பழநி, கொடைக்கானலில் கனமழை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பழநி, கொடைக்கானலில் இன்று நாள் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. பழநி வரதமாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மற்றும் பழநியில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே பெய்த கன மழையால் கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி, கரடிச்சோலை அருவி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கொட்டிவரை அருவி, தேவதை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. … Read more

குமரியில் விடிய விடிய கனமழை – திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து விடிய விடிய பரவலாக மழை பெய்தது. குறிப்பாக திற்பரப்பு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு மற்றும் மலையோர பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக சிற்றாறு ஒன்றில் 55 மிமீ., மழை பதிவானது. பெருஞ்சாணியில் 47 மிமீ., சிவலோகத்தில் … Read more

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் புதுச்சேரி முழுவதும் தொடர் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. நகரின் முக்கிய வீதிகளான புஸ்சி வீதி, மிஷன் வீதி, காந்தி வீதி உள்ளிட்ட … Read more

102 அடியை எட்டிய பவானி சாகர் அணை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதையடுத்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று மதியம் 102 அடியை எட்டியது. … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? அமுதா பதில்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பது நாளை (அக்டோபர் 22) கூறப்படும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார். 

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு – 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம்

வேலூர்: கர்நாடகாவில் உள்ள பேத்தமங்கலா, ராமசாகர் அணைகள் நிரம்பியதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. புல்லூர் தடுப்பணையில் இருந்து 1,200 கன அடிக்கு ஆர்ப்பரித்து வெள்ளம் கடந்து வந்து கொண்டிருப்பதால் பாலாற்றில் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தமிழக – ஆந்திர எல்லையில் புல்லூரில் ஆந்திர மாநில அரசால் கட்டப்பட்டுள்ள தடுப்பணை பகுதியில் இன்று காலை வெள்ளம் ஆர்ப்பரித்து கடந்து வருகிறது. தடுப்பணையை கடந்த ஆர்ப்பரித்து வரும் வெள்ளத்தால் பாலாற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகம் மற்றும் … Read more

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை… சென்னை, புதுச்சேரி லீவ் – வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்

School College Leave: சென்னையில் பள்ளிகளுக்கும், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வானிலை அப்டேட்டை இங்கு காணலாம்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமேசுவரம்: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை புதன்கிழமை மதியம் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் … Read more

மக்களே உஷார்.. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை!

Flood Warning: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வானிலை முன்னெச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை

சென்னை: தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தஞ்சை, கடலூர் உட்பட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more