியான சோகம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (40) என்பவர் சேலம் மாநகர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு அன்புராஜ் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள உறவினர்களைப் பார்க்க சென்றுள்ளார். பின்னர் இரவு சேலம் மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம்பள்ளி என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது … Read more

தன்மீது நீதிமன்றம் தெரிவித்த கடுமையான உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களை நீக்க கோரிய செந்தில் பாலாஜி வழக்கு டிஸ்மிஸ்!

டெல்லி: ஊழல் வழக்கில் தன்மீது உச்சநீதிமன்றம்  கூறிய கடுமையான கருத்துகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  இது தவறான எண்ணம் என்று கூறி மனுவை டிஸ்மிஸ் செய்ததுடன், செந்தில்பாலாஜி மீதான வழக்குகளை ஏன் டெல்லிக்கு மாற்றக்கூடாது என கேள்வி எழுப்பினர். தனக்கு எதிரான வழக்கில்,  உச்சநீதிமன்றம் தெரிவித்த சில கடுமையான கருத்துக்களைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதில் நீதிபதிகள் … Read more

கமல்: "அவரின் பேச்சு உங்களைப்போன்ற என்டர்டெய்னர்களுக்குப் புரியாது" – பாஜக அண்ணாமலைக்கு மநீம கண்டனம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விமர்சித்துப் பேசிய தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பாளரும் மாநிலச் செயலாளருமான முரளி அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கண்டன அறிக்கை இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் மொழியால் போலிப்பணிவும், நரம்பில்லாத நாக்கால் தடித்த வார்த்தைகளைத் தரம் பார்க்காமல் எல்லோர்மீதும் கொட்டுவதும் வழக்கமாகக் கொண்ட, பாஜக-வினாலேயே புறக்கணிக்கப்பட்ட மாஜி அண்ணாமலை, இன்று எங்கள் தலைவரைப்பற்றி, ‘ஒரு ராஜ்யசபா சீட்டிற்காக … Read more

கரூர் கூட்ட நெரிசலில் 41பேர் பலி: தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு…

சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி   உச்ச நீதிமன்றத்தில் தவெக  சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27ஆம் தேதி சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். 60 … Read more

Dude: “அந்தப் பாடலைத்தான் என் Ex Girl Friendக்கு முதலில் பாடிக் காட்டினேன்" – பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்’ திரைப்படம் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. `லவ் டுடே’, `டிராகன்’ என இரு வெற்றிப் படங்களுக்குப் பிறகு இத்திரைப்படம் திரைக்கு வருவதால் இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். Dude – Pradeep Ranganathan சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்’ படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் `ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில் அனிருத் இசையமைத்த `எனக்கென யாருமில்லையே’ … Read more