பிஹார் தேர்தல்: ரகோபூர் தொகுதியில் போட்டியிட தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல்
பாட்னா: வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் முதல்வர்களும் அவரது பெற்றோருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோர் உடன் இருந்தனர். 243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தலில் 121 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 122 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. … Read more