70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழைநீர் வடிந்தது: 5 மணி நேரம் கண்காணித்து பணிகளை முடித்த கும்பகோணம் எம்எல்ஏ

கும்பகோணம்: கும்பகோணத்தில் 70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழை நீர் பல்வேறு காரணங்களால் வடியாததால் 5 மணி நேரம் பணிகள் மேற்கொள்ளும் இடத்தில் அமர்ந்து கும்பகோணம் எம்எல்ஏ மழைநீரை வடிய செய்துள்ளார். கும்பகோணத்தில் கடந்த ஆக.19-ம் தேதி பெய்த மழையின் போது சோலையப்பன் தெரு, ஆலையடி சாலை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதேபோல் வாழை, கரும்பு, தீவனப் புல் மற்றும் நெற்பயிர் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அண்மையில் பெய்த பலத்த … Read more

கோவையில் இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு; முதுகலை கல்வி வாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு; முதுகலை கல்வி வாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி. மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் பங்கேற்கலாம்.

சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம்: கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் தகவல்

கோவை: சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம். இது சட்டபூர்வ நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி வழக்குத் தொந்தரவுகளை குறைக்கும் என மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் சுமதி தெரிவித்துள்ளார். இந்திய தர நிர்ணய அமைவனம்(பிஐஎஸ்) கோவை கிளை அலுவலகம் சார்பில், ‘மனக் மந்தன்’ என்ற பெயரில் மருத்துவமனை விலைப்பட்டியல் நிலைப்படுத்தல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கொடிசியா சாலையில் அமைந்துள்ள மண்டல அறிவியல் மைய வளாகத்தில் இன்று நடந்தது. மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை … Read more

"Surprise-ஆக எல்லாமே நடக்கும்".. மதுரையில் சசிகலா பேட்டி!

என்னுடைய மூவ் தனியாக தான் இருக்கும் என்றும் அது தனியாக தெரியும் என்றும் மதுரையில் வி.கே.சசிகலா பேட்டி அளித்துள்ளார். 

என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ முடியும்: சசிகலா

மதுரை: என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ தான் முடியும் என அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மதுரையில் இன்று தெரிவித்தார். மதுரையில் இன்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 10 மாதங்களில் மாவட்டந்தோறும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. பள்ளி அளவில் போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திமுக அரசின் கண் அசைவு இல்லாமல் போதைப்பொருள் இந்தளவுக்கு புழக்கம் வருவதற்கு வேலை இல்லை. … Read more

மாணவர்கள் கவனத்திற்கு.. சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் -கல்வி அலுவலர் அறிவிப்பு

Tiruvallur District Local News: திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முக்கியத் தகவல். வரும் சனிக்கிழமை (நவம்பர் 01, 20225) பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

வானிலை முன்னறிவிப்பு: நவ.5 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ.5-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (அக்.31) முதல் நவ.4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 5-ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் … Read more

பழனி செல்வோர் கவனத்திற்கு..ரோப் கார் சேவை இல்லை! மீண்டும் எப்போது தொடங்கும்?

Palani Temple Rope Car Services Stalled : பழனி முருகன் கோவிலில், நாளை ஒரு நாள் ரோப் கார் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்படும் அவலம்!

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை கடற்படையினரால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500 படகுகளை கைப்பற்றி 3,500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினாலும் , சிறை தண்டனை மற்றும் அபராதம் கட்டியப் பிறகும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகுகள் விடுவிக்கப்படவில்லை. அந்தவகையில் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மற்றும் புதுச்சேரி … Read more

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷ்ய அதினியம் என்ற பெயர்களும் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, 2024 ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. … Read more