எலி கடித்து இறந்த குழந்தைகள்: “இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..!" – அரசை விமர்சிக்கும் ராகுல்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த MYH துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜிதேந்திர வர்மா, “பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையின் எடை வெறும் 1.6 கிலோ மட்டுமே இருந்தது. எலி கடி பல பிறவி குறைபாடுகள் உட்பட … Read more

பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளதாக பாமக தலைவர் விமர்சனம்…

சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ள தை சுட்டிக்காட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி, திமுக ஆட்சியில்  பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது என விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக  அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 24 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வியின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி … Read more

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல் – அஜித் பவார் விளக்கம்

மும்பை, மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்மலா என்ற பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஐ.பி.எஸ். அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா, மண் அள்ளும் பணியை தடுத்து நிறுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது, அங்கிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர், மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவாரை மொபைல் போனில் அழைத்து, ஐ.பி.எஸ். அதிகாரி அஞ்சனா கிருஷ்ணாவிடம் பேசுமாறு மொபைல் போனை கொடுத்தார். … Read more

பிரச்னையின் தீவிரம் புரிகிறதா? – தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவரின் பகிர்வு #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நம் இந்திய நாட்டில்  எல்லா ஊர்களிலும் தெருக்களிலும் பாகுபாடின்றி வசவசவென்று தெரு நாய்கள் பல்கிப் பெருகி வாழ்கின்றன. ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு அவைகளைப்பிடித்துச்செல்ல நகராட்சி நாய் வண்டி வரும். பின்னர் அந்த நாய்களை திரும்பக் கொண்டுவந்து விடமாட்டார்கள். ஆகவே நாய்கள் இனப்பெருக்கம் குறைவாக … Read more

ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்… நாளை நமதே! சசிகலா வீராவேச அறிக்கை…

சென்னை: ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்… நாளை நமதே!  என அதிமுகவில் இருந்த விலக்கப்பட்ட  மறைந்த ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா வீராவேசமாக அறிவிக்கை வெளியிட்டு உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும், இல்லையேல் அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம் என அதிரடியாக அறிவித்துள்ள அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கூறியுள்ள நிலையில், அவரது கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஏற்கனவே ஓபிஸ், அவரது கருத்தை வரவேற்றுள்ள நிலையில், தற்போது சசிகலாவும், அவரது … Read more

விநாயகர் ஊர்வலத்தில் குண்டு வைக்க சதி.? – உச்சகட்ட பரபரப்பில் மும்பை

மும்பை, மும்பை நகரின் 34 இடங்களில் மனித வெடிகுண்டுகள் இருப்பதாக, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மும்பை நகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி நாளில் வைத்து வணங்கப்படும் விநாயகர் சிலைகளை 10-வது நாளான சதுர்தசியில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, செப்டம்பர் 6-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெறும் சூழலில், மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. … Read more

சங்ககிரி: 15 ஆண்டுகளாக உறங்கும் `புதிய' பேருந்து நிலையம்; 16-வது ஆண்டிலாவது மக்களுக்கு உதவுமா?!

சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுமார் ரூபாய் 95 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூபாய் 154.60 லட்சம் செலவில் திறப்பு விழா… ஆனால் மக்கள் பயன்பாடு இல்லாத, மக்களின் வரிப்பண கட்டடம். எதுவென சிந்திக்க தோன்றுமே. ஆம்,2008 -ல் அடிக்கல் நாட்டப்பட்டு 2009 -ல் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட‌ சங்ககிரி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா சங்ககிரி புதிய‌ பேருந்து நிலையம் பற்றித்தான் இந்த கட்டுரை … Read more

வித்தவுட் பயணம்: சென்னை மின்சார ரயில்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.8 கோடி அபராதம் வசூல்…

சென்னை: டிக்கெட் இன்றி பயணம்  (வித்தவுட்) செய்தவர்களிடம் இருந்து, சென்னை மின்சார ரயில்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.8 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. சென்னை கோட்டையில் நூற்றுக்கணக்கான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளான கும்மிடிப்பூண்டி,  அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பதி,  தாம்பரம், செங்கல்பட்டு, என பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.   சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் மின்சார ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் … Read more

“நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால்…” ரூ.500 கோடி தர வேண்டும்! பெண் நீதிபதிக்கு கொள்ளை கும்பல் மிரட்டல்…

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வரும் பெண் நீதிபதி ஒருவருக்கு “நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால்…”? ரூ.500 கோடி தர வேண்டும் என மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது நீதித்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேசம் என்றாலே சம்பல் கொள்ளையர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஒரு காலத்தில்,  இப்பகுதியின் புகழ் பெற்ற கொள்ளைக் கூட்டத் தலவைர்களில் பூலான் தேவி மற்றும் மான் சிங்  போன்றவர்கள் பிரபலமானவர்கள். சம்பல் பிரதேசத்தில் அரசியல் செல்வாக்கை பெறுவதற்கு அரசியல் கட்சியினர் அவர்களிடம் … Read more