‘அன்று ட்ரம்ப்புக்காக டெக்சாஸில் மோடி பிரச்சாரம்… இன்று 50% வரி!” – திரிணமூல் காங். விமர்சனம்

கொல்கத்தா: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி விமர்சித்துள்ளார் அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த திரிணமூல் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “இந்த 50 சதவீத வரி விதிப்பு நமது நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது நமது வெளியுறவு கொள்கையின் தோல்வி. இந்தியா இதை கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். … Read more

டாக்ஸிக்கு காத்திருந்த பெண்… டக்குனு ஜிப்பை திறந்து இளைஞன் செய்த செயல் – ஷாக் சம்பவம்!

Crime News: பொது இடத்தில் பெண் ஒருவர் டாக்ஸிக்கு காத்திருந்தபோது, அந்த பெண்ணின் முன் நின்று இளைஞர் ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆண்டு இந்தியா வருகை: அஜித் தோவல் தகவல்

புதுடெல்லி: வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆண்டு இந்தியா வர உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அஜித் தோவல், ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி பதிவாகி உள்ளது. அதில் அவர், “ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு மிகச் சிறப்பான உறவு இருக்கிறது. இது ஒரு நீண்ட கால உறவு. இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இரு … Read more

தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி வைத்த 10 முக்கிய குற்றச்சாட்டுகள் இதுதான்

Election Commission Voter Fraud Allegations: சுதந்திரம் அடைந்த இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் ராகுல் காந்தி. இச்சம்பவம் பெரும் அதிர்விலைகளை ஏற்படுத்தி உள்ளது தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரக்‌ஷா பந்தன் | உ.பி.யில் பெண்களுக்கு 3 நாட்கள் இலவச பேருந்து பயணம்: முதல்வர் யோகி சலுகை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு 3 நாள் இலவசப் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ஆகஸ்ட் 9-ல் வரவிருக்கும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பரிசாகக் கருதப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, முதல்வர் யோகி ஆதித்யநாத், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு இலவச பயணத்தைத் தொடங்கினார். எனினும், 2024-ம் ஆண்டு வரை ஒரு நாளைக்கு மட்டும் என இருந்த இந்த இலவசப் … Read more

என்ன ஆனாலும் சரி.. ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன் -அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பதில்

Trump’s Tariff Salvo: டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதித்த போதிலும், வர்த்தகம் மற்றும் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக முட்டுக்கட்டை அதிகரித்த போதிலும், இந்தியாவின் விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்ய மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் விபத்து: 3 பேர் பலி; பலர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் பகுதியில் உள்ள காண்ட்வா அருகே சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் 15 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பேசிய உத்தம்பூர் கூடுதல் எஸ்பி சந்தீப் பட், “இன்று காலை 10.30 மணியளவில் கட்வா பகுதியில், பசந்த்கர் பகுதியில் 187-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த பங்கர் வாகனம் கவிழ்ந்தது. அப்போது மொத்தம் 23 சிஆர்பிஎப் வீரர்கள் அதில் இருந்தனர். வீரர்கள் … Read more

போலி வாக்காளர்கள்… தேர்தல் ஆணையம் செய்த மோசடிகள் – ஆதாரத்தை காட்டும் ராகுல் காந்தி!

Rahul Gandhi Vote Chori: ஆளும் மத்திய பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தல் ஆணையம் மோசடி செய்திருப்பதாக ராகுல் காந்தி பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை வெளியீடு

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21. மாநிலங்களவை செயலாளர்தான் தேர்தல் அதிகாரி. வேட்புமனுக்களை வேட்டாளர்கள், மாநிலங்களவை அறை எண் 28-ல் தேர்தல் அதிகாரி அல்லது துணை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். பொது விடுமுறை இல்லாத நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும். இதற்கான … Read more

அமித்ஷா அடுத்த பிரதமராக இருப்பார்? மோடி சூசகம்.. அரசியலில் பூகம்பத்திற்கான ஆரம்பம்!

Next Prime Minister After Modi: ஒட்டுமொத்தமாக நரேந்திர மோடி தனது வாரிசாக அமித் ஷாவை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி அலசப்பட்டு உள்ளது. ஆனால் ஷாவின் பாதை கூட்டணிகளை நிர்வகித்தல் மற்றும் கட்சிக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்குதல் உள்ளிட்ட சவால்களால் நிறைந்துள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கான விடையை காண்போம்.