சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமணம்.!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக, நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நியமணம் செய்யப்பட்டார்.

அவரை முழு நேர தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற கொலீஜியம் அண்மையில் பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமணம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.