தேர்தல் வாக்குறுதி… கோவைக்கு ‘ஷிப்ட்’ ஆகும் உதயநிதி?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக கோவையில் நடைபெற்ற பூத் கமிட்டி பாக முகவர்கள் கூட்டத்தில் தான் அளித்த, வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், உதயநிதி எம்.எல்.ஏ மாதம் 10 நாள் கோவைக்கு ஷிஃப் ஆவாரா என்று திமுகவினர் மத்தியில் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, திமுகவின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைச் சேர்ந்த திமுகவின் தேர்தல் பூத் கமிட்டி பாக முகவர்கள் கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது. … Read more

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு.. காவல்துறை தீவிர விசாரணை..!

கானாமல் போன +2 மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், தோமையார்புரத்தை சேர்ந்தவர் சர்குணம். இவரின் மகள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் இருந்து வீடு தூரமாக உள்ளதால் அவரது மாமா வீட்டில் தங்கி பள்ளி சென்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அவர் ட்யூசன் முடிந்தும் வீடு திரும்பததால் அவரது மாமா அதிர்ச்சியடைந்தார். இதனால், அக்கம்பக்கதில் தேடியுள்ளனர். அப்போது, மாணவி திருச்சி ரயில் தண்டவாளத்தில் மாணவி … Read more

உக்ரைனில் உள்ள தமிழர்களின் உறவினர்களுக்கான உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு <!– உக்ரைனில் உள்ள தமிழர்களின் உறவினர்களுக்கான உதவி எண்களை அற… –>

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் மற்றும் அங்கு புலம்பெயர்ந்தவர்களின் உறவினர்களுக்கான உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதால், அங்குள்ள 5,000 தமிழக மாணவர்களை மீட்க அவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு சிக்கித் தவிப்பவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசின் அவசர கட்டுப்பாடு மைய எண்ணான 1070 ஐ தொடர்பு கொண்டோ அல்லது அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகதை தொடர்பு கொண்டோ, அல்லது புது … Read more

முதல்வர் ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா; தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு: பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் திமுகவின் முயற்சி

சென்னை: முதல்வர் ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு தேசியகட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பது, பாஜகவுக்கு எதிரான மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் திமுகவின் முயற்சி என்று கூறப் படுகிறது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட தேசிய மற்றும் மாநிலக்கட்சிகள் கூட்டு சேர்ந்து தேர்தலைசந்திக்க முடிவெடுத்து, அதற்கானமுன்னெடுப்புகளை தொடங்கியுள் ளன. இதுதவிர, இந்த … Read more

ஒருவழியாக நிறைவடைந்த பாலாறு பாலத்தின் சீரமைப்பு பணிகள்: சீரானதா போக்குவரத்து?

செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தில் நடைபெற்று வந்த சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாலத்தின் வழியே போக்குவரத்து தொடங்கியது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே இருங்குன்றம் பள்ளி – மாமண்டூர் இடையே பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலம் சீரமைப்புப் பணிகளுக்காக கடந்த 7 ஆம் தேதி மூடப்பட்டது. இதனால் அவ்வழியே செல்ல வேண்டிய வாகனங்கள், மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இந்நிலையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாகனப் போக்குவரத்துக்காக பாலம் திறந்து விடப்பட்டுள்ளது. … Read more

Rasi Palan 25th February 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 25th February 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 25th February 2022: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 25ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

அரசியல் காழ்ப்புணர்ச்சி.. திமுக அரசுக்கு ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.!!

முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அவர்களை மற்றொரு வழக்கில் கைது செய்து அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரம் கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும். அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை அனுபவப்பட்டுவிட்டவர்கள், வெகு சுலபத்தில் அதனைக் கைவிடத்துணியார். மக்களாட்சி முறைக்கு இது முற்றிலும் புறம்பானது.” என்றார் பேரறிஞர் அண்ணா . … Read more

தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ; இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு <!– தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ; இடிபாடுகளில் சிக்க… –>

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினார். கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், வழக்கம்போல் தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டனர். அப்போது, பட்டாசுகளுக்கு மருந்து கலவை நிரப்பும் இடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, பயங்கர சத்தத்துடன் ஒரு கட்டிடம் முழுவதுமாக வெடித்து சிதறி தரைமட்டமானது. அதில், அந்த கட்டிடத்திற்குள் பணியில் இருந்த 4 தொழிலாளர்கள் உடல் கருகி … Read more