கடலூர் கனமழை: வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உயிரிழந்தனர். கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, வேப்பூர், பண்ருட்டி, விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, காட்டு மன்னார் கோவில், தொழுதூர், ஸ்ரீமுஷ்ணம், அண்ணாமலை நகர், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. புவனகிரி, … Read more

இரவில் வெளுக்கப்போகும் மழை.. 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. உஷார் மக்களே!

Tamil Nadu weather warning: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

‘நல்ல மகசூல் கிடைத்தும் வீண்…’ – டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு மழை பெய்தும், காய்ந்தும் குறுவை சாகுபடி கெட்ட நிலையில், நிகழாண்டு நன்கு விளைச்சல் அடைந்தும் கெட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த சாகுபடிக்கு தேவையான தண்ணீரை பம்பு செட் மூலமும், காவிரி ஆற்றின் பாசனத்தின் மூலமும் பெற்று சாகுபடியை மேற்கொள்கின்றனர். இதற்காக, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி … Read more

இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

School College Leave: கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

“தீபாவளிக்கு ரூ.890 கோடிக்கு மதுபானம் விற்றதே திமுக அரசின் சாதனை” – நயினார் நாகேந்திரன்

கோவை: “தீபாவளி தினத்தன்று ரூ.890 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்துள்ளதே திமுக அரசின் சாதனை” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கோவை வருகை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். டெல்டா மாவட்டத்துக்கு சொந்தக்காரர் என பெருமையாக கூறிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் டெல்டா மாவட்டத்துக்கு என எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை. தமிழக அரசு எப்போது கேட்டாலும், மழைநீர் வடிகால் … Read more

பெங்களூரு – ஓசூர் மெட்ரோ வாய்ப்பே இல்லை: கைவிரித்த கர்நாடகா – என்ன பிரச்சனை?

Bangalore Hosur Metro Service: பெங்களூரு – ஓசூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை திட்டம் என்பது செயல்படுத்த சாத்தியமில்லாதது என பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருப்பது குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: காவல் துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-11 ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக 2011 ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அமைச்சர் … Read more

மது விற்பனையில் சாதனை செய்வதுதான் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Nainar Nagendran Criticizes Dmk: திமுக அரசு மக்களுக்கு எதிரானவர்கள் என்றும் அவர்கள் பெருமை சொல்லிக் கொள்ளும் சாதனை 790 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்ததுதான் என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். 

சாத்தூர் அருகே உடைந்த வைப்பாறு தரைப்பாலத்தை சரி செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டம்

சாத்தூர்: சாத்தூர் அருகே வைப்பாறு தரைப்பாலம் உடைந்து முற்றிலுமாக சேதமடைந்ததால் பாலத்தை உடனடியாக சரி செய்யக்கோரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தூர் அருகே உள்ள இரவார்பட்டி- அச்சங்குளம் இடையே வைப்பாறு ஓடுகிறது. இவ்விரு கிராமங்களையும் இணைக்கும் வகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் திறக்கப்பட்ட 3 மாதங்களில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு பகுதி சேதம் அடைந்தது. அப்போது முதல் தற்போது வரை பாலம் சீரமைக்கப்படவில்லை. இந்த … Read more

ஒசூரில் 20 ஆண்டுகளாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த பெண் போலி டாக்டர் கைது

சோதனையில், ஜெபின்பானு என்கிற பெண் அப்பகுதியில் கடந்த 17 ஆண்டுகளாக கிளீனிக் அமைத்து சிகிச்சை அளித்ததும், தற்போது மூன்று ஆண்டுகளாக வீட்டிலேயே பலருக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.