“பாஜகவின் ‘பி’ டீமாக லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் செயல்படுகிறார்” – நாராயணசாமி

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளை குறிவைத்து, லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வேலை செய்கிறார். அவர் பாஜகவின் நிழலாக, பி டீமாக செயல்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஜேசிஎம் அமைப்பு ஒன்றை தொடங்கி பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை தங்கள் அமைப்பில் சேரும்படியும், தேவையான நிதியை கொடுப்பதாகவும் கூறி வருகிறார். இதில் சிலர் சேர்ந்துள்ளனர். இந்த அமைப்பானது … Read more

‘EPS சொன்னது பொய் குற்றச்சாட்டுகள்…’ புட்டு புட்டு வைத்த உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin: வேளாண் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் எதிர்க்கட்சித் தலைவர் பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கோயில் நிதி விவகாரம்: அனைத்து கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கட்ட தடை விதிக்கக் கோரி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி.பழனி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி … Read more

EPS-க்கு கெடு விதிக்கவில்லை… அந்தர் பல்டி அடிக்கிறாரா செங்கோட்டையன் – சொல்வது என்ன?

Sengottaiyan: அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை எனவும் ஊடகங்கள் தான் தவறாக போட்டுவிட்டனர் எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என … Read more

தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ்… 3 வேளையும் கட்டணமில்லா உணவு.. வெளியான அறிவிப்பு

Tamil Nadu Government : தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு வழங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் அக்.28 வரை மழை தொடரும்!

சென்னை: வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது நாளை அரபிக்கடலில் … Read more

நாளை இந்த 6 மாவட்டங்களில்.. கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளிப்போகும் மதுரை புதிய மேயர் நியமனம் – திமுக உட்கட்சி பூசலால் முதல்வர் முடிவு

மதுரை மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு பதிலாக புதிய மேயர் நியமனத்தை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதால், மதுரை திமுகவினர் விரக்தியடைந்துள்ளனர். மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் கணவர் பொன் வசந்த் சிறைக்கு சென்றதால் மேயராக இருந்த இந்திராணியிடம் ராஜினாமா கடிதம் வாங்கி, மேயர் பதவியை கட்சித்தலைமை பறித்தது. அவருக்கு பதிலாக புதிய மேயரை தேர்வு செய்வதற்கு திமுகவினர் இடையே ஒற்றுமையில்லாததால் புதிய மேயரை கட்சித்தலைமையால் உடனடியாக … Read more

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தமிழ்நாட்டின் வடக்கே நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கர்நாடக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் … Read more