Kara: மகன் யாத்ரா சினிமாவில் அறிமுகமாகப் போகிறாரா?- தனுஷ் அளித்த பதில் என்ன?

விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கர’.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘கர’ படத்தின் தெலுங்கு ப்ரி ரிலீஸ் ஈவென்ட் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், ” இது நான் நடித்த படமோ, விக்னேஷ் ராஜா எடுத்த படமோ, தயாரிப்பாளரின் படமோ கிடையாது.

கர - தனுஷ்
கர – தனுஷ்

இது மக்களாகிய உங்களின் படம். நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.

மக்களின் பிரச்னையை சரியான வழியில் சொல்லும் படம் தான் ‘கர’ . இது மக்களுக்கான படம். ரிலீஸுக்கு முன்பு நான் ரொம்ப நம்பிக்கையுடன் சில படங்களை பற்றி பேச மாட்டேன்.

இந்த படம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை நம்பி தியேட்டருக்கு செல்லுங்கள். இந்தப் படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

குழந்தைகளைத் தவிர மற்ற அனைவருக்கும் தங்களை திரையில் பார்ப்பது போன்று இருக்கும். தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னை கண்ணுக்கு தெரியும்.

அந்த வலி தெரியும், அதற்கான தீர்வு தெரியும். அதற்கான வெற்றி தெரியும். அதை நீங்கள் கண்டிப்பாக எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்லலாம்” என்று பேசியிருக்கிறார்.

நடிகர் தனுஷ்
தனுஷ்

இதனைத்தொடர்ந்து மூத்த மகன் யாத்ரா விரைவில் சினிமாவில் அறிமுகமாகப் போகிறாரா? என்று தனுஷிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், ” சூழ்நிலை காரணமாக நான் 16 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். அவனுக்கு இப்போதுதான் 19 வயதாகிறது, இன்னமும் அவன் எனக்கு ஒரு குழந்தையாகத்தான் தெரிகிறான். அவன் என்னவாகப் போகிறான் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.