தவெக: விரைவில் கரூர் பயணம்? – விஜய் கொடுத்த அப்டேட்!

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தலா 20 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் அந்தக் கட்சியின் தலைவர் விஜய். கரூர் விஜய் பிரசாரம் அதன்படி இன்று 39 பேரின் குடும்பத்தினருக்கு வங்கிக்கணக்கில் 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட 2 லட்சம் விரைவில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் விஜய் சார்பாக வழங்கப்பட்ட கடிதத்தில் விரைவில் அவர் கரூர் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. கடிதத்தில் விஜய் கூறியிருப்பதாவது, “கரூரில் … Read more

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…

டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்த இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து எங்கள் விவாதங்கள் நடைபெற்றன. நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது ஒத்துழைப்பு மகத்தானது என குறிப்பிட்டு உள்ளார். மூன்று நாள்  அரசுமுறை பயணமாக இலங்கை பிரதமர் ஹரிணி … Read more

டெல்லி: எம்.பி.க்களுக்கான குடியிருப்பில் திடீர் தீ விபத்து

புதுடெல்லி, டெல்லியில் பீஷாம்பார் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் எம்.பி.க்களுக்கான குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. நாடாளுமன்ற மேலவையின் எம்.பி.க்கள் வசிக்க கூடிய இந்த கட்டிடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டிடம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், 14-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கட்டிட வளாகத்தின் மேல் தளத்தின் வெளிப்புறத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என டெல்லி தீயணைப்பு … Read more

தண்டவாள பராமரிப்பு: அக்.20 முதல் 24ந்தேதி வரை அதிகாலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் மாற்றம்…

 சென்னை: தண்டவாள பராமரிப்பு  பணி காரணமாக  அக்.20 முதல் 24ந்தேதி வரை மெட்ரோ ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் வழக்கமான நேர இடைவெளியில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன்ம் தனது எக்ஸ் தளத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை … Read more

ஒரே முகவரியில் சமந்தா, தமன்னா…பரபரப்பை கிளப்பிய வாக்காளர் பட்டியல்

ஐதராபாத், சமந்தா, தமன்னா உள்ளிட்ட நடிகைகள் ஒரே முகவரியில் வசிப்பது போன்ற போலி வாக்காளர் பட்டியல் வெளியாகி சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற இடைத்தேர்தல் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வாக்காளர் பட்டியலில் நடிகைகள் சமந்தா, தமன்னா, ரகுல் பிரீத் உள்ளிட்ட சினிமா நடிகைகளின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. விசாரணையில் புகைப்படங்கள் மற்றும் இபிஐசி(EPIC) எண்கள் மாற்றப்பட்டு, அந்த பட்டியல் போலியாக வெளியிடப்பட்டது … Read more

TVK: கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் அளித்த தவெக; வங்கியில் நேரடி டெபாசிட்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அன்றிரவே இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்த முதல்வர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத்தொகை அறிவித்திருந்தார். கரூர் துயரம் மேலும், அன்றிரவே எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்த விஜய் அடுத்த நாள் காலையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு … Read more

தீபாவளி அன்று ஞாயிறு அட்டவணை படி மின்சார ரெயில்கள் இயக்கம்!

சென்னை: தீபாவளியன்று (திங்கட்கிழமை)  ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை கோட்டம் ரயில்வே அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் வரும் 21ந்தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.  இதையொட்டி, அன்றைய தினமும், அடுத்த நாளும் தமிழ்நாட்டில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில்,  21ந்தேதேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை என்பதால் சென்னையில் அன்று ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  … Read more

சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அதன்படி, தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கோவிலில் வரும் 22ம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவில், மாளிகைபுரம் கோவில்களுக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று நடைபெற்றது. குலுக்கல் முறையில் நடைபெற்ற தேர்வில் சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக சாலக்குடியை சேர்ந்த பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாளிகைபுரம் … Read more

சிறுதொழில் பிசினஸ்மேன்களே… நிதி நிர்வாகம் செய்வதில் குழப்பமா? கவலை வேண்டாம்! இதைப் படியுங்கள்!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கான மிகப் பெரிய பிரச்னையே, அவர்கள்தான் அந்த நிறுவனம் தொடர்பான வேலைகளையும் செய்ய வேண்டும். இன்றைக்கு எவ்வளவு பொருள்கள் தயார் செய்யப்பட வேண்டும்? யாரிடம் இருந்து எந்தப் பொருளை வாங்க வேண்டும்? யாருக்குப் பணம் தரவேண்டும்? இது மாதிரி ஒரு நிறுவனத்தின் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிறுதொழில்முனைவோர்கள் என்று சொல்லப்படும் MSMEகள் இருக்கிறார்கள். இன்றைக்கு எவ்வளவு பொருள்கள் தயார் செய்யப்பட வேண்டும்? யாரிடம் இருந்து எந்தப் பொருளை வாங்க … Read more