நடப்பாண்டில் 38 பேர் கொலை… பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து ஸ்பெயினில் பிரம்மாண்ட பேரணி

மாட்ரிட், சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25-ந்தேதி(நேற்று) அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன. ஸ்பெயினில் நடப்பாண்டில் இதுவரை 38 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில், வன்முறை சம்பவங்களால் உயிரிழந்த பெண்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி ஆயிரக்கணக்கான … Read more

நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிரச்சினையால் வரலாறு காணாத உணவு பஞ்சம் – ஐ.நா. எச்சரிக்கை

அபுஜா, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் பொதுமக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக வடக்கு நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அதிகரிப்பால் அங்கு உணவு தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டிற்குள் அங்கு 3 கோடியே 50 லட்சம் மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும், இதனால் வரலாறு காணாத உணவு பஞ்சம் எற்படக்கூடும் என்றும் ஐ.நா. உலக உணவு திட்டத்திற்கான அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்குள்ள … Read more

கினியா-பிசாவு நாட்டில் ராணுவ புரட்சி: அதிபர் கைது

பிசாவு, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கினியா-பிசாவு குடியரசு. இந்நாட்டின் அதிபராக உமரோ சிசோகோ எம்பலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, கினியா-பிசாவு நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி சார்பில் உமரோ சிசோகோ மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சி வேட்பாளராக பெர்னாண்டோ டியாஸ் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நாளை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதேவேளை, தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் டியாஸ் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அந்நாட்டில் … Read more

அமெரிக்காவில் எரிமலை வெடிப்பு – 400 அடி உயரத்திற்கு வெளியேறிய நெருப்பு குழம்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள தேசிய பூங்காவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை, உலகிலேயே மிகவும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இந்நிலையில், கிலாவியா எரிமலை 25-ந்தேதி(நேற்று) மதியம் 2.30 மணியளவில் வெடித்து சிதறியது. எரிமலை வெடிப்பை தொடர்ந்து, அதில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. இந்த நெருப்பு குழம்பானது சுமார் 400 அடி உயரம் வரை மேல்நோக்கி எழுந்தது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தொடர்ந்து இந்த எரிமலையின் செயல்பாடுகளை … Read more

10 நிமிடத்திற்கு 1 பெண் கொலை! அதிர்ச்சியளிக்கும் ஐ.நா ரிப்பாேர்ட்..

UN Report Says 1 Women Killed Every 10 Minutes : பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உலகில் அதிகமாக நடந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஐ.நாவின் தற்போதைய ரிப்பாேர்ட் விவரிக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

அமெரிக்க இந்தியர்களுக்கு நிம்மதி! எச்-1பி (H-1B) பணியாளர்களை நீக்கத் திட்டம் இல்லை -வெள்ளை மாளிகை

Big Relief for USA Indians: டிரம்பின் கொள்கை அமெரிக்க குடிமக்களுக்கு வேலைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், தேவையான இடங்களில் மட்டுமே வெளிநாட்டு தொழிலாளர்களை அனுமதிப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பாப் பாடகிக்கு பாலியல் தொந்தரவு: ஆஸ்திரேலியா நாட்டவர் நாடு கடத்தல்

சிங்கப்பூர், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி அரியானா கிராண்டி (வயது 32). எவ்ரிடே, பை, பிளட்லைன் போன்ற பிரபல பாடல்களை பாடியுள்ளார். தற்போது ஹாலிவுட் சினிமா ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதொடர்பான விளம்பர நிகழ்ச்சி சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்டு மேடையில் தோன்றி ரசிகர்கள் முன்னிலையில் அரியானா கிராண்டி பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் மேடையில் குதித்து பாடகி மீது பாய்ந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்தார். உடனே … Read more

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம்

வாஷிங்டன், அமெரிக்கா – சீனா இடையே வரி விதிப்பு தொடர்பாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில் தென்கொரியாவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் சீன அதிபர்ஜிஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தனர். இதை தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங் தொலை பேசியில் பேசியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:- சீன அதிபர் ஜி ஜின்பிங் கிடம் இருந்து எனக்கு … Read more

இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் 3-வது முறையாக தள்ளிவைப்பு

ஜெருசலேம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சுற் றுப்பயணம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் தனது இந்திய பயணத்தை அவர் மீண்டும் ஒத்தி வைத்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய பயணம் பாதுகாப்புக் காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. … Read more

பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் – 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

லாகூர், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பாகும். அதேவேளை, இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பனு மாவட்டத்தில் … Read more