தனுஷ் பண்றதெல்லாம் பார்த்த ஒரு முடிவோடுதான் இருக்காரு போலயே..!

நடிகர்
தனுஷ்
தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். என்னதான் சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை தற்சமயம் அவர் அனுபவித்து வந்தாலும், தன் திரைவாழ்க்கையில் கவனம் செலுத்த அவர் தவறவில்லை.

வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து தனுஷின் படங்கள் OTT யில் வெளியாவது அவரது ரசிகர்களை சற்று சலிப்படைய செய்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

தனுஷ் எடுத்துள்ள அதிரடி முடிவு?இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது மாறன் படமும் OTT யில் வெளியாவதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளார். இருப்பினும்
செல்வராகவன்
இயக்கத்தில் தனுஷ் நடித்துக்கொண்டிருக்கும் நானே வருவேன் திரைப்படம் விரைவில் திரையில் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்திருக்கிறார்.

இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். இந்நிலையில் சில நாட்களாக நானே வருவேன் படப்பிடிப்பில் இருந்த தனுஷ் தற்போது மீண்டும்
வாத்தி
படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஹைதெராபாத்தில் வாத்தி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இதன் காரணமாக ஹைதெராபாத் சென்றுள்ள தனுஷ் அவரது மகன் யாத்ராவையும் அழைத்து சென்றுள்ளார் என தெரிகிறது. ஏனென்றால் தற்போது தனுஷ் மற்றும்
யாத்ரா
இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது தனுஷ் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு சென்று உணவு அருந்தியுள்ளார். இந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் தீயாய் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.