டெல்லி குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது: மெஹபூபா முப்தி

ஸ்ரீநகர்: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி. மேலும், இதில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர்களுக்கு உள்ள தொடர்பை அறிந்து கவலை கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். “இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு அரசு கட்டாயம் தண்டனை வழங்க வேண்டும். எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர்களின் தாய், தந்தை, சகோதரர், சகோதரி என உறவினர்கள் வசம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது … Read more

‘உளவியல் தாக்கத்தை உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் வெளியீடு’ – தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்துள்ளார். ‘தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கவும், ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்கவும் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன’ என்று அவர் கூறினார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், “எங்களுக்குக் கிடைக்கும் கருத்துக்களின்படி பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பதற்றமாகவும் அச்சத்தோடும் இருப்பது தெரிகிறது. அவர்கள் அமைதியற்று இருக்கின்றனர். … Read more

டெல்லி குண்டுவெடிப்பில் எங்களுக்குத் தொடர்பு இல்லை: அல் ஃபலா பல்கலைக்கழகம்

புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அல் ஃபலா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் உள்துறை அமைச்சகத்தால் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு விசாரணைக் குழுவை என்ஐஏ இன்று நியமித்துள்ளது. குண்டுவெடிப்பை நிகழ்ந்திய உமர் முகமது நபி, டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் … Read more

டெல்லி குண்டுவெடிப்பில் பாதித்து சிகிச்சை பெறுவோருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

புதுடெல்லி: செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று லோக் நாயக் ஜெய் பிரகாஷ் (LNJP) மருத்துவமனையில் நேரில் சந்தித்தார். இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பூடானுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, டெல்லியில் தரையிறங்கிய உடன் நேராக எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்றார். காயமடைந்தவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்து உரையாடியதாகவும், அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தியதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், மருத்துவமனையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருவோரின் … Read more

தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதற்கான கணக்கீட்டுப் படிவம் தமிழகத்தில் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அளவில் 72.66% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் அந்தமான் நிகோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவுகள், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு … Read more

தேஜஸ்வி முதல்வர் கனவில்… மண்ணள்ளி போட்ட PK – மகா கூட்டணிக்கு பெரிய ஆப்பா?

Bihar 2025 Exit Polls: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில்,  ஜன் சுராஜ் கட்சியால் மகா கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து இங்கு விரிவாக காணலாம். 

டெல்லி குண்டுவெடிப்புக்கு தார்மீக பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்

திருவனந்தபுரம்: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதற்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்தார். ஆனால், இந்த சம்பவம் நாட்டின் தலைநகரில் நடந்துள்ளது, … Read more

ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் அதிரடி நிறுத்தம்!

ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் வரும் டிசம்பர் மாதம் முதல், தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்: ட்ரம்ப் பேச்சு

வாஷிங்டன்: H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் லாரா இங்க்ராஹாம் நேர்காணல் நடத்தினார். அப்போது, H-1B விசா கட்டுப்பாடுகள் உங்கள் நிர்வாகத்துக்கு ஒரு பெரிய முன்னுரிமையாக இருக்குமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ட்ரம்ப், திறமையானவர்களை நாம் நமது நாட்டுக்குக் … Read more

ஃபரிதாபாத் ரெய்டுக்குப் பிறகு ஆதாரங்களை அழிக்க முயன்ற மருத்துவர் உமர்: விசாரணையில் தகவல்

புதுடெல்லி: ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் நடத்தப்பட்ட சோதனையை அடுத்து பதற்றமடைந்த உமர் முகமது நபி, ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், பதற்றத்தில் முன்கூட்டியே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் உமர் முகமது நபி. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த 35 வயது மருத்துவரான இவர், அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ளார். இதே மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்த அதீல் … Read more