மாணவர்களுக்கு பாதிப்பில்லை.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் நடைபெறும் 2 நாள் வேலை நிறுத்தம் இன்று காலை துவங்கியது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை.

தமிழகத்தில் இயக்கப்படும் 15, 335 பஸ்களில் சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுபோல் சென்னையில் 3,175ல் 318 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

போதிய அளவு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அத்துடன், பள்ளி வாகனங்களும் இயக்கப்படுகின்றன. இதனால், பள்ளி மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.