வந்தவாசியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கம்பிகள் சாலையில் உரசிக்கொண்டு நெருப்பு பொறி பறக்கும் அளவிற்கு சென்ற லாரியால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆபத்தை விளைவிக்கும் வகையில் கம்பிகள் சாலையில் உரசிக்கொண்டு நெருப்பு பொறி பறக்கும் அளவிற்கு சென்ற லாரியால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மழையூர் கிராம பகுதியில் இருந்து தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு லாரி ஒன்று இரும்புக் கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது லாரியின் பின்னால் நீண்டு கொண்டு இருந்த கம்பிகள் சாலையில் உரசிக் கொண்டு சென்றதால் நெருப்பு பொறி பறந்தவாறு நீண்ட தூரம் சென்றது. இதனை அறியாமல் ஓட்டுனரும் லாரியினை இயக்கிக் கொண்டிருந்தார்.

அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் லாரியை மடக்கி நிறுத்தி விசாரிக்கையில் வெளிமாநில ஓட்டுனர் ராஜ் கிஷோர் என்பதும், லாரி வட மாநில பதிவு எண் கொண்டதும் தெரிய வந்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.