ஊடுருவல்காரர்களை வெளியேற்றும் பணியை எங்கள் அரசு செய்யும்: பிஹாரில் அமித் ஷா பிரச்சாரம்

பாட்னா: “பிஹாரில் ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என ராகுல் காந்தி பேரணிகளை நடத்துகிறார். பிஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் வெளியேற்றும் வேலையை எங்கள் அரசு செய்யும்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று சாத் திருவிழா தொடங்கியுள்ளது. தேர்தல் நெருங்குவதால் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. சாத் திருவிழாவுக்கு மத்தியில் பிஹாரின் ககாரியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சரும் … Read more

இந்தூரில் ஆஸி கிரிக்கெட் வீராங்கனைகள் இருவரிடம் பாலியல் சீண்டல்: ஒருவர் கைது

இந்தூர்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தூரில் நேற்று முன்தினம் அந்த அணியை சேர்ந்த இரண்டு வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக ஒருவர் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, இலங்கையில் நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்தியா மற்றும் … Read more

‘அதானி குழுமத்தில் முதலீடு செய்ய எல்ஐசி-க்கு நிர்பந்தம்’ – நாடாளுமன்ற விசாரணை கோரும் காங்.

புதுடெல்லி: அதானி குழுமத்துக்குப் பயனளிக்கும் வகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் ‘மோதானி’ (மோடி மற்றும் அதானி) எவ்வாறு தவறாகப் பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் … Read more

“வாக்குத் திருட்டு, குதிரை பேரத்தால் மாநிலங்களவை இடத்தை வென்றது பாஜக” – ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு ராஜ்யசபா இடத்தில் வெற்றி வெல்வதற்காக பாரதிய ஜனதா கட்சி வாக்குத் திருட்டு மற்றும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி குற்றம் சாட்டினார். உதம்பூரில் ஊடகங்களிடம் பேசிய சுரிந்தர் சவுத்ரி, “தேசிய மாநாடு கட்சியின் மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கள் ஜம்மு – காஷ்மீர் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள். மேலும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான எங்கள் போராட்டத்தையும் முன்னெடுப்பார்கள். இருப்பினும், நான்காவது இடத்தில் பாஜகவின் … Read more

ஆந்திராவில் எரிந்த பேருந்தில் இருந்த 234 ஸ்மார்ட்போன்களால் தீயின் தீவிரம் அதிகரித்ததா?

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பைக் மீது பேருந்து மோதி தீப்பிடித்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்தை பேருந்தில் இருந்த 234 ஸ்மார்ட்போன்கள் மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 23-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ‘வி-காவேரி’ எனும் தனியார் சொகுசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் வழியாக பெங்களூரு … Read more

பாத்ரூமில் குளிக்க சென்ற சகோதரிகள் உயிரிழப்பு.. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க

Bengaluru Crime News: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கழிவறையில் ஒன்றாக குளிக்கச் சென்ற சகோதரிகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காற்றோட்டம் இல்லாத வகையில், அந்த கழிவறை இருந்ததும், அவர்களது உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.   

மகாராஷ்டிர பெண் மருத்துவர் தற்கொலை: ஒருவர் கைது – மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

மும்பை: மகாராஷ்டிர பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பிரசாந்த் பங்கரை சதாரா போலீஸார் இன்று கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தலைமறைவாகிவிட்டார், அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சதாரா எஸ்பி தோஷி, “பால்டன் தாலுகாவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரில் ஒருவரான பிரசாந்த் பங்கரை போலீஸார் கைது செய்தனர், அவர் இன்று நீதிமன்றத்தில் … Read more

பாக். அணு ஆயுதங்களை அமெரிக்காவிடம் முஷாரப் ஒப்படைத்தார்: சிஐஏ முன்னாள் அதிகாரி தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அந்நாட்டு அணு ஆயுதக் கிடங்கின் முழு கட்டுப்பாட்டையும் அமெரிக்காவிடம் ஒப்படைத்தார் என்றும், முஷாரப்பை அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்களை கொடுத்து வாங்கியது என்றும் முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ கூறினார். பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவர் உட்பட அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவில் 15 ஆண்டுகள் பணியாற்றிய ஜான் கிரியாகோ சமீபத்தில் செய்தி நிறுவனாம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், “பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை … Read more

ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு ஆப்கனிஸ்தானில் இருந்து தப்பினார்: முன்னாள் சிஐஏ அதிகாரி

புதுடெல்லி: ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். 9/11 தாக்குதல்: கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல் கயிதா அமைப்பின் 19 பயங்கரவாதிகள், 4 வர்த்தக விமானங்களைக் கடத்தினர். அதில், இரண்டு விமானங்கள் மூலம் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரம் (ட்வின் டவர்) என வர்ணிக்கப்பட்ட இரண்டு மிக உயரமான … Read more

கர்னூல் பேருந்து விபத்து: உள்ளே இருந்த 234 ஸ்மார்ட்போன்கள்… தீ அதிகமாக இதுதான் காரணமா?

Kurnool Bus Accident: கர்னூல் நகரில் பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்த 234 ஸ்மார்ட்போன்களே தீயை தீவிரப்படுத்தியிருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.