சோனியா காந்தி ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அந்த கட்டுரையை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்து, அதில் பாஜகவைச் கடுமையாக சாடியுள்ளார். நம்மிடையே ஒரு வைரஸ் பரவுகிறது என்ற தலைப்பில் சோனியா காந்தி கட்டுரை எழுதியுள்ளார். பாஜகவில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள், வெறுப்புணர்வு அதிகரிப்பு, ஆவேசப்போக்கு ஆகியவை அதிகரித்துள்ளன. வெறுப்பு, மதவெறி, சகிப்பின்மை மற்றும் பொய்யின் பேரழிவு நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. மத்தியப் பிரதேசதம் கார்கோனில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது நடைபெற்ற வன்முறையை குறிக்கும் விதமாக, வன்முறைச் செய்திகள் குறித்து பேச பிரதமர் மௌனம் காக்கிறார்” என குறிப்பிட்டிருந்தார்.
Every Indian is paying the price for the hate fueled by BJP-RSS.
India’s true culture is that of shared celebrations, community, and cohesive living.
Let’s pledge to preserve this. pic.twitter.com/Gph8k0TwOb
— Rahul Gandhi (@RahulGandhi) April 16, 2022
இதையொட்டி, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “பாஜக-ஆர்எஸ்எஸ் தூண்டிவிட்ட வெறுப்புக்கு ஒவ்வொரு இந்தியனும் விலை கொடுக்கிறார்கள். இந்தியாவின் உண்மையான கலாசாரம் என்பது கொண்டாட்டங்களை பகிர்ந்து கொள்வது மற்றும் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை. இதை காப்பாற்ற உறுதிமொழி எடுப்போம்” என பதிவிட்டுள்ளார்.