இந்தியப் பெண்ணை கேலி செய்த சீனா.. 18 மணி நேரம் கழித்து நடந்த சம்பவம்!

Arunachal Pradesh Woman Harassed : அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் பகுதியாகக் கருதும் சீன அதிகாரிகள், ஒரு இந்திய பெண்ணின் பாஸ்போர்ட்டை செல்லாதது என கூறி அவரை 18 மணி நேரம் விமான நிலையத்திலேயே காத்திருக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை

கோலாலம்பூர், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், மோசடி ஆகியவை அதிகரித்து வருகிறது. உலகளாவிய பிரச்சினையாக பூதாக்கரமாக வெடித்துள்ள இந்த சீர்கேட்டை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மீதான ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வந்தன. சிறுவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளதாக தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இதனால் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த சிறுவர்களுக்கு … Read more

கேமரூன் எதிர்க்கட்சி தலைவர் நாட்டை விட்டு தப்பியோட்டம்

யவுங்டி, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கேமரூன். இந்நாட்டின் அதிபராக பவுல் பியா செயல்பட்டு வருகிறார். இவர் 1975 முதல் 1982 வரை கேமரூன் பிரதமராக செயல்பட்டார். பின்னர் 1982ம் ஆண்டு முதல் 43 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, கேமரூன் அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பவுல் பியா போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் இசா ஷிரோமா பெக்ரி போட்டியிட்டார். தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பெற்று பவுல் … Read more

டிரம்ப் – ஜி ஜின்பிங் தொலைபேசியில் பேச்சு

பீஜிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தொலைபேசியில் பேசிக் கொண்டனர். அவர்கள் வர்த்தகம், தைவான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்ட அறிக்கையில், “தைவான் சீனாவுடன் இணைவது போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று டிரம்பிடம் ஜின்பிங் தொலைபேசியில் கூறியதாக தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையும், இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. ‘சுய … Read more

பாகிஸ்தான்: துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – 3 ராணுவ வீரர்கள் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகரில் துணை ராணுவப்படையின் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகத்தில் இன்று காலை ராணுவ வீரர்கள் வழக்கமான படை அணிவகுப்பு நடத்தினர். அப்போது, திடீரென துணை ராணுவ தலைமையகத்திற்குள் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தனர். துணை ராணுவ தலைமையக வாசல் வழியாக பயங்கரவாதிகள் நுழைந்தனர். அப்போது ஒரு பயங்கரவாதி தனது உடலில் கட்டி வந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தான். பயங்கரவாதி நடத்திய இந்த தற்கொலைப்படை தாக்குதலில் … Read more

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி

பெரூட், இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் கடந்த ஆண்டு அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்பட பலர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, இரு தரப்பிற்கும் இடையே போர் … Read more

ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஜோகன்னஸ்பர்க், ஜி20 உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் பங்கேற்றார். மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, போதைப்பொருள்-பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் பரிந்துரைகளை வழங்கினார். நேற்று நடந்த இந்த மாநாட்டின் 3-வது அமர்விலும் பிரதமர் மோடி பேசினார். ‘அனைவருக்கும் நியாயமான மற்றும் சமமான எதிர்காலம் – முக்கியமான கனிமங்கள்; ஒழுக்கமான வேலை; செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பில் நடந்த … Read more

சவுதி, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 17 பேருக்கு மரண தண்டனை விதித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

சனா, இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இந்த போரில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவு அளித்தனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம், நிதி உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதனிடையே, போரின் போது இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலர் உயிரிழந்தனர். அதேவேளை, இந்த மோதலுக்குப்பின் இஸ்ரேல், சவுதி , அமெரிக்கா ஆகிய … Read more

வியட்நாமில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

ஹனோய், ஆசியாவில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டின் குவாங் நாம், தாக்லாங், கான் ஹோவா உள்பட 5 மாகாணங்களில் கடந்த வாரம் முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆயிரத்திற்கும் … Read more

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

கீவ், உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 368வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, போரை முடிவுக்கு கொண்டு வர 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி முன் மொழிந்துள்ளார். அந்த நிபந்தனைகள் தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளுடன் உக்ரைன் … Read more