வார ராசிபலன்

இந்த வார ராசிபலன்: பிப்ரவரி 7 முதல் 13 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் `ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி. மேஷ ராசி அன்பர்களே! பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய வாரம். கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களால் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை யும், குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையும் அவசியம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, … Read more

சுனாமி பேரலையின் போது 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பராமரிப்பில் வளர்ந்த சவுமியாவின் திருமணம்.! <!– சுனாமி பேரலையின் போது 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு சுகாத… –>

நாகையில் 2004-ம் ஆண்டு சுனாமி பேரலையின் போது 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பராமரிப்பில் வளர்ந்த சவுமியாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது. இதில் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர். நாகையில் சுனாமியின் போது தாய், தந்தையை இழந்து பாதிக்கப்பட்ட 99 குழந்தைகள் அரசால் துவங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் சவுமியா மற்றும் மீனா ஆகிய குழந்தைகளின் செலவுகளுக்கு பொறுப்பேற்று … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்களைத் தயார் செய்யும் பணிகள் தீவிரம்

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்களைத் தயார் செய்யும் பணிகள் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், திருச்சி மாநகராட்சியில் 65 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு பிப்.19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சி மாநகரில் 238 இடங்களில் 859 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜன.28-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, பிப்.4-ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து, பிப்.5-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. … Read more

5 கோடி கோர்ப்வேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர்: வரிவிதிப்புக்கு முந்தைய விலை ரூ.145 ஆக இருக்கும்

ஹைதராபாதைச் சேர்ந்த பயலாஜிகல் இ நிறுவனத்தின் கோர்ப்வேக்ஸ் என்ற கரோனா தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. ஒரு டோஸ் ரூ.145 விலையில் (வரியின்றி) 5 கோடி டோஸ் வாங்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால் இந்த தடுப்பூசியை எந்த வயது பிரிவினருக்கு அனுமதிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும் இது தொடர்பான ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் தடுப்பூசி தொடர் பான தொழில்நுட்பக் குழு ஈடுபட்டு வருகிறது. இப்போது … Read more

5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்

இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை அளிப்பது தொடர்பாக பார்தி ஏர்டெல், பிரபல அமெரிக்க சிப் நிறுவனமான குவால்காம் உடன் கைகோத்துள்ளது. இந்தியாவில் இதுவரை 5ஜி அலைக்கற்றை தொடர்பான ஏலம் விடப்படவில்லை. இந்நிலையில், 5ஜி அலைக்கற்றையை வழங்க தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதற்கிடையே நாட்டின் 2-வது பெரிய டெலிகாம் சேவையாளரான பார்தி ஏர்டெல், குவால்காம் உடன் இணைந்து 5ஜி அலைக்கற்றையை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே ஏர்டெல் நிறுவனத்தின் பிரதான போட்டியாளரான ஜியோ, … Read more

என்னது, தனுஷால் முடிவது ரஜினியால் முடியலையா?

தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிந்துவிட்டதால் ரஜினிகாந்த் கவலையில் இருக்கிறாராம். மகன்கள் யாத்ரா, லிங்காவை நினைத்துப் பார்த்தீர்களா?. உங்கள் வாழ்க்கை, உங்கள் சந்தோஷம் தான் முக்கியம் என்று ஒரு முடிவு எடுத்துவிட்டீர்களே. பிள்ளைகளின் நலன் கருதி மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினி கூறி வருகிறாராம். விவாகரத்து முடிவை எடுத்ததால் தன் செல்ல மகள் ஐஸ்வர்யா மீது கோபத்தில் இருக்கிறாராம் ரஜினி. இந்த கவலையை எல்லாம் மறக்க முடியாவிட்டாலும் தன் கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து … Read more

குருந்தூர்மலையில் திடீரென இரவோடு இரவாக பிரித்ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் (PHOTOS)

முல்லைத்தீவு – குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு நேற்றிரவு (05) வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமன ஆகியோர் 40 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளுடன் இணைந்து திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது,ஹெப்பத்திகொல்லாவ ,புல்மோட்டை அரிசிமலை ,மணலாறு பகுதிகளிலிருந்து வருகைதந்த 40 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் தொல்லியல் அகழ்வு இடம்பெற்றுவரும் இடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் விகாரையில் பிரித்ஓதல் மேற்கொண்டு அமைச்சர்களோடு இணைந்து வழிபாடுகளில் … Read more

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் <!– பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங… –>

பாரத ரத்னா விருது பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் இன்று காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1929ஆம் ஆண்டு இந்தூரில் பிறந்த லதா மங்கேஷ்கர், திரையுலகில் மராத்தி, இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 இந்திய மொழிகளில் முப்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடிய அவர் இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்படுகிறார். திரைத்துறை சாதனைக்காக அவருக்கு 1989ஆம் ஆண்டு இந்திய அரசால் தாதா … Read more

ஜேர்மனியில் மிகப்பெரிய பாலத்தை வெடிக்கச்செய்து புதிய சாதனை! பிரமிக்கவைக்கும் காட்சி

ஜேர்மன் பொறியாளர்கள் 230 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய பெரிய பாலம் ஒன்றை வெடிக்கச் செய்து புதிய சாதனை படைத்தனர். நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள வில்ன்ஸ்டோர்ஃப் அருகே ஜேர்மனியின் A45 ஆட்டோபானில் உள்ள Rinsdorf பாலத்தை தான் பொறியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 6) வெடிக்கசெய்துள்ளனர். இந்த பாலம் 70 மீட்டர் உயரம் (230 அடி) மற்றும் 500 மீட்டர் (1,640 அடி) நீளம் கொண்டது. 55 ஆண்டுகள் பழமையான இந்த பாலம், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை … Read more

ஜிஹாப் எதிர்ப்பு : கர்நாடக அரசுக்குக் காங்கிரஸ் பெண் எம் எல் ஏ சவால்

பெங்களூரு கர்நாடக அரசுக்குத் தைரியம் இருந்தால் தாம் ஜிஹாப் அணிந்து சட்டப்பேரவை வருவதைத் தடுக்கட்டும் என காங்கிரஸ்  பெண் சட்டமன்ற உறுப்பினர் கூறி உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி பகுதியில் உள்ள அரசுக் கல்லூரியில் ஜிஹாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.   இது கடும் சர்ச்சையாக மாறி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மாநில அரசு நல்லிணக்கத்தைச்  சீர்குலைக்கும் வகையில் ஆடைகள் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தடை விதித்தது. இது குறித்து மாநிலத்தில் போராட்டம் வெடித்துள்ளது.  … Read more