தட்சிண கன்னடா : கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவில் திருவிழாவில், இரண்டு கிராம மக்கள் ஒருவர் மீது மற்றொருவர் தீப்பந்தங்களை வீசும் வினோதநிகழ்ச்சி நடந்தது.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் இருந்து 28 கி.மீ., தொலைவில் உள்ள கட்டீல் என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக எளிமையாக நடத்தப்பட்டது.இந்தாண்டு தொற்று பரவல் குறைந்ததால், விமரிசையாக நேற்று முன்தினம் இரவு கொண்டாடப்பட்டது.விழாவின் ஒரு அங்கமாக காலம் காலமாக நடத்தி வருவது போன்று, அட்டூர் – கொடத்துார் கிராம மக்கள் தென்னை மட்டைகளில் தீப்பந்தம் ஏந்தி ஒருவர் மீது ஒருவர் தாக்கி கொண்டனர்.பின்னர் கோவில் வளாகத்தில் புனித நீராடினர். யாருக்கும் தீக்காயம் ஏற்படாதது சிறப்பு. இது அவர்களின் பாரம்பரிய நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் நேர்த்திக்கடனுக்காக செய்வர். விழாவை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
தட்சிண கன்னடா : கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவில் திருவிழாவில், இரண்டு கிராம மக்கள் ஒருவர் மீது மற்றொருவர் தீப்பந்தங்களை வீசும் வினோதநிகழ்ச்சி நடந்தது.தட்சிண கன்னடா மாவட்டம்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.