ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் (எஸ்எம்எஸ்) அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மருத்துவமனையின் பிறபகுதிகளுக்கும் பரவியது. இதனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள், … Read more