புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் அக்.28 வரை மழை தொடரும்!

சென்னை: வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது நாளை அரபிக்கடலில் … Read more

நாளை இந்த 6 மாவட்டங்களில்.. கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளிப்போகும் மதுரை புதிய மேயர் நியமனம் – திமுக உட்கட்சி பூசலால் முதல்வர் முடிவு

மதுரை மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு பதிலாக புதிய மேயர் நியமனத்தை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதால், மதுரை திமுகவினர் விரக்தியடைந்துள்ளனர். மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் கணவர் பொன் வசந்த் சிறைக்கு சென்றதால் மேயராக இருந்த இந்திராணியிடம் ராஜினாமா கடிதம் வாங்கி, மேயர் பதவியை கட்சித்தலைமை பறித்தது. அவருக்கு பதிலாக புதிய மேயரை தேர்வு செய்வதற்கு திமுகவினர் இடையே ஒற்றுமையில்லாததால் புதிய மேயரை கட்சித்தலைமையால் உடனடியாக … Read more

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தமிழ்நாட்டின் வடக்கே நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கர்நாடக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் … Read more

மகளிர் உரிமைத்தொகை, இலவச மின்சாரம் – அமைச்சர் சக்கரபாணி சொன்ன குட்நியூஸ்

Kalaignar Magalir Urimai Thogai : பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். 

நெல் கொள்முதலில் அரசின் நிலைப்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : தமிழக பாஜக

சென்னை: விவசாயம், விவசாயிகளின் நலம் காக்க, நெல் கொள்முதலில் தமிழக அரசின் நிலைப்பாடு, செயல்பாடு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க, மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான், நெல் மூட்டைகள் தேங்க காரணம் என்று வடிகட்டிய பொய்யை சொல்லி மத்திய அரசு … Read more

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார்

நாமக்கல்: சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 72. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் (மலைவாழ்மக்களுக்கான தனி தொகுதி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை நாமக்கல் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கு.பொன்னுசாமி கடந்த 1954ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை குழந்தைவேல், … Read more

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி சென்னையில் மழை முன்னெச்சரிக்கையாக 215 முகாம்கள் அமைப்பு

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்சரிக்கை நடவடிக்​கை​யாக சென்​னை​யில் 215 நிவாரண முகாம்​கள் அமைக்கப்பட்டு, 1.47 லட்​சம் பேருக்கு காலை உணவு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அக்​.16-ம் தேதி வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கியது. இதையடுத்து தமிழகம் முழு​வதும் பரவலாக மழை பெய்து வரு​கிறது. இதனால் பொது​மக்​கள் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க, அனைத்து பாது​காப்பு நடவடிக்​கைகளை​யும் உடனடி​யாக மேற்​கொள்ள மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். மேலும் அக்​.19-ம் தேதி சென்னை எழில​கத்​தில் மாநில அவசர​கால செயல்​பாட்டு மையத்​திலிருந்து … Read more

ரேஷன் கார்டு வைத்துள்ள கள்ளக்குறிச்சி மக்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் மனிதநேய மக்கள் கட்சி

மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக 2009-ல் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2009 மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது ஆம்பூர், ராமநாதபுரம் தொகுதிகளில் அக்கட்சிக்கு வெற்றி கிட்டியது. 2014 மக்களவை மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிட்டது மமக. 2019 மற்றும் 2024 மக்களவை … Read more