இஸ்ரேலை சேர்ந்த 20 பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்!

புதுடெல்லி: ஹமாஸ் தீவிரவாத படையினர் தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை திங்கட்கிழமை (அக்.13) முதல் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை முன்னணி சர்வதேச செய்தி நிறுவனத்தின் வசம் ஹமாஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. காசா பகுதியில் அமைதி நிலவ செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நாளை எகிப்து நாட்டில் நடைபெறுகிறது. சுமார் 20 உலக நாடுகள் இதில் பங்கேற்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் இதில் பங்கேற்கிறார். இந்நிலையில், இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே … Read more

உலகில் குறைந்த செலவில் வாழக்கூடிய நாடு எது தெரியுமா? – டாப் 10 லிஸ்ட் இதோ!

Most Affordable Country: உலகிலேயே குறைந்த செலவில் வாழக்கூடிய மற்றும் சுற்றுலா செல்லக்கூடிய  டாப் 10 நாடுகளின் பட்டியலை இங்கு காணலாம். 

இந்தியா-ஆப்கானிஸ்தான் கூட்டறிக்கைக்கு ஆட்சேபனை: ஆப்கன் தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்: இந்தியா வந்துள்ள ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முட்டாகி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இதனையடுத்து வெளியிடப்பட்ட இந்தியா-ஆப்கானிஸ்தான் கூட்டறிக்கை குறித்து தனது “வலுவான ஆட்சேபனைகளை” தெரிவிக்க ஆப்கானிஸ்தான் தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. ஆறு நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமையன்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி புதுடெல்லிக்கு வந்தார். அதனை தொடர்ந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். முட்டாகியின் இந்திய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்புக்குப் பின்னர் இரு நாடுகளின் சார்பில் வெளியான … Read more

எகிப்தில் நாளை காசா அமைதி ஆலோசனை கூட்டம்: டிரம்ப் தலைமை ஏற்கிறார்…!

கெய்ரோ, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை … Read more

''வரிவிதிப்பு நடவடிக்கைகளில் பிடிவாதமாக இருந்தால்…'' – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 100% வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீனா, ‘நாங்கள் ஒரு வரிப் போரை விரும்பவில்லை, ஆனால் நாங்கள் அதைப் பற்றி பயப்படவும் இல்லை. அமெரிக்கா, அச்சுறுத்தல்களுக்குப் பதிலாக பேச்சுவார்த்தைகள் மூலம் வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது. சீனப் பொருட்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதலாக 100% வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சீன அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் நிலைப்பாடு எப்போதும் நிலையானது. நாங்கள் … Read more

ஆஸ்திரேலியா: வாத்து குடும்பத்திற்காக வரிசையாக அணிவகுத்து நின்ற வாகனங்கள்; வைரலான வீடியோ

பெர்த் ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் நகரில் குவிநானா சாலையில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். வாகனங்கள் போட்டி போட்டு கொண்டு விரைவாக கடந்து செல்லும். இந்நிலையில், காலை வேளையில் வாத்து ஒன்று தன்னுடைய குஞ்சுகளை அழைத்து கொண்டு அந்த வழியே சென்றது. இதனால், வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்று விட்டன. வாத்து, அதனுடைய குஞ்சுகளுடன் மெல்ல நடந்து சென்றன. அவை சாலையை கடந்து செல்லும் வரை வாகனங்கள் அந்த பகுதியிலேயே காத்திருந்தன. இந்த சம்பவத்தின்போது, விரைவாக வந்த … Read more

ஆப்கன் தாக்குதலில் 58 பாக். ராணுவ வீரர்கள் பலி – பேச்சுவார்த்தைக்கு முட்டாகி அழைப்பு

காபூல்: சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார் 58 ராணுவ வீரர்களும், 9 ஆப்கன் படையினரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது அண்மை காலத்தில் இரு தரப்புக்கும் இடையிலான மிக தீவிர மோதலாக அமைந்துள்ளது. சமீப மாதங்களில், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. … Read more

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அதிரடி தாக்குதல்

காபுல், பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இந்த பயங்கரவாத அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை … Read more

எகிப்தில் காசா அமைதிக்கான உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப், அல் சிசி அழைப்பு

கெய்ரோ: பாலஸ்தீனத்தின் காசா பகுதி அமைதிக்கான உச்சி மாநாடு நாளை (அக்.13) எகிப்து நாட்டில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது. அதற்கடுத்த இந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை … Read more

‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ – நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து

வாஷிங்டன், உலகின் மிகவும் உயர்ந்த நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நோபல் பரிசு கனவு தகா்ந்தது. இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் லட்சக்கணக்கான மக்கள் உயிர்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி என பெருமிதம் அடைந்தார். அவர், “நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட மரியா கொரினா என்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசினார். … Read more