ஸ்பெயின் ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு; 100 பேர் காயம்

மாட்ரிட், ஸ்பெயின் நாட்டின் கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதனால், அந்த அதிவிரைவு ரெயில், அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்தில் சென்றது. அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த, அரசால் நடத்தப்படும் ரெயில் மீது மோதியது. … Read more

செர்பியா அரசில் ஊழல்; ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்ப்பு பேரணி

நோவி சாத், செர்பியா நாட்டில் ஜனாதிபதியாக அலெக்சாண்டர் உசிக் பதவி வகித்து வருகிறார். அவருடைய அரசில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து வருகின்றன என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதில், அரசில் உள்ள ஊழல் அதிகாரிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் சொத்துகளை பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளனர். இதற்காக மாணவர்கள் ஒன்றாக கூடி, தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு … Read more

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.27 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய … Read more

ஸ்பெயினில் அதிவிரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து; 10 பேர் பலி

மாட்ரிட், ஸ்பெயினில் கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இது அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்தில் சென்றது. அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி சென்ற அரசால் நடத்தப்படும் ரெயில் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பயணிகள், ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேறும்போது, … Read more

வங்காளதேசத்தில் இந்து வியாபாரி அடித்து கொலை

டாக்கா, வங்காளதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து கொலை செய்யப்பட்டார். காஜிபூர் மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் ஓட்டல் மற்றும் இனிப்பு கடை நடத்தி வந்தவர் லிட்டன் சந்திர கோஷ் (வயது 55). இவரது கடைக்கு மசூம் மியா என்ற வாலிபர் வந்தார். அப்போது … Read more

அதிவேக ரயில்கள் மோதி விபத்து… 21 பேர் பலி – ஸ்பெயினில் நடந்தது என்ன?

Spain Train Accident: ஸ்பெயில் நாட்டில் அதிவேக ரயில் தடம்புரண்டு, மற்றொரு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 21 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிரீன்லாந்து மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: ஐரோப்பிய ஆணைய தலைவர் பேச்சு

பிரஸ்ஸல்ஸ், உலக நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்புகள், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவின் அதிபர் கைது, வெனிசுலாவின் பல கோடி மதிப்பிலான எண்ணெய் பீப்பாய்கள் கொள்முதல், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்புகள் என அதிரடி காட்டி வரும் அமெரிக்கா, அடுத்து கிரீன்லாந்து மீதும் குறி வைத்துள்ளது. கிரீன்லாந்து தனக்கு வேண்டும் என டிரம்ப் கூறி வருகிறார். இதற்கு பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களிடம் … Read more

கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் நாடுகளுக்கு வரி: பிப்.1-ம் தேதி முதல் அமல் – டிரம்ப் அறிவிப்பு

நூக் [கிரீன்லாந்து], அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் உருவாவதற்கான பணிகளை செய்வேன் என உறுதியேற்று செயலாற்றி வரும் ஜனாதிபதி டிரம்ப். அதற்காக பிற நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதித்து உத்தரவிட்டு வருகிறார். இதனால், அமெரிக்க கஜானாவுக்கு நிறைய டாலர்கள் வந்து குவியும் என கணக்கு போடுகிறார். சமீபத்தில், உலக அளவில் பெரிய எண்ணெய் இருப்பு கொண்ட வெனிசுலாவின் அதிபரை கைது செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தினார். உலக நாடுகளை அதிர செய்த இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கொலம்பியாவை … Read more

இலங்கையில் 3-வது பெய்லி பாலம் கட்டுமான பணியை நிறைவு செய்த இந்திய ராணுவம்

கொழும்பு, இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தின் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், வரலாறு காணாத பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர். கனமழையால், நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுதவிர டிட்வா புயலும், இலங்கையை கடுமையாக தாக்கியது. இதனால் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்தது. புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.05 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.74 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 65.70 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ of M: 4.1, … Read more