போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா-உக்ரைன் விருப்பம்: டாவோஸ் மாநாட்டில் டிரம்ப் பேச்சு

டாவோஸ், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் 56-வது வருடாந்திர உச்சிமாநாடு 23-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து மத்திய மந்திரிகள், மராட்டியம், அசாம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் பங்கேற்று சிறப்புரையாற்றி வருகின்றனர். இந்நிலையில், டாவோஸ் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசும்போது, ரஷியா-உக்ரைன் மோதல், நேட்டோ மற்றும் போரில் அமெரிக்காவின் பங்கு … Read more

World News | கிரீன்லாந்து முதல் ஈரான் வரை… உலகை உலுக்கும் டொனால்ட் டிரம்பின் முடிவுகள்!

Donald Trump: கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் பின்வாங்கியிருப்பது ஐரோப்பிய நாடுகளுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்பட்டாலும், ஈரான் மற்றும் வங்கதேச விவகாரங்கள் உலக அரசியலில் தொடர்ந்து பதற்றத்தை நீட்டிக்கச் செய்கின்றன.

ஸ்பெயினில் மற்றொரு ரெயில் தடம் புரண்டு விபத்து: டிரைவர் பலி; 37 பேர் காயம்

பார்சிலோனா, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் அருகே ஜெலிடா என்ற பகுதியில் பயணிகள் ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டதில் ரெயிலின் டிரைவர் பலியாகி உள்ளார். பயணிகளில் 37 பேர் காயம் அடைந்துள்ளனர். அந்த பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால், சுவர் ஒன்று இடிந்து ரெயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த வழியே சென்ற ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த தகவல் அறிந்து, 20 ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளன. தீயணைப்பு படை பிரிவின் … Read more

பாகிஸ்தான்: வணிக வளாக தீ விபத்தில் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

கராச்சி, பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென இதில் தீ விபத்து ஏற்பட்டது. குல் பிளாசாவில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்படும் கடைகள் உள்பட கட்டிடத்தின் 3 தளங்களிலும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபற்றி கராச்சி நகர தெற்கு பகுதிக்கான காவல் துறை டி.ஐ.ஜி. சையது … Read more

“எனக்கு ஏதாவது நடந்தால்.. பின்னணியில் ஈரான் இருப்பது தெரிந்தால்..” – கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

வாஷிங்டன், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தலைமைத்துவ விமர்சனங்கள் தொடர்பாக, எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானில் தொடர்ந்து அமைதியின்மை நிலவி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். முன்னதாக ஈரானில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டக்காரர்களை அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை கடுமையாக கண்டித்த அமெரிக்கா, போராட்டக்காரர்களுக்கு … Read more

கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பு இல்லை: டிரம்ப் திடீர் அறிவிப்பு

வாஷிங்டன் டி.சி., அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கிறது. சீனா, கனடா, இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு கடுமையான வரி விதித்து வந்த அவர், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவை இலக்காக கொண்டு செயல்பட்டார். அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் கடத்தல் பயங்கரவாதி என தொடர்ச்சியாக குற்றச்சாட்டு கூறி வந்த டிரம்ப், திடீரென மதுரோவை அமெரிக்க ராணுவம் உதவியுடள் கைது செய்து, அமெரிக்காவுக்கு … Read more

4-வது குழந்தைக்கு பெற்றோராகும் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ்-உஷா தம்பதி

நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசில் துணை ஜனாதிபதியாக ஜே.டி. வான்ஸ் பதவி வகித்து வருகிறார். இவருடைய மனைவி உஷா வான்ஸ். இந்த தம்பதிக்கு, இவான் (வயது 8), விவேக் (வயது 5) மற்றும் மிராபெல் (வயது 4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், வான்ஸ்-உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறக்க உள்ளது. இதனை அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். அதில், உஷாவுக்கு 4-வது ஒரு குழந்தை பிறக்க உள்ளது. … Read more

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை குறைந்துள்ளது: டாவோஸ் மாநாட்டில் மத்திய மந்திரி ஜோஷி பேச்சு

டாவோஸ், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 56-வது உலக பொருளாதார மாநாடு 23-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து மத்திய மந்திரிகள், மராட்டியம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், டாவோஸ் மாநாட்டில் மத்திய மந்திரி ஜோஷி பேசும்போது, ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவது என்பது வளர்ச்சிக்கு ஒரு சுமையல்ல. அதுவே வளர்ச்சிக்கான இயந்திரம் என்பதே இந்தியாவின் செயல்பாட்டுக்கான திட்டம் ஆகும். அதனாலேயே இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க … Read more

பாகிஸ்தான்: அடர்பனியால் வாகனங்கள் மோதல்; 5 பேர் பலி, 8 பேர் காயம்

பஞ்சாப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் சிக்கி பள்ளி குழந்தை உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் காயம் அடைந்தனர். இதில் முதல் சம்பவத்தில், நான்கானா சாகிப் பகுதியில் புச்சிகீ சாலையில் பள்ளி வேன் ஒன்றும் பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டது. அடர்ந்த பனியால் தெளிவற்ற பார்வைநிலையால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் வேன் ஓட்டுநர் அஸ்கார் (வயது 35), துராப் அலி (வயது 15) … Read more

அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி-பிரான்சுக்கு டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஐக்கிய நாடுகள் சபைக்கு மாற்றாக கருதப்படும் இந்த அமைதி வாரியத்தில் இணைய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மியாமில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் அமைதி வாரியத்தில் … Read more