ஜேஎன்யு பல்கலை.யில் உடை பிரச்சனை இருந்ததில்லை… மாணவர்கள் விரும்பியதை அணியலாம் – யுஜிசி தலைவர்

Deeksha Teri , Ritika Chopra  ‘(At JNU), students wear what they wish to wear… we never looked at this issue at all’: UGC Chairman: ஐஐடி-டெல்லியில் பேராசிரியராகவும், சமீப காலம் வரை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) துணைவேந்தராகவும் இருந்த பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிதாக நியமிக்கப்பட்ட தலைவரான எம்.ஜெகதேஷ் குமாரை மாணவர்களின் ஆடை நடைமுறைகள் ஒருபோதும் தொந்தரவு செய்யவில்லை. தி சண்டே எக்ஸ்பிரஸுக்கு ஜெகதேஷ்குமார் அளித்த பேட்டியில், கர்நாடகாவில் … Read more

கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் தகாத உறவு.! பள்ளியறையில் பகீர் சம்பவம்.!

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் கட்டட வேலை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மலர் என்ற 45 வயது பெண்மணி கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.  அவருடன் கரிகாலன் என்ற நபரும் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் வேலை முடிந்து பள்ளி அறை ஒன்றில் உறங்க சென்றுள்ளனர். காலை விடிந்து வெகுநேரம் ஆகியும் அறையை விட்டு அவர்கள் வெளியில் வரவில்லை.  இதனால் அதிர்ச்சி அடைந்த … Read more

7 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று <!– 7 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 6 ஆயிரத்து 120 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 972 பேருக்கும், கோவையில் மேலும் 911 பேருக்கும், செங்கல்பட்டில் 531 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 23 ஆயிரத்து 144 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 26 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 828 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source … Read more

நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் ஆண்டுக்கு 400 மாணவர்கள் பயனடைகின்றனர்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு வழங்கியதன் காரணமாக, ஆண்டிற்கு கிட்டத்தட்ட 400 ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: “நீட் தேர்வு குறித்து அனைத்திந்திய அதிமுக மீதும், என் மீதும் குற்றம்சாட்டி நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்தால் “எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் … Read more

இந்தியாவில் கரோனா பாசிடிவிட்டி விகிதம் 7.4% ஆக சரிவு; புதிதாக 1,07,474 பேருக்கு தொற்று: அறிக 10 தகவல்கள்

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதம் (அதாவது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உள்ளது என்ற விகிதம்) 7.4% ஆக சரிந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 474 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 16% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 1. கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த … Read more

ரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு

ரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் வலைப்பூ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ட்விட்டர் கொள்கைகளை மீறிய காரணத்துக்காக ஈரானில் இருந்து செயல்பட்டு வந்த 238 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. நேட்டோ படைகள் குறித்த தகவல்களைப் பரப்பிய காரணத்துக்காகவும் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குறிவைத்துப் பதிவிட்ட காரணத்தாலும் ரஷ்ய நாட்டில் இருந்த 100 கணக்குகளை நீக்கியுள்ளோம். அதேபோல அஸர்பைஜான் நாட்டைக் குறிவைத்துப் பதிவுகளைப் பரப்பிய அர்மேனிய நாட்டைச் … Read more

தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம்…ரஜினிக்கு கிடைத்த குட் நியூஸ்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தனர். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் ஆனா இவர்கள் 18 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்த்திவிட்டு திடீரென பிரிவதாக அறிவித்தது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்த ரஜினி யாரிடமும் பேசாது தனிமையில் அவரது வீட்டில் இருந்து வருகிறார். இதன் காரணமாக இவரது மனைவி லதா தன் மகள் ஐஸ்வர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அப்பாவின் கோபத்தை … Read more

கிட்டுபூங்கா பிரகடனமும் அதன் பின்னும் (Photos)

இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை அனுப்பும் நோக்கத்தோடு ஆறு கட்சிகள் ஒன்றாக உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கியைப் போட வேண்டியதன் அவசியம் குறித்து நான் எழுதியும் பேசியும் வந்தேன். ஆனால் அக்கொழுக்கி 13 ஆக இருக்க வேண்டுமா என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன். அந்நாட்களில் எனது நண்பர் ஒருவர் அவர் ஒரு சிவில் சமூக செயற்பாட்டாளர். அதோடு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர். என்னிடம் கேட்டார் இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கியைப் … Read more

உத்திரப்பிரதேச ஷிவாலிக் வனப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த யானை <!– உத்திரப்பிரதேச ஷிவாலிக் வனப்பகுதியில் அறுந்து கிடந்த மின்… –>

உத்திரப்பிரதேச மாநிலம் சகாரன்பூரில் உள்ள ஷிவாலிக் வனப்பகுதியில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அந்த மின்கம்பியில் 11 கிலோ வோல்ட் என்ற அளவில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது., மின்கம்பி தாழ்வாக தொங்கிக்கொண்டிருந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

இதயம் நொறுங்கிவிட்டது.. லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இசைஞானியின் இரங்கல்

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்தார். ‘பாரத ரத்னா’ லதா மங்கேஸ்கர் சமீபத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு பிறகு அவர் தொற்றிலிருந்து மீண்டார். ஆனால், அவரது உடலுறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் மீண்டும் கவலைக்கிடமான நிலையில் சனிக்கிழமையன்று மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு பல்வேறு … Read more