ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும்: ட்ரம்ப் மீண்டும் பேச்சு

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா பெரும்பாலும் நிறுத்திவிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (அக். 22) செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதாக இந்தியா என்னிடம் ஏற்கனவே கூறியது உங்களுக்கும் தெரியும். இது ஒரு செயல்முறை. திடீரென நிறுத்த முடியாது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா பெரும்பாலும் நிறுத்திவிடும். 40% … Read more

ஆன்லைனில் பெண்களுக்கான ‘ஜிகாதி படிப்பு’: ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு அறிமுகம்

புதுடெல்லி: ஆன்​லைனில் பெண்​களுக்​கான ஜிகாதி படிப்பை ஜெய்​ஷ்-இ-​முகம்​மது தொடங்​கி​யுள்​ளது. காஷ்மீரை இந்​தி​யா​வில் இருந்து பிரித்து பாகிஸ்​தானுடன் இணைக்​கும் நோக்​கத்​துடன் கடந்த 2000-ம் ஆண்டு ஜெய்​ஷ்-இ-​முகம்​மது அமைப்பு தொடங்​கப்​பட்​டது. கடந்த 1999-ம் ஆண்டு இந்​தி​யன் ஏர்​லைன்ஸ் விமானம் கடத்​தப்​பட்​ட​போது இந்​தி​யா​வால் விடுவிக்​கப்​பட்ட 3 தீவிர​வா​தி​களில் ஒரு​வ​ரான மவுலானா மசூத் அசார் இந்த அமைப்பை தொடங்​கி​னார். 2001-ம் ஆண்டு நாடாளு​மன்ற தாக்​குதல், 2019-ம் ஆண்டு புல்​வாமா தாக்​குதல் உள்​ளிட்ட கொடூர தாக்​குதல்​களை இந்த அமைப்பு நடத்​தி​யுள்​ளது. இந்​தியா மட்​டுமின்றி அமெரிக்​கா, … Read more

உக்ரைனில் மழலையர் பள்ளி மீது ரஷியா டிரோன் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

கீவ், ரஷியா – உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் போர்நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதற்கிடையில் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷிய ராணுவம் தொடர்ச்சியாக டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் … Read more

பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்து விபத்து – 35 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு டேங்கர் லாரியில் நேற்று பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டது. நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் … Read more

2 பஸ்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து – 46 பேர் பலி

கம்பாலா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் இருந்து குலு நகருக்கு நேற்று இரவு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த நெடுஞ்சாலையில் வேகமாக வந்த மற்றொரு பஸ் இந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. மேலும், சாலையில் சென்றுகொண்டிருந்த மேலும் சில வாகனங்கள் மீதும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள … Read more

செர்பியா: நாடாளுமன்றம் அருகே துப்பாக்கி சூடு – அதிர்ச்சி சம்பவம்

பெல்கிரெட், ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் தலைநகர் பெல்கிரெட்டில் அந்நாட்டு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்நாட்டின் அதிபராக அலெக்சாண்டர் யுசிக் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, செர்பியாவில் அதிபருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேவேளை, அதிபரின் கட்சியை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிபர் அலெக்சாண்டருக்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றம் அருகே கூடாரம் அமைக்கப்பட்டு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த பகுதிக்கு இன்று வந்த சிலர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு … Read more

வெள்ளைமாளிகையில் குத்து விளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

வாஷிங்டன், நாடு முழுவதும் நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பல்வேறு நாடுகளில் தலைவர்கள் இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. வெள்ளைமாளிகையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குத்து விளக்கு ஏற்றி தீபாவளியை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க உளவு அமைப்பின் (எப்பிஐ) தலைவர் காஷ் படேல், தேசிய புலனாய்வு பிரிவு தலைவர் துளசி கப்பார்ட், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் உள்பட … Read more

அமெரிக்கா: எச்-1பி விசா கட்டண உயர்வில் தளர்வு

வாஷிங்டன், அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகை விசாவை பயன்படுத்துபவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் ஆவர். இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தினார். ரூ.1.75 லட்சமாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த கட்டணத்தை எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. … Read more

5 ஆண்டுகள் தண்டனை; சிறையில் அடைக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் அதிபர்

பாரிஸ், 2007ம் ஆண்டு முதல் 2012 வரை பிரான்சின் அதிபராக செயல்பட்டவர் நிகோலஸ் சர்கோஸி (வயது 70). இவர் அதிபர் தேர்தல் பிரசாரத்திற்காக லிபியா முன்னாள் அதிபர் கடாபியிடம் நிதி உதவி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு பாரிஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2 மாதங்களுக்குமுன் தீர்ப்பு வெளியானது. அதில், நிகோலஸ் சார்கோஸி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் … Read more

ஊருக்குதான் உபதேசம்… ஈரான் பாதுகாப்பு அதிகாரி மகளின் திருமணத்தில் அரை குறை ஆடை, ஹிஜாப் இல்லை; வைரலான வீடியோ

தெஹ்ரான், ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 2022-ம் ஆண்டு போலீசார் நடத்திய தாக்குதலில் மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண் கோமா நிலைக்கு சென்றார். இதன்பின்னர் சிகிச்சை பலனின்றி அந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி … Read more