மக்களே அலர்ட்! அடுத்த 1 வாரம் தொடர் மழை தான் – இந்த 4 மாவட்டம் அதிக பாதிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்ய உள்ளது.

கள்ளக்குறிச்சியில் ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு: நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: “கள்ளக்குறிச்சி மாவட்டம் மூப்பனார் தெருவில் வசிப்பவர் பன்னீர்செல்வம் மகள் சவுமியா (வயது 14). கடந்த 10ம் தேதி அன்று மாலை பூட்டை கிராம எல்லையில் இருக்கும் ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டு ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் … Read more

அந்நிய ஆன்லைன் முதலீட்டால் தமிழகத்தில் 21 லட்சம் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் சிதைவு!

சிறு வணிகங்களை காப்பாற்ற அந்நிய ஆன்லைன் முதலீடு அறவே வரக்கூடாது என்பதை சட்டமாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் கொளத்தூர்.ரவி பேட்டி அளித்துள்ளார்.

இறந்தவர்களை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

சென்னை: இறந்தவர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகம் அற்ப அரசியல் செய்வதாகவும், அதற்கு அதிமுகவும் பாஜகவும் துணை நிற்பதாகவும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டயுள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் துயர சம்பவம் நடந்தவுடனே எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் உறுதுணையாக இருந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை … Read more

'இறந்தோர் மூலம் அரசியல் செய்கிறது தவெக' திமுகிவின் திடீர் அட்டாக் – என்ன விஷயம்?

DMK Attacks TVK: இறந்தோரை வைத்து அற்ப அரசியலை தவெக செய்கிறது என்றும் அதிமுக- பாஜக அதற்கு துணை நிற்கிறது என்றும் திமுகவின் ஆர்.எஸ். பாரதி அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

கரூர் அருகே ரூ.4.85 கோடியில் சாலை பணிகள்: செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தார், சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட ரூ.4.85 கோடியிலான பணிகளுக்கான தொடக்க விழா இன்று (அக்.12ம் தேதி) நடைபெற்றது. கரூர் அருகேயுள்ள காதப் பாறை ஊராட்சி பூர்ணிமா கார்டனில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.64.80 லட்சத்தில் தார் சாலையை பலப்படுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட … Read more

ஒருவேளை அதிமுக – தவெக கூட்டணி வைத்தால்… திமுகவிற்கு ஏற்படும் 5 பாதிப்புகள்!

அதிமுக – தவெக கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் திமுகவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கிறது. 

தமிழகத்தின் 6 மாட்டங்களில் போலியோ சிறப்பு முகாம்கள்: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

சென்னை: தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கான போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் 2025 இன்று நடைபெற்றது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, திருநீர்மலை நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தில், ஆறு மாவட்டங்களுக்கான போலியோ சொட்டு மருந்து … Read more

படித்து வேலை இல்லாமல் இருக்கிறீர்களா? உதவித் தொகை கேட்டு உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu unemployment allowance : படித்து வேலை இல்லாமல் இருப்பவர்கள் உதவித் தொகை கேட்டு உடனே விண்ணப்பிக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: மத்திய அரசிடம் கேட்டு உரங்களை பெற்று, விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தமிழகத்தில் காவிரிப் பாசன மாவட்டங்களிலும் கடலூர் மாவட்டத்திலும் யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ், காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு உரம் வைக்க முடியாமல் உழவர்கள் தவித்து வருகின்றனர். உழவர்களின் இந்தத் துயரத்தை அறிந்து நடவடிக்கை … Read more