ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதி கைது

ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். 
அப்போது ராஜ்வார் பகுதியில் தப்பியோட முயன்ற பயங்கரவாதியை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். 
விசாரணையில், அவர் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த உபைத் பஷீர் வானி என்பதும், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த என தெரிய வந்தது. அவரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.