சட்டவிரோதமாக வைத்திருந்த வெடி மருந்து வெடித்து விபத்து.! 10 வயது சிறுமி உடல் சிதறி பலி.!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்த பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் வெடி மருந்து வெடித்ததில், 10 வயது சிறுமி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆறுதெங்கன்விளை பகுதியை சேர்ந்த பாக்கியராஜா சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் கரு மருந்து எனப்படும் வெடிமருந்து இன்று காலை திடீரென வெடித்ததில் பாக்கியராஜாவின் 10 வயது மகள் ஸ்ரீ வர்ஷா உடல் சிதறி உயிரிழந்தார்.

அந்த நபரின் மனைவி பார்வதி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக பாக்கியராஜாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.