சென்னைக்கு திரும்பிய மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஸ்தம்பித்தது

விழுப்புரம்: தீ​பாவளி விடு​முறை முடிந்து தென்​மாவட்​டங்​களில் இருந்து சென்​னைக்​குத் திரும்​பிய மக்​களால் விக்​கிர​வாண்டி சுங்​கச்​சாவடி ஸ்தம்​பித்​தது. தொடர் விடு​முறை காரண​மாக சென்​னை​யில் இருந்து லட்​சக்​கணக்​கானோர் பேருந்​து, ரயில், கார், வேன் மற்​றும் இருசக்கர வாக​னங்​களில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி நள்​ளிரவு வரை சொந்த ஊருக்​குச் சென்​றனர். குறிப்​பாக, சென்​னை​யில் இருந்து தென் மாவட்​டங்​களுக்கு விழுப்​புரம் மாவட்​டம் விக்​கிர​வாண்டி சுங்​கச்​சாவடி வழி​யாக சுமார் 1.60 லட்​சம் வாக​னங்​களில் பல லட்​சம் மக்​கள் கடந்து சென்​றனர். … Read more

Women Scheme: பெண்கள் பலனடையும் சிறப்பு திட்டம்! விரிவுப்படுத்த தமிழக அரசு முடிவு!

வேலை நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு வரும் பெண்கள் தங்குவதற்கு இடத்தை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. 

தொடர் மழை எதிரொலி: முதல்வர் ஸ்டாலினின் தென்காசி பயணம் தள்ளிவைப்பு

தென்காசி: தொடர் மழை எதிரொலியாக தென்காசி மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “வடகிழக்கு பருவ மழை கடந்த 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து … Read more

டெல்டாவில் கனமழையால் நெற்பயிர்கள் பெரும் சேதம்: ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: டெல்டா மாவட்​டங்​களில் கடந்த சில நாட்​களாக பெய்து வரும் மழை​யால் நெற்​ப​யிர்​கள் பெரும் சேதம் அடைந்​துள்​ளன. இதனால் டெல்டா மாவட்​டங்​களில் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் மற்​றும் முன்​னேற்​பாடு​கள் குறித்து அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி​யில் ஆய்வு செய்​தார். கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கிய நிலை​யில் அன்று முதல் 3 நாட்​களில் தமிழகத்​தில் பரவலாக மழை பெய்​தது. கடந்த 19-ம் தேதி மாநில அவசர கால செயல்​பாட்டு மையத்​தில் இருந்து திரு​வாரூர், தென்​காசி, … Read more

பழநி, கொடைக்கானலில் கனமழை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பழநி, கொடைக்கானலில் இன்று நாள் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. பழநி வரதமாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மற்றும் பழநியில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே பெய்த கன மழையால் கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி, கரடிச்சோலை அருவி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கொட்டிவரை அருவி, தேவதை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. … Read more

குமரியில் விடிய விடிய கனமழை – திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து விடிய விடிய பரவலாக மழை பெய்தது. குறிப்பாக திற்பரப்பு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு மற்றும் மலையோர பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக சிற்றாறு ஒன்றில் 55 மிமீ., மழை பதிவானது. பெருஞ்சாணியில் 47 மிமீ., சிவலோகத்தில் … Read more

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் புதுச்சேரி முழுவதும் தொடர் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. நகரின் முக்கிய வீதிகளான புஸ்சி வீதி, மிஷன் வீதி, காந்தி வீதி உள்ளிட்ட … Read more

102 அடியை எட்டிய பவானி சாகர் அணை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதையடுத்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று மதியம் 102 அடியை எட்டியது. … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? அமுதா பதில்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பது நாளை (அக்டோபர் 22) கூறப்படும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார். 

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு – 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம்

வேலூர்: கர்நாடகாவில் உள்ள பேத்தமங்கலா, ராமசாகர் அணைகள் நிரம்பியதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. புல்லூர் தடுப்பணையில் இருந்து 1,200 கன அடிக்கு ஆர்ப்பரித்து வெள்ளம் கடந்து வந்து கொண்டிருப்பதால் பாலாற்றில் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தமிழக – ஆந்திர எல்லையில் புல்லூரில் ஆந்திர மாநில அரசால் கட்டப்பட்டுள்ள தடுப்பணை பகுதியில் இன்று காலை வெள்ளம் ஆர்ப்பரித்து கடந்து வருகிறது. தடுப்பணையை கடந்த ஆர்ப்பரித்து வரும் வெள்ளத்தால் பாலாற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகம் மற்றும் … Read more