முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 

மதுரை: ​முஸ்​லிம், கிறிஸ்தவ மதங்​களை சேர்ந்​தவர்​கள் சிறு​வர்​ நீதி சட்​டத்​தின் கீழ் குழந்​தைகளை தத்​தெடுக்​கலாம் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை​யில் முஸ்​லிம் மதத்​தைச் சேர்ந்த ஒரு​வருக்கு குழந்தை இல்​லை. அவரது சகோ​தரருக்கு 3 குழந்​தைகள் உள்​ளனர். இந்​நிலை​யில், அவரதுசகோ​தரர் அண்​மை​யில் இறந்​து​விட்​டார். சகோ​தரரின் 8 வயது மகனை தத்​தெடுக்க அவர் விருப்​பம் தெரி​வித்​தார். மகனை தத்​துக்கொடுக்க சகோ​தரரின் மனை​வி​யும் ஒப்​புக்​கொண்​டுள்​ளார். இதையடுத்​து, தத்​தெடுப்பு பத்​திரத்தை பதிவதற்​காக மேலூர் கிழக்கு சார் பதி​வாளர் அலு​வல​கத்​தில் அவர் விண்​ணப்​பித்​தார். … Read more

கல்வி உரிமை திட்டம்: மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் – அன்புமணி!

கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

நடப்பாண்டில் 7-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: காவிரி ஆற்றில் விநாடிக்கு 30,000 கன அடி நீர் திறப்பு

மேட்டூர்: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்துக்கு முன்கூட்டியே தொடங்கிய நிலையில், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில், உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டில் முதன் முறையாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் … Read more

தீபாவளியை முன்னிட்டு அக்.22 வரை 147 சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயில் அக்.22-ம் தேதி வரை 147 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை நாளை (20-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில், அக்.16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 147 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு … Read more

வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை தொடரும் என தகவல்

சென்னை: தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (அக்.21) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், … Read more

பட்டாவில் பெயர் மாற்றம் செய்யணுமா? தமிழக அரசின் புதிய விதிகள்!

இனி பட்டா மாற்றங்கள் அல்லது பழைய பத்திரங்களுக்கான பெயர் மாற்றங்களுக்கு, பொதுமக்கள் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை

கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலம், கடந்த 9-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும், மேம்பாலத்தின் இறங்குதளத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். இதுதொடர்பான எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளும் அங்கு … Read more

Bank Holidays: இன்று தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படுமா? யார் யாருக்கு விடுமுறை?

Bank Holidays: தமிழ்நாட்டை பொறுத்தவரை, தீபாவளி பண்டிகைக்காக தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று அக்டோபர் 20 திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு: நடப்பாண்டில் 7-வது முறையாக நிரம்ப வாய்ப்பு

மேட்​டூர்: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 10,374 கனஅடி​யாக அதி​கரித்​துள்ள நிலை​யில், அணை​யின் நீர்​மட்​டம் 119 அடியாக உயர்ந்​துள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்த மழை, கர்​நாடகா அணை​களில் இருந்து உபரிநீர் திறப்பு உள்ளிட்ட காரணங்​களால் மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் ஏற்​கெனவே 6 முறை முழு கொள்​ளள​வான 120 அடியை எட்​டியது. இந்​நிலை​யில், காவிரி​யில் நீர்​வரத்து குறைந்​தது, அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறப்பு காரண​மாக மேட்​டூர் அணை நீர்​மட்​டம் சரிந்​தது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் … Read more

பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் மூழ்கியது

உடுமலை: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள திரு​மூர்த்​தி​மலை மற்​றும் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரு​கிறது. சுற்​றுலாப் பயணி​கள் பாது​காப்பு கருதி கடந்த 17-ம் தேதி முதலே பஞ்​சலிங்க அரு​வி​யில் குளிக்க தடை​வி​திக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், நேற்று முன் தினம் இரவு பஞ்​சலிங்க அரு​வி​யில் தண்​ணீர் ஆர்ப்​பரித்து கொட்​டியது. தோணி ஆற்​றின் வழி​யாக ஏற்​பட்ட காட்​டாற்று வெள்​ளம், மரம், செடி, கொடிகளை அடித்து சென்​றபடி, ஆற்​றங்​கரை​யில் அமைந்​துள்ள அமணலிங்​கேஸ்​வரர் கோயிலை சூழ்ந்​தது. சுமார் 20 … Read more