நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: குஜராத்தில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

அகமதாபாத்: ​நாட்​டின் பல பகு​தி​களில் தாக்​குதல் நடத்த சதி திட்​டம் தீட்​டிய ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​கள் 3 பேரை குஜ​ராத் தீவிர​வாத தடுப்​புப் படை​யினர் கைது செய்​துள்​ளனர். குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் 3 ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​திகளைதீவிர​வாத தடுப்​புப் படை​யினர் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்​தனர். இதுகுறித்து ஏடிஎஸ் அதி​காரி​கள் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: போலீஸ் துணைக் கண்​காணிப்​பாளர் வீரஜீத்​சின் பார்​மர் கண்​காணிப்​பில், ஏடிஎஸ் இன்​ஸ்​பெக்​டர் நிகில் பிரம்​பத், சப் இன்​ஸ்​பெக்​டர் ஏ.ஆர்​.சவுத்ரி ஆகியோர் தீவிர​வாத தடுப்பு நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டனர். … Read more

ட்ரம்ப் கருத்து மீதான பிரதமரின் மவுனம், சீன விவகாரம் உள்ளிட்டவை நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும்: ஜெயராம் ரமேஷ்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் பற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதும், சீனாவுடனான பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அரசு தவறியதும், எஸ்ஐஆர் உள்ளிட்டவை வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக முக்கிய கவலைகளாக உள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த … Read more

பிஹாரில் வாக்குப்பதிவு உயர்ந்ததற்கு புலம்பெயர் தொழிலாளர்களே காரணம்: பிரசாந்த் கிஷோர்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் வரலாறு காணாத அளவில் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததற்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களே ‘எக்ஸ் காரணி’யாக உருவெடுத்துள்ளனர் என்று ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “இந்தத் தேர்தல்களின் எக்ஸ் காரணி பெண்கள் அல்ல, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். அவர்கள் நிதிஷ் – லாலுவை நம்பவில்லை. இப்போது மக்கள் சிந்திக்கிறார்கள். இம்முறை மாற்றி வாக்களித்து பார்ப்போம், ஒருவேளை நம் வாழ்க்கை மேம்படும் என … Read more

மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் ஆகியோர் வாக்குகளை திருடுகிறார்கள் – பிஹாரில் ராகுல் குற்றச்சாட்டு

புர்னியா: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரின் புர்னியாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன். அதற்காக அவர்களின் முழு முயற்சிகளும் … Read more

ஆதார் தொடர்பான முக்கிய அறிவிப்பு! தவறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்!

Pan Card Aadhar Link: பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometax.gov.in மூலம் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.

பிஹாரில் ஊடுருவல்காரர்களுக்கான வழித்தடத்தை அமைக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன: அமித் ஷா

சசாரம்: பிஹாரில் தொழில்துறைக்கான வழித்தடம் அமைக்க விரும்பிய பிரதமர் மோடியைப் போலல்லாமல், இண்டியா கூட்டணி ஊடுருவல்காரர்களுக்கான வழித்தடம் அமைக்க முயற்சிக்கின்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார். பிஹார் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தலின் இறுதி நாள் பிரச்சாரத்துக்காக சசாரத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பாகிஸ்தான் மீது வீசப்படும் மோர்டார் குண்டுகள் இந்த மாநிலத்தில் உள்ள ஒரு ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். சமீபத்தில், ராகுல் மற்றும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் ‘வாக்காளர் … Read more

ஆர்எஸ்எஸ் ஏன் பதிவு செய்யப்படவில்லை? – மோகன் பகவத் விளக்கம்

மும்பை: பதிவு இல்லாமல் செயல்படுவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்த நிலையில், ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் மோகன் பகவத் கூறினார். மேலும், அவர் இந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார். கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பிரியங்க் கார்கே, தேசத்திற்கு சேவை செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் ஏன் பதிவு செய்யப்படாத அமைப்பாக உள்ளது என்று கேள்வி எழுப்பினார். பிரியங்க் கார்கேவின் கருத்துகளுக்கு பதிலளித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் … Read more

மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்! கண்ணாமூச்சு ஆடலாம் என அழைத்து சதி..

Women Sets Mother In Law On Fire : ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், மருமகள் ஒருவர் மாமியாரை எரித்துகொன்ற விவகாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது: தேஜ் பிரதாப் யாதவ்

பாட்னா: தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். பொறுப்பற்ற நடத்தை காரணமாக தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்குவதாக அவரது தந்தையும், கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். மேலும் பிரதாப்புடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து கொள்வதாக அப்போது தெரிவித்தார். இதன் பின்னர் ஜன் சக்தி ஜனதா தளம் … Read more

இந்தியாவின் பணக்கார சமையல் கலைஞர் யார் தெரியுமா? மாதம்பட்டி ரங்கராஜ் இருக்கிறாரா?

வீட்டு சமையலறைகளில் இருந்து உலக அரங்கிற்கு சென்ற சமையல் கலைஞர்கள், தங்களின் திறமையால் நிதி ரீதியாகவும், புகழ் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளனர்.