இந்தியா-அமெரிக்கா வர்த்தகம்; பல்வேறு கட்டங்களில் தொடர் பேச்சுவார்த்தை – மத்திய அரசு தகவல்

வாஷிங்டன், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்க அரசு 25 சதவீதம் கூடுதல் வரியை அபராதமாக விதித்துள்ளது. இதன் மூலம் இந்தியா மீது அமெரிக்கா விதித்த மொத்த வரிகள் 50 சதவீதமாக உயர்ந்துள்ளன. அமெரிக்கா விதித்த வரி நியாயமற்றது என இந்தியா கூறியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அரசுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியுஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் வர்த்தக துறை சிறப்பு … Read more

ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து

பீஜிங், தைவானில் கடந்த திங்கட்கிழமை முதல் ரகசா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த புயல் தற்போது சீனாவின் தெற்கு கடலோர பகுதியை நோக்கி செல்கிறது. ஹாங்காங்கையும் தாக்கி வருகிறது. இந்நிலையில் தைவானின் கிழக்கே ஹுவாலியன் கவுன்டி பகுதியை புயல் தாக்கியபோது, 70 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது. தொடர் கனமழையால் மலை பகுதியில் அமைந்த ஏரி ஒன்று உடைந்தது. இதில், பாலம் ஒன்றும் சேதமடைந்தது. இதனால் ஏரியில் இருந்து 60 மில்லியன் டன் அளவிலான … Read more

இந்தியாவை நமது பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ், உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே மூன்றாண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும், இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்தியாவும் தொடர்ச்சியாக கூறி வருகிறது. இந்த யுகம் போருக்கானது அல்ல என்றும், உலகில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் பல சந்தர்ப்பங்களில் இந்தியா கூறியுள்ளது. உக்ரைன் – ரஷியா போர் விரைவில் … Read more

“அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா, ஆனால்…” – வரி விதிப்பு பற்றி மார்கோ ரூபியோ

வாஷிங்டன்: அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா எனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, விளாடிமிர் புதினுக்கு எதிராகவே இந்தியா மீது ட்ரம்ப் அதிக வரிகளை விதித்ததாகத் தெரிவித்துள்ளார். ஃபாக்ஸ் டிவி நிகழ்ச்சியில், உக்ரைன் மீதான தாக்குதலை தொடர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்னும் எவ்வளவு காலம் கொடுக்கப் போகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மார்கோ ரூபியோ, “அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். உதாரணத்துக்கு, … Read more

‘ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலாம்; ஆனால் இந்தியா எங்களுடன்தான் இருக்கிறது’ – ஜெலன்ஸ்கி

நியூயார்க்: இந்தியா பெரும்பாலும் தங்களுடன்தான் இருக்கிறது என்றும், இந்தியா உடனான உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே அமெரிக்காவின் ஃபாக்ஸ் டிவிக்கு பேட்டி அளித்த ஜெலன்ஸ்கி, “இந்தியா பெரும்பாலும் எங்களுடன் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்த கேள்விகள் இருக்கின்றன. ஆனால், அதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பார்த்துக் கொள்வார் என நினைக்கிறேன். … Read more

ரகாசா சூறாவளி: ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு… பதறவைக்கும் வீடியோ – 14 பேர் பலி

Super Typhoon Ragasa: ரகாசா சூப்பர் சூறாவளியால் தைவானின் ஹுவாலியன் கவுண்டியில் ஏரி உடைந்து, நகருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசுர வேகத்தில் பாயந்தோடும் வெள்ளப்பெருக்கின் காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமானால் ட்ரம்ப் காசா போரை நிறுத்த வேண்டும்: பிரான்ஸ் அதிபர்

பாரிஸ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார். நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மேக்ரான், “காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் ட்ரம்ப்புக்கு மட்டுமே உள்ளது. இந்த மோதலில் ஏதாவது செய்யக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டுமே. அவர் எங்களை … Read more

தைவானை புரட்டிப் போட்ட அதி தீவிர புயல்: ஏரி உடைப்பில் சிக்கி 14 பேர் பலி; 124 பேர் மாயம்

தைபே: தைவானை தாக்கிய அதி தீவிரப் புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர், 124 பேர் காணாமல் போயினர். ‘ரகாசா’ அதி தீவிரப் புயல் பலத்த மழையுடன் தைவானை தாக்கிய நிலையில், நேற்று கிழக்கு ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஒரு பழமையான ஏரி உடைந்து, ஒரு பாலத்தை அடித்துச் சென்றது. இதனால் அடர்த்தியான சேறு மற்றும் சகதியுடனான தண்ணீர் நகரத்துக்குள் புகுந்தது. இதனால் அந்த நகரத்தில் உள்ள வீடுகளின் முதல் … Read more

எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு: அமெரிக்கா பரிசீலனை

வாஷிங்டன், அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தினார். ரூ.1.75 லட்சமாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த கட்டணத்தை எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நட … Read more

காப்பகத்தில் டீன்-ஏஜ் சிறுவனின் பாலியல் உணர்வை தூண்டி உல்லாசத்தில் ஈடுபட்ட பெண் உதவி மேலாளர்

லண்டன், இங்கிலாந்து நாட்டில் செயின்ட் ஹெலன்ஸ் என்ற இடத்தில் உள்ள லிங்மெல் அவென்யூ பகுதியில் குழந்தைகளுக்கான தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டது. பல சர்ச்சைகளால் அது மூடப்பட்டு உள்ளது. இதில், டீன்-ஏஜ் சிறுவனான மகனிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டனர் என காப்பக பெண் பணியாளர்களுக்கு எதிராக சிறுவனின் தாயார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். லிவர்பூல் கிரவுன் கோர்ட்டில் இதுபற்றி விசாரணை நடந்தது. நீதிபதி பிரையன் கும்மிங்ஸ் முன்னிலையில் தொடர்ந்து பல நாட்களாக இந்த வழக்கு … Read more