ஒத்திக்கு விடப்பட்ட வீட்டை காலி செய்ய மறுத்த நபர் வீட்டு உரிமையாளரை பட்டப்பகலில் ஓட ஓட அரிவாளால் தாக்கும் சிசிடிவி காட்சி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒத்திக்கு விடப்பட்ட வீட்டை காலி செய்ய மறுத்த நபர் வீட்டு உரிமையாளரை பட்டப்பகலில் ஓட ஓட அரிவாளால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சரவணன் என்பவரது வீட்டின் கீழ் தளத்தில் செந்தில்குமார் என்பவர் குடும்பத்துடன் ஒத்திக்கு தங்கியிருந்தார். 2 வருட ஒப்பந்தத்திற்கு தங்கியிருந்த செந்தில்குமார் குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டை போட்டு அடுத்தவர்களுக்கு தொந்தரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், வீட்டை காலி செய்யுமாறு கூறிய உரிமையாளர் காவல் நிலையத்திலும் புகாரளித்துள்ளார்.

5 மாதத்திற்குள் வீட்டை காலி செய்வதாக காவல் நிலையத்தில் உத்தரவாதம் அளித்த செந்தில்குமார், அந்த கால அவகாசத்திற்குள்ளும் காலி செய்யாமல் வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

வீட்டு மாடியில் நின்றிருந்த சரவணனின் மனைவி, பூந்தொட்டியை செந்தில்குமார் மீது எரிந்து தாக்குதலை நிறுத்த முயன்ற காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.