விசாரணை என்ற பெயரில் கல்லூரி மாணவியிடம் செல்போன் நம்பரை வாங்கி தனிமையில் இருக்க அழைத்த காவலருக்கு பெண்ணின் உறவினர்கள் கொடுத்த தர்ம அடி.! <!– விசாரணை என்ற பெயரில் கல்லூரி மாணவியிடம் செல்போன் நம்பரை வ… –>

திருப்பூரில் விசாரணை என்ற பெயரில் இளம்பெண்ணிடம் இருந்து செல்போன் எண்ணை வாங்கி, பின்னர், அவரை தனிமையில் இருக்க அழைத்து, உறவினர்களிடம் தர்ம அடி வாங்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன் வெள்ளிப்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவியும், அவரது காதலனும் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சுப்பிரமணி என்ற காவலர், விசாரணை என்ற பெயரில் பெயர், செல்போன் எண்ணை கேட்டு பெற்றிருக்கிறார்.

பின்னர், அந்த மாணவியின் செல்போன் எண்ணுக்கு அழைத்த காவலர் சுப்பிரமணி, தன்னுடன் தனிமையில் இருக்க வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாணவி பெற்றோர், உறவினர்களிடம் உடனடியாக கூறவே, திட்டமிட்டவாறு வருவதாக கூறி காவலர் சொன்ன இடத்திற்கு அவரை வரவழைத்த பெண்ணின் உறவினர்கள், தர்ம அடி கொடுத்தனர்.

காவலர் சுப்பிரமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.