பிஹார் தேர்தல்: ரகோபூர் தொகுதியில் போட்டியிட தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல்

பாட்னா: வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் முதல்வர்களும் அவரது பெற்றோருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோர் உடன் இருந்தனர். 243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தலில் 121 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 122 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. … Read more

சபரிமலையில் மாயமான தங்கம்! அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்-நடந்தது என்ன?

SIT Probing Sabarimala Gold Theft : சபரிமலை ஐயப்பன் கோயிலின் வெளியே 12 துவாரபாலகர் சாமி சிலை உள்ளது. இந்த சிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. இது காணாமல் போயுள்ளது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, “தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18 முதல் 21 வரை டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். காலை 6 மணி முதல் 7 … Read more

இறந்தது போல் நாடகமாடிய நபர்..அதுவும் ‘இந்த’ காரணத்துக்காக! வைரல் செய்தி..

Bihar Man Holds Fake Funeral : ஒருவர், இறந்தது போல நாடகமாடி தன் மீது யாரெல்லாம் பாசம் வைத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார். இது குறித்த முழு விவரம், இதோ.

பாகிஸ்தான் எல்லை​ பகுதியில் ஆயுத, போதை கடத்தல்​ முறியடிப்பு

சண்​டிகர்: கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் ஆயுத, போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பஞ்சாப் மாநில காவல் துறை சார்பில் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் அண்மை காலமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கடத்தல் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பஞ்சாப் போலீஸார் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், கையெறி … Read more

பிஹார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்: பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்

புதுடெல்லி: “நடைபெறவிருக்கும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறேன் ” என ஜன்சுராஜ் கட்சியின் வேட்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலின்போது 121 தொகுதிகளுக்கும். 2-ம் கட்டத் தேர்தலின்போது 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான … Read more

அமலாக்கத் துறை விசாரணை தடை நீட்டிப்பு: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் அமலாக்​கத் துறை விசா​ரணை தடையை நீட்டித்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்டுள்ளது. தமிழகத்​தில் ‘டாஸ்​மாக்’ தலைமை அலு​வல​கத்​தில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தீவிர சோதனை நடத்​தினர். இந்த சோதனை சட்​ட​விரோதம் என்று அறிவிக்க கோரி​யும், விசா​ரணை என்ற பெயரில் அதி​காரி​களை துன்​புறுத்த கூடாது என்று உத்​தர​விட கோரி​யும் டாஸ்​மாக் நிர்​வாகம் மற்​றும் தமிழக அரசு சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் … Read more

20 பேரை காவு வாங்கிய பேருந்து… வாங்கி 5 நாள்தான் ஆச்சு – தீ விபத்துக்கு என்ன காரணம்?

Rajasthan Bus Fire Accident: ராஜஸ்தானில் புதிய பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்துக்கு என்ன காரணம் என்பதை இங்கு காணலாம்.

மாணவி பாலியல் வன்கொடுமை புகார்: டெல்லியில் பல்கலை. மாணவர்கள் போராட்டம்

புதுடெல்லி: டெல்லியில் தென் கிழக்கு ஆசிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி சத்தர்பூரில் தென் கிழக்கு ஆசிய பல்கலைக்கழகம் (எஸ்ஏயு) உள்ளது. சார்க் நாடுகளால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டு நடத்தப்படும் இந்த சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியா நாடுகளின் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்திய மாணவ, மாணவிகளும் இங்கு படிக்கின்றனர். இந்தப் பல்கலை.யில் நிகழும் தவறுகள் மீது சர்வதேச … Read more

1,638 கடன் அட்டைகளுடன் கின்​னஸ் சாதனை படைத்த இந்தியர்

புதுடெல்லி: கடன் அட்டை என்​பது கடனாக பொருட்​களை வாங்​க​வும் பல்​வேறு கட்​ட​ணங்​களை செலுத்​த​வும் மட்​டுமே பயன்​படும் என நாம் நினைக்​கிறோம். ஆனால் வழக்​க​மான பயன்​பாடு​களைத் தாண்​டி, பணத்தை மிச்​சப்​படுத்​து​வதற்​கான ஆதா​ர​மாக​வும் அவற்​றைப் பயன்​படுத்தி வரு​கிறார் மணிஷ் தமேஜா. அவரிடம் மொத்​தம் 1,638 கடன் அட்​டைகள் உள்​ளன. எந்த ஒரு கடனும் இல்​லாமல் வெகுமதி புள்​ளி​கள், கேஷ்பேக், பயணச் சலுகைகள் மற்​றும் ஓட்​டல் சலுகைகளை அதி​கரிக்க இந்த கடன் அட்​டைகளை அவர் பயன்​படுத்தி வரு​கிறார். எந்த ஒரு கடன் … Read more