விஷ்ணு மஞ்சு வீட்டில் திருட்டு ; போலீசில் புகார்

தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகர் மோகன்பாபுவின் மகனும் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவர் பதவியை பிடித்தவருமான நடிகர் விஷ்ணு மஞ்சு வீட்டில் விலை உயர்ந்த சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மேக்கப் சாதன பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்று திருடு போனது. இதுகுறித்து ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விஷ்ணு மஞ்சு.

அதேசமயம் இந்தப்பொருள் திருடு போனது தெலுங்கு நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து தான் என்று ஒரு தகவலும் கிளம்பியது. ஆனால் இதை மறுத்துள்ள போலீசார் திருட்டு நிகழ்ந்தது நடிகர் விஷ்ணு மஞ்சுவின் வீட்டில் தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் இந்த திருட்டு நடந்த பின்னர் ஹேர் டிரஸர் நாக ஸ்ரீனு என்பவரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.