பாஜக தலைவரின் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது கல்லூரி சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், இன்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் 27-ம் தேதி 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதனால், பாஜக தனது ஆட்சியை தக்க வைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரத்தில் கலந்துக் கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் பாலியா மாவட்டத்திற்கு வந்தார். ஹெலிகாப்டர் அங்குள்ள இடைநிலைக் கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட பலத்த காற்றினால் அங்கிருந்த கல்லூரி சுவர் இடிந்து விழுந்தது. இருப்பினும் இந்த விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது சுவர் இடிந்து விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால், உ.பி மாநிலத்தில் கல்வி உள்கட்டமைப்பின் தரம் குறித்து பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இது உ.பி ஆளும் பாஜகவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்.. மகாராஷ்டிர மாநில மந்திரி நவாப் மாலிக் கைது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.