வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் எஸ்ஐஆர்-ஐ கடுமையாக எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.” என எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூரில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இன்று (நவ.2-ம் தேதி) கரூர் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, இரண்டு யூனியன் பிரதேசங்கள் உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்) திணிக்கப்படுகிறது. இதனை இண்டியா கூட்டணி எதிர்க்கிறது. எஸ்ஐஆர் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. … Read more

‘வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது’ – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “வாக்காளர்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. அத்தகைய அச்சுறுத்தலை தடுக்க வேண்டியது ஜனநாயக சக்திகளான நம்முடைய கடமை.” என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, திராவிடர் கழகம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. பாமக, நாதக, தவெக, அமமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் … Read more

‘மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது’ – பொடிவைத்துப் பேசும் செல்லூர் ராஜூ

மதுரை: “எல்லோரும் ஒத்தக்கருத்துடன் இருக்க மாட்டார்கள், மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது” என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு செல்லூர் கே.ராஜூ ‘அட்வைஸ்’ செய்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் டெல்டா மாவட்டத்துக்காரன் என்று முதல்வர் பெருமையாகக் கூறி வருகிறார். அப்படிப்பட்டவர், அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரச்சினையை காது கொடுத்து கேட்டிருக்க வேண்டும். நெல் கொள்முதலை முறையாக செய்திருக்க வேண்டும். எங்கள் பொதுச்செயலாளர் ஒரு விவசாயியாக இருப்பதால் விவசாயிகள் பிரச்சினை என்வென்று … Read more

பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான்: கார்த்தி சிதம்பரம்

மதுரை: பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். மதுரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: “பிரதமர் மோடி தேர்தலை காரணமாக வைத்து மீண்டும் ஒரு பொய்யை சொல்லி இருக்கிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வருகின்றனர். அவர்களை வரவேற்கிறோம். அவர்கள் இன்றி இங்கு பல வேலை நடக்காது என, நமக்கு நன்றாகத் தெரியும். … Read more

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! சிறப்பு ரயில்கள் இயக்கம் – வெளியான அறிவிப்பு!

சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.8 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ.8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மியான்மர் கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (நவ.3) … Read more

கோவை எஸ்.என்.ஆர் அரங்கில் சி.ஐ.டி.யு மாநில மாநாடு: நவ. 6 முதல் 9 வரை

CITU வின் 16 வது மாநில மாநாடு கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள எஸ் என் ஆர் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. நவம்பர் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக நீர் திறப்பு

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் இன்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது. ஆகவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத் துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து கடந்த அக்டோபர் … Read more

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம்.. தமிழகத்தில் பிச்சு உதறபோகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Today: வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த சில தினங்ளுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.  

தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில் வழக்கு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஹாரில் நடைபெற்ற குளறுபடிகளை சரி செய்யாமல் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர். நடத்துவது வாக்குரிமையை பறிக்கும் செயல் என அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, … Read more