பீகாரில் நாளை மறுநாள் பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி

பாட்னா, பீகார் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில், தேர்தல் டிக்கெட்டுகள் பணத்துக்கு விற்கப்பட்டதாக அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதுபோன்ற அதிருப்தியை சரிக்கட்டவும், காங்கிரஸ் கட்சிக்கு வியூகம் வகுக்கவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பீகாரில் முகாமிட்டுள்ளனர் .இந்தநிலையில் பீகாரில் 2 நாட்கள் ராகுல்காந்தி பிரசாரம் செய்யவுள்ளார். இது தொடர்பாக பேசிய காங்கிரச் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், ”சாத் பண்டிகைக்குப் பிறகு எங்கள் … Read more

சிஎன்ஜி ஆப்ஷனில் வெளியான கியா காரன்ஸ் எம்பிவி சிறப்புகள்.! | Automobile Tamilan

இந்தியாவில் மைலேஜ் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய சிஎன்ஜி தேர்வு மிக சிறப்பானதாக உள்ள நிலையில், கியா நிறுவனமும் தனது காரன்ஸ் எம்பிவி காரில் டீலர்கள் மூலம் ஆப்ஷனலாக பொருத்தி தர உள்ளது. ஏற்கனவே இந்த மாடலின் போட்டியாளரான எர்டிகா/ரூமியன் ஆகியவற்றில் சிஎன்ஜி வழங்கப்பட்டு வருகின்றது. பழைய கேரன்ஸில் மட்டுமே கிடைக்கின்ற நிலையில், புதிய கேரன்ஸ் கிளாவிஸில் வழங்கப்படவில்லை. Kia Carens CNG அரசு அங்கீகரித்துள்ள Lovato நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு டீலர்கள் வாயிலாக பொருத்தி தரப்பட … Read more

சென்னையில் அதிகாலை முதல் தொடரும் அடை மழை – நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்…

சென்னை: மொந்தா புயல் உருவாகி உள்ளதன் காரணமாக,  சென்னையில் அதிகாலை முதலே  அடை மழை  பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  நாளையும்  மழை தொடரும் என வானிலை மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு  மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில்  மொந்தா புயலாக வலுப்பெற்றது.  … Read more

தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் & 3 யூனியன் பிரதேசங்களில் SIR; அனைத்து கட்சிகளையும் அழைக்கும் ஸ்டாலின்!

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. இதன்முடிவில், 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் இப்பணியைத் தொடங்கும்போதே கங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசைக் குற்றம்சாட்டி எதிர்த்தது. இவ்வாறிருக்க, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கோவா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் SIR நடத்தப்படும் … Read more

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையர்கள் , தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2-ம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கான … Read more

Womens World Cup: அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்; விதிகள் என்ன கூறுகிறது?

இந்தியா, இலங்கை இணைந்து நடத்திவரும் 13-வது மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்துவிட்டன. ஆஸ்திரேலியா (13 புள்ளிகள்), இங்கிலாந்து (11 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (10 புள்ளிகள்), இந்தியா (7 புள்ளிகள்) ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கின்றன. அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. Womens World Cup – மகளிர் உலகக் கோப்பை புதன் கிழமை கவுகாத்தியில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் … Read more

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! எஸ்ஐஆருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பதிவு…

 சென்னை: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்படும்  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! என எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தபோது, 2வது கட்டமாக தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்  (SIR)  மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், வரும் 4ந்தேதி முதல் அதற்கான … Read more

சென்னை: 7 வயது குழந்தை கொலை; அப்பா தற்கொலை; தாய் உயிர் ஊசல் – நடந்தது என்ன?

சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது மெயின் சாலையில் உள்ள அப்பார்ட்மென்டில் வசித்து வந்தவர் நவீன்குமார் (38). இவரின் மனைவி நிவேதிதா. இந்த தம்பதியினரின் மகன் லவின் (7). இவன் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நவீன்குமார், தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். நிவேதிதா, ரயில்வேயில் வேலைப்பார்த்து வருகிறார். நவீன்குமாரின் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த நவீன்குமாரின் பெற்றோர், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது … Read more

தெருநாய்கள் விவகாரம்: பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி,  பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள்  அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெருநாய்கள் பிரச்னை தொடா்பான வழக்கில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவ. 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததற்கான விளக்கத்தை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை … Read more