ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர்: ஜெய்ப்​பூரில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் ஏற்​பட்ட பயங்கர தீவிபத்​தில் சிக்கி 6 நோயாளி​கள் உயி​ரிழந்​துள்​ளனர். ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் சவாய்​மான் சிங் ​(எஸ்​எம்​எஸ்) அரசு மருத்​து​வ​மனை செயல்​பட்டு வரு​கிறது. இந்த மருத்​து​வ​மனை​யில் உள்​நோ​யாளி​களாக ஏராள​மானோர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மருத்​து​வ​மனை​யின் 2-வது மாடி​யில் உள்ள தீவிர சிகிச்​சைப் பிரி​வில் நேற்று முன்​தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. தீ மளமளவென மருத்​து​வ​மனை​யின் பிறபகு​தி​களுக்​கும் பரவியது. இதனால் அங்கு சிகிச்​சைப் பெற்று வந்த நோயாளி​கள், … Read more

அலிகர் கொலை வழக்கில் தலைமறைவான பெண் சாமியார் பூஜாவை தேடும் பணி தீவிரம்

புதுடெல்லி: உ.பி.​யின் அலிகர் நகரில் கடந்த 2017-ல் ஆன்​மிக மடம் தொடங்​கிய​வர் பெண் சாமி​யார் பூஜா சகுன் பாண்டே எனும் அன்​னபூர்ணா பாரதி (40). இவருக்கு பல ஆயிரம் சீடர்​கள் உள்​ளனர். நிரஞ்​சன் அகா​டா​வில் மகா மண்​டலேஷ்வர் பட்​டம் பெற்ற இவர், அகில இந்​திய இந்து மகா சபை​யின் பொதுச் செய​லா​ள​ராக​வும் உள்​ளார். பூஜா, கடந்த 2019 ஜனவரி​யில் மகாத்மா காந்​தி​யின் நினைவு தினத்​தில் அவரது உரு​வப் பொம்​மையை துப்​பாக்​கி​யால் சுட்​டு, அதற்கு தீவைத்து எரித்​தவர். இந்த … Read more

நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.1.84 லட்சம் கோடியை உரியவர்களிடம் ஒப்படைக்க முடிவு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற தலைப் பில் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசி யதாவது நாடு முழுவதும் வங் கிகள், ரிசர்வ வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட்கள், ப்ராவிடென்ட் பண்ட் கணக்குகள் மற்றும் இதர நிறு வனங்களில் ரூ.1.84 லட்சம் கோடி நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த தொகை அரசின் … Read more

டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி: முதல்வர் மம்தா இன்று நேரில் பார்வையிடுகிறார்

கொல்கத்தா: டார்ஜிலிங்கின் மலைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன, சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர், பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப்படை, … Read more

பிஹார் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு – இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும் நோக்கில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர். பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக, அம்மாநிலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட 6 தேசிய கட்சிகள் மற்றும் 6 பிஹார் மாநில கட்சிகளுடன் கடந்த 4ம் தேதி ஆலோசனை நடத்தியது. பிஹார் தலைநகர் … Read more

நவ.6, 11-ல் பிஹார் பேரவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை 14-ம் தேதி நடைபெறும்

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6. 11-ம் தேதிகளில் இருகட்டங்களாகநடத்தப்படும். நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறை வடைகிறது. இந்த நிலையில், மாநில சட் டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை டெல்லியில் தலைமைத் தேர் தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று வெளியிட்டார். அப்போது, செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: நேர்மை, நம்பகத்தன்மையுடன் வாக் காளர் பட்டியல் … Read more

“ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது” – தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உடன் பேசினேன். இன்று முன்னதாக உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்களுக்கு இடமில்லை. இது முற்றிலும் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டபோது நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டினேன். இது … Read more

பிஹார் தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தப் போகும் ஆறு தலைவர்கள் – ஒரு பார்வை

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிஹார் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப்போகும் 6 தலைவர்களை குறித்து பார்ப்போம். நரேந்திர மோடி: மக்களவைத் தேர்தல் என்றாலும் சரி, சட்டப்பேரவை தேர்தல்கள் என்றாலும் சரி, வட மாநிலங்களில் பாஜகவின் கதாநாயகன் பிரதமர் நரேந்திர மோடிதான். பிஹாரிலும் மோடிதான் பாஜகவின் ஐகான். இதன் காரணமாகவே கடந்த சில … Read more

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு எதிராக நடந்த செயல் வெட்கக்கேடானது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “உச்ச நீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக நடந்த செயல், நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித் துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உச்ச நீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக நடந்த செயல், நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும். இது வெட்கக்கேடானது, கடும் கண்டனத்துக்கு உரியது. இந்தச் சம்பவத்துக்கு கருணை, … Read more

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அக்.22-ல் சபரிமலை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குமுளி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐயப்பனை தரிசிப்பதற்காக வரும் 22-ம் தேதி சபரிமலை வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தை முன்னிட்டும் நடை திறந்து 5 நாள் தொடர் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். வரும் அக்டோபர் 18-ம் தேதி துலாம் மாத (ஐப்பசி) பிறப்பை முன்னிட்டு வரும் அக்.17-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. இம்மாத வழிபாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு … Read more