”தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி நியமனம்’: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை:  டிஜிபி சங்கர் ஜிவால்  ஆகஸ்டு 31ந்தேதி  ஓய்வு பெற்ற நிலையில், புதிய டிஜிபியை தேர்வு செய்யாத தமிழ்நாடு அரசு,  சீனியாரிட்டியில் 8வது இடத்தில் உள்ள வெங்கட்ராமன்-ஐ  பொறுப்பு டிஜிபியாக நியமித்துள்ளது. இது  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் சமீபத்திய பொறுப்பு டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு முரணானது என்று குறிப்பிட்டு ”மக்கள் கண்காணிப்பகம்” நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கு தொடர்ந்துள்ளார். அதுபோல சென்னை உயர்நீதிமன்றத்திலும் … Read more

பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தப்பி ஓட்டம்

பாட்டியாலா, பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் சிங் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சனூர் சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பெய்யும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள சேத அழிவுகள் குறித்து ஹர்மீத் சிங் சொந்த கட்சியை விமர்சித்து வந்தார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை அளித்ததாக ஜிராக்பூரை சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் ஹர்மீத் … Read more

Hyundai Creta King Edition – 10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியாவின் பிரசத்தி பெற்ற க்ரெட்டா எஸ்யூவி மாடலின் வெற்றிகரமான 10 ஆண்டுகால கொண்டாட்டத்தை முன்னிட்டு கிங், கிங் நைட் மற்றும் கிங் லிமிடெட் எடிசன் என மூன்றிலும் வெளியிடப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று எஞ்சின் ஆப்ஷனிலும் கிங் எடிசன் கிடைக்க உள்ளது. க்ரெட்டா King எடிசன் சிறப்புகள் மூன்று எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கின்ற கிங் வேரியண்டில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என … Read more

France: "தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை"- மருத்துவமனைகளை போருக்கு தயார் செய்வது ஏன்?

ஐரோப்பாவில் இன்னும் ஒரு வருடத்துக்குள் மிகப்பெரிய அளவில் போர் வெடிக்க வாய்ப்புகள் இருப்பதனால், இதுவரை இல்லாத வகையில் மருத்துவமனைகளை தயாராக இருக்கும்படி கூறியுள்ளது பிரான்ஸ் அரசு. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் முடிவை எட்ட முடியாத சூழலில், ரஷ்யா – நேட்டோ நாடுகள் இடையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. NATO Summit France சுகாதாரத்துறை அறிவிப்பு இந்த சூழலில் 2026க்குள் பிரான்ஸில் உள்ள மருத்துவமனைகள் தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு … Read more

பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை! திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் 364 நிறைவேற்றம்! அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் 3 அமைச்சர்கள் பேட்டி…

சென்னை: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாக  நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு தலைமையில் 3 அமைச்சர்கள் இணைந்து பேட்டி கொடுத்தனர். தமிழ்நாட்டில் வருவாய், நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டு உள்ளதாகவும்,  பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது என்றும்,  ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று கூறியதுடன், ரூ.10.28 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதுடன்,  52.07 மில்லியன் டாலர் ஏற்றுமதி உயர்வு பெற்றுள்ளது என்நனர். மேலும் திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 … Read more

ஒரு வழியாக தைரியம் வந்து விட்டது; பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் பற்றி காங்கிரஸ் கிண்டல்

இம்பால், மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், … Read more

"வெள்ள நீரை வீட்டில் சேமியுங்கள்; அணை கட்ட 10 வருடங்கள் ஆகும்" – பாகிஸ்தான் அமைச்சர் யோசனை

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத பருவமழையால், 150 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்நாட்டின் முக்கிய கோதுமை உற்பத்தி மாகாணமான பஞ்சாப் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. அந்நாட்டு ஊடக தகவலின்படி, கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 2,200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும், 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பஞ்சாப் மாகாணம் – பாகிஸ்தான் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் வெள்ள பாதிப்பை எடுத்துரைத்த பஞ்சாப் … Read more

அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடும் யமுனை நதி… வீடுகளுக்குள் வெள்ளம் – பொதுமக்கள் வெளியேற்றம்…

டெல்லி: யமுனை நதி தனது அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக கரையோர  வீடுகளுக்குள் வெள்ளம்  புகுந்த நிலையில்,   பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்  இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழைக்குப் பிறகு யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியதால், டெல்லி-என்சிஆரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக டெல்லி-குருகிராம் எல்லையில், நீர்மட்டம் உயர்ந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

கர்நாடக மாநிலம் சிக்மகளூரை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ் (வயது 32). கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் தங்கநகையை மறைத்து எடுத்து வந்தார். விசாரணையில் அவர் தங்கம் கடத்தியது … Read more

The Rock: ஆளே மாறிப்போன டுவெய்ன் ஜான்சன்; ரசிகர்கள் ஷாக் ஆக காரணம் என்ன?

செப்டம்பர் 1ம் தேதி வெனிஸ் திரைப்படவிழாவுக்கு சென்ற ஹாலிவுட் நடிகர் டுவெய்ன் ஜான்சன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான தி ஸ்மாஷிங் மிஷின் (The Smashing Machine) இந்த திரைப்படவிழாவில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்படுகிறது. அனால் அவர் இணையத்தில் பேசு பொருளாக இருக்க அது காரணமல்ல. The Smashing Machine தி ராக் என அழைக்கப்படும் ஜான்சன் கட்டுமஸ்தான உடற்கட்டு கொண்டவர். சினிமாவிலும், சண்டை நிகழ்ச்சியிலும் அவரது உடலமைப்பு அவரது அடையாளமாக இருந்துள்ளது. இந்த … Read more