தேசிய ஜனநாயக கூட்டணியில் சுமுக உடன்பாடு: பிஹார் பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு முடிந்தது

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்​டி, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​படி ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யூ), பாஜக தலா 101 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நவம்​பர் 6, 11-ம் தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயககூட்​ட​ணிக்​கும் (என்​டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் அடங்​கியமெகா … Read more

அச்சமற்ற சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண்: சி.பி.ஆர் புகழாரம்

புதுடெல்லி: பிஹாரின் சோசலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அச்சமற்ற சுதந்திரப் போராட்ட வீரர் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார். இவர், ஜெயப்பிரகாஷ் நாராயணின் 123 ஆவது பிறந்தநாள் அவரது பிஹார் இல்லம் சென்றார். சோசலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு, பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சிதாப் தியாராவில் உள்ள ஜெயபிரகாஷ் இல்லத்துக்கு, குடியரசு துணைத் தலைவர் சிபிஆர் நேரில் சென்றார். அங்கு, ஜெயபிரகாஷ் நாராயண் கிராமத்தில் … Read more

கல்வி ஒரு சிலருக்கு மட்டுமேயான சலுகையாக மாறக்கூடாது: ராகுல் காந்தி

புதுடெல்லி: நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் கல்வி முறை இந்தியாவுக்குத் தேவை என்றும், கல்வி சிலருக்கு மட்டுமான சலுகையாக மாறக்கூடாது என்றும், அது சுதந்திரத்தின் அடித்தளம் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பெரு நாட்டின் போன்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழகம் மற்றும் சிலி பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவர்களுடன் உரையாடியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி உரையாடிய ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டது. அந்த வீடியோவில் ராகுல் … Read more

பிஹார் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு – தலா 101 இடங்களில் பாஜக, ஜேடியு போட்டி

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 6ம் தேதி வெளியிட்டது. அதன்படி வரும் நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இருகட்டங்களாக பிஹார் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள், நவ. 14-ம் … Read more

பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது தொழில்நுட்பக் கோளாறு: ஆப்கன் அமைச்சர்

புதுடெல்லி: புதுடெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்கு பெண் பத்திரிகையாளர்களை அழைக்காதது வேண்டுமென்றே அல்ல என்றும், அது தொழில்நுட்பப் பிரச்சினை என்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி கூறினார். ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமிர் கான் முட்டாகி கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது பெரும் சர்ச்சையாகியது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்தன. இந்த சூழலில், அமைச்சர் முட்டாகி இன்று மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, அதில் பெண் பத்திரிகையாளர்களை கலந்து கொள்ள அழைத்தார். … Read more

மாணவிகளை இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது – மம்தா பானர்ஜி அறிவுரை

கொல்கத்தா: துர்காபூரில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், மாணவிகள் இரவில் வெளியே செல்ல கல்லூரிகள் அனுமதிக்கக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இந்த சம்பவத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்கள் மாணவர்களை, குறிப்பாக பெண்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. பெண்களும் தங்களைப் … Read more

ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல் – 3 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் போட்டியிட 3 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சத்பால் சர்மா, குலாம் முகமது மிர், ராகேஷ் மகாஜன் ஆகிய வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில், ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மூன்று இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் … Read more

இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கை தவறானது: ப.சிதம்பரம்

கசவுலி: ஆபரேஷன் புளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கையை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்டது தவறு என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சர்ச்சை ஆகியுள்ளது. “பொற்கோயிலில் ஆபரேஷன் புளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது தவறானது. அதை நான் ஏற்கிறேன். அதற்காக தனது உயிரையே பறிகொடுத்தார் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. அந்த தவறில் ராணுவம், காவல் துறை, புலனாய்வு பிரிவு மற்றும் … Read more

ரயிலில் பயணம் செய்யும் போது எவ்வளவு கிராம் தங்கம் அணிந்து இருக்கலாம்?

இந்திய ரயில்களில் தங்கம் எடுத்துச் செல்வது சட்டப்பூர்வமானது. ஆனால் தங்கத்திற்கான உரிய ஆவணங்களை வைத்திருப்பதும் கட்டாயமாகும். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மேற்கு வங்கத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மருத்துவக் கல்லூரி மாணவி – மூவர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது மிகவும் உணர்ச்சிகரமான வழக்கு. கூடுதல் தகவல்களை நாங்கள் பின்னர் … Read more