நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்சில் சிக்கி தவிக்கும் சிக்கமகளூரு மாணவி

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் செபு தீவில் மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளியாக பதிவாகி உள்ளது. இந்த நில நடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதன்காரணமாக 70 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 150 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த … Read more

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும்! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சிவகங்கை: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும்  என அங்கு நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் அரசு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழ்வாய்வு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியத்தை முதலமைச்சர் ஸ்டாலின் … Read more

TVK : விஜய்யை வளைக்கப் பார்க்கிறதா பா.ஜ.க… டெல்லி பல்ஸ் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் விஜய் செல்லப் போகிறார்… அவரை கையில் எடுத்துவிட்டது பா.ஜ.க…” என்று பலவாறான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சபாநாயகரான அப்பாவுகூட, “திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்வதுபோல, அரசியலில் நடிப்பதற்கு அமித் ஷாவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கட்சி தொடங்கியிருக்கிறார் விஜய்…” என்று காட்டமாகவே விமர்சித்திருக்கிறார். இப்படி, நாலாபுறமும் விஜய்யையும் பா.ஜ.க-வையும் இணைத்து வைத்து … Read more

தசரா பண்டிகை, ஆயுதபூஜை விடுமுறைகளுக்கு சென்றவர்கள் திரும்ப நெல்லை, மதுரையில் இருந்து நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிப்பு…

சென்னை: தசரா பண்டிகை, ஆயுதபூஜை விடுமுறைகளுக்கு சொந்த ஊர் சென்றவர்கள்,. சென்னை திரும்ப நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாளை  மதுரை, நெல்லை இருந்து தாம்பரம் செல்ல நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தொடர் விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் மதுரை மற்றும் நெல்லையில் இருந்து சென்னைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் விவரம் … Read more

அரபிக்கடலில் உருவானது ‘சக்தி’ சூறாவளி புயல் – சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில்,  அரபிக்கடலில் முதல் சூறாவளி புயல் உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு ‘சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக,   சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவான இந்த பருவத்தின் முதல் சூறாவளி புயல் வெள்ளிக்கிழமை ‘சூறாவளி சக்தி’யாக தீவிரமடைந்துள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது. தற்போது குஜராத்தின் துவாரகாவிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 250 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் … Read more

Upcoming Renault Cars: இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் காரை வெளியிடும் ரெனால்ட் | Automobile Tamilan

இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனம் அடுத்த 18-24 மாதங்களுக்குள் இரண்டு எஸ்யூவி மற்றும் ஒரு எலக்ட்ரிக் கார் என மொத்தமாக மூன்று மாடல்களை வெளியிட உள்ளது. பலரும் அறிந்த அந்த மாடல்கள் டஸ்ட்டர், பிக்ஸ்டெர் மற்றும் க்விட் இவி ஆகும். ஏற்கனவே இந்நிறுவனம் கிகர், ட்ரைபர் மற்றும் ஐசிஇ ரக க்விட் ஆகியவற்றை மேம்படுத்தி விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள காராக டஸ்ட்டர் வரவுள்ளது. Renault Duster சர்வதேச சந்தையில் கிடைக்கின்ற டஸ்ட்டரை அடிப்படையாக கொண்டு … Read more

சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் – பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்காதது ஏன்?

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் 64 வயதாகும் சனே தகைச்சி. மேலும் அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார். ஜப்பான் சர்வதேச அளவில் பாலின சமத்துவத்தில் பின் தங்கிய நாடுகளில் ஒன்று. முதன்முறையாக அங்கே ஒரு பெண் நாட்டை வழிநடத்தும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது மைல் கல் சாதனைப் போலத் தெரிந்தாலும் ஜப்பானில் உள்ள பெண்கள், பெண் விடுதலை செயற்பாட்டாளர்கள் இதில் மகிழ்ச்சியடையவில்லை என்பதே உண்மை. Sanea Takaichi ஏனென்றால் சனே தகைச்சி பழமைவாத கொள்கைகளைக் … Read more

41பேர் உயிரிழந்த கரூர் சம்பவம்: ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியீடு

சென்னை: 41பேர் உயிரிழந்த கரூர் சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் அமைந்துள்ள  ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழுவின் விவரம் வெளியாகியுள்ளது. கடந்த 27-ஆம் தேதி (செப்டம்பவர்)  த.வெ.க தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை … Read more

ஜடேஜாவின் ODI கரியருக்கு முற்றுப்புள்ளி? ஆஸி., தொடரில் ஏன் தேர்வாகவில்லை; அகர்கார் என்ன சொல்கிறார்?

இந்திய அணி அக்டோபர் பிற்பாதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடவிருக்கிறது. அக்டோபர் 19-ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான அணியை இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார் இன்று வெளியிட்டார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி vs ஆஸ்திரேலியா அப்பட்டியலில், ஒருநாள் போட்டி அணிக்கான கேப்டன்சி ரோஹித்திடமிருந்து சுப்மன் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், கடைசியாக … Read more