நாதஸ்வர வித்வானை அடித்து கொலை செய்த தவில் வித்வான்கள்.. ஈரோடு அருகே நிகழ்ந்த சோகம்..!

நாதஸ்வர வித்வான் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், மாரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் நாதஸ்வர வித்வானாக இருந்து வருகிறார். இன்று காலை இவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த தவில் வித்வான்கள் சின்னமணி மற்றும் ராமராஜ் ஆகியவர் பழனிசாமியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.