விவாகரத்திற்கு இதுவும் ஒரு காரணமா ? இது என்ன புதுசா இருக்கு..!

நடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான
தனுஷ்
காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்ததால் இவர்களின் திருமணத்திற்கு
ரஜினி
உடனே ஒப்புக்கொண்டார். மேலும் அந்த காலகட்டத்தில் ஐஸ்வர்யாவைப்பற்றி கிசுகிசுக்கள் மீடியாக்களில் வெளியாகவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி உடனடியாக இந்த திருமணத்தை நடத்தினார்.

18 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் தற்போது பிரிவதாக அறிவித்தது அனைவர்க்கும் அதிர்ச்சியளித்தது. மேலும் இவர்கள் பிரிவிற்கு பல தரப்புகளிலிருந்து பல காரணங்கள் தினந்தோறும் வந்துகொண்டுதான் இருக்கின்றது.

அதில் தற்போது ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவிற்கு அவர் ஊரில் ஒரு திரையரங்கம் இருக்கின்றதாம். அந்த திரையரங்கத்தால் சற்று நஷ்டமடைய அவருக்கு கடன் சுமை அதிகரித்தது. தன் பிள்ளையான தனுஷிடம் கடனை அடைக்க உதவி கேட்டுள்ளார்
கஸ்தூரி ராஜா
.

குக் வித் கோமாளி அஸ்வின் குமாரா இது ? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!

அந்த சமயத்தில் தனுஷ் தயாரித்த காலா படத்தினால் அவருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தனுஷும் அந்த நேரத்தில் பண தட்டுப்பாட்டில் தான் இருந்தாராம். இருப்பினும் தன்னால் முடிந்த தொகையை கொடுத்து தன் அப்பாவிற்கு உதவினார் தனுஷ்.

இருந்தாலும் மீதி பணத்தை தன் சம்மந்தி ரஜினியிடம் கேட்கலாம் என முடிவெடுத்த கஸ்தூரி ராஜா ரஜினியை தொடர்புகொண்டுள்ளார். பல முயற்சிகள் செய்தும் கஸ்தூரி ராஜாவால் ரஜினியை தொடர்புகொள்ள இயலவில்லை.

இந்த விஷயம் தனுஷ் காதுக்கு செல்லவே அவர் கடும் கோபத்திற்கு ஆளானாராம். இந்த விஷயம் சம்மந்தமாக தனுஷ் மற்றும்
ஐஸ்வர்யா
இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட துவங்கியதாம். எனவே இவர்கள் பிரிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என ரசிகர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.