ஹரியானா தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெறவில்லை: ராகுல் காந்தி புகாருக்கு பெண்கள் பதில்

சண்டிகர்: ஹரியானாவில் வாக்கு திருட்டு நடைபெறவில்லை என்று பெண் வாக்காளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். ஹரியானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார். குறிப்பாக பிரேசிலை சேர்ந்த மாடல் அழகியின் புகைப்படம் 22 பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது என்று அவர் புகார் கூறினார். இதுகுறித்து முனிஷ் தேவி என்ற பெண் கூறும்போது, “எனது வாக்காளர் அட்டையில் பிரேசில் … Read more

பள்ளிகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழையாதவாறு வேலி அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களிலும் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்க முறையாக வேலி அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், “பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களிலும் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்க முறையாக வேலி … Read more

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு: பிரதமர் தலையிடக் கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம்

கோழிக்கோடு: சபரிமலை தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் பிரதமர் தலை​யிடக் கோரி மிகப் பெரிய கையெழுத்து பிரச்​சா​ரத்தை தொடங்​க​வுள்​ள​தாக பாஜக பொதுச் செய​லா​ளர் ரமேஷ் கூறி​யுள்​ளார். இது குறித்து அவர் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: சபரிமலை​ ஐயப்பன் கோயில் தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் தலை​மையக​மான ஏகேஜி மையத்​துக்கு தொடர்பு உள்​ளது. சபரிமலை கோயி​லின் கதவில் இருந்து தங்​கம் திருடப்​பட்ட விவ​காரம் ஒரு நபருடன் மட்​டும் தொடர்​புடைய​தாக இருக்க முடி​யாது எனவும், இதில் சர்​வ​தேச அளவில் முறை​கேடு … Read more

தொழிலதிபர் அனில் அம்பானி நவ.14-ல் ஆஜராக வேண்டும்: அமலாக்கத் துறை சம்மன்

புதுடெல்லி: பண மோசடி வழக்​கில் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்​கு​மாறு தொழில​திபர் அனில் அம்​பானிக்கு (66) அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யுள்​ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்​கள் தெரி​வித்​த​தாவது: அனில் அம்​பானி தலை​மையி​லான ரிலை​யன்ஸ் குழும நிறு​வனங்​கள் வங்​கி​களில் கடன்​பெற்று அதனை முறை​யாக செலவு செய்​யாமல் பணமோசடி​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக அமலாக்​கத் துறை ஏற்​கெனவே சோதனை நடத்தி அனில் அம்​பானி குழும நிறு​வனங்​களுக்கு சொந்​த​மான ரூ.7,500 கோடி மதிப்​பிலான சொத்​துகளை முடக்​கி​யுள்​ளது. இந்த நிலை​யில், பாரத … Read more

முக்கிய பெண் நக்சலைட் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண்

ராய்ப்பூர்: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​திற்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது. இதையொட்டி நக்​சலைட்​களுக்கு எதி​ராக கடும் நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. அதே​நேரத்​தில் சரண் அடைவோருக்கு அரசு மறு​வாழ்வு அளித்து வரு​கிறது. . சத்​தீஸ்​கரில் கடந்த மாதம் மட்​டும் சுமார் 300 நக்​சலைட்​கள் சரண் அடைந்​துள்​ளனர். இந்​நிலை​யில் சத்​தீஸ்​கரின் கேசிஜி (கை​ராகர்​-சுய்​காடன்​-கண்​டாய்) மாவட்​டத்​தில் முக்​கிய பெண் நக்​சலைட் ஒரு​வர் நேற்று சரண் அடைந்​தார். கமலா சோடி (30) என்ற இவர், சத்​தீஸ்​கரின் சுக்மா … Read more

ராணுவத்துக்கு மதம், ஜாதி கிடையாது: ராகுல் கருத்துக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில்

புதுடெல்லி: ராணுவத்​துக்கு மதம், ஜாதி ஆகியவை கிடை​யாது என ராகுல் கருத்​துக்கு பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பதில் அளித்​துள்​ளார். பிஹார் மாநிலம் அவுரங்​கா​பாத்​தில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்று பேசி​னார். அப்​போது அவர் கூறுகை​யில், ‘‘ நாட்​டில் உயர் வகுப்​பைச் சேர்ந்​தவர்​கள் 10 சதவீதம் பேர் உள்​ளனர். இவர்​கள் கட்​டுப்​பாட்​டில்​தான் கார்​பரேட் நிறு​வனங்​கள், அரசு நிர்​வாகம், நீதித்​துறை, ராணுவ​மும் கூட இந்த 10 சதவீதத்​தினர் கட்​டுப்​பாட்​டில்​தான் உள்​ளது. மீதம் … Read more

நிலத்தை அரசு கையகப்படுத்தியதை கண்டித்து கர்நாடகவில் விவசாயி தீக்குளித்து தற்கொலை

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் மண்​டியா மாவட்​டத்​தில் உள்ள மூடனஹள்​ளியை சேர்ந்​தவர் மஞ்சே கவுடா (55). இவருக்கு சொந்​த​மான 2 ஏக்​கர் நிலம் கர்​நாடக வனத்​துறை இடத்​துக்கு அரு​கில் இருந்​தது. இதனால் வனத்​துறை அந்த நிலத்தை 3 ஆண்​டு​களுக்கு முன்பு கையகப்​படுத்​தி​யது. தனது நிலத்​துக்கு உரிய இழப்​பீடை உடனடி​யாக வழங்​கு​மாறு மண்​டியா மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தி​ல் மஞ்சே கவுடா மனு அளித்​தார். ஆனால் அரசு இழப்​பீடு வழங்​காமல் காலம் தாழ்த்​தி​யுள்​ளது. இந்​நிலை​யில் மஞ்சே கவுடா நேற்று முன் தினம் … Read more

பிஹாரில் விறுவிறுப்பாக தொடங்கிய முதல் கட்ட தேர்தல்: 9 மணி வரை 13.13% வாக்குகள் பதிவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு 13.13% ஆக இருந்தது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு 13.13% ஆக இருந்தது. … Read more

பிஹார் முதல் கட்ட வாக்குப் பதிவும், தேர்தல் கள நிலவரமும் – ஒரு பார்வை

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதன் 121 தொகுதிகளில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிடம் (என்டிஏ) 59, மெகா கூட்டணியிடம் 61 எம்எல்ஏக்கள் உள்ளனர். பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 18 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தொகுதிகளில் மொத்தம் 122 பெண்கள் உள்ளிட்ட 1,314 … Read more

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின. பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 48, ஐக்கிய ஜனதா தளம் 57, எல்ஜேபி (ஆர்)13, ஆர்எல்எம் 2, எச்ஏஎம் 1 வேட்பாளர்கள் … Read more