மதுரை வைகை ஆற்றில் வெள்ளம்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
மதுரை வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மதுரை வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
விருதுநகர்: தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “வடகிழக்கு … Read more
ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மானிய திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்பாட்டில் உள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
மதுரை: முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குழந்தை இல்லை. அவரது சகோதரருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவரதுசகோதரர் அண்மையில் இறந்துவிட்டார். சகோதரரின் 8 வயது மகனை தத்தெடுக்க அவர் விருப்பம் தெரிவித்தார். மகனை தத்துக்கொடுக்க சகோதரரின் மனைவியும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, தத்தெடுப்பு பத்திரத்தை பதிவதற்காக மேலூர் கிழக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் அவர் விண்ணப்பித்தார். … Read more
கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேட்டூர்: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்துக்கு முன்கூட்டியே தொடங்கிய நிலையில், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில், உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டில் முதன் முறையாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் … Read more
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயில் அக்.22-ம் தேதி வரை 147 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை நாளை (20-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில், அக்.16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 147 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு … Read more
சென்னை: தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (அக்.21) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், … Read more
இனி பட்டா மாற்றங்கள் அல்லது பழைய பத்திரங்களுக்கான பெயர் மாற்றங்களுக்கு, பொதுமக்கள் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலம், கடந்த 9-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும், மேம்பாலத்தின் இறங்குதளத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். இதுதொடர்பான எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளும் அங்கு … Read more