ஸ்காட்லாந்தில் கடும் பனிப்பொழிவால் 100 பள்ளிகள் மூடல்

எடின்பர்க், ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. எனவே சாலையில் முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக மாறின. அப்போது சாலையில் நடந்து சென்ற 2 பேர் மீது கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் அபெர்டீன்ஷையர் நகர சாலையில் சென்ற மாடி பஸ் பனிக்கட்டிகளுக்கு இடையே சிக்கி கொண்டது. மீட்பு படையினர் அந்த பனிக்கட்டிகளை அப்புறப்படுத்திய பிறகே பஸ் … Read more

பாகிஸ்தான்: தொழிற்சாலையில் வெடி விபத்து – 16 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரின் மாலிக்பூர் பகுதியில் பசை தயாரிப்பு தொழிற்சாலை (glue making factory) உள்ளது. இந்த தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்டோர் இன்று வழக்கமான பணியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று பாயிலர் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த … Read more

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்.

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 12:59 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 170 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.40 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், இரவு 9.33 மணியளவில் ரிக்டரில் 4.1 அளவில் மீண்டும் … Read more

தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி; ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்…!

கேப்டவுன், ஜி20 அமைப்பின் 20-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் ஜோகனர்ஸ்பர்க் நகர் சென்ற பிரதமர் மோடிக்கு தென் ஆப்பிரிக்க அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி20 உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பங்கேற்கும் பிரதமர் மோடி காலநிலை … Read more

வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ; 4 பேர் பலி

டாக்கா, இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.38 மணிக்கு அந்நாட்டின் தலைநகர் டாக்காவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

ஷாக் வீடியோ! கீழே விழுந்து நொறுங்கிய இந்தியாவின் தேஜஸ் விமானம் – விமானி உயிரிழப்பு!

Dubai Tejas Crash Video: துபாயில் நடந்த விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விழுந்து விபததுக்குள்ளானது. இந்த விமான விபத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

மிஸ் யுனிவர்ஸ் மேடையில் தவறி விழுந்த அழகி! வைரலாகும் வீடியோ..எந்த நாட்டை சேர்ந்தவர்?

Miss Jamaica Fall Video : 2025ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்பாேட்டி, சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், மெக்ஸிகோ அழகி பட்டம் வென்றார். இப்போட்டி நடக்கையில், ஒரு அழகி தவறி விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

மிஸ் யுனிவர்ஸ் 2025 பட்டத்தை வென்ற சர்ச்சைக்குரிய போட்டியாளர்! யார் இந்த ஃபாத்திமா போஷ்?

Miss Universe 2025 Winner Fatima Bosch : மிஸ் யுனிவர்ஸ் 2025 அழகிப்போட்டி, சமீபத்தில் தாய்லாந்தில் நடந்தது. இதில், சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்ட ஃபாத்திமா போஷ், பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றிருக்கிறார்.

சொந்த நாட்டு மக்களையும் விட்டுவைக்காத பாகிஸ்தான்… இரசாயன ஆயுத தாக்குதலா?

Balochistan: பாகிஸ்தான் ராணுவம் தங்கள் நாட்டு மக்கள் மீதே இரசாயன ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்துகிறது என கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு

பாரீஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரசித்தி பெற்ற லூவ்ரே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஈபிள் கோபுரத்துக்கு இணையான சிறப்பினை பெற்ற இந்த அருங்காட்சியகத்தை லட்சக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர். இந்தநிலையில் கடந்த மாதம் வைர கிரீடம், நெக்ளஸ் உள்பட சுமார் ரூ.900 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். எனினும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்த சம்பவம் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. எனவே பாதுகாப்பை பலப்படுத்த அங்கு … Read more