2 வயது குழந்தையின் வாயில் குத்திய கான்கிரீட் கம்பி.. வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்.. <!– 2 வயது குழந்தையின் வாயில் குத்திய கான்கிரீட் கம்பி.. வெற்… –>

செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடந்த இடத்தில் தவறி விழுந்த 2 வயது குழந்தையின் வாயில் கான்கிரீட் கம்பி குத்திய நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொண்டு கம்பியை அகற்றிய மருத்துவர்கள், குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திம்மாவரத்தை சேர்ந்த குழந்தை இயேசு என்பவரின் 2 வயது ஆல்வின் ஆன்டோ என்ற ஆண் குழந்தை, வீட்டின் அருகே விளையாடிய நிலையில் கட்டுமான பணி நடைபெற்ற இடத்தில் தவறி விழுந்துள்ளது.

தலைக்குப்புற தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தையின், உதட்டின் வழியாக கான்கிரீட் கம்பி குத்தி முதுகு வழியாக வெளியே வந்துள்ளது.

இதனையடுத்து, உடனடியாக குழந்தையை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு 59 சென்டி மீட்டர் நீள கம்பியை எவ்வித பாதிப்புமின்றி அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள், குழந்தையின் உயிரை காப்பாற்றி தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த வீடியோ வெளியாகியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.