ஆந்திராவில் அதிர்ச்சி- பூஜை போட்டபோது வெடித்து சிதறிய புல்லட்

கசாபுரம் (ஆந்திரா):
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் புதிய புல்லட் வாகனத்திற்கு புஜை செய்தபோது, புல்லட் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குண்டக்கல் அருகே கசாபுரத்தில் உள்ள ஒரு ஆஞ்சநேயர் கோவில் முன்பு, புதிய புல்லட்டை நிறுத்திவிட்டு அதன் உரிமையாளர் பூஜை செய்துள்ளார். 
அப்போது, புல்லட்டில் லேசாக தீப்பிடித்துள்ளது. தீயை அணைக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக புல்லட் வெடித்து சிதறியது. குபீரென பல அடி உயரத்திற்கு தீப்பிழம்பு எழுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் சிதறி ஓடினர்.
பின்னர் அருகில் சென்ற சிலர்  தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புல்லட் வெடித்து தீப்பிடித்தபோது எடுத்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.