போரூர் மின் மயானத்தில் பராமரிப்பு பணி! பிருந்தாவன் நகர் மின்மயானத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு வேண்டுகோள்.!

போரூர் மின்மயானபூமியில் தொடர்ந்து பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், பொதுமக்கள் அருகிலுள்ள பிருந்தாவன் நகர் மயானபூமியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளசரவாக்கம் மண்டலம், பகுதி-34, 
வார்டு-151க்குட்பட்ட போரூர் மின்சார மயானபூமியின் புகைப்போக்கியில் (சிம்னி) பழுதடைந்துள்ள காரணத்தினால், மார்ச் மாதம் மூன்றாம் தேதியில் இருந்து போரூர் மின்சார மின்சார மயானபூமி இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தற்பொழுது மேற்கண்ட மயானபூமியில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-149க்குட்பட்ட பிருந்தாவன் நகர் மயானபூமியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.