ஆந்திராவில் பள்ளி மாணவர்களை குச்சியால் அடித்து துன்புறுத்திய உடற்பயிற்சி ஆசிரியரின் வீடியோ இணையதளத்தில் வைரல்.!

ஆந்திர மாநிலம் கடப்பாவில் பள்ளி மாணவர்களை உடற்பயிற்சி ஆசிரியர் குச்சியால் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

கமலாபுரம் நகரில் செயல்பட்டு வரும் ஜோதிராவ் புலே பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளியில் ஏராளமான மாணவர்கள் தங்கி பயின்று வரும் நிலையில், தினமும் மாலையில் உடற்பயிற்சிக்காக வரும் மாணவர்களை, உடற்பயிற்சி ஆசிரியர் குச்சியில் அடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை அப்பள்ளியில் பணியாற்றும் ஒரு ஊழியர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ள நிலையில், அந்த ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.