முல்லை பெரியாறில் புதிய அணை கோரி மனு: தமிழக, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ் 

புதுடெல்லி: முல்லை பெரி​யாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்​டக்கோரி ‘சேவ் கேரளா பிரி​கேட்’ என்ற தொண்டு நிறு​வனம் சார்​பில் தொடரப்​பட்ட பொதுநல வழக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், கே.​வினோத் சந்​திரன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தலைமை நீதிப​தி அமர்விடம் மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் வி.கிரி வாதிடும் போது இது 130 ஆண்​டு​கள் பழமை​யானது என்​ப​தால், அணை​யின் கீழ்ப்​பகு​தி​யில் வசிக்​கும் சுமார் ஒரு கோடி மக்​கள் அச்​சத்​தில் உள்​ளனர் … Read more

தீவிரவாதிகளிடமிருந்து பொற்கோயிலை மீட்க ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் நடத்தியது தவறு: ப.சிதம்பரம் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: தீ​விர​வா​தி​களிட​மிருந்து பொற்​கோ​யிலை மீட்க ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் நடத்​தி​யது தவறு என்று முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் தெரி​வித்த கருத்​துக்கு காங்​கிரஸ் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இமாச்சல பிரதேச மாநிலம் கசவுலி​யில் குஷ்வந்த் சிங் இலக்​கிய திரு​விழா நடை​பெற்​றது. இதில், ஹரிந்​தர் பவேஜா எழு​திய ‘தே வில் ஷூட் யு, மேடம்: மை லைப் த்ரூ கான்ப்​ளிக்ட்’ என்ற நூல் பற்​றிய விவாதத்​தில் கலந்​து​கொண்ட முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் பேசி​ய​தாவது: பஞ்​சாப் மாநிலம் அமிர்​தசரஸ் நகரில் … Read more

மருத்துவ மாணவி நள்ளிரவில் வெளியில் வந்தது எப்படி? – முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வியால் சர்ச்சை

கொல்கத்தா: ‘‘​பாலியல் வன்​கொடுமைக்கு ஆளான மருத்​துவ மாண​வி, நள்​ளிரவு 12.30 மணிக்கு வெளி​யில் வந்​தது எப்​படி?’’ என்று மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி எழுப்​பிய கேள்வி சர்ச்​சைக்கு உள்​ளாகி உள்​ளது. மேற்கு வங்க மாநிலம் துர்​காபூரில் உள்ள தனி​யார் மருத்​துவ கல்​லூரி​யில், ஒடி​சாவைச் சேர்ந்த மாணவி (23) ஒரு​வர் 2-ம் ஆண்டு எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். இவர் கடந்த வெள்​ளிக்​கிழமை தனது ஆண் நண்​பருடன் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30-க்கு கல்​லூரி விடு​திக்கு … Read more

சூடான டீ குடித்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

திருப்பதி: ஆந்​தி​ரா​வின் அனந்​த​பூர் மாவட்​டம், யாடிகி கிராமத்தை சேர்ந்த விவ​சாயி ராம​சாமி. இவரது 4 வயது மகன் ஹ்ருத்​திக் தண்ணீர் என நினைத்து பிளாஸ்​கில் இருந்த சூடான டீயை வாயில் ஊற்றி ‘மடக்’கென குடித்​துள்​ளான். இதில் அலறி துடித்த சிறுவனை மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதி​காலை ஹ்ருத்​திக் பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளான். சூடாக டீயை அருந்​தி​ய​தால் சிறுவன் உயி​ரிழந்​த​தாக மருத்​து​வர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​. Source link

10 நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம்: ஆதித்யநாத் கருத்து

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பதோஹி​யில் 4-வது தரை​விரிப்பு கண்​காட்​சியை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் நேற்​று​முன்​தினம் தொடங்கி வைத்து பேசி​ய​தாவது: இந்​தியா மீது அமெரிக்கா கூடு​தல் வரி விதித்​தது. ஆனால் அது ஒரு நாட்​டின் முடிவு. இதையடுத்து நாம் 10 நாடு​களு​டன் வர்த்​தகத்தை விரிவுபடுத்தி உள்​ளோம். குறிப்​பாக ஐக்​கிய அரபு அமீரகம், இங்​கிலாந்து உள்​ளிட்ட பல நாடு​களு​டன் தாராள வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இது நமது தொழில் துறைக்கு புதிய வாய்ப்​பு​களை திறந்​துள்​ளது. இவ்​வாறு அவர்​ … Read more

பிஎஸ்எப் விமானப் பிரிவில் முதல் பெண் பொறியாளர் நியமனம்

புதுடெல்லி: எல்லை பாது​காப்பு படை​யின் விமானப் பிரி​வில் முதல் முறை​யாக பெண் பொறி​யாளர் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளார். எல்லை பாது​காப்பு படை​யில் (பிஎஸ்​எப்), உள்​துறை அமைச்​சகத்​தின் கீழ் செல்​படும் விமானப் பிரிவு கடந்த 1969-ம் ஆண்டு முதல் செயல்​பட்டு வரு​கிறது. இந்த பிரி​வில் எம்ஐ 17, சீட்​டா, துருவ் ரக ஹெலி​காப்​டர்​கள், மற்​றும் விஐபிக்​.கள் பயணத்​துக்கு பயன்​படுத்​தப்​படும் எம்​பரர் ஜெட் விமான​மும் உள்​ளது. இப்​பிரி​வில் விமான பொறி​யாளர்​களுக்கு பற்​றாக்​குறை நில​வியது. இதனால் 3 பிஎஸ்ப் அதி​காரி​களுக்கு விமான பொறி​யாளர் பயிற்​சியை … Read more

பாஜகவுக்கு இணையான தொகுதிகளை நிதிஷ் பெற்ற ரகசியம்: சிராக் பாஸ்வானால் பலன் கிடைக்குமா?

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் மீண்டும் பாஜகவுக்கு இணையான தொகுதிகளை முதல்வர் நிதிஷ்குமார் கட்சி பெற்றது எப்படி?. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வானும் இணைந்திருப்பதன் மூலம் பலன் கிடைக்குமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. பிஹாரின் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரான முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சியில் உள்ளது. இந்த தேர்தலில் தொடரும் … Read more

பிஹார் தேர்தலில் 18 இடங்களில் போட்டியிடுவது உறுதி: சிபிஐ(எம்எல்) கட்சி உறுதி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தது 18 இடங்களில் போட்டியிடுவோம் என்றும், இன்னும் சில தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சிபிஐ-எம்எல் பொதுச் செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா கூறினார். பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நவம்பர் 6-ம் தேதி அன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெறுகிறது. இதன் முடிவுகள் நவம்பர் 14 -ம் தேதி வெளியாக உள்ளன. பிஹாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜேடியு மற்றும் பாஜக கட்சிகள் தலா 101 … Read more

பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை புகார் எதிரொலி: மற்றொரு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது!

புதுடெல்லி: டெல்லி வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறத்துறை அமைச்சர் அமீர்கான் முட்டகி நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மீது எழுந்த விமர்சனங்கள் காரணமாக மற்றொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பின் அதன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி முதன்முறையாக டெல்லி வந்துள்ளார். ஆறு நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை டெல்லிக்கு வந்தார். இரண்டாவது நாள் நடத்திய பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பெண் செய்தியாளர்கள் அனுமதி … Read more

பாதிக்கப்பட்ட மாணவியை குறை சொல்வதா? – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ‘பெண்கள் இரவில் கல்லூரியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது’ என்று கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் துர்​காபூரில் உள்ள தனி​யார் மருத்​துவ கல்​லூரி​யில், ஒடி​சாவைச் சேர்ந்த மாணவி (23) ஒரு​வர் 2-ம் ஆண்டு எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். இவர் கடந்த வெள்​ளிக்​கிழமை தனது ஆண் … Read more