முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை: முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குழந்தை இல்லை. அவரது சகோதரருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவரதுசகோதரர் அண்மையில் இறந்துவிட்டார். சகோதரரின் 8 வயது மகனை தத்தெடுக்க அவர் விருப்பம் தெரிவித்தார். மகனை தத்துக்கொடுக்க சகோதரரின் மனைவியும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, தத்தெடுப்பு பத்திரத்தை பதிவதற்காக மேலூர் கிழக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் அவர் விண்ணப்பித்தார். … Read more