நோய் எதிர்ப்புசக்தி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கிய​வர்​களுக்கு விஞ்​ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினை​வாக ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு வென்​றவர்​கள் குறித்த அறி​விப்பு நேற்று முதல் வெளி​யிடப்​படுகிறது. இந்த ஆண்​டுக்​கான மருத்​து​வத்​துக்​கான நோபல் பரிசு அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ பிரன்​கோவ், ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் மற்​றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்​தளிக்​கப்​படு​ம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து … Read more

இத்தாலியில் கார் விபத்து ; 4 இந்தியர்கள் பலி

ரோம், ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு இத்தாலி. இந்நாட்டின் பசிலிக்காடா மாகாணம் மடிரா நகரில் உள்ள சாலையில் நேற்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் இந்தியர்கள் உள்பட 10 பேர் பயணித்தனர். இந்நிலையில், ஸ்கென்செனோ ஜொனிகா என்ற பகுதியில் சென்றபோது சாலையில் வேகமாக வந்த லாரி, கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு … Read more

15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 உதவியாளர்களுடன் தனி விமானத்தில் அமீரகம் சென்ற ஆப்பிரிக்க அரசரின் வீடியோ வைரல்

துபாய்: ஆப்​பிரிக்​கா​வின் தெற்கு பகு​தி​யில் உள்ள எஸ்​வாட்​டினி நாட்​டின் அரச பரம்​பரை​யில் வந்​தவர் மெஸ்​வாட்​டி-3. பரம்​பரை வழி அரச​ரான மெஸ்​வாட்டி, கடந்த ஜூலை மாதம் தனது 15 மனை​வி​கள், 100 உதவி​யாளர்​கள் புடைசூழ தனி விமானத்​தில் அபுதாபியில் வந்​திறங்​கி​னார். அங்கு அவருக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. தற்​போது அரச​ராக உள்ள மெஸ்​வாட்​டி​யின் தந்தை சோபு​சா-2-வுக்கு 125 மனை​வி​கள் என்ற விஷய​மும் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. 15 மனை​வி​களு​டன் அரசர் மெஸ்​வாட்டி வந்​திறங்​கிய வீடியோ அண்​மை​யில் வெளி​யானது. தற்​போது அந்த … Read more

வெனிசுலா படகு மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; போதைப்பொருள் கடத்தி வந்ததாக டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் செயல்படுவதாகவும், அந்த கடத்தல் கும்பல்கள் அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வந்து விற்பனை செய்வதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்த கும்பல்களின் செயல்பாடுகளுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஆதரவு அளிப்பதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேபோல், கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதாகவும் கூறி வருகிறார். இதை தடுக்க கரீபியன் கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்த டிரம்ப் … Read more

அமெரிக்க, ஜப்பான் விஞ்ஞானிகள் மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு

மருத்துவத்துக்கான நோபல் பரிசு, நோய் எதிர்ப்புத் தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வெல்பவர்கள் குறித்த அறிவிப்பு இன்று முதல் வெளியாகத் தொடங்கி உள்ளது. … Read more

இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்தது

சிடோர்ஜோ: கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நகரமான சிடோர்ஜோவில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளிக் கட்டிடம் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கினர். இதனை தொடர்ந்து ஒரு வார காலமாக மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று … Read more

விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா: எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்கிறார் 

வாஷிங்டன்: ​விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற தகவல் களஞ்​சி​யத்தை அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் விரை​வில் அறி​முகம் செய்​கிறார். கடந்த 2001-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்ட விக்​கிபீடியா உலகின் தகவல் களஞ்​சி​ய​மாக செயல்​படு​கிறது. விக்​கிமீடியா அறக்​கட்​டளை என்ற தொண்டு நிறு​வனம் விக்​கிபீடி​யாவை நிர்​வகித்து வரு​கிறது. இந்த தளம் சுமார் 300-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் தகவல்​களை வழங்கி வரு​கிறது. சுமார் 6.5 கோடிக்​கும் மேற்​பட்ட கட்​டுரைகள் இடம்​பெற்​றுள்​ளன. தற்​போது விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற புதிய தகவல் களஞ்​சி​யத்தை அமெரிக்க … Read more

மியான்மர்: 3 நாட்களில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

நைபிடா, இந்தியாவின் அண்டை நாடான மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை 1.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 3.6 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட தகவல் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் அசாமில் இருந்து 133 கி.மீ. தென்கிழக்கே திப்ரூகார் நகரில், 73 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதேபோன்று நேற்று (5-ந்தேதி) நள்ளிரவு 12.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 3.7 ஆக பதிவாகி … Read more

கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்த செய்தி தொகுப்பாளர் உயிரிழப்பு

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் அரைஸ் என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த செய்தி நிறுவனத்தில் சொமுச்குவா சவுமி மடூஹ்வா (வயது 29) செய்தி தொகுப்பாளராக பயணியாற்றி வந்தார். இவர் தலைநகர் அபுஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். இந்நிலையில், சவுமி மடூஹ்வாவின் வீட்டிற்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்ததை அறிந்த சவுமியா தப்பிக்க தனது வீடு அமைந்துள்ள 3வது மாடியில் இருந்து … Read more

நேபாளம்: கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு 52 பேர் பலி; 29 பேர் காயம்

காத்மண்டு, இந்தியாவை ஒட்டியுள்ள, இமயமலை நாடு என கூறப்படும் நேபாளத்தில் இயற்கையின் சீற்றத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பருவமழை காலம் முடிவுக்கு வந்துள்ளபோதிலும், அது முழுமையாக விலகவில்லை. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களாக பெய்த கனமழையால், பல்வேறு இடங்களிலும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. தொடர் மழையால், பாக்மதி, திரிசூலி, கிழக்கு ராப்தி, லால்பகையா மற்றும் கமலா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பான … Read more