தூத்துக்குடியில் தொடங்கியது மாநில அளிவிலான பீச் விளையாட்டுப் போட்டிகள்

தூத்துக்குடி மாநில அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரை கிராமத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கடற்கரை கால்பந்து, கைப்பந்து, கபடி ஆகிய போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
image
இதையடுத்து தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் இந்த கடற்கரை விளையாட்டு போட்டிகளில் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
image
இந்த மாநில அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார். தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.