மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு: நடப்பாண்டில் 7-வது முறையாக நிரம்ப வாய்ப்பு

மேட்​டூர்: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 10,374 கனஅடி​யாக அதி​கரித்​துள்ள நிலை​யில், அணை​யின் நீர்​மட்​டம் 119 அடியாக உயர்ந்​துள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்த மழை, கர்​நாடகா அணை​களில் இருந்து உபரிநீர் திறப்பு உள்ளிட்ட காரணங்​களால் மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் ஏற்​கெனவே 6 முறை முழு கொள்​ளள​வான 120 அடியை எட்​டியது. இந்​நிலை​யில், காவிரி​யில் நீர்​வரத்து குறைந்​தது, அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறப்பு காரண​மாக மேட்​டூர் அணை நீர்​மட்​டம் சரிந்​தது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் … Read more

பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் மூழ்கியது

உடுமலை: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள திரு​மூர்த்​தி​மலை மற்​றும் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரு​கிறது. சுற்​றுலாப் பயணி​கள் பாது​காப்பு கருதி கடந்த 17-ம் தேதி முதலே பஞ்​சலிங்க அரு​வி​யில் குளிக்க தடை​வி​திக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், நேற்று முன் தினம் இரவு பஞ்​சலிங்க அரு​வி​யில் தண்​ணீர் ஆர்ப்​பரித்து கொட்​டியது. தோணி ஆற்​றின் வழி​யாக ஏற்​பட்ட காட்​டாற்று வெள்​ளம், மரம், செடி, கொடிகளை அடித்து சென்​றபடி, ஆற்​றங்​கரை​யில் அமைந்​துள்ள அமணலிங்​கேஸ்​வரர் கோயிலை சூழ்ந்​தது. சுமார் 20 … Read more

ஆவடி அருகே வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

ஆவடி: திரு​வள்​ளூர் மாவட்​டம் ஆவடி அருகே வீட்​டில் விற்​பனைக்​காக வைத்​திருந்த நாட்டு வெடிகள் வெடித்​துச் சிதறிய​தில் 4 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ஆவடி அருகே பட்​டாபி​ராம் அடுத்த தண்​டுரை பகு​தி​யில் உள்ள ஒரு வீட்​டில், தீபாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு நேற்று நாட்டு ரக வெடிகள் விற்​பனை நடை​பெற்று வந்​தது. இந்​நிலை​யில், நேற்று மதி​யம் 3 மணி​யள​வில் அங்கு விற்​பனைக்​காக வைத்​திருந்த நாட்டு வெடிகள் எதிர்​பா​ராத வகை​யில் வெடித்துச் சிதறின. இதனால் வீடு முழு​வதும் சேதமடைந்​தது. இதில், தீபாவளிக்கு … Read more

அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்: தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து

சென்னை: கோலாகல​மாக கொண்​டாடப்​படும் தீபாவளி திரு​நாளில், அனை​வரது வாழ்​விலும் துன்​பங்​கள் நீங்கி இன்​பங்​கள் பெரு​கட்​டும் என ஆளுநர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்​து தெரி​வித்​துள்​ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி: இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி கொண்டாட்டம் குறிக்கிறது. அன்னை லட்சுமி நமக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை நல்கி, அன்பு மற்றும் இணக்கமான சமூகத்தைவளர்க்க அருள்புரியட்டும். மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: தீபாவளி திரு​நாளில் அனை​வரும் நல்ல … Read more

அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை

சென்னை: அறுந்து கிடக்​கும் மின்​கம்​பிகள் அரு​கில் செல்ல வேண்​டாம் என மக்களை மின்​வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. மழைக் காலங்​களில் பொது​மக்​கள் கடைபிடிக்க வேண்​டிய பாது​காப்பு நடை​முறை​கள் குறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: ஈரமான கைகளால் மின்​சு​விட்​சுகள், மின்​சாதனங்​களை இயக்க முயற்​சிக்க வேண்​டாம், வீட்​டின் உள்​புறசுவர் ஈரமாக இருந்​தால் சுவிட்​சுகள் எதை​யும் இயக்​கக் கூடாது, ஈரப்​ப​த​மான சுவர்​களில் கை வைக்க கூடாது. மேலும் நீரில் நனைந்த அல்​லது ஈரப்​ப​த​மான மின்​விசிறி, லைட் உட்பட எதை​யும் மின்​சா​ரம் வந்​தவுடன் இயக்க வேண்​டாம், … Read more

ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்​னாள் துணைவேந்​தர் ஆர்​.வேல் ​ராஜ் மீது எடுக்​கப்​பட்ட சஸ்பெண்ட் நடவடிக்​கையை ரத்​து செய்து ஆளுநர் பிறப்​பித்த உத்​தரவை நிராகரிக்க பல்​கலைக்​கழக சிண்​டிகேட் பரிந்​துரை செய்​துள்​ள​து. அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​த​ராக பேராசிரியர் ஆர்​.வேல்​ராஜ் பணி​யாற்​றிய காலத்​தில் தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு அங்​கீ​காரம் வழங்​கிய​தில் முறை​கேடு நடந்​திருப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இந்​நிலை​யில், அவரது பதவிக்​காலம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முடிவடைய இருந்த நேரத்​தில் ஒரு நாளுக்கு முன்​பாக தமிழக அரசு அவரை … Read more

தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிப்பது ஏன் தெரியுமா? இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?

தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதன் பின்னால் வெறும் கொண்டாட்டம் மட்டுமின்றி, ஆழமான ஆன்மீக, வரலாற்று மற்றும் தத்துவார்த்த காரணங்களும் அடங்கியுள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூட அன்புமணி எதிர்ப்பு

சென்னை: ​திரு​வேற்​காடு ஆரம்ப சுகா​தார நிலை​யத்தை மூடுவதற்கு பாமக தலை​வர் அன்​புமணி எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னையை அடுத்த திரு​வேற்​காடு காடு​வெட்டி பகு​தி​யில் 60 ஆண்​டு​களுக்​கும் மேலாக செயல்​பட்டு வரும் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யத்​துக்கு இடமாற்​றம் என்ற பெயரில் மூடு​விழா நடத்த தமிழக அரசு துடிக்​கிறது. கிராமப்​புற மக்​களுக்கு மருத்​துவ சேவை அளித்து வரும் ஆரம்ப சுகா​தார நிலை​யத்தை மூட முயல்​வது கண்​டிக்​கத்​தக்​கது. காடு​வெட்டி பகு​தி​யில் 1967-ம் … Read more

தண்ணீர் வாளியில் விழுந்து 1½ வயது சிறுவன் உயிரிழப்பு.. நெல்லையில் துயர சம்பவம்!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே நடந்த துயரமான விபத்தில், 1½ வயது சிறுவன் உயிரிழந்தது உள்ளூர் மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழகத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 89 பேருக்கு காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.20ம் தேதி) சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி பண்டிகை பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தீ விபத்து சிகிச்சை வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் … Read more