மராட்டிய ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் போபண்ணா, ராம்குமார் மகுடம் சூடினர்

புனே, மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் பலேவாடி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது.  இதில், ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் ஆஸ்திரேலிய நாட்டின் லூக் சாவில்லே மற்றும் ஜான் பேட்ரிக் ஸ்மித் ஆகியோரை எதிர்த்து விளையாடினர். இந்த இறுதி போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 45 நிமிடங்கள் நீடித்தது.  இதில், 7-6, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினர். இதன்மூலம், போபண்ணா … Read more

சிகரெட் துண்டுகளை எடுத்து குப்பையில் போடும் காகங்களுக்கு நிலக்கடலை பரிசு …!

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 2 பில்லியன் டன்களுக்கும் அதிகமான கழிவுகள் “உற்பத்தி” செய்யப்படுகின்றன. இப்படியாக நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகும் கழிவுகளில் ஒரு சிறிய பங்களிப்பு தான் – சிகரெட் துண்டுகள்.  இந்நிலைபாட்டில் “இதே சிகரெட் கழிவுகள்” சமாச்சாரத்தின் கீழ், ஒரு ஸ்வீடிஷ் நிறுவனத்தின் செயல் இணையத்தில் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது; வைரல் ஆகி வருகிறது. சிகெரெட் துண்டுகளை குறிப்பிட்ட இடத்தில் உள்ள மெஷினில் காகங்கள் எடுத்து வந்து போடும். ஒவ்வொரு சிகரெட் துண்டுக்கும், சில … Read more

பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த நபர்; அதிர்ச்சி வீடியோ

தனக்கு பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபர் மருத்துவமனையில் பாம்புடன் வந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், ஒருவர் தன்னை பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி கையில் பாம்புடன் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஒரு … Read more

மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகனுக்கு கத்தி குத்து.! அமைதியாய் நின்றவரை அறுத்துப்போட்டு சென்ற தெருவாசி.!

காரைக்கால் அருகே மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகனுக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி : காரைக்கால் கட்டளை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன். 36 வயதாகும் இவர் காரைக்கால் தருமபுரம் தெருவில் வசித்து வரும் இவரது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். தனது மகள் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் வாங்குவதற்காக மாமியார் வீட்டுக்கு சென்ற காளீஸ்வரன், மாமியார் வீடு பூட்டி இருந்ததால், தெரு ஓரமாக அமைதியாக காத்திருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (40 … Read more

திருவாரூரில் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நபரால் சலசலப்பு.! <!– திருவாரூரில் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெ… –>

திருவாரூர் மாவட்டத்தில் கடித்த பாம்புடன், ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. மன்னார்குடியில் உள்ள அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்த தர்மன், இன்று வீட்டில் குடிபோதையில் படுத்திருந்தார். அப்போது அவரை சாரைப்பாம்பு ஒன்று கடித்ததால், விழித்த அவர், அந்த பாம்பை உயிருடன் கையில் பிடித்துக் கொண்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். கையில் பாம்பு உடன் வந்த தர்மனை கண்டதும் மருத்துவமனை ஊழியர்கள் திகைத்து போயினர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்த அவர்கள், தர்மனை … Read more

தமிழகத்தில் இன்று 6,120 பேருக்குக் கரோனா தொற்று உறுதி: சென்னையில் 972 பேருக்கு பாதிப்பு; 23,144 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 6,120 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,10,882. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,42,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,51,295. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 16 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 80,10,151 பேர் வந்துள்ளனர். சென்னையில் 6,120 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

யாராலும் நிரப்பமுடியா வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார் லதா மங்கேஷ்கர்: பிரதமர் மோடி புகழஞ்சலி

புதுடெல்லி: யாராலும் நிரப்பமுடியா வெற்றிடத்தை லதா மங்கேஷ்கர் விட்டுச் சென்றுள்ளார் என பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னதாக, கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. இந்தி, தமிழ் என 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அவரது மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி … Read more

இனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்

எதிர்காலத்தில் வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் தற்போதைக்கு பீட்டா வெர்ஷனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலக் குறுஞ்செய்து சேவை செயலி வாட்ஸ்அப். ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த செயலியில் தொடர்ந்து புதிய அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னால் ஸ்டேட்டஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே தற்போது வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி … Read more

Dhanush:நான் எப்பவுமே இப்படித் தான்: தொடர்ந்து வேலையை காட்டும் தனுஷ்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். விரைவில் யாத்ரா ஹீரோவாகும் அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக விவாகரத்து அறிவிப்பு தான் வெளியானது. கடந்த சில ஆண்டுகளாகவே தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரச்சனையாக இருந்திருக்கிறது. பிரச்சனை ஏற்படும்போது எல்லாம் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் தனுஷ் . ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை … Read more

ராஜபக்சவினருக்கு கிரேக்கத்தின் ஜோர்ஜிக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படுமா? தப்பிக்கும் முறையை கண்டுபிடித்தார்களா?

“ஜோர்ஜ் பேபன்ரூ (George Papandreou) உடனடியாக விலக வேண்டும், அவருக்கு பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய முடியவில்லை” இது கடந்த 2011 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கி எழுப்பிய போராட்ட கோஷம். பேபன்ரூ குடும்பம் கிரேக்க நாட்டில் உள்ள பலமான அரசியல் குடும்பம். சரியாக இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தை போன்ற குடும்பம். இவரது பாட்டனார் பல முறை கிரேக்கத்தின் நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். அவரது தந்தையும் … Read more