நவீன இந்தியாவின் வரலாற்றை ராகுல் காந்தி படிக்க வேண்டும் – ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

கோண்டா:
உத்தர பிரதேச மாநிலம் கோண்டா நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு சீனாவும் பாகிஸ்தானும் நட்புறவு கொண்டதாக அவர் ( ராகுல் காந்தி) கூறினார். அவர் பண்டைய இந்தியாவின் வரலாற்றை படிக்கவில்லை, குறைந்தபட்சம் நவீன இந்தியாவின் வரலாற்றையாவது படிக்க வேண்டும்.
சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியை  பாகிஸ்தான், சீனாவிடம் ஒப்படைத்த போது  ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார். 
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். 
சீனா-பாகிஸ்தான் இடையே வர்த்தக பாதை கட்டுமான பணி தொடங்கியது போது மோடி அல்ல, மன்மோகன்சிங் பிரதமராக இருந்தார். 
(கால்வான்) மோதலில் ஏராளமான இந்திய வீரர்களும்  3-4 சீன வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கூறியது வேதனை அளிக்கிறது.
(இது குறித்து) மக்கள் பேசட்டும் என்று பிரதமர் கூறியதால், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தும், நான் பதில் அளிக்கவில்லை. ஆனால் யதார்த்தம் எங்களுக்குத் தெரியும்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி இந்த அறிக்கையை வெளியிட்ட உடனேயே கல்வான் மோதலில் 38 முதல் 50 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் புலனாய்வுப் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.