சபரிமலை தங்க முலாம் விவகாரம்: தேவசம் அமைச்சர் பதவி விலக கோரி கேரள சட்டப்பேரவையில் கடும் கூச்சல் குழப்பம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் துவாரபாலகர் சாமி சிலையில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் பதவி விலக கோரி கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். சபரிமலையில் ஐயப்பன் சந்நிதியில் உள்ள துவாரபாலகர் சிலைகளுக்கு தங்கமுலாம் பூசுவதில் முறைகேடுகள் நடந்ததாக ஆளும் இடதுசாரி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தை முன்வைத்து கடந்த 4 நாட்களாக கேரளசட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. … Read more

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி டெல்லி வந்தடைந்தார்

புதுடெல்லி: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, முதன் முறையாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி இன்று டெல்லிக்கு வந்தடைந்தார். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தலிபான்கள் ஆப்கானிஸ்தானை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியது. அதன்பின்னர் தலிபான் அரசின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். இந்தியாவுக்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள முத்தாகி … Read more

ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை: மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனைவி கோரிக்கை

சண்டிகர்: ஹரியானாவில் தற்கொலை செய்துகொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் தற்கொலை குறிப்பில் குறிப்பிடப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவரின் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் பி குமார், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியிடம் கோரிக்கை வைத்துள்ளார். சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், அக்டோபர் 7 அன்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 2001-ஆம் ஆண்டு … Read more

இந்தியாவில் 9 பிரிட்டன் பல்கலை. வளாகங்கள்: கெய்ர் ஸ்டார்மெர் அறிவிப்பு

மும்பை: இங்கிலாந்தைச் சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை இந்தியாவில் அமைக்க உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். இதையடுத்து, இந்தியா – இங்கிலாந்து இடையே மிகப் பெரிய வணிகத் தலைவர்கள் உச்சி மாநாடு மும்பையில் நேற்று நடைபெற்றது. இதயடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை மும்பையில் கெய்ர் ஸ்டார்மெர் சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக, இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளின் … Read more

“நானும் அதிர்ச்சி அடைந்தேன்…” – காலணி தாக்குதல் முயற்சி குறித்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வளாகத்தில் தன் மீது நடந்த காலணி தாக்குதல் முயற்சி சம்பவத்தைக் கண்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அறையில் நடந்த விவாதத்தின்போது இந்த விவகாரம் குறித்துப் பேசிய பி.ஆர்.கவாய், “திங்கள்கிழமை நடந்த சம்பவத்தால் நானும், எனது கற்றறிந்த சகோதரரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். எங்களைப் பொறுத்தவரை இது மறக்க வேண்டிய ஒரு விஷயம்” என்று தெரிவித்துள்ளார். அப்போது அருகில் இருந்த நீதிபதி உஜ்ஜல் பூயான், “இந்த … Read more

‘ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை’ – பிஹார் தேர்தலுக்கு தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பாட்னா: ஆர்ஜேடி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிஹாரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், “எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு வீட்டிலும் அரசு வேலை உள்ள ஒருவர் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். அரசாங்கத்தை அமைத்த 20 நாட்களுக்குள் அதற்கான புதிய சட்டத்தை நாங்கள் உருவாக்குவோம். பதவியேற்ற 20 மாதங்களுக்குள், … Read more

உலக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா – இங்கிலாந்து கூட்டாண்மை முக்கிய அடித்தளம்: பிரதமர் மோடி

மும்பை: இந்தியா – இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மை உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளின் உயர் மட்டக் குழுவினரின் சந்திப்பு நடைபெற்றது. இதில், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது இந்தியா – இங்கிலாந்து … Read more

பிஹாரில் 25 வேட்பாளர்களை இறுதி செய்தது காங்கிரஸ்: ஆர்ஜேடியுடன் தொடரும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக ஆர்ஜேடி – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு (CEC) தேர்வு செய்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், பிஹாரில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாகத்பந்தனுக்கு தலைமை … Read more

காசா அமைதித் திட்டத்துக்கான ட்ரம்ப்பின் ஒப்பந்தம்: பிரதமர் மோடி வரவேற்பு

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் காசாவுக்கான அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இந்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலும், ஹமாஸும் காசாவில் சண்டையை நிறுத்த முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அதிபர் ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது பிரதமர் நெதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும். பணயக்கைதிகள் விடுதலை மற்றும் மேம்படுத்தப்பட்ட மனிதாபிமான உதவி காசா மக்களுக்கு … Read more

தலித், ஒபிசி, முஸ்லிம் சமூகத்தின் 3 துணை முதல்வர்கள்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்!

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் முன்னிறுத்தப்பட உள்ளார். வெற்றிக்கு பின் தலித், ஒபிசி மற்றும் முஸ்லிம் சமூகங்களிலிருந்து 3 துணை முதல்வர்களை நியமிக்கும் அறிவிப்பும் வெளியாக உள்ளது. பாஜக தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்க்கட்சியாக இருப்பது காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி. தேசிய அளவிலான இக்கூட்டணியில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), திமுக உள்ளிட்ட சுமார் 25 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனினும், பிஹாரில் இண்டியா, … Read more