ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற பாதுகாப்பு காரணங்கள் ஏதும் இல்லை: இந்திய தூதரகம் தகவல்

டெல்லி: ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற பாதுகாப்பு காரணங்கள் ஏதும் இல்லை என இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் வங்கிச்சேவை, அங்கிருந்து நேரடி விமான சேவை பெறுவதில் சில இடையூறுகள் உள்ளன என கூறியுள்ளது. வங்கிச் சேவை, விமான சேவை இடையூறுகளாலட இந்தியாவிற்கு பயணிக்க விரும்பினால் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது. கல்வித் திட்டங்களைத் பொறுத்தவரை பல பல்கலைகள் ஆன்லைன் கல்விக்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளன என கூறியுள்ளது. இடையூறின்றி கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் தங்கள் பல்கலைகளுடன் கலந்தாலோசிக்கலாம் என தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.