“சினிமா என்றால் இந்தக் கருத்துதான் பேசணும், இது பேசக் கூடாதுனு சொல்றது தவறு'' – மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம். பைசன் படத்தில் இந்நிலையில் பைசன் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்.16) நடைபெற்றது. அதில் பேசிய மாரிசெல்வராஜ், … Read more

தீபாவளி பண்டிகை: இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக  2,800-க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் இன்றுமுதல் செய்யப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில்  மொத்தம் 20, 378 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, இன்று (அக்டோபர் 16)  முதல் 19 வரை நான்கு நாட்களுக்குச் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாடு முழுவதும்  அக்டோபர் 20ந்தேதி உற்சாகமாகக் கொண்டாடப்படவிருக்கும் … Read more

Bigg Boss Tamil 9: `'No Discipline; துஷார் பதவி பறிக்கப்படுது" – பிக் பாஸ் அதிரடி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.16) முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபப்பட்டு பேசிய பிக் பாஸ், “ஒவ்வொரு சீசன்லையும் அந்த வீடு ஒவ்வொரு விஷயத்துக்காக ஃபேமஸ்ஸா இருக்கும். ஆனா இந்த சீசன் 9 ‘No Discipline’க்கு ஃபேமஸ்ஸா இருக்கு. தூங்கிறது, மைக் மாட்டாம இருக்குறது’னு நிறைய விஷயங்கள் இருக்கு. Bigg Boss Tamil 9 துஷார் நீங்களே மைக் மாட்டுறது இல்ல. அப்றோ எப்படி மத்தவுங்கள Discipline- க்கு கொண்டு … Read more

கரூர் துயரத்தில் உண்மையை விளக்குவது கடமையாகிறது! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..

சென்னை: கரூர் துயரம் – ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது, உண்மையை விளக்குவது கடமையாகிறது”  என முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் அதுதொடர்பாக பதிவு போட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது … Read more

எம்பிவி, EV, ஜெனிசிஸ் பிராண்டு அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாய் இந்தியா | Automobile Tamilan

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் மோட்டார் (HMIL) நிறுவனம் 2030 நிதி ஆண்டிற்கு முன்பாக 7 புதிய கார்கள் உட்பட மொத்தமாக 26 மாடல்களை வெளியிட உள்ளதை முதலீட்டாளர் தினத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. HMIL Invsestor Day 2030 நிதியாண்டுக்குள் ஹூண்டாய் நிறுவனம் தனது உற்பத்தியை விரிவுபடுத்தவும், 26 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் EV எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தவும் ₹45,000 கோடி ($5.4 பில்லியன்) முதலீட்டை அறிவித்துள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி புதிய … Read more

கனமழை: இன்றும், நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்? -சென்னை வானிலை மையம் அப்டேட்

இன்று தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைப்படி, ஆரஞ்சு அலர்ட் இன்று திருநெல்வேலி, தேனி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு. மழை மஞ்சள் அலர்ட் சென்னை, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, … Read more

Hair Dye & Hair Colouring: பின்பற்ற வேண்டிய எச்சரிக்கை வழிமுறைகள்! – நிபுணர் கைடன்ஸ்

ஹேர் கலரிங், இதனை சிலர் அழகிற்காக பயன்படுத்துகிறார்கள். சிலர் ஆசைக்காக பயன்படுத்துகிறார்கள். இதில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் இருக்கின்றன என தெரிந்தும், பின்விளைவுகளைத் தெரியாமல் பலர் பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் வெள்ளை முடியின் நிறம் மாறுவதற்காக ஹேர் டை பயன்படுத்தினார்கள். தற்போது உடையின் நிறத்திற்கு ஏற்றவாறு ஹேர் கலரிங் செய்கிறார்கள். ஹேர் கலரிங் மற்றும் ஹேர் டை குறித்த நமது கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அசோக். Hair Dye & Hair … Read more

கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம்! பிரேத பரிசோதனை குறித்து அமைச்சர் மா.சு. பதில்…

சென்னை: கரூர் சம்பவம் குறித்து சட்டபேரவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கரூர் சம்பவம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். எடப்பாடியின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின்,  மற்றும் அமைச்சர்கள், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தனர். அப்போது உயிரிழந்தவர்களின் உடல் 3 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்பது  தவறான தகவல்  தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தவெக தலைவர் விஜய் கூட்ட நிகழ்வின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 … Read more

”ஓரவஞ்சனை செய்யாதே”: சபாநாயகரை முற்றுகையிட்டு, அவரது முன்பாக தரையில் அமர்ந்து ஈபிஎஸ் உள்பட அதிமுகவினர் தர்ணா…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கரூர் சம்பவம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் சபாநாயகர் இருக்கைக்கு எதிராக அமர்ந்து,  தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. செப்டம்பர் 27ந்தேதி அன்று தவெக தலைவர் விஜயின் கரூர்  பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சட்டப்பேரவையில்  விவாதங்கள் நடைபெற்றது. இந்த விபத்து குறித்து,  முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் … Read more