ஆஸ்திரேலியா: சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு

மெல்போர்ன், இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. எனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்த தடையானது வருகிற 10-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே சிறுவர்களின் சமூகவலைதள கணக்குகளை நீக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த தடையானது தங்களது கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறி … Read more

மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா-பிசாவு நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது

கினியா, மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவு குடியரசில் அதிபராக உமரோ சிசோகோ எம்பலோ செயல்பட்டு வந்தார். அங்கு கடந்த 23-ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சி சார்பில் உமரோ சிசோகோவும், எதிர்க்கட்சி வேட்பாளராக பெர்னாண்டோ டியாசும் போட்டியிட்டனர். தேர்தல் தேர்வு இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் கினியா-பிசாவுவில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டது. அதிபர் … Read more

முதன்முறையாக… நீருக்குள் வைத்த பொறியில் சிக்கிய நண்டை லாவகத்துடன் இரையாக்கிய ஓநாய்; வைரலான வீடியோ

டொரண்டோ, கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்த கடற்கரை பகுதிகளில் ஐரோப்பிய பச்சை நண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அதனால், நண்டுகளை கட்டுப்படுத்த அந்த பகுதி மக்கள் சிலர் பொறிகளை அமைத்து, அவற்றை பிடித்து, அழிக்க முடிவு செய்தனர். ஆனால், அந்த பொறிகள் அடிக்கடி சேதமடைந்து காணப்பட்டன. எதனால் இப்படி ஆகிறது? என அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது கரடி அல்லது ஓநாயின் வேலையாக இருக்கும் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், நீரின் உள்ளே அவற்றால் … Read more

ஹாங்காங்: அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – பலி 65 ஆக உயர்வு; 300 பேர் மாயம்

பீஜிங், சீனாவின் ஆட்சிக்கு உட்பட்ட ஹாங்காங்கில் தாய் போ மாவட்டத்தில் வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 8 தொகுதிகள் கொண்ட இந்த குடியிருப்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவற்றில், 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நேற்று மதியம் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ அடுத்தடுத்த அடுக்குமாடி கட்டிடங்களுக்கும் பரவியது. … Read more

இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு சிறையில் அடைக் கப்பட்டார். ராவல்பிண்டி நகரின் அடியாலா சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது 3 சகோதரிகள் நோரின் நியாசி, அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் சென்றபோது போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அவர்களும், இம்ரான்கானின் தெக்ரீக்-இ- இன்சாப் கட்சியினரும் சிறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறைக்குள் இம்ரான்கானை … Read more

இம்ரான் கான் மரணமா…? அவர் எங்கே…? – பாகிஸ்தானில் நடப்பது என்ன?

Imran Khan: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்ததாக தகவல்கள் பரவியதை அடுத்து, அது உண்மையா என்பது குறித்து விரிவாக இங்கு காணலாம். 

இறந்த தாய் போல் வேடமிட்டு பென்சன் தொகையை பெற்ற மகன் கைது

ரோம், இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோ நகரை சேர்ந்த 56 வயதான நபர், இறந்த தனது தாய் போல் வேடமிட்டு அவரது ஓய்வூதிய தொகையை பெற்று மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நபரின் தாய் கிராசியெல்லா டால்ஒக்லியோ கடந்த 2022-ம் ஆண்டு தனது 82-வது வயதில் மரணம் அடைந்தார். ஆனால் அவரது ஓய்வூதிய தொகையை தொடர்ந்து பெற எண்ணிய மகன் தனது தாயின் மரணத்தை அரசுக்கு தெரிவிக்காமல் உடலை பதப்படுத்தி வீட்டில் மறைத்து வைத்து உள்ளார். அதன்பின் … Read more

நடப்பாண்டில் 38 பேர் கொலை… பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து ஸ்பெயினில் பிரம்மாண்ட பேரணி

மாட்ரிட், சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25-ந்தேதி(நேற்று) அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன. ஸ்பெயினில் நடப்பாண்டில் இதுவரை 38 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில், வன்முறை சம்பவங்களால் உயிரிழந்த பெண்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி ஆயிரக்கணக்கான … Read more

நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிரச்சினையால் வரலாறு காணாத உணவு பஞ்சம் – ஐ.நா. எச்சரிக்கை

அபுஜா, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் பொதுமக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக வடக்கு நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அதிகரிப்பால் அங்கு உணவு தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டிற்குள் அங்கு 3 கோடியே 50 லட்சம் மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும், இதனால் வரலாறு காணாத உணவு பஞ்சம் எற்படக்கூடும் என்றும் ஐ.நா. உலக உணவு திட்டத்திற்கான அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்குள்ள … Read more

கினியா-பிசாவு நாட்டில் ராணுவ புரட்சி: அதிபர் கைது

பிசாவு, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கினியா-பிசாவு குடியரசு. இந்நாட்டின் அதிபராக உமரோ சிசோகோ எம்பலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, கினியா-பிசாவு நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி சார்பில் உமரோ சிசோகோ மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சி வேட்பாளராக பெர்னாண்டோ டியாஸ் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நாளை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதேவேளை, தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் டியாஸ் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அந்நாட்டில் … Read more