சீனாவில் தீ விபத்து; 12 பேர் பலி

குவாங்சவ், சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டத்தின் சாந்தவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், தீ மளமளவென பரவியது. 150 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பகுதிகளுக்கு தீ பரவியது. இதில் சிக்கி 12 பேர் பலியானார்கள். 40 நிமிடங்களுக்கு பின்னர் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங் நகரில் … Read more

ஒரு போன் அழைப்பில் போரை நிறுத்துவேன் ; டொனால்டு டிரம்ப் பேச்சு

நியூயார்க், ஆசிய நாடுகளான கம்போடியா-தாய்லாந்து இடையே 1907-ம் ஆண்டில் சர்வதேச எல்லை வகுக்கப்பட்டது. இருப்பினும் எல்லையில் அமைந்துள்ள 11-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்து கோவில் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறன்றன. இந்த மோதல், கடந்த ஜூலையில் முற்றியது. இருதரப்பு வீரர்கள் மோதிக்கொண்டதில் 48 பேர் கொல்லப்பட்டனர். 3 லட்சம் பேர் அகதிளாகினர். 5 நாட்கள் நீடித்த இந்த போரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்தார். அக்டோபரில் மலேசியா … Read more

ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு – தலைநகரில் போராட்டம்

டெகுசிகல்பா, மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஹோண்டுராஸ். அந்த நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 30-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பல்வேறு கட்டங்களாக எண்ணப்படுகின்றன. அதன்படி, முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவு கடந்த 2-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் ஹோண்டுராஸ் லிபரல் கட்சி வேட்பாளர் சால்வடோர் நஸ்ரல்லாவை விட 515 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய கட்சி வேட்பாளர் நஸ்ரி அஸ்புரா முன்னிலையில் உள்ளார். இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக லிபரல் கட்சி ஆதரவாளர்கள் … Read more

சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்: கார் மீது மோதி விபத்து

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்டு நகரில் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் நேற்று இரவு சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி பிரேவர்டு நகரின் நெடுஞ்சாலையில் விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினார். அப்போது, விமானம் சாலையில் சென்ற கார் மீது மோதியது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி சென்ற 57 வயது பெண் லேசான காயமடைந்தார். விமானத்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. … Read more

பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு: 6 வீரர்கள் பலி

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள பாகிஸ்தான் மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிப்பதே முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆனால் தலீபான்கள் அதனை மறுத்து வருகின்றனர். இந்தநிலையில் கைபர் பக்துங்க்வா மாகாண சோதனைச்சாவடியில் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர். 4 பேருக்கு படுகாயம் … Read more

மாயமான மலேசிய விமானம்: பயணிகள் குடும்பத்திற்கு தலா ரூ.3½ கோடி இழப்பீடு; சீன கோர்ட்டு அதிரடி

கோலாலம்பூர், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு எம்.எச்-370 என்ற விமானம் புறப்பட்டது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 12 பணியாளர்கள் உள்பட 239 பேர் பயணித்தனர். நடுவானில் சென்றபோது அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. எனவே காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். எனினும் அதில் இருந்தவர்களின் கதி என்ன என்பது இன்றுவரை கேள்விக்குறியாக உள்ளது. இதனால் 11 ஆண்டுகளுக்கு … Read more

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி; அசீம்முனீர் பேச்சு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் முப்படைக்களின் தலைவர் பதவியை அந்நாட்டு அரசாங்கம் புதிதாக உருவாக்கியது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் பின்னடைவை – சந்தித்ததால் இந்த பதவியை உருவாக்கியது. அதன்படி – முப்படைகளின் தலைவராக ராணுவ தளபதியாக இருந்த பீல்டு மார்ஷ் அசிம் முனீர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் முப்படைகளின் தலைவராக பதவியேற்ற பிறகு அசிம் முனீர் இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:- வளர்ந்து வரும் மற்றும் மாறிவரும் அச்சுறுத்தல் களைக் கருத்தில் … Read more

காதலனுடன் உல்லாசம்.. வீட்டிற்குள் நுழைந்த மனைவி..10-வது மாடியில் இருந்து குதித்து தலைதெறிக்க ஓடிய கள்ளக்காதலி

பிஜீங், சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் ஒரு வீடியோவில், ஒரு பெண் 10-வது மாடி பால்கனியில் குதித்து தொங்கியடி, தப்பி ஓடுவது போன்ற காட்சி தெரிகிறது. இதை பார்த்தால் இதயத்துடிப்பு கூட அதிகரிக்கிறது. இந்த சம்பவம் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோவில், சட்டையில்லாத ஒரு ஆண் ஜன்னல் வழியாக அந்த பெண்மணியிடம் சிறிது நேரம் பேசியதை காணலாம். சில நொடிகளில் அவர் காட்சியில் இருந்து மறைந்துவிடுகிறார். இந்த சம்பவம் நவம்பர் 30-ஆம் தேதி நடந்ததாக … Read more

மத்திய ஜகார்த்தாவில் மின்கலன் வெடித்துத் தீ! பலர் காயம், பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

Indonesia Fire News: இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள ஒரு அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 20 பேர் பலியாகி உள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்திய விவசாய பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்?

வாஷிங்டன், உக்ரைன், ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று … Read more