விவாகரத்திற்கு பிறகு பாலாவின் அதிரடி மாற்றங்கள்.. இத எதிர்பார்க்கவே இல்லையே..!

இயக்குனர் பாலாவின் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். ஏனென்றால் அவர் இயக்கிய படங்கள் அந்தளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.
சேது
, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் என கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்டு இவர் எடுக்கும் படங்கள் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சினிமாவில் வெற்றிகாணாத கலைஞர்களுடன் பணியாற்றி அவர்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்வார்
பாலா
. அதற்கு
சூர்யா
, ஆர்யா,
விக்ரம்
போன்றவர்களை உதாரணமாக சொல்லலாம்.

இந்நிலையில் சமீபத்தில் பாலா இயக்கிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திக்கொண்டிருக்கின்றார்.

தனுஷை விடாது துரத்தும் சோதனைகள்..வருத்தத்தில் தனுஷ் ரசிகர்கள்..!

மேலும் தற்போது விவாகரத்து பெற்று சொந்த வாழ்க்கையிலும் சற்று சோதனைகளை சந்தித்து வருகின்றார் பாலா. எனவே தன் சொந்த வாழ்க்கையின் சோகங்களை மறக்க திரைவாழ்க்கையில் முழுக்கவனம் செலுத்தி வருகின்றார்.

சூர்யா

இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவை வைத்து பாலா இயக்கும் படம் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக
ஜோதிகா
நடிப்பதாகவும், ஜி.வி பிரகாஷ் இசையமைப்பதாகவும் தகவல்கள் வந்தன.

மேலும் இப்படத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் மேலும் ஒரு முன்னணி நாயகி இணைந்துள்ளார். தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

கீர்த்தி சுரேஷ்

மேலும் இப்படம் பாலாவின் படங்களிலிருந்து சற்று மாறுபட்டு இருக்கும் எனவும் பேசப்படுகின்றது. விரைவில் இப்படத்தைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தியேட்டரில் COMEBACK கொடுப்பாரா சூர்யா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.