புதிய அஸ்திரத்தை கையிலெடுத்த தனுஷ்: ஆடிப்போன லதா ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான
தனுஷ்
, ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்தனர்.

அவர்களின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கே பேரதிர்ச்சியாக அமைந்தது. விவாகரத்தை தொடர்ந்து மகன்கள் இருவரும் சில நாட்கள் தனுஷுடனும், சில நாட்கள் ஐஸ்வர்யாவுடனும் இருந்து வருகின்றனர். மேலும், தங்கள் பெற்றோர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என யாத்ரா, லிங்கா விரும்புவதாகவும் கூறப்பட்டது.

மேலும் விவாகரத்து அறிவிப்பிற்கு பின் லதா ரஜினிகாந்த தனக்கு தெரிந்த,, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் தனுஷை வைத்து படம் பண்ண வேண்டாம் என தெரிவித்துள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தனுஷே தற்போது படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடடே.. இதென்ன புது ட்விஸ்ட்: சமந்தாவை புக் பண்ணும் சிவகார்த்திகேயன்..!

இதனிடையில் ஏற்கனவே இயக்கி கிடப்பில் போடப்பட்ட நாகர்ஜூனா படத்தையும் மீண்டும் துவங்கி விடலாம் என்ற யோசனையிலும் உள்ளாராம் தனுஷ். தன்னை வைத்து யாருமே படம் இயக்கக்கூடாது என
லதா ரஜினிகாந்த்
கொடுத்துள்ள குடைச்சலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனுஷ் இந்த முடிவில் இறங்கியுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தனுஷின் இயக்குனர் அவதாரத்தை காண ரசிகர்களும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர். தனுஷ் தற்போது ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்ததில் ‘
நானே வருவேன்
‘ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையில் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் ‘
வாத்தி
‘ படத்திலும் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

படம் முழுக்க Goosebumps; பின்னி பெடலெடுத்துட்டாரு ராஜமௌலி!

அடுத்த செய்திபீஸ்ட் டீசரில் அது இருக்காது…நெல்சன் வைக்கும் ட்விஸ்ட்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.