பிஹார் தேர்தல்: 71 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 71 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலின்போது 121 தொகுதிகளுக்கும். 2-ம் கட்டத் தேர்தலின்போது 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் தலைமையிலான … Read more

விசாகப்பட்டினத்தில் ரூ.87,520 கோடி மதிப்பில் கூகுள் ஏஐ மையம்: பிரதமரிடம் விவரித்த சுந்தர் பிச்சை

புதுடெல்லி: விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூகுள் அமைக்க உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் குறித்து அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினார். அமெரிக்காவுக்கு வெளியே உலகின் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு மையத்தை (Google AI Hub) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளது. இந்தியா வந்துள்ள கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து இந்த திட்டம் குறித்து … Read more

தொகுதிப் பங்கீடு சுமுகம்: பிஹார் தேர்தலில் ஆர்ஜேடி 135, காங். 61 இடங்களில் போட்டி

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 135, ஆங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆள்கிறது. இதன் இரண்டு துணை முதல்வர்களுடன் முக்கிய கூட்டணியாக பாஜக உள்ளது. தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியாவின் உறுப்பினர்களுடன் மெகா கூட்டணி அமைந்துள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான இந்த கூட்டணியின் தொகுதிப் … Read more

உ.பி.யில் 10 நாட்களில் 20 என்கவுன்ட்டர்: ‘ஆபரேஷன் லங்கடா’ நடவடிக்கையில் 10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: உ.பி.​யில் குற்​றச்​செயல்​கள் அதி​கம் நிகழ்​கின்​றன. இங்கு பாஜக​வின் யோகி ஆதித்​ய​நாத் ஆட்​சிப் பொறுப்​பேற்​றது முதல் குற்​ற​வாளி​களுக்கு எதி​ராக என்​க​வுன்ட்​டர் உள்​ளிட்ட கடும் நடவடிக்கை எடுத்து வரு​கிறார். தற்​போது ‘ஆபரேஷன் லங்​க​டா’ எனும் பெயரில் முக்​கிய குற்​ற​வாளி​களை பிடிக்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது. இந்​நிலை​யில் கடந்த 10 நாட்​களில் நடை​பெற்ற 20 என்​க​வுன்ட்​டர்​களில் 10 முக்​கிய குற்​ற​வாளி​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். பலர் காயம் அடைந்​துள்​ளனர். கொல்​லப்​பட்​ட​வர் பட்​டியலில் ரூ.2.5 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட வினீத் பாட்​டி, ரூ.1 லட்​சம் வெகுமதி … Read more

கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமர் மோடியுடன் டெல்லியில் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள கனடா வெளி​யுறவுத் துறை அமைச்​சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று டெல்​லி​யில் சந்​தித்​துப் பேசி​னார். இதுகுறித்து மத்​திய அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: இந்​தி​யா​ வந்​துள்ள கனடா வெளி​யுறவுத் துறை அமைச்​சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அனிதா ஆனந் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேச்சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது இருதரப்பு கூட்​டாண்​மைக்கு இந்த சந்​திப்பு புதிய உத்​வேகத்தை ஏற்​படுத்​தும் என அவர் தெரிவித்தார். வர்த்​தகம், எரிசக்​தி. தொழில்​நுட்​பம், விவ​சா​யம் மற்​றும் … Read more

பிஎம் கிசான் திட்டத்தில் விதிகளை மீறி பணம் பெறும் 18 லட்சம் தம்பதி பற்றி ஆய்வு

புதுடெல்லி: பிஎம் கிசான் திட்​டத்​தில் கணவனும், மனைவி இரு​வரும் பணம் பெற்​றுள்​ள​தாக சர்ச்சை எழுந்​துள்​ளது. இந்த திட்​டத்​தின்​படி குடும்​பத்​தில் ஒரு உறுப்​பினர் மட்​டுமே இந்த சலுகையை பெற தகு​தி​யானவர். என்​றாலும் கணவர், மனைவி என இரு​வருமே பயன்​பெற்​றுள்​ளது மத்​திய வேளாண் அமைச்​சகம் நடத்​திய ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பிர​தான் மந்​திரி கிசான் சம்​மான் நிதி (பிஎம்​-கி​சான்) திட்​டத்​தின் 31.01 லட்​சம் பயனாளி​கள் குறித்து ஆராயப்​பட்​டது. அதில் 17.87 லட்​சம் பேர் கணவன்​-மனைவி என … Read more

புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் புரட்சி: அமித் ஷா கருத்து

ஜெய்ப்​பூர்: புதிய குற்​ற​வியல் சட்​டங்​களால் நீதித் துறை​யில் புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரிவித்துள்​ளார். ராஜஸ்​தான் மாநில தலைநகர் ஜெய்ப்​பூரில் உள்ள ஜேஇசிசி மையத்​தில் புதிய குற்​ற​வியல் சட்​டங்​கள் தொடர்​பான கண்​காட்சியை நேற்று தொடங்​கி வைத்​து மத்திய அமைச்​சர் அமித் ஷா பேசி​ய​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​திய அரசு புதிய குற்​ற​வியல் சட்​டங்​களை அமல்​படுத்தி உள்​ளது. இதன்மூலம் நீதித் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது. இதன்​படி வரும் 2027-ம் … Read more

முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஊடுருவல் காரணம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

புதுடெல்லி: ‘‘​பாகிஸ்​தான், வங்​கதேசத்​தில் இருந்து ஊடுரு​வல் நடை​பெறு​வ​தால், இந்​தி​யா​வில் முஸ்​லிம்​கள் மக்​கள் தொகை அதி​கரித்​துள்​ளது’’ என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா கூறி​யுள்​ளார். டெல்​லி​யில் ‘தைனிக் ஜாக்​ரன்’ இந்தி செய்​தித் தாள் ஏற்​பாடு செய்த நிகழ்ச்​சி​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்று பேசி​ய​தாவது: இந்​தி​யா​வில் பல்​வேறு மதத்​தவர்​களின் மக்​கள்​தொகை​யில் ஏற்​றத்​தாழ்வு நில​வு​கிறது. இதற்கு பாகிஸ்​தான், வங்​கதேசம் போன்ற நாடு​களில் இருந்து இந்​தி​யா​வுக்​குள் ஊடுரு​வல் நடப்​பதே காரணம். இதனால் இந்​திய … Read more

99 தேர்தலில் தோற்ற ராகுல்: பாஜக கடும் விமர்சனம்

புதுடெல்லி: வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேந்திரா ராஜ்புத் கூறும்போது, “அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கில் போராடிய வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தேசத்தின் அரசமைப்பை காக்கும் போராட்டத்தில் தலைமை வகிக்கிறார்” என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் … Read more

பிஹாரில் 100 இடங்களில் ஒவைசி கட்சி போட்டி

பாட்னா: எ​திர்​வரும் பிஹார் சட்​டப்​பேரவைத் தேர்​தலில் சுமார் 100 இடங்​களில் போட்​டி​யிட அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி திட்​ட​மிட்​டுள்​ளது. இதுகுறித்து அக்​கட்​சி​யின் பிஹார் மாநிலத் தலை​வர் அக்​தருல் இமான் கூறிய​தாவது: பிஹார் அரசி​யல் பல ஆண்​டு​களாக பாஜக தலை​மையி​லான கூட்​டணி மற்​றும் காங்​கிரஸ்​-ஆர்​ஜேடி கூட்​டணி பற்​றிய​தாகவே உள்​ளது. எனவே நாங்​கள் மூன்​றாவது மாற்று அணி அமைக்க விரும்​பு​கிறோம். எதிர்​வரும் பிஹார் தேர்​தலில் சுமார் 100 இடங்​களில் போட்​டி​யிட திட்​ட​மிட்​டுள்ளோம். இதனால் இரு அணி​களும் எங்​கள் இருப்பை உணர … Read more