கோயம்புத்தூரில் நடைபெற்ற 16-வது மாநாட்டில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன் தேர்வு

கோவை: கோவை​யில் நடந்த சிஐடியு தொழிற்​சங்க மாநாட்​டில் மாநிலத் தலை​வ​ராக ஜி.சுகு​மாறன், பொதுச் செய​லா​ள​ராக எஸ்​.கண்​ணன் உட்பட 41 பேர் கொண்ட புதிய நிர்​வாகி​கள் குழு தேர்வு செய்​யப்​பட்​டது. சிஐடியு தொழிற்​சங்​கத்​தின் 16-வது மாநில மாநாடு கடந்த 6-ம் தேதி கோவை​யில் தொடங்​கியது. தொடர்ந்து நடந்த பொது மாநாடு மற்​றும் பிர​தி​நி​தி​கள் மாநாட்​டில், மாநிலத் தலை​வர் அ.சவுந்​தர​ராஜன் மற்​றும் பல்​வேறு தொழிற்​சங்க நிர்​வாகி​கள் பேசினர். இரண்​டாம் நாள் நடந்த பிர​தி​நி​தி​கள் மாநாட்​டில், மூத்த தொழிற்​சங்​கத் தலை​வர் டி.கே.ரங்​க​ராஜன், … Read more

எஸ்ஐஆரை எதிர்க்க என்ன காரணம்? – வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: மீண்டும் திமுக ஆட்சி அமையக்கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்ளை பாஜக செய்துவருகிறது. மேலும், வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் என … Read more

S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? தமிழ்நாட்டு மக்களுக்கான முக்கிய தகவல்

mk stalin : S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? என்பதற்கான விளக்கத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள விளக்கத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: புதுக்​கோட்​டை, திருச்​சி​யில் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் முதல்​வர் ஸ்டா​லின், மூத்த குடிமக்​களின் வாழ்வை மேம்​படுத்​தும் ‘அன்​புச்​சோலை’ திட்​டத்தை இன்று தொடங்​கு​கிறார். புதுக்​கோட்​டை, திருச்சி மாவட்டங்​களில் முதல்​வர் ஸ்டா​லின் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். புதுக்​கோட்டை மாவட்​டம் கீரனூரில் இன்று காலை 11 மணி அளவில் நடை​பெறும் அரசுநலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில் பங்​கேற்​கிறார். இதில் ரூ.767 கோடி மதிப்​பீட்​டிலான புதிய திட்​டப்​பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி,​முடிவுற்ற பணி​களைத் தொடங்கி வைக்​கிறார். பயனாளி​களுக்கு நலத் திட்ட உதவி​களை​யும் … Read more

ஆன்லைனில் எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் புதிய வசதி அறிமுகம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் 

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் தொடர்​பான படிவங்​களை தேர்​தல் ஆணைய இணை​யதளத்​தில் நிரப்​பும் வசதி கொண்​டு​வரப்​பட்​டுள்​ள​தாக தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வாக்​காளர்​கள் வசதிக்​காக இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் தனது அதி​காரப்​பூர்வ இணை​யதள​மான https://voters.eci.gov.in -ல் எஸ்​ஐஆர் படிவத்தை ஆன்​லைனில் நிரப்​புவதற்​கான வசதியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. வாக்​காளர்​கள் தங்​களது பதிவு செய்​யப்​பட்ட செல்​போன் எண் அல்​லது வாக்​காளர் அடை​யாள அட்டை எண்ணை பயன்​படுத்தி இணை​யதளம் … Read more

நவ. 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்பட்ட செய்​திக்​குறிப்பு: வட தமிழகம் அதையொட் டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நில​வு​கிறது. இதனால் இன்று முதல் வரும்13-ம் தேதி வரை சில இடங்​களி​லும், வரும் 14, 15-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.வரும் … Read more

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணி: 3,665 காலியிடங்களுக்கு போட்டித் தேர்வு 

சென்னை: தமிழக காவல் துறை​யில் காலி​யாக உள்ள 3,665 காவலர் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான எழுத்துத் தேர்​வில் 1.96 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். தமிழக காவல் துறை​யில் காலி​யாக உள்ள 2,837 இரண்​டாம் நிலை காவலர் பணி​யிடங்​கள்,சிறைத்​துறை​யில் 180 காலி பணி​யிடங்​கள், தீயணைப்பு துறை​யில் 631 பணி​யிடங்​கள் உள்பட மொத்​தம் 3,665 காலிப்பணி​யிடங்​களை நிரப்புவதற்கான அறி​விப்பை தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம் ஆக.21-ல் வெளி​யிட்​டது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. ஆனால், 10-ம் … Read more

“முகம் சுளிக்க வைக்கும் பிக்பாஸ்” – தடை செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மகளிர் அணியினர் பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் பண்பாடு மற்றும் குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பில், பூந்தமல்லி குந்தம்பாக்கம் பிக் பாஸ் படப்பிடிப்பு தளம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி வீரப்பன், மாநில கொள்கை … Read more

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐயிடம் 2-வது நாளாக ஆவணங்களை ஒப்படைத்த தவெக நிர்வாகிகள்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயிடம் 2-வது நாளாக தவெக வழக்கறிஞர், நிர்வாகிகள் ஆவணங்களை ஒப்படைத்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக். 30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. … Read more

மாதம் ரூ.72,000 சம்பளம்.. 8ஆம் வகுப்பு தகுதி தான்.. தமிழக அரசு துறையில் அட்டகாசமான வேலை!

Tamil Nadu Governemt Job: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.