சொத்து வரி உயர்வுக்கு எதிராக பாஜக போராட்டம் அறிவிப்பு.!

சமீபத்தில் தமிழக அரசு தமிழகத்தில் சொத்து வரி 100 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் விமர்சனம் தெரிவித்து எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக சொத்து வரி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தமிழகம் முழுவதிலுமுள்ள இருபத்தி ஒரு மாநகராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.