புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை! பேரவையில் துணைமுதல்வர் தகவல்

சென்னை: புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்  தமிழ்நாடு சட்டப் பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது நாள் கூட்டத்தில் வினாக்கள் விடை நேரம் நடைபெற்றது. அப்போது  எம்.எல்.ஏக்கள் கேட்கும் வினாக்களுக்கு அந்தந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது மகளிர் உரிமை தொகை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு துணைமுதல்வர் உதயநிதி பதில் கூறினார். அப்போது, புதிதாக விண்ணப்பித்தவர்கள்,  கலைஞர் மகளிர் டிசம்பர் 15ஆம் தேதி முதல்  … Read more

காலணி வீசிய விவகாரம்: வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல்

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 6-ந்தேதி வழக்கம்போல் கூடியது. வழக்குகளின் விவரங்களை வழக்கறிஞர்கள் குறிப்பிட்டு வந்தனர். அவற்றை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர், நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கி தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார். இதனை கவனித்த காவலாளிகள், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி கோர்ட்டில் இருந்து வெளியேற்றினர். அப்போது அந்த வழக்கறிஞர், சனாதன … Read more

ரங்கராஜ் – ஜாய் கிறிசில்டா விவகாரம்: `இதில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இருக்கு’ – மகளிர் ஆணையம்

‘நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து விட்டு ஏமாற்றி விட்டார்’ என அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா தந்த புகாரின் மீது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஆணையம் அனுப்பிய சம்மனையடுத்து ரங்கராஜ், ஜாய் கிறிசில்டா இருவரும் மகளிர் ஆணையத்தில் ஆஜராகினர். முன்னதாக நேற்று ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். அதில்,`நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிஸ்டில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் … Read more

அமெரிக்க ஊடகங்கள் மீதான பென்டகனின் அடக்குமுறைக்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு

அமெரிக்க போர்த் துறை என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்புத் துறை பென்டகனுக்குள் ஊடக அணுகலைக் கட்டுப்படுத்தியது. சில செய்தி நிறுவனங்கள் கட்டிடத்தில் உள்ள அலுவலகங்களை காலி செய்ய கட்டாயப்படுத்தியது மற்றும் நிருபர்களுக்கான விளக்கக் கூட்டங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது. டஜன் கணக்கான செய்தி நிறுவனங்கள் பத்திரிகையாளர்களுக்கான புதிய பென்டகன் அணுகல் கொள்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டன, அதற்கு பதிலாக அவர்கள் அமெரிக்க இராணுவத்திற்கு குறைந்த கவரேஜை வழங்குவார்கள் என்று வலியுறுத்தினர். புதன்கிழமை, பென்டகனின் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, … Read more

ஈரோடு: பெண் குழந்தை கடத்தல், வேதனையில் பெற்றோர்; போலீஸார் தீவிர விசாரணை – நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், சித்தோடு கோணவாய்க்கால் என்ற இடத்தில் மேம்பாலத்துக்கு அடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த  வெங்கடேஷ்,கீர்த்தனா தம்பதி, கடந்த சில மாதங்களாக அங்கு தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.  இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் வந்தனா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இரவில் மேம்பாலத்துக்கு அடியில் குடும்பத்துடன் தூங்குவது வழக்கம். நேற்று இரவும் வெங்கடேஷ், கீர்த்தனா தம்பதியின் மகன், மகள் இருவரும் மேம்பாலத்துக்கு அடியில்  கொசுவலைக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். அருகில், வெங்கடேஷ், கீர்த்தனா இருவரும் … Read more

மாடு மேய்ப்பவன் கூட இப்படி பேசமாட்டான் – தலைமை பண்பு இல்லாதவர் அன்புமணி! டாக்டர் ராமதாஸ் காட்டம்…

சென்னை: மாடு மேய்ப்பவன் கூட இப்படி பேசமாட்டான்.  தலைமை பண்பு இல்லாதவர் அன்புமணி என உடல்நலம் தேறிய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் என்று கூறிகொள்ளும் அன்புமணி ராமதாசை கடுமையாக சாடியுள்ளார். மேலும்,  ஒரு கட்சி மட்டும் என்னை நலம் விசாரிக்கவில்லை என்பதையும் பதிவு செய்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் ராமதாஸ் கடந்த 5 ஆம் தேதி  அன்று திடீரென சென்னையில் உள்ள அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் ரெகுலர் செக்கப்புக்காக … Read more

காரைக்குடி: சிறப்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேட்மிட்டன்!

காரைக்குடி கிருஷ்ணா பேட்மிட்டன் அகாடமியில் செக்காலைக்கோட்டை மற்றும் பள்ளத்தூர் நகரத்தார் சங்கம் சார்பில் மாநில அளவிலான இறகுபந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அருண் நெல்லியான் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ விசாலம் சிட்ஃபண்ட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அறமனச்  செம்மல் அரு.உமாபதி தலைமை வகித்து துவக்கி வைத்தார். லட்சுமி கருத்தரிப்பு மைய தலைவர் கிருஷ்ணா, பேட்மிட்டன் அகாடமி ( Badminton academy ) நிறுவன தலைவர் டாக்டர் ஜோதி கணேஷ், கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமி செராமிக்ஸ் … Read more

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – இன்றும் நாளையும் கனமழை! இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது என்றும்,  இந்த காலக்கட்டத்தில்,  வட மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்யக்கூடும்   என்றும், இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரங்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.  இதை  இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வானிலை மையம்  நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விலகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்அக்டோபர் 16,17 தேதிகளில் 12செ.மீ முதல் 20செ.மீ எவரை மிககனமழைக்கு வாய்ப்பு … Read more

டிவிஎஸ் அப்பாச்சி RTX ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள் | TVS Apache RTX 300 on-road price and specs

டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் டூரிங் அப்பாச்சி RTX பைக்கில் இடம்பெற்றுள்ள  எஞ்சின், மைலேஜ், வசதிகள், விலைப்பட்டியல் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம். TVS Apache RTX மிக நீண்ட ஹைவே டூரிங் பயணத்துக்கு ஏற்ற வடிவமைப்பினை பெற்று லேசான ஆஃப் ரோடு அனுபவங்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ள அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் (RTX என்றால் Rally Tour eXtreme ஆகும்.) பைக்கில் மிக நீண்ட தொலைவு பயணத்திலும் என்ஜின் சிறப்பான முறையில் குளிர்விக்கும் வகையிலான நுட்பத்தை பெற்ற … Read more

கழுகார்: `பாலம் தந்த தலைவருக்குப் பாராட்டு விழா' கேட்ட மாஜி – கடுப்பில் சூரியக் கட்சி சீனியர்கள்

கடுப்பில் சூரியக் கட்சி சீனியர்கள்!விழாவுக்கு மேல் விழா எடுக்கும் மாஜி… வழக்குகளால் பதவியை இழந்த மாஜியார், தொடர்ந்து விதவிதமாக நிகழ்ச்சிகளை நடத்தி ஸ்கோர் செய்கிறாராம். சமீபத்தில், தன் சொந்த மாவட்டத்தில் பெரும் விழாவை நடத்திய அவர், அடுத்ததாக மான்செஸ்டர் மாவட்டத்தில் இளைஞரணி நிகழ்ச்சியை நடத்துவதில் பிஸியாக இருக்கிறாராம். ‘இது எங்களுக்கான நிகழ்ச்சி. நிர்வாகிகளை வைத்தே நடத்திக்கொள்கிறோம்…’ என்று இளம் தரப்பிடமிருந்து பதில் வந்தாலும், ‘என் பங்குக்கு நானும் ஏதாவது செய்கிறேனே…’ என்று வான்ட்டடாக வாலன்டியர் செய்கிறாராம் அந்த … Read more