SIR: திமுக முதல் மநீம வரை எதிர்ப்பு; சொல்லும் காரணங்களும், விமர்சனங்களும் என்னென்ன?

தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடங்குகிறது. இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை திமுக தொடங்கி காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்களையும், விமர்சனங்களையும் பார்க்கலாம். SIR – சிறப்புத் தீவிரத் திருத்தம் 1. தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்தம் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்க உள்ளது. கிட்டத்தட்ட 8 கோடி மக்கள் தொகை … Read more

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுக… – மனு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகள் (SIR) மேற்கொள்ளப்படும் நிலையில். அதற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய  தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (S.I.R) எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. மனு தாக்கல் செய்தார். மனு விவரம் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் எஸ்ஐஆர்  பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பீகாரில் … Read more

சோழர் காலத்து சிவன் கோயிலில் தங்கக் காசு புதையல் – `ஷாக்’ ஆன ஜவ்வாதுமலை கிராம மக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் தாலுகாவுக்குஉட்பட்ட ஜவ்வாதுமலை கோவிலூர் பகுதியில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆதிசிவன் திருமூலநாதர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலின் கருவறை, ராஜகோபுரம் உள்ளிட்டவை சிதிலமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, தொல்லியல்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் கோயிலை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆதிசிவன் திருமூலநாதர் திருக்கோயில் இந்த நிலையில், கருவறை பணிக்காக நேற்று பள்ளம் தோண்டியபோது, சிவலிங்கம் இருந்த இடத்துக்கு அடியில் பானை ஒன்று தென்பட்டன. இதையடுத்து, பானை உடையாமல் … Read more

BB Tamil 9: "கொஞ்சம் கூட தைரியம் இல்லை" – அட்டாக் மோடில் திவாகர்; களேபரமாகும் பிக்பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (நவ 3) நாளுக்கான மூன்றாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. அந்தப் புரொமோவில் திவாகர், “‘இஷ்டம்னா இருங்க இல்லைனா எந்திருச்சு போங்க’னு சொல்றதுக்கு திவ்யா பிக்பாஸ் கிடையாது. அவருக்கு அந்த உரிமையும் கிடையாது. திவ்யாவுடைய ஓட்டை வச்சு யாரும் இங்க வெளியேற்றப்பட போறதில்ல. BB TAMIL 9: DAY 12: `கத்திக்குத்து ராணி’ அரோரா; கதை சொல்லும் நேரம் இந்த வார `worst performer’ யார்? நாமினேஷன் வந்ததும் மத்தவங்கள மாதிரியே … Read more

`அதிமுகவிலும் குடும்ப அரசியல்' – செங்கோட்டையன் பரபரப்பு தகவல்

அதிமுகவில் உள்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மன நிலையில் உள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இணைந்துள்ளார். எடப்பாடிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அவரை முதலில் மாவட்ட  செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிமுகவில் இருந்தே நீக்கினார்கள். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். … Read more

"மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை" – தேசிய விருதுகள் குறித்து பிரகாஷ் ராஜ்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளில் ‘பிரம்மயுகம்’ படத்திற்காக ‘சிறந்த நடிகர்’ விருதைப் பெற்றுள்ளார். ‘பிரம்மயுகம்’ படத்திற்காக மம்மூட்டிக்கு ‘தேசிய விருது’ கிடைக்கும் என்று திரைத்துறையைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், மம்மூட்டிக்கு தேசிய விருது வழங்கப்படாதது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. பிரம்மயுகம் திரைப்படம் இந்நிலையில் கேரள அரசு மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்திற்காக ‘சிறந்த நடிகர்’ விருதை அறிவித்திருப்பதைப் பலரும் மகிழ்ச்சியடைந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் … Read more

கோவையில் பயங்கரம்: காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

கோவை: கோவையில்  அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்து வந்த நிலையில், காதலனுடன்  நேற்று இரவு தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், கல்லூரி காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையேஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மட்டுமின்றி, சக மாணவிகளிடையே கொந்தளிப்பை ஏற்படத்தி உள்ளது. இதுகுறித்து வழக்கு … Read more

பணம் சேர்க்கும் கலை: நீங்க இந்த விஷயங்களை எல்லாம் செய்யுறீங்களா?

சம்பளம் வந்த அடுத்த சில நாள்களிலேயே வங்கிக் கணக்கு காலியாகிவிடுகிறது. ‘அடுத்த மாதம் பார்த்துக்கொள்ளலாம்’ என மனதைச் சமாதானம் செய்துகொண்டு, மாதக் கடைசியில் சிரமப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. வாடகை, கடன், வீட்டுச் செலவுகள் எனப் பணம் கரைந்துபோக, ‘சேமிப்பு’ என்பது நம்மில் பலருக்கும் கனவாகவே இருக்கிறது. ஆனால், பணம் சேர்ப்பதற்கும், அதை வளர்ப்பதற்கும் ஒரு கணக்கு வேண்டும்; தெளிவான திட்டம் வேண்டும். உங்களிடம் அது உள்ளதா? தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும். சேமிப்புக் கணக்கு: பணத்தைக் கரைக்கும் மாயை! … Read more

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு

சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இ நடப்பாண்டு டிசம்பர் 4ந்தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். இந்த விழாவின் உச்சக்கட்ட நிகழ்வுகள், 10-வது நாள் அதிகாலை பரணி தீபமும், … Read more

"விருதுகள் என்பது போட்டியை ஏற்படுத்த அல்ல" – 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்ற மம்மூட்டி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளில் ‘பிரம்மயுகம்’ படத்திற்காக ‘சிறந்த நடிகர்’ விருதைப் பெற்றுள்ளார். இதையடுத்து வாழ்த்துத் தெரிவித்து மம்மூட்டியின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அப்போது வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்மூட்டி, “என்னோட சேர்ந்து நிறைய இளம் நடிகர்களும் விருதுகளை வென்றிருக்கின்றனர். அவர்களோட சேர்ந்து நானும் விருது பெற்றிருப்பதில் மகிழ்ச்சி, நானும் இளமையாகவே உணர்கிறேன். இளம் நடிகர்களோடு போட்டியாக இல்லை, சேர்ந்து பயணிக்கிறேன் என்பதே … Read more