வங்காளதேச முன்னாள் பிரதமர்: அமெரிக்க நகர தெருவுக்கு கலிதா ஜியா பெயர்

மிக்சிகன், வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்க தேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி காலமானார். இவர் வங்காளதேசத்தில் 3 முறை பிரதமராக பதவி வகித்தவர். இந்தநிலையில் அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ஹாம்ட்ராம்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தெருவுக்கு கலிதா ஜியாவை கவுரவிக்கும் வகையில் ‘கலிதா ஜியா தெரு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.ஹாம்ட்ராம்க் நகரில் உள்ள ஜோசப் காம்பாவ் மற்றும் கோனால்ட் தெருக்களுக்கு … Read more

நாம் உலகின் சிதைவுக்கு எதிராகப் போராட வேண்டும் – பிரான்ஸ் அதிபர் மெக்ரான்

பாரிஸ், இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற் கொண்டுள்ளார். அவர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை மந்திரி ஜீன் – நோயல் பரோட்டை சந்தித்து பேசினார். இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை எஸ்.ஜெய் சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் இந்தியா-பிரான்ஸ் இடையேயான நல்லுறவு குறித்து விவாதித்தனர். இதுதொடர்பாக எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும் போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்தித்து, பிரதமர் மோடியின் … Read more

பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்

வாஷிங்டன், நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன் கோள் ஆகும். இது தான் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும். நமது பூமியை போல 1,300 பூமியை வியாழனில் அடக்கிவிடலாம் என்றால், அதன் அளவை நீங்களே யோசித்துப்பாருங்கள். இந்த வியாழன் கோளை 75 க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றிவருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 63.3 கோடி கிலோ மீட்டர் ஆகும். இந்த கோளின் நகர்வை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா … Read more

இஸ்ரேலுக்கு உளவுபார்த்ததாக குற்றச்சாட்டு; ஈரானில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

டெஹ்ரான், இஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்கு உளவுபார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. அந்த நபரின் பெயர் அலி அர்தெஸ்தானி எனவும், அவர் பணத்தை பெற்றுக் கொண்டு இஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்கு பல்வேறு ரகசிய தகவல்களை வழங்கியுள்ளார் என்றும் ஈரானின் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கிரிப்டோகரன்சி மூலம் அவர் அந்த பணத்தை பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஈரான் காவல்துறை அதிகாரிகள் அலி அர்தெஸ்தானியை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் இஸ்ரேலுக்கு … Read more

கிரீன்லாந்து தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

கோபன்ஹேகன், டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கனிம வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு சொந்தமானது என்று ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார். கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து தனக்கு தேவை எனவும், தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை மூலம் அதனை இணைக்க தயார் எனவும் டிரம்ப் கூறி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டென்மார்க் அங்கு தனது படைகளை குவித்து வருகிறது. … Read more

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அடுத்த மாதம் இந்தியா வருகை

பாரிஸ், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அடுத்த மாதம் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இந்தியாவில் இந்த மாநாட்டை நடத்துவது குறித்து பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த மாநாடு பிப்ரவரி 19-20 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரெஞ்சு … Read more

வங்காளதேசம்: இந்து வாலிபர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

டாக்கா, வங்காளதேச நாட்டில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா, அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி, உயிர் தப்பினார். அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இதன் பின்னர், பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு வருகிறார். … Read more

விசா சேவை நிறுத்தம்: இந்தியா – வங்காளதேசம் தூதரக ரீதியான பதற்றம் அதிகரிப்பு

டாக்கா, வங்காளதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து போராட்டமும் வன்முறையும் வெடித்தன. இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் திபு சந்திர தாஸ் என்பவர் அங்கு அடித்து கொல்லப்பட்டார். தொடர்ந்து இந்து மதத்தை சேர்ந்த சிலர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்துக்கள் மீதான தாக்குலுக்கு இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதற்கு … Read more

தடைகளை மீறியதாக 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா

கராகஸ், வெனிசுலாவுக்கு சொந்தமான டேங்கர் எண்ணெய் கப்பல் ஒன்று, லெபனானின் போராளி குழுவான ஹிஸ்புல்லாவுடன தொடர்புடைய நிறுவனத்துக்கு சரக்குகளை கொண்டு சென்றதாக கூறி ஒரு கப்பலுக்கு அமெரிக்க கடந்த 2024-ம் ஆண்டு தடை விதித்தது. இதுபோல மேலும் ஒரு கப்பலுக்கும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல்களை அமெரிக்கா கண்காணித்து தேடி வந்தது. இந்த நிலையில் லெபனானின் 2 கப்பல்களை சிறைபிடித்து பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘அமெரிக்கா தடைகளை மீறியதற்காக’ பெல்லா … Read more

இந்தியாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா! 500% வரி விதிக்க டிரம்ப் பச்சைக்கொடி!

US 500% Tariff Threat: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரை இறக்குமதி வரி விதிக்கும் புதிய மசோதாவிற்கு டிரம்ப் ஒப்புதல். அடுத்த வாரம் செனட் சபையில் வாக்கெடுப்பிற்கு இந்த மசோதா வரக்கூடும் என எதிர்பார்ப்பு. இந்தியா, சீனாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?