கனமழை தாக்கம்: குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப் பெருக்கு

நெல்லை: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக இன்றும் வெள்ளப் பெருக்கு நீடித்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று காலை 8 மணிவரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 101 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல் மாஞ்சோலை, ஊத்து பகுதிகளில் தலா 80, காக்காச்சியில் 90 மி.மீ. மழை பெய்திருந்தது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 88.10 … Read more

வெள்ளத்தில் மூழ்கிய 10,000 கோழிகள்: தேனி மாவட்டம் தேவாரத்தில் பெரும் சேதம்

தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள கோழி பண்ணைக்குள் வெள்ளநீர் சூழ்ந்து ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

வங்கக்கடலில் அக்.21-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் அக்.21-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு … Read more

காவலரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ… சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு – நடந்தது என்ன?

Chennai Latest  News: சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலரை, மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தமிழத்தின் கள யதார்த்தம் தெரியாமல் உள்ளார்: கிருஷ்ணசாமி விமர்சனம்

திருநெல்வேலி: தமிழக முதல்வர் ஸ்டாலின் கிராமப்புற மக்களின் நிலைமை குறித்த கள யதார்த்தம் தெரியாமல் உள்ளார் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் … Read more

கரூர் துயரம்: சென்னை ஐகோர்ட் நீதிபதியை விமர்சித்த காவல்துறை ஓய்வு அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிக்கு, ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. கரூரில், செப்டம்பர் 27ம் தேதி தவெக. தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல்துறையில் பணியாற்றி ஓய்வு … Read more

பிடிபட்ட ரோலக்ஸ்: ஒற்றை காட்டு யானை பிடிக்கப்பட்டதில் விவசாயிகள் மகிழ்ச்சி

நீண்ட நாட்கள்  போராட்டத்திற்கு பிறகு யானையை பிடித்த  வனத்துறையினருக்கு தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நன்றி தெரிவித்தார்.

சென்னையிலிருந்து கடந்த 2 நாட்களில் அரசுப் பேருந்துகளில் 3.56 லட்சம் பேர் பயணம்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: கடந்த இரண்டு நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து முதல் நாள் 1 லட்சத்து 28 ஆயிரம் பேரும், இரண்டாவது நாள் 2 லட்சத்து 28 ஆயிரம் பேரும் என 3 லட்சத்து 56 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து சென்னை மாதவரத்துக்கு, குளிர்சாதன வசதி பேருந்து சேவையினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (அக்.18) தொடங்கி வைத்தார். பின்னர் … Read more

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: தனியார் பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகச் சட்டம் 2019- ல், தனியார் பல்கலைக் கழகம் அமைக்க தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 100 ஏக்கர் பரப்பளவு நிலம் தேவை என்ற சட்டப் பிரிவை திருத்தம் செய்யும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் … Read more

இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா: கரூர் தொகுதி மக்களுக்கு செந்தில் பாலாஜி தீபாவளி பரிசு

கரூர்: கரூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா பரிசு வழங்கும் பணியினை கரூர் கோடங்கிபட்டியில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ சார்பில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 88,000 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் கூடிய சிறிய சில்வர் அண்டா வழங்கும் பணி கரூர் மாநகராட்சி 48-வது வார்டு கோடங்கிப்பட்டியில் தொடங்கியது. கரூர் கோடங்கிபட்டியில் தீபாவளி பரிசு வழங்கும் பணியினை இன்று (அக்.18ம் … Read more