ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்த திரையரங்கின் மீது ரஷ்யப் படையினர் குண்டு வீசி தாக்குதல்

உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த திரையரங்கின் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மரியுபோல் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் அங்கிருந்த திரையரங்கில் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட திரையரங்கத்தின் மீது ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இதில் திரையரங்கின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது. இந்தத் தாக்குதலில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.